புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10பாமரர் தேவாரம் - Page 8 Poll_m10பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10பாமரர் தேவாரம் - Page 8 Poll_m10பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10பாமரர் தேவாரம் - Page 8 Poll_m10பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10பாமரர் தேவாரம் - Page 8 Poll_m10பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10பாமரர் தேவாரம் - Page 8 Poll_m10பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10பாமரர் தேவாரம் - Page 8 Poll_m10பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10பாமரர் தேவாரம் - Page 8 Poll_m10பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
prajai
பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10பாமரர் தேவாரம் - Page 8 Poll_m10பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10பாமரர் தேவாரம் - Page 8 Poll_m10பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10பாமரர் தேவாரம் - Page 8 Poll_m10பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10பாமரர் தேவாரம் - Page 8 Poll_m10பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10 
435 Posts - 47%
heezulia
பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10பாமரர் தேவாரம் - Page 8 Poll_m10பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10பாமரர் தேவாரம் - Page 8 Poll_m10பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10பாமரர் தேவாரம் - Page 8 Poll_m10பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10பாமரர் தேவாரம் - Page 8 Poll_m10பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10 
30 Posts - 3%
prajai
பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10பாமரர் தேவாரம் - Page 8 Poll_m10பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10பாமரர் தேவாரம் - Page 8 Poll_m10பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10பாமரர் தேவாரம் - Page 8 Poll_m10பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10பாமரர் தேவாரம் - Page 8 Poll_m10பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10பாமரர் தேவாரம் - Page 8 Poll_m10பாமரர் தேவாரம் - Page 8 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரர் தேவாரம்


   
   

Page 8 of 20 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 07, 2014 9:34 am

First topic message reminder :

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)

(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)

அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1

[அன்னதானச் செய்தி: Aadalvallan

மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2

[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]

கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3

[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]

ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4

[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]

புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5

[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]

அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6

உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7

கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8

பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9

ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10

ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11

--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Sep 11, 2014 9:07 am

(இறுதிப் பகுதி)

வேதமு தல்வனாய் வேணியிற் சடையனாய்
போதம ளித்தருள் வானே
போதம ளித்தருள் வான்பதம் கண்டிடும்
போதொளி செய்சிவ புரமே. ... 11

காழியர் அப்பரும் கண்ணுதற் கடவுளைப்
பாழியிற் போற்றிய பாடல்
பாழியிற் போற்றிய பாடலும் உளம்வரப்
பூழியால் அருள்சிவ புரமே. ... 12 ... [திருநீறு]

--ரமணி, 25-28/08/2014

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Sep 17, 2014 8:32 am

19. திருப்புனவாயில் (இன்று திருப்புனவாசல்)
(கட்டளைக் கலித்துறை)

(தனதன தானதனா தன தானன தானதனா
இதில் கட்டளைக் கலித்துறையும் பொருந்திவரும்;
முதற்சீர் ’தானன’ என்றும் அமையலாம்; இவ்வகைத் தேவாரப் பதிகங்களில்
’தானதனா’ என்பது சிலசமயம் ’தானதான’ என்றும் வரக் காணலாம்.
சம்பந்தர் தேவாரம்: 3.56.1 இறையவ னீசனெந்தை யிமை யோர்தொழு தேத்தநின்ற
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=30560")

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=254
http://www.shivatemples.com/pnaadut/pnt07.php

பதிகம்
சம்பந்தர்: 3.011 மின்னியல் செஞ்சடை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=30110
சுந்தரர்: 7.050 சித்த நீநினை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=70500

(தனதன/தானன தானதனா/தானதான தன தானன தானதனா/தானதான)

காப்பு
கணபதி யானவனே கடி தேயுனை வேண்டுவனே!
வணமுறும் பாடலிலே வய மாவுரி பூணுவனாய்
நிணவுறும் நீள்பிறவி நிலை மையழி நாதனென
மணமுறும் கோவிலுறை மழு வாளனை நாடிடவே!

பதிகம்
உருவினில் ஆவுடையார் உறு மாவென வானதுவாம்
உரியதள் மூன்றுடனே முழ மாவது முப்பதுவாம்
கருவினில் வாழுயிரைக் கரி யாளவள் காத்திடவே
புரிகுழ லாளுடனே புன வாயிலு றைபவனே. ... 1

பாண்டிய நாட்டிலுறை பதி நான்கு லங்களுமே
ஈண்டுள வென்பதுவே இத னோர்பெரு மையெனவே
ஆண்டகை கோவிலிலே அமை லிங்கமும் அத்தனையாம்
பூண்டொடு பாவமறப் புன வாயில ருள்பவனே. ... 2



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Sep 18, 2014 9:45 am

நான்குயு கந்தனிலே நல மாகிடும் பேரெனவே
நான்குபெ யர்களிலே நரர் பாவம றுத்ததுவாம்
நான்கும ரங்களுமே நதி யார்சடை யன்மரமாம்
பூம்புனல் பாய்ந்துவரும் புன வாயிலெ னும்தலமே. ... 3

கள்ளிவ னந்தனிலே கரி யாளவள் வாழ்வதனால்
கள்ளம கன்றிடவே கனி யாகும னத்தினிலே
உள்ளவை நல்லவையாய் உணர் வாருறை ஊரெனவே
புள்ளினப் பண்ணொலியார் புன வாயிலெ னும்தலமே. ... 4



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Sep 19, 2014 9:09 am

பத்தெனும் நீர்நிலையே படி வார்வினை தீர்வதற்கே ... [படிதல் = நீராடுதல்]
முத்திய ருள்பெறவே முனி மாந்தரும் போற்றினரே
வித்தகம் வேண்டிடுவோர் விடை யூர்வனை நாடிடவே
புத்துறைப் பாம்பணிந்தே புன வாயிலில் மேவினனே. ... 5

கைதவர் செம்பியரின் கலை யாலமை கோபுரமாம் ... [கைதவர் = பாண்டியர்]
மைவிழிப் பூங்குழலாள் மழ லைதர வேண்டுவரே
ஐயனின் சன்னிதியில் அமை யாதென யாதுமிலை
பொய்யறச் செய்திடவே புன வாயிலில் மேவினனே. ... 6



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Sep 20, 2014 9:11 am

வானதி வான்மதியம் மழு வாளனின் சென்னியிலே
தேனுறும் பூங்குழலாள் திரு மேனியு றைந்திடவே
கானுறும் கூளியுடன் களி யாடுவன் காத்தருள்வான்
பூனத மேனியனே புன வாயிலில் மேவினனே. ... 7 ... [பூனதம் = பொன்]

தசமுகன் சென்னிகளைத் தரை தாழ்த்தினன் தாழ்சடையன்
அசுரரின் முப்புரமும் அன லாலெரி யூட்டியவன்
பசுபதி என்பவனாய் பவ நோயைய ழிப்பவனாம்
புசகம ணிந்தவனாய் புன வாயிலில் மேவினனே. ... 8

[புசகம் = பாம்பு; ’கொங்கின் புசக கோத்திரி’--திருப்புகழ், 1182]



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Sep 24, 2014 8:40 am

(இறுதிப் பகுதி)

அயனுடன் மாலவனும் அடி தேடியு ளைந்தனரே ... [அடி = ஆதி, source]
உயர்வினை வேண்டிநின்றால் உமை யாளுடன் கூடிநின்றே
மயலினைக் கொன்றிடுவான் மறை வாழ்நெறி நின்றிடவே
புயமதில் பாம்பணிவான் புன வாயிலில் மேவினனே. ... 9

மறைவழி வாழ்வதிலே மலி னம்தனைக் காணுவரின்
நெறியதில் உள்ளமுறா நிறை மாந்தரின் வாழ்வினிலே
இறையென நின்றவனே இக வாழ்வினில் சீர்தருவான்
பொறிகொளும் பாம்பரையன் புன வாயிலில் மேவினனே. ... 10 ... [பொறி = புள்ளிகள்]

இறைவனின் சீர்புகழும் இளை யாரது பாக்களுடன்
கறையுறும் உள்ளமதைக் கடிந் தேநலம் வேளரசர்
மறையன பாடலெலாம் மன மார்ந்திடும் போதினிலே
பொறையினில் வாழ்பெருமான் புன வாயில ருள்வனென்றே. ... 11

[இளையார் = சம்பந்தர்; அரசர் = அப்பர்; பொறை = மலை]

--ரமணி, 07-15/09/2014, கலி.30/05/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Sep 27, 2014 8:42 am

வெஞ்சமாக்கூடல் (இன்று வெஞ்சமாங்கூடலூர்)
(கலிவிருத்தம்: விளம் விளம் விளம் விளம்)
(சம்பந்தர் தேவாரம்: 3.029.1 வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
சம்பந்தர் தேவாரம்: 3.036.1 சந்தமா ரகிலொடு சாதிதேக் கம்மரம்)

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=88
http://www.shivatemples.com/knaadut/venjamaakkudal.php

பதிகம்
சுந்தரர்: 7.042 எறிக்குங்கதிர் வேயுதிர்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=70420

காப்பு
சிறியவன் எனக்கருள் சித்திவி நாயக!
பொறியுறும் கட்செவிப் பொழிவினைக் கழுத்தினிற்
செறிவுறச் செய்தவர் செஞ்சடை யார்தல
விறலினைப் பாடவே வெஞ்சமாக் கூடலே.... [விறல் = பெருமை, வெற்றி, வீரம்]

பதிகம்
திகிலுறும் தீனரின் தீமைய ழிப்பவர்
முகிலுறும் மழையென மூவுல கெங்கணும்
பகவனாய் எழுந்துயிர்ப் பன்மையைக் களைபவர்
விகிர்தனார் எழுந்தருள் வெஞ்சமாக் கூடலே. ... 1

மங்கையா யிடமுறும் மதுரமொ ழியவளே
இங்குறை ஈசனின் இன்னருள் நாயகி
கொங்குநீர் ஆறெனக் குடகமும் குழகமும் ... [கொங்கு = தேன், வாசனை]
வெங்கதிர்க் கண்ணுதல் வெஞ்சமாக் கூடலே. ... 2



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Sep 29, 2014 9:01 am

தன்னிரு குமரரைத் தந்ததில் ஈடென
முன்னுறு கிழவியும் பொன்னதைத் தந்திட
சுந்தர நண்பரின் சுணக்கமும் தீர்த்தருள்
மின்னுரு வன்னுறை வெஞ்சமாக் கூடலே. ... 3

இந்திரன் கௌதமர் இல்லவள் நாடியே
தந்திர மாய்க்கொளச் சாபமும் பெற்றவன்
வந்தனை செய்யவே வந்தருள் செய்தவன்
விந்தையின் கேளுறை வெஞ்சமாக் கூடலே. ... 4

[விந்தை = துர்க்கை; கேள் = கணவன்]



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Sep 30, 2014 8:38 am

கருவறை நிலத்தடிக் காட்சியாய் லிங்கமென்
றுருவினில் அருள்தரும் உயர்வினைப் பெறுவமே
அருணகி ரியவரும் அறுமுகன் போற்றிய
விருத்தனின் தலமென வெஞ்சமாக் கூடலே. ... 5

வெளிவரும் சுற்றினில் விநாயகர் நான்முகன்
அளிதரும் கொற்றவை அறுமுகன் பைரவர்
நளிவுறும் சன்னிதி நவக்கிர கங்களாம்
விளிவினைத் தீர்த்திடும் வெஞ்சமாக் கூடலே. ... 6

[அளிதரும் = அருள்தரும்; நளிவுறும் = செறிந்து உள்ள; விளிவு = சாவு, கேடு, உறக்கம்]


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 01, 2014 6:12 pm

சுகிர்தனாய் நின்றவன் சுந்தரர்க் கருளினான்
திகிரியை மதியினைத் திட்டியாய்க் கொண்டவன்
நகிலுறும் அமுதுகொள் நாரியி டத்தினன்
விகிர்தனாய் மேவினன் வெஞ்சமாக் கூடலே. ... 7

[சுகிர்தன் = நண்பன்; திகிரி = சூரியன்; திட்டி = பார்வை, கண்;
நகில் = முலை; அமுது = பால்; நாரி = பார்வதி; விகிர்தன் = ௮கடவுள்]

தசமுகன் தலைகளைத் தரையினில் தாழ்த்தினன்
அசுரரின் முப்புரம் அனலெரி யூட்டினன்
நசிவுறும் கானக நாயகன் என்றவன்
விசுவமாய் நின்றனன் வெஞ்சமாக் கூடலே. ... 8



Sponsored content

PostSponsored content



Page 8 of 20 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக