ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் திருநாள் கவிதைகள்!

4 posters

Go down

பொங்கல் திருநாள் கவிதைகள்! Empty பொங்கல் திருநாள் கவிதைகள்!

Post by சாமி Tue Jan 14, 2014 6:24 am

பொங்கல் திருநாள் கவிதைகள்! DMK3LxMoRIyr4rYrfAvp+pongal

பொங்கல் திருநாளடியே என்னருந் தோழி - அதோ
பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந் தோழி

தெங்கில்இளம் பாளையைப்போல்
செந்நெல்அறுத் தார்உழவர்
அங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி - அவர்
சங்கத்தமிழ் பாடிப்பாடி என்னருந் தோழி

கட்டடித்தே நெல்லளந்தே
கட்டைவண்டி ஏற்றுகின்றார்
தொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி - அவர்
தோளைவையம் வாழ்த்திற்றடி என்னருந் தோழி

கொட்டுமுழக் கோடுநெல்லைக்
குற்றுகின்ற மாதர்எல்லாம்
பட்டுடை இழுத்துக் கட்டி என்னருந் தோழி - பாடும்
பாட்டெல்லாம் வெல்லமடி என்னருந் தோழி

முத்தமிழ் முழக்கமடி
எங்கணும் இசைக்கருவி
முத்தரிசி பாலில் இட்டார் என்னருந்தோழி - வெல்லக்
கட்டியுடன் நெய்யுமிட்டார் என்னருந் தோழி

தித்திக்கும் தேனும்பலாவும்
செவ்வாழையும் மாம்பழமும்
ஒத்துக்கலந் துண்டாரடி என்னருந் தோழி - அவர்
ஒக்கலும் மக்களுமாக என்னருந் தோழி

எங்கணும் மகிழ்ச்சியடி
எவ்விடத்தும் ஆடல்பாடல்
பொங்கலோ பொங்கல்என்றார் என்னருந் தோழி - நன்கு
பொங்கிற்றடி எங்குமின்பம் என்னருந் தோழி

திங்களிது தையடியே
செந்தமிழ ரின்திருநாள்
இங்கிதுபோல் என்றைக்குமே என்னருந் தோழி - துய்ய
இன்பம்நிலை கொள்ள வேண்டும் என்னருந் தோழி

- பொற்செழியன், நன்றி-தமிழம் இணையம்


Last edited by சாமி on Tue Jan 14, 2014 6:30 am; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பொங்கல் திருநாள் கவிதைகள்! Empty Re: பொங்கல் திருநாள் கவிதைகள்!

Post by சாமி Tue Jan 14, 2014 6:27 am

தைமகள் வருகிறாள்- கவிதை
தமிழ்மகள் தருகிறாள்
மைமகள் விழிகளில் - காதல்
மகிழ்வினைப் பெறுகிறாள்

நற்சுவை சேர்த்திடும் - வாழ்வில்
நன்னெறி சூழ்ந்திடும்
சொற்சுவைப் பாட்டினில் - பொங்கல்
சுடச்சுட மணந்திடும்

வள்ளுவர் ஆண்டினைத் - தோழர்
வாழ்த்திக் கொண்டாடுக
தெள்ளிய குறளினைக் - கற்றுத்
தேறி முன்னேறுக.

நம்மின மேன்மையை - மின்னும்
செம்மொழிச் சீரிமையை
அம்புவி சூழுலகு - போற்றி
அணிந்திடும் இனிமையை

காட்டினில் மேட்டினில் - உழைத்துக்
களைத்த்வர் களிக்கவே
மீட்டிடும் இசையெனப் - பொங்கல்
விளைந்திட வருகவே.

காரிருள் போக்கிடும் - காலைக்
கதிரவன் கதிர்களே
சீரருள் தேக்கிடும் - இன்பச்
செந்தமிழ் நெறிகளே

நாள் நீ பெரிதென - நாளும்
நவின்றது போதுமே
தேன்தமிழ் பெரிதென - நன்றே
தெளிந்து நீ ஓதுமே.

ஒற்றுமை நாட்டுக - இனப்
பற்றினை ஊட்டுக
நற்றுணை தமிழெனக் - கொள்கைப்
பொற்புரை சூட்டுக

அன்பொளி ஏற்றுக - தூய
பண்பொளி சாற்றுக
இன்மொழி நம்மொழி - தமிழின்
எழிலினைப் போற்றுக

பொங்குக நல்லறம் - என்றும்
தங்குக புகழ்ச்சரம்
விஞ்சுக தமிழ்மறம் - உலகோர்
கொஞ்சுக தமிழ் ஓர். வரம்.

கி.பாரதிதாசன் - கம்பன் இதழ்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பொங்கல் திருநாள் கவிதைகள்! Empty Re: பொங்கல் திருநாள் கவிதைகள்!

Post by N.S.Mani Tue Jan 14, 2014 8:39 am

தைத்திரு நாள்
தமிழனின் புதுநாள்
பொங்கல் நன்னாள்
இந்நாளில்,

செந்நெல் மணி
செங்கரும்புச் சாறு
செவ்விள நீர்
செவ்வாழையுடன்
செவ்விதழ் சேயிளையும்
சொந்த பந்தங்களுடன்
சேர்ந்து பொங்கும்
பொங்கலோ பொங்கல்.

அன்புடன்

நா.செ.மணி
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

Back to top Go down

பொங்கல் திருநாள் கவிதைகள்! Empty Re: பொங்கல் திருநாள் கவிதைகள்!

Post by T.N.Balasubramanian Tue Jan 14, 2014 8:42 am

பொங்கல் திருநாளை போற்றும்
பொற்செழியன் கவிதை
பாரதிதாசன் கவிதை
அழகு கவிதைகளை
அன்பளிப்பாக்கிய சாமி
அவர்களுக்கு நன்றி.  அன்பு மலர்  அன்பு மலர் 

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் , சாமி அவர்களே.
இரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொங்கல் திருநாள் கவிதைகள்! Empty Re: பொங்கல் திருநாள் கவிதைகள்!

Post by ayyasamy ram Tue Jan 14, 2014 8:49 am


சில நூற்றாண்டுகளுக்கு முன்னா்தான்

கோள்களின் குடும்ப தலைவன் சூாியன்

என சொன்னது விஞ்ஞானம்.



பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே

சூாியனின்றி உலகில்லை உணவில்லை

அனுபவித்து சொன்னான் தமிழன்.



சூாிய மகிமையை போற்றிட

சூாிய தேவையை உணா்த்திட

நாள் ஒதுக்கி கொண்டாடினான்

தைப் பொங்கல் என...



உலகுக்கு உணவளிக்க

உழவனுக்கு உதவுபவை

மாடுகள்.



அதற்கும் நாள் ஒதுக்கி

குடும்ப உறுப்பினராக இணைத்து

குதுாகலாமிட்டு கொண்டாடினான்

மாட்டுப்பொங்கலாக..

-


உழவனின் சுமையை

ஏா்கலப்பையோடு

தோளில் சுமந்த

சாதுக்களும் உண்டு.



வீரராய் இளைஞா்களை

சீண்டி பாா்க்கும்

ஜல்லிகட்டு காளைகளும் உண்டு.



காிசல் காட்டு கரும்பு

செங்காட்டு வாழை

கிணற்றுமேட்டு பூசணி

வயல்காட்டு நெல்

தை அன்று படையலாகும்

சூாியனுக்கு.



தலைப்பாகை கட்டி

உடலெல்லாம் வண்ணகோலமிட்டு

மாடுகள் ஜொலிக்கும்

மாட்டுப்பொங்கலன்று.



உழைத்து களைத்தவா்கள்

உறவாடி உற்சாகங்களை

பதிவிறக்கம் செய்ய

காணும் பொங்கல்.



நாகரீக வளா்ச்சிகள்

நம் தமிழா் பெருமைகளை

நகைப்புக்குாியதாக்கி

நம்மை சற்று தள்ளியே

நிற்க வைக்கின்றன
-

எப்போதும்

எங்கேயும் தமிழா்கள்

தனித்தன்மையானவா்கள்

என்பதை உலகுக்கு உணா்த்த

உரக்க கூவி குதுாகாலிப்போம்

”பொங்கலோ பொங்கல்” என்று

-
--தமிழ் நண்பர்கள்.காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொங்கல் திருநாள் கவிதைகள்! Empty Re: பொங்கல் திருநாள் கவிதைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum