Latest topics
» திரைத்துளிகள்by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாமரர் தேவாரம்
+9
M.Saranya
தமிழ்நேசன்1981
உமேரா
M.M.SENTHIL
saski
ந.க.துறைவன்
Dr.S.Soundarapandian
ayyasamy ram
ரமணி
13 posters
Page 7 of 20
Page 7 of 20 • 1 ... 6, 7, 8 ... 13 ... 20
பாமரர் தேவாரம்
First topic message reminder :
பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)
(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)
அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1
[அன்னதானச் செய்தி: Aadalvallan
மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2
[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]
கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3
[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]
ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4
[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]
புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5
[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]
அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6
உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7
கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8
பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9
ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10
ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11
--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114
*****
பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)
(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)
அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1
[அன்னதானச் செய்தி: Aadalvallan
மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2
[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]
கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3
[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]
ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4
[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]
புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5
[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]
அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6
உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7
கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8
பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9
ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10
ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11
--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: பாமரர் தேவாரம்
ரமணி அவர்களின் பாமரர் தேவாரம் உச்சிமேல் கொள்ளத்தக்கவை !
படிக்கப் படிக்க என் மனம் களிப்புற்றது !
படிக்கப் படிக்க என் மனம் களிப்புற்றது !
![பாமரர் தேவாரம் - Page 7 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![பாமரர் தேவாரம் - Page 7 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: பாமரர் தேவாரம்
மத்தமும் மதியும் சூடி
. மங்கையைத் தாங்கு வோனை
வித்துறும் வினைகள் இல்லா
. விடுதலை வேண்டி நின்றே
இத்தரை யின்னும் ஏனோ
. என்பவர் நாடு கின்ற
உத்தமன் அடியார் காப்பென்
. றுறைவனாப் பாடி யூரே. ... 5
அஞ்செனும் பூத மாவான்
. அண்டமும் பலவென் றாவான்
நஞ்சினைக் கண்டம் கொண்டே
. நானிலம் வாழ வைப்பான்
தஞ்சமென் றவன்றாள் பற்றின்
. தன்னுடன் சேர்த்துக் கொள்வான்
அஞ்செழுத் தோதும் பத்தர்க்
. கருள்வனாப் பாடி யூரே. ... 6
. மங்கையைத் தாங்கு வோனை
வித்துறும் வினைகள் இல்லா
. விடுதலை வேண்டி நின்றே
இத்தரை யின்னும் ஏனோ
. என்பவர் நாடு கின்ற
உத்தமன் அடியார் காப்பென்
. றுறைவனாப் பாடி யூரே. ... 5
அஞ்செனும் பூத மாவான்
. அண்டமும் பலவென் றாவான்
நஞ்சினைக் கண்டம் கொண்டே
. நானிலம் வாழ வைப்பான்
தஞ்சமென் றவன்றாள் பற்றின்
. தன்னுடன் சேர்த்துக் கொள்வான்
அஞ்செழுத் தோதும் பத்தர்க்
. கருள்வனாப் பாடி யூரே. ... 6
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: பாமரர் தேவாரம்
(இறுதிப் பகுதி)
திரிபுரம் சிரித்த ழித்தான்
. சித்தசன் பார்த்த ழித்தான் ... [சித்தசன் = மன்மதன்]
எரிவனச் சாம்பர் மேனி
. விடதரம் பூண்டு நிற்பான் ... [விடதரம் = விடைத்தைத் தரித்த நாகம்]
உருவினில் அருவாய் நின்றே
. உய்வினைத் தந்த ருள்வான்
வருவினை கொள்ளும் வேடன்
. வாழ்வனாப் பாடி யூரே. ... 7
கயிலைம லைகொள் வேந்தைக்
. கால்விரல் பதித்தே சாய்த்தான்
அயனரி காணா வண்ணம்
. அழலெழு வென்றே நின்றான் ... [எழு = தூண்]
கயல்விழிச் சொக்கன் என்றே
. கடிமணம் கொண்டு நின்றான்
உயர்வினைத் தருவ தற்கே
. உறைவனாப் பாடி யூரே. ... 8
மறையதைத் தூற்றும் மற்றை
. வழியினிற் செல்லா தாகின்
கறையிலா ஞானம் தந்தே
. காசினிப் பிறப்ப றுப்பான்
பிறையினச் சூடும் பித்தன்
. பெண்ணொரு பாகன் சித்தன்
இறையருள் நாடும் பத்தர்க்
. கினியனாப் பாடி யூரே. ... 9
கண்மலர்க் கனலைக் கொண்டான்
. கலைமதி சூடி நின்றான்
பெண்மலர் இடத்தில் கொண்டான்
. பேயுடன் ஆடு கின்றான்
விண்மலர் நதிவீ ழல்தான்
. விரிசடை தாங்க நின்றான்
தண்மலர்த் தாளைக் காணத்
. தருவனாப் பாடி யூரே. ... 10
அப்பரின் பதிகம் சொல்லும்
. அருவுரு தாங்கி நின்றே
ஒப்பனை இல்லா ஞானம்
. உள்ளுறச் செய்யும் ஈசன்
இப்பொழு தேவி ழைவோர்
. இப்பிறப் பறுத்தே உய்ய
ஒப்பிலி அம்மை யப்பன்
. உறைவனாப் பாடி யூரே. ... 11
--ரமணி, 14/08/2014, கலி.29/04/5115
*****
திரிபுரம் சிரித்த ழித்தான்
. சித்தசன் பார்த்த ழித்தான் ... [சித்தசன் = மன்மதன்]
எரிவனச் சாம்பர் மேனி
. விடதரம் பூண்டு நிற்பான் ... [விடதரம் = விடைத்தைத் தரித்த நாகம்]
உருவினில் அருவாய் நின்றே
. உய்வினைத் தந்த ருள்வான்
வருவினை கொள்ளும் வேடன்
. வாழ்வனாப் பாடி யூரே. ... 7
கயிலைம லைகொள் வேந்தைக்
. கால்விரல் பதித்தே சாய்த்தான்
அயனரி காணா வண்ணம்
. அழலெழு வென்றே நின்றான் ... [எழு = தூண்]
கயல்விழிச் சொக்கன் என்றே
. கடிமணம் கொண்டு நின்றான்
உயர்வினைத் தருவ தற்கே
. உறைவனாப் பாடி யூரே. ... 8
மறையதைத் தூற்றும் மற்றை
. வழியினிற் செல்லா தாகின்
கறையிலா ஞானம் தந்தே
. காசினிப் பிறப்ப றுப்பான்
பிறையினச் சூடும் பித்தன்
. பெண்ணொரு பாகன் சித்தன்
இறையருள் நாடும் பத்தர்க்
. கினியனாப் பாடி யூரே. ... 9
கண்மலர்க் கனலைக் கொண்டான்
. கலைமதி சூடி நின்றான்
பெண்மலர் இடத்தில் கொண்டான்
. பேயுடன் ஆடு கின்றான்
விண்மலர் நதிவீ ழல்தான்
. விரிசடை தாங்க நின்றான்
தண்மலர்த் தாளைக் காணத்
. தருவனாப் பாடி யூரே. ... 10
அப்பரின் பதிகம் சொல்லும்
. அருவுரு தாங்கி நின்றே
ஒப்பனை இல்லா ஞானம்
. உள்ளுறச் செய்யும் ஈசன்
இப்பொழு தேவி ழைவோர்
. இப்பிறப் பறுத்தே உய்ய
ஒப்பிலி அம்மை யப்பன்
. உறைவனாப் பாடி யூரே. ... 11
--ரமணி, 14/08/2014, கலி.29/04/5115
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: பாமரர் தேவாரம்
18. சிவபுரம் (கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டைக்கு அருகில்)
(ஆசிரியத்துறை: திருமுக்கால் அமைப்பு
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் தேமா
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் புளிமா)
கோவில்:
http://temple.dinamalar.com/New.php?id=958
http://www.maalaimalar.com/2014/02/06103619/sivapuram-temple-kumbakonam.html
http://aarkaytamil.blogspot.in/2014_05_01_archive.html
பதிகம்
அப்பர்: 6.087 வானவர்காண் வானவர்க்கு
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=60870
சம்பந்தர்: 1.021 புவம்வளி கனல்புனல்
1.112 இன்குர லிசைகெழும்
1.125 கலைமலி யகலல்கு
காப்பு
கருவறைச் சுற்றுறைக் கரிமுக நாயகன்
குருவருள் தந்தருள் வானே
குருவருள் தந்தருள் வானடி யேன்செய
ஒருபதி கம்சிவ புரமே.
பதிகம்
சங்கரர் முன்வழி யாருறைத் தலமிது
சங்கணிச் சவுரிவ ராகம்
சங்கணிச் சவுரிவ ராகவு ருவினிலே ... [சவுரி = திருமால்]
இங்கருள் பெறுசிவ புரமே. ... 1
தனபதி பெயரினிற் சனித்தகு பேரனும்
மனமுறும் ஆசையில் சேயை
மனமுறும் ஆசையில் சேய்வதம் செய்தவன்
தனதுரு கொள்சிவ புரமே. ... 2
(ஆசிரியத்துறை: திருமுக்கால் அமைப்பு
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் தேமா
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் புளிமா)
கோவில்:
http://temple.dinamalar.com/New.php?id=958
http://www.maalaimalar.com/2014/02/06103619/sivapuram-temple-kumbakonam.html
http://aarkaytamil.blogspot.in/2014_05_01_archive.html
பதிகம்
அப்பர்: 6.087 வானவர்காண் வானவர்க்கு
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=60870
சம்பந்தர்: 1.021 புவம்வளி கனல்புனல்
1.112 இன்குர லிசைகெழும்
1.125 கலைமலி யகலல்கு
காப்பு
கருவறைச் சுற்றுறைக் கரிமுக நாயகன்
குருவருள் தந்தருள் வானே
குருவருள் தந்தருள் வானடி யேன்செய
ஒருபதி கம்சிவ புரமே.
பதிகம்
சங்கரர் முன்வழி யாருறைத் தலமிது
சங்கணிச் சவுரிவ ராகம்
சங்கணிச் சவுரிவ ராகவு ருவினிலே ... [சவுரி = திருமால்]
இங்கருள் பெறுசிவ புரமே. ... 1
தனபதி பெயரினிற் சனித்தகு பேரனும்
மனமுறும் ஆசையில் சேயை
மனமுறும் ஆசையில் சேய்வதம் செய்தவன்
தனதுரு கொள்சிவ புரமே. ... 2
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: பாமரர் தேவாரம்
ஆலம ரத்தடி யதிலொரு குகையினில்
வேலவன் தமையனைக் காண்போம்
வேலவன் தமையனைக் காண்பதில் வினையெலாம்
வேலைய றும்சிவ புரமே. ... 3
பூமியின் அடியினில் புதையுள லிங்கமென்
றாமென இருவரும் வந்தார்
ஆமென இருவரும் வந்துமண் அங்கமும் ... [இருவரும் = அப்பர், சம்பந்தர்]
தாமுற உருள்சிவ புரமே. ... 4
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: பாமரர் தேவாரம்
பெரியநா யகியுடன் பெருந்தகை சிவகுரு
வருவினை கொள்ளவே நின்றார்
வருவினை கொள்ளவே நின்றுல கந்தனைப்
புரந்திடும் தலம்சிவ புரமே. ... 5
செண்பக விருட்சமாம் சுந்தரத் தீர்த்தமாம்
சண்முகன் சன்னிதிக் கீர்த்தி
சண்முகன் சன்னிதிக் கீர்த்திய ருணகிரி
ஒண்திருப் புகழ்சிவ புரமே. ... 6
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: பாமரர் தேவாரம்
மாதிடம் கொண்டவன் வானதி தாங்கியே
காதலால் அடியரைக் காப்பான்
காதலால் அடியரைக் காத்தவன் முடிவுறும்
போதவன் அருள்சிவ புரமே. ... 7
தசமுகன் தலைகளைத் தரையினில் வீழ்த்தியே
இசையுடன் போற்றிடச் செய்தான்
இசையுடன் போற்றிடும் செயலுறும் போதருள்
பொசிவுறும் தலம்சிவ புரமே. ... 8
அயனரி தலைப்படத் தாள்படத் தேடியும்
வயப்படா அழலெழு வானான்
வயப்படா அழலெழு வாகியும் துயரினைப்
புயத்தருள் செய்சிவ புரமே. ... 9 ... [புயத்தல் = பெயர்த்தல்]
மறைகொளும் வழியது மாசெனத் தள்ளிடும்
பிறவழிச் செலவுறும் பீடை
பிறவழிச் செலவுறும் பீடையும் கொள்வனாய்ப்
புறவுரு கொள்சிவ புரமே. ... 10
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Page 7 of 20 • 1 ... 6, 7, 8 ... 13 ... 20
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
» தினமும் சொல்லலாம் தேவாரம்
» தேவாரம் என்பதன் பொருள்......
» தேவாரம் :திருவாசகம் தேவை
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
» தினமும் சொல்லலாம் தேவாரம்
» தேவாரம் என்பதன் பொருள்......
» தேவாரம் :திருவாசகம் தேவை
Page 7 of 20
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|