Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருஞ்சீரகம் !
+4
கிருஷ்ணா
ayyasamy ram
ஜாஹீதாபானு
krishnaamma
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கருஞ்சீரகம் !
First topic message reminder :
கருஞ்சீரகத்தின் பலன்கள் :-
* தோல் நோய்களை குறைக்கும். பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை குணப்படுத்தும்.
* புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும்.
*பால் சுரப்பைக் கூட்டும்.
* சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.
* கருஞ்சீரகத்தை நீர் விட்டு, அரைத்து, நல்லெண்ணையிëல் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும்.
* கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும்.
* கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும்.
* கருஞ்சீரகத்தை வறுத்து காடி விட்டு அரைத்து சொறி, தேமல் மேல் பூசி வர தேமல், சொறி மறையும்.
* கருஞ்சீரகத்தையும், தும்மட்டிக்காயையும் சேர்த்து அரைத்து விலாப்பக்கம் பூசி வர குடல் பூச்சிகள் வெளியேறி விடும்.
* கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட அஜீரணம் மாறும்.
* கருஞ்சீரகப்பொடியை தயிரில் கலந்து சாப்பிட அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி மாறும்.
* கருஞ்சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மாறும்.
* கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும்.
* கைப்பிடி கீழா நெல்லி இலைகளோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து சிறிதளவு பால் சேர்த்து அரைத்து பின் இதை ஒரு கப் பாலில் கலந்து காலை உணவுக்கு அரை மணி நேரம் பின் மற்றும் மாலை நேரம் பருகி வர மஞ்சட்காமாலை குணமாகும்.
இயற்கை மருத்துவம்
கருஞ்சீரகத்தின் பலன்கள் :-
* தோல் நோய்களை குறைக்கும். பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை குணப்படுத்தும்.
* புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும்.
*பால் சுரப்பைக் கூட்டும்.
* சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.
* கருஞ்சீரகத்தை நீர் விட்டு, அரைத்து, நல்லெண்ணையிëல் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும்.
* கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும்.
* கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும்.
* கருஞ்சீரகத்தை வறுத்து காடி விட்டு அரைத்து சொறி, தேமல் மேல் பூசி வர தேமல், சொறி மறையும்.
* கருஞ்சீரகத்தையும், தும்மட்டிக்காயையும் சேர்த்து அரைத்து விலாப்பக்கம் பூசி வர குடல் பூச்சிகள் வெளியேறி விடும்.
* கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட அஜீரணம் மாறும்.
* கருஞ்சீரகப்பொடியை தயிரில் கலந்து சாப்பிட அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி மாறும்.
* கருஞ்சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மாறும்.
* கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும்.
* கைப்பிடி கீழா நெல்லி இலைகளோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து சிறிதளவு பால் சேர்த்து அரைத்து பின் இதை ஒரு கப் பாலில் கலந்து காலை உணவுக்கு அரை மணி நேரம் பின் மற்றும் மாலை நேரம் பருகி வர மஞ்சட்காமாலை குணமாகும்.
இயற்கை மருத்துவம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
Re: கருஞ்சீரகம் !
ஜாஹீதாபானு wrote:கருஞ்சீரகத்தை கடைல திரும்ப குடுத்துட்டேன்மா.
அது மருந்து பொருள் பானு நல்லபடியா திரும்ப தந்துட்டிங்க ! பொதுவாக அது மளிகை கடைகளில் இருக்காதே, நாட்டுமருந்து கடைகளில் தான் கிடைக்கும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கருஞ்சீரகம் !
-
கருஞ்சீரகம் (Nigella sativa) தெற்கு மற்றும்
தென்மேற்கு ஆசியாவினைத் தாயகமாகக் கொண்ட தாவரம்
Re: கருஞ்சீரகம் !
ஆரோக்கியத்துக்கான தூண்கள் – கருஞ்சீரகம்
சீரகம் தெரியும், பெருஞ்சீரகம் தெரியும்; அதென்ன கருஞ்சீரகம்? ஆரோக்கியம் தருவதில் சீரகமும் கருஞ்சீரகமும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள். தாளிக்கும் பொருள்களின் கூட்டணியிலும் சமையல் வகையிலும் அதிகம் இடம்பிடித்த கருஞ்சீரகம், இப்போது கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால், கருமையான விதைகளுக்குள் ஒளிந்திருக்கும் நலம் பயக்கும் நுண்கூறுகள் நமது ஆரோக்கியத்துக்கான தூண்கள் என்றே சொல்லலாம்.
அரேபியாவில் `ஆசீர்வதிக்கப்பட்ட விதைகள்’ என்று கருஞ்சீரகத்தைக் குறிப்பிடுகின்றனர். பெர்சிய மருத்துவரான `அவிசென்னா’ தனது நூலில் கருஞ்சீரகத்தின் பயன் குறித்து விவரித்துள்ளார். `டட்’ (Tut) எனும் எகிப்திய அரசரின் கல்லறையில் கருஞ்சீரக விதைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
காஷ்மீர் உணவுகளில் கருஞ்சீரகத்தின் சேர்க்கை அதிகம். மத்தியக் கிழக்கு நாடுகளில் கோதுமையைக் கொண்டு செய்யப்படும் ‘கிப்பே’ (Kibbeh) எனப்படும் உணவில் கருஞ்சீரகம் சேர்க்கப்படுகிறது. எத்தியோப்பியாவின் சில பான வகைகளையும், ரஷ்ய நாட்டின் ரை-ரொட்டி
களையும் (Rye-bread) சுவையூட்டு கிறது கருஞ்சீரகம்.
கருஞ்சீரகத்தில் மட்டுமே இருக்கும் `தைமோகுயினோன்’ (Thymoquinone) என்ற வேதிப் பொருளும் தைமால், பைனீன், அனிதால் போன்றவையும் இதன் மருத்துவக் குணங்களுக்குக் காரணமாகின்றன. பீட்டா கரோட்டின், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, சோடியம், கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் என உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டங்களைக் கொண்டுள்ளது கருஞ்சீரகம்.
உடலுக்குள் கிருமிகள் நுழையும்போது, அவற்றை எதிர்க்கும் செல்களின் செயல்பாட்டைக் கருஞ்சீரகம் முடுக்கிவிடுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. முதிர்ந்த வயதிலும் நோய் எதிர்க்கும் திறனை மேம்படுத்தும் திறன் கருஞ்சீரகத்துக்கு உண்டு. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், கருஞ்சீரகம் ரத்த அழுத்தத்தைக் குறைத்துச் சிறந்த பலனைத் தந்துள்ளது.
புற்றுக்கட்டிகளின் வளர்ச்சிக்கு, புதிய ரத்தக் குழாய்கள் உருவாவதைத் தடுக்கும் திறன், இதற்கு இருப்ப தாகப் புற்று சார்ந்த ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மரபணுக்களை இயக்கும் புரதங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் ஆற்றல், கருஞ்சீரகத்தில் உள்ள `தைமோகுயினோன்’ என்ற மூலப்பொருளுக்கு இருக்கிறது. ஒவ்வாமை சார்ந்த நோய்களுக்கு இதன் எண்ணெய் சிறந்த மருந்தாகச் செயல்படும். இதயநோய்களை உருவாக்கக் காரணியாக இருக்கும் கெட்ட கொழுப்பின் (LDL) அளவைக் குறைக்கவும் கருஞ்சீரகம் சேர்ந்த மருந்துகள் உதவும்.
உபகுஞ்சிகை, அரணம் ஆகிய வேறு பெயர்களைக் கொண்ட கருஞ்சீரகத்துக்கு சிறுநீர்ப்பெருக்கி, புழுக்கொல்லி, நஞ்சகற்றி, வாய்வகற்றி போன்ற செய்கைகள் உள்ளன. சரும நோய்கள், உடல்சூடு, வயிறு உப்புசம், இருமல், வாந்தி, வீக்கம் போன்றவற்றுக்குக் கருஞ்சீரகத்தை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்கிறது அகத்தியர் குணவாகடப் பாடல். கொத்தமல்லி மற்றும் மிளகின் சுவைகளைத் தன்னகத்தே வைத்திருக்கும் கருஞ்சீரகத்தைச் சமையலில் தொடர்ந்து சேர்த்து வந்தால் புத்துணர்வு கிடைக்கும்.
நொச்சி இலைகளை நீரில் போட்டுக் கொதிக்கவைத்து, அதில் கருஞ்சீரகப் பொடியைச் சேர்த்துக் குடித்து வந்தால் காய்ச்சல் படிப்படியாகக் குறையும். தலைபாரம், மூட்டுவீக்கம் போன்றவற்றுக்கு, கருஞ்சீரகத்தை மையாக அரைத்து பற்றுப்போட்டால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். தீராத விக்கலை உடனடியாக நிறுத்த, இதன் விதைப்பொடியை மோருடன் கலந்து பருகலாம். தேனில் குழைத்துச் சாப்பிட்டால் தடைபட்ட சுவாசம் எளிதாகும். இதன் மருத்துவக் குணங்களைப் பெற, ரொட்டி வகைகளில் கருஞ்சீரக விதைப்பொடியைத் தூவிச் சாப்பிடலாம்.
பெண்களைப் பாதிக்கும் சில நோய்களைக் குணப்படுத்த, பண்டைய கிரேக்க மருத்துவரான `ஹிப்போகிரேடஸ்’ கருஞ்சீரகத்தை மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறார். பூப்பு சுழற்சியை முறைப்படுத்த கருஞ்சீரகப் பொடியை சாதம் வடித்த கஞ்சியில் சேர்த்துக் கொடுத்து வரலாம். குழந்தை பிறந்ததும், கருப்பையின் உள்ளே இருக்கும் அழுக்கை முற்றிலும் வெளியேற்ற கருஞ்சீரகம் உதவுகிறது. தடைபட்ட மாதவிடாயை வெளியேற்ற, ஒரு கிராம் கருஞ்சீரகப் பொடியைச் சிறிது கீழாநெல்லி மற்றும் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம்.
இதன் விதையிலிருந்து பிரித்தெடுக்கும் எண்ணெயை வெற்றிலையில் தடவி மென்று சாப்பிட வீரியவிருத்தி உண்டாகும் என்கிறது சித்த மருத்துவம். கருஞ்சீரக எண்ணெயைத் துணியில் தடவி மோந்து பார்த்தால் மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல் குணமாகும். பழங்காலத்தில் நுரையீரல் பாதை தொற்றுகளைக் குணப்படுத்த கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது.
புழுக்களை வெளியேற்ற இதன் பொடியை மிதமான வெந்நீரில் கலந்து பருகலாம் அல்லது கால் டீஸ்பூன் பொடியை, அரை டீஸ்பூன் விளக்கெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம். சிறுவர்களுக்கு மூன்று சிட்டிகை பொடியைத் தேனில் குழைத்துக் கொடுத்தால் புழுக்கள் வெளியேறும்; பசி உணர்வு அதிகரிக்கும். கருஞ்சீரகச் சூரணத்துடன், நெருஞ்சில் விதை சேர்த்து நீர்விட்டுக் கொதிக்கவைத்துக் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறும்.
புதினா, கொத்தமல்லி, இஞ்சி, சீரகத்துடன் கருஞ்சீரகம் சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சிக் குடித்துவந்தால் ரத்த அழுத்தம் சீராகும். நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயம், நாவல்கொட்டைத் தூளுடன் கருஞ்சீரகம் சேர்த்து அவ்வப்போது சாப்பிட, பாதங்களில் உண்டாகும் எரிச்சல், சோர்வு மறையும்.
கருஞ்சீரகத்தை வறுத்துப் பயன்படுத்தி னால் மணம் அதிகரிக்கும். சமைத்து முடித்த உணவுகளில் ஒரு சிட்டிகை கருஞ்சீரகம் தூவினால் தனித்துவமான சுவை கிடைக்கும். அசைவ குழம்பு வகைகளில் மிளகைப் போலவே கருஞ்சீரகத்தையும் சேர்க்கலாம். சீரகத்துக்குச் சிறிது இனிப்பு, கார்ப்பு கலந்த சுவையும், கருஞ்சீரகத்துக்குக் கைப்பு, கார்ப்பு சேர்ந்த சுவையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கருஞ்சீரகம் !
கருஞ்சீரகம் வடநாட்டில் அதிகமாக உபயோகத்தில் உள்ளது.
Kalonji என்று அழைக்கப்படுகிறது.
ரமணியன்
Kalonji என்று அழைக்கப்படுகிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கருஞ்சீரகம்
» கருஞ்சீரகம் - பயன்கள்
» கருஞ்சீரகம் நோய் நிவாரணி
» கருஞ்சீரகம் நோய் நிவாரணி
» கருஞ்சீரகம்..!! (இது ஒரு நோய் நிவாரணி குறிப்பு)
» கருஞ்சீரகம் - பயன்கள்
» கருஞ்சீரகம் நோய் நிவாரணி
» கருஞ்சீரகம் நோய் நிவாரணி
» கருஞ்சீரகம்..!! (இது ஒரு நோய் நிவாரணி குறிப்பு)
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|