புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_lcapஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_voting_barஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_lcapஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_voting_barஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_lcapஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_voting_barஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_lcapஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_voting_barஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_lcapஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_voting_barஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_lcapஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_voting_barஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_lcapஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_voting_barஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_lcapஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_voting_barஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_lcapஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_voting_barஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_lcapஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_voting_barஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_lcapஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_voting_barஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_rcap 
18 Posts - 3%
prajai
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_lcapஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_voting_barஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_lcapஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_voting_barஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_lcapஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_voting_barஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_lcapஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_voting_barஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_lcapஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_voting_barஇளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 12, 2014 1:05 pm

இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! / கோ. சரசு, முனைவர் பட்ட ஆய்வாளர், இராணி மேரி கல்லூரி, சென்னை / தினமணி

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்களுள் காலத்தால் முற்பட்டவரும், தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை எழுதியவரும், முழுமைக்கும் உரை எழுதியவரும் இளம்பூரணரே! "உரையாசிரியர்' என்ற பொதுப்பெயரை சிறப்புப் பெயராகப் பெற்றவர். இத்தகு சிறப்பு வாய்ந்த இளம்பூரணரை ஒரு திறனாய்வாளர் என்று கூறுவது மிகவும் பொருந்தும்.

திறனாய்வாளருக்குரிய பண்புகள்
திறனாய்வாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதை, ""பொதுவாக அழகியல் உணர்வு, கலை இலக்கியத்தை இரசிக்கக்கூடிய, அனுபவிக்கக்கூடிய திறன் இவை திறனாய்வாளனுக்குரிய அடிப்படையான பண்புகள். இலக்கியத்தைப் பற்றியும் பரந்த உலகியல் வாழ்வு பற்றியும் பொதுவான அறிவும், அந்த - அல்லது இதனை ஒத்த பொருள்கள் பற்றிய ஆழமான அறிவும், சரியான புலனுட்பமும், எதிர்கொள்பவற்றில் குறிப்பிடத்தக்கவை கண்டால் அவற்றை பளிச்செனப் பற்றிக்கொள்ளும் துடிப்பான ஆற்றலும், எதிர்வினை நிகழ்வதில் வேகமும், உள்ளார்ந்த அறிவின் கூர்மையும், எதனையும் வகுத்தும் தொகுத்தும் பொதுமைப்படுத்தியும் வேறுபடுத்தியும் பார்க்கின்ற பக்குவமும் திறனாய்வாளனுக்கு வேண்டப்படுகிற பண்புகள்'' எனத் "திறனாய்வுக்கலை' என்ற தம் நூலில் தி.சு. நடராசன் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பண்புகள் இளம்பூரணர் உரையில் மிகுந்து காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

சொற்பொருளறிவு
தொல்காப்பிய நூற்பாக்களில் உள்ள புரியாத, கடுமையான சொற்களுக்கு இளம்பூரணர் தமது உரையில், "குயின் என்பது மேகம்', "அழனென்பது பிணம்', "காரகமென்பது கரடி', உரன் என்பது அறிவு', "எழில் என்பது அழகு', "வியப்பென்பது தம்மைப் பெரியராக நினைத்தல்', "அலராவது சொல்லுதல்' "மூங்கா என்பது கீரி', "நவ்வி என்பது புள்ளிமான்' எனப் பல அருஞ்சொற்களுக்குத் தேவையான இடங்களில் பொருள் கூறி விளக்கிச் செல்வதிலிருந்து அவருடைய சொற்பொருளறிவு வெளிப்படுகிறது.

கணக்கியலறிவு
கணித அறிவில் சிறந்த கணக்காயனார், கணிமேதாவியார் முதலிய புலவர் பலர் வாழ்ந்த இலக்கிய உலகில் இளம்பூரணரும் தமது உரையில் கணக்கியல் அறிவினைப் பதிவு செய்யுள்ளார். இதனை, மாத்திரைக்கு இலக்கணம் கூறும்போது (எழுத்து-7) நிறுத்தளத்தல், பெய்தளத்தல், நீட்டியளத்தல், நெறித்தளத்தல், தேங்கமுகந்தளத்தல், சார்த்தியளத்தல், எண்ணியளத்தல் என எழுவகை அளவைகளைப் பற்றிக் கூறுவதிலிருந்தும் (எழுத்து-437), எண்ணுப் பெயரொடு நிறைப்பெயரும் அளவுப் பெயரும் புணரும் புணர்ச்சி பற்றிக் கூறும்போது கழஞ்சு, தொடி, பலம் போன்ற நிறைப்பெயரையும் கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு போன்ற அளவுப் பெயர் களையும் குறிப்பிடுவதிலிருந்து அவரது கணக்கியலறிவு புலப்படுகிறது.

வானியலறிவு
மழை, வெப்பம், காற்றழுத்தத்தாழ்வு, புயல் போன்றவற்றைப் பற்றி இன்று வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து கணித்துக் கூறுகின்றனர். ஆனால், இளம்பூரணர் அன்றே தம் உரையில் கோள்நிலை, மழைநிலை பற்றிய தகவல்களைக் கூறியுள்ளார். இதனை, புறத்திணையியலில் வாகைத்திணை பற்றிய நூற்பாவில் "மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்' (பொருள்-74) என்பதற்கு, அறிவன் என்றால் "கணியன்' என்றும், மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுதல்' என்பதற்குப் பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளுந் தூமமும் மீன் வீழ்வும் கோள்நிலையும் பிறவும் பார்த்துப் பயன் கூறல்' என்று இளம்பூரணர் கூறும் உரை விளக்கத்திலிருந்து அவரது வானியல் அறிவையும் அறிந்துகொள்ள முடிகிறது.

அறிவியலறிவு
"பரத்தையின் பால் பிரிந்த தலைவன், தலைவிக்குப் பூப்பு நேரும் காலத்தை அறிந்தவுடனே தன் வீட்டுக்கு வந்துவிட வேண்டும்(பொருள்-185). பூத்தோன்றி மூன்று நாள் கழித்துப் பின்பு பன்னிரண்டு நாளும் தலைவன் தலைவியைவிட்டுப் பிரியாமல் உறைதல் வேண்டும். ஏனெனில், அது கருத்தோன்றும் காலம்' என்கிறார்.

கலையுணர்வு
கலைகளிலும் இளம்பூரணருக்கு ஈடுபாடு உண்டு என்பதை, அகத்திணையியலில் பிரிவின்கண் தலைமகனுக்குக் கூற்று நிகழும் இடங்களைத் தொகுத்துக் கூறும் நூற்பாவில் (பொருள்-44) "வாயினும் கையினும் வகுத்த பக்கமோடு' என்பதற்கு, "வாயான் வகுத்தப் பக்கமாவது ஓதுதல், கையான் வகுத்தப் பக்கமாவது படைக்கலம் பயிற்றலும் சிற்பங்கற்றலும்' எனக் குறிப்பிடுவதிலிருந்து அவரது கலையுணர்வை அறிய முடிகிறது.

மேற்கண்டவற்றிலிருந்து இளம்பூரணரின் பல்துறை சார்ந்த அறிவும், உலகியல் அறிவும் தெளிவாகப் புலப்படுகிறது. இதன் வழி "இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே' என்ற முடிவுக்கு நாம் வரலாம்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக