புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
284 Posts - 45%
heezulia
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
19 Posts - 3%
prajai
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
7 Posts - 1%
mruthun
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 12, 2014 12:52 pm

ஆண்டு தவறாமல் வந்துவிடும் புத்தாண்டையும், பொங்கல் திருநாளையும் முன்வைத்து, தமக்குத் தெரிந்த மரபில் பாக்கள் பல புனைந்து அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்தாய் அனுப்பும் புலவர் கூட்டம் தமிழில் மலிந்திருந்த காலம் அது.

பாக்களைவிடவும் எழுதியனுப்பும் பாவலர்களுக்கு முன்னொட்டாய் அமையும் புலவர், கவிராயர் உள்ளிட்ட பகட்டுப் பட்டங்கள் பலவாக இருக்கும். அதுகண்டு எரிச்சலுற்றார் ஓர் எழுத்தாளர்.

அவருக்கு இவ்வழக்கம் இல்லை. என்றாலும், எரிச்சல் தாளாமல், இப்போலிப் புலவர்களை எச்சரிக்க வேண்டி,

பொங்கல் செய்தி என்ற தலைப்பில் ஒரு வாழ்த்துக் கவிதையை அச்சிட்டு அனுப்பினார்.

"போலிப் புலவர்களை அடையாளங்கண்டு தண்டிக்க, பிள்ளைப்பாண்டியன், வில்லியார், ஒட்டக்கூத்தன் போன்றோர் இல்லாத காரணத்தால், தேசமெங்கும் புலவர் எனப்பலர் திரிகிறார்கள்' எனக் கூறும் பாடல் அது. தனிப்பாடல் திரட்டில் இடம்பெறும் படிக்காசுத் தம்பிரானின், "குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங்கில்லை' என்ற அப்பாடலின் இறுதியில் இடம்பெறும் "தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே' என்ற அடியை மட்டும், தெருத் தெருவாய்ப் புலவர் எனத் திரியலாமே என்று திருத்தி அச்சிட்டுப் பலருக்கும் அனுப்பினார் அவர்.

பலனாய், இருவரைத் தவிர வேறு எவரும் அவருக்குப் பதில் எழுதவில்லை. ஒருவர் ஆறுதலாய் ""ஹிம்சை என்பது அனாதியான தத்துவம். இதற்கு நாமெல்லாம் கவலைப்படுவானேன்'' என்று எழுதினார். அவர் ரசிகமணி டி.கே.சி.

இன்னொருவரோ, இலக்கணத்தைப் பொருட்படுத்தாமல், இரண்டு வெண்பாக்களைப் பதிலாக எழுதி அனுப்பினார்:

குட்டுவதற்கும் வெட்டுவதற்கும் கூட்டமுடன் அன்னவரைச்
சுட்டு எரித்துத் தகிப்பதற்கும் வெட்டரிவாள்
பாட்டுண்டு, நானுண்டு, நீயுண்டு, பாட்டறியா
மோட்டெருமைக் கவிராய னுண்டு.

மோட்டெருமைக் கவிராயன் முக்காரம் கேட்டால்தான்
நாட்டமுள்ள பாட்டின் நயந் தெரியும் - பாட்டுள்ள
ரகுநாதா, நெஞ்சே, ரவைவைத்துப் பாட்டிசைக்கும்
ரகுநாதா ஏங்காதே நீ


வேளூர்க் கவிராயரின் வெண்பாக்களைப் பெற்ற அந்த எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் விட்டபாடில்லை. பதிலுக்கு நான்கு வெண்பாக்களில் தன் வயிற்றெரிச்சலை விரித்து எழுதி அனுப்பிவைத்தார் இப்படி:

வேளூர்க் கவிராயா, விண்ணாரச் செந்தமிழில்
வாளத்த கவியிரண்டும் வாசித்தேன் - நாளெல்லாம்
வெந்தழலால் பாட்டெழுதும் விருத்தா சலப்பெரியோய்
தந்திட்டேன் மிகவந் தனம்.

தோணியப்பர் பாடிவச்ச சூத்திரத்தைப் பார்த்தபின்னும்
வீணுக்கே கவியெழுதும் வெட்டிகளைக் - கோணிக்குள்
போட்டடைச்சி, பெருச்சாளி போலடிச்சிச் சாகடிக்கப்
பாட்டெழுதின் உண்டு பலன்.

காமனையும் சோமனையும் காலினையும் தென்றலையும்
வாம முலையழகும் வருணித்துச் - சாபத்தில்
குடைபிடித்துக் கூத்தாடும், கூட்டத்தார் தம்குடுமிச்
சடைபிடித்துச் சாத்தல் சரி.

தங்கக் கவியெனவே தமுக்கடிச்சிச் சொல்லிவரும்
வெங்கத் திருக்கூட்டம் வீடுபெறச் - சங்கத்து
நக்கீரன் நம்வழியில் நாமிருவர் சென்றுநிதம்
மொக்க வுண்டு பேனா முனை.


சரியாய், 68 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது, 12.1.1946 அன்று வேளூர் வேனாக் காணா என்று கையொப்பமிட்டு, ரகுநாதனுக்கு அனுப்பிய, விருத்தாசலம் என்னும் இயற்பெயர் உடைய வேளூர்க்கவிராயர் வேறு யாரும் இல்லை. சொ.வி எனப்படும் புதுமைப்பித்தன்தான்.

வந்ததில் சிறந்ததைத் தேர்ந்து தனது வாழ்த்தாகப் பலருக்கும் அனுப்பும் குறுஞ்செய்திக் காலத்தில், இந்த வசைமொழி வாழ்த்து, ஒரு வரலாறாக நினைவுகூரத் தக்கதுதானே!
-முனைவர் சொ. சேதுபதி / dinamani



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 12, 2014 1:10 pm

குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங்கில்லை;
குரும்பி அளவாக் காதை குடைந்து தோண்டி
எட்டின மட்டு அறுப்பதற்கோ வில்லியில்லை;
இரண்டொன்றா முடிந்து தலை இறங்கப் போட்டு
வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தன் இல்லை;
விளையாட்டாய் கவிதைதனை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லா துரைகள் உண்டு;
தேசமெங்கும் புலவரென திரியலாமே!
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 14, 2014 2:02 pm

ஆதிரா பாடல் கவனிக்கத் தக்கது ! தேசம் எங்கும் புலவர் எனத் திரிபவர்கள்தான் இன்று பிரபலமாகிறார்கள் ! புலமை பெற்ற நாம் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறோம் ! அன்றும் இன்றும் இதுதான் உண்மை !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Fri Jan 31, 2014 4:35 pm

பகட்டுப்பட்டங்கள்தான் பலரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது.


பகட்டுப்பட்டங்கள் கொண்டவன்
கூறும் உரைநடையையும்
ஹைக்கூ என்கும் உலகம்.





[You must be registered and logged in to see this link.]

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக