ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரர் தேவாரம்

+9
M.Saranya
தமிழ்நேசன்1981
உமேரா
M.M.SENTHIL
saski
ந.க.துறைவன்
Dr.S.Soundarapandian
ayyasamy ram
ரமணி
13 posters

Page 17 of 20 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20  Next

Go down

பாமரர் தேவாரம் - Page 17 Empty பாமரர் தேவாரம்

Post by ரமணி Tue Jan 07, 2014 9:34 am

First topic message reminder :

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)

(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)

அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1

[அன்னதானச் செய்தி: Aadalvallan

மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2

[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]

கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3

[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]

ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4

[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]

புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5

[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]

அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6

உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7

கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8

பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9

ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10

ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11

--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down


பாமரர் தேவாரம் - Page 17 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி Mon Jul 06, 2015 6:58 pm

அடியவர் துறவியர் அகத்தியரும்
பிடியவள் இடமுறும் பெருமுலையாள்
திடந்தரும் உமையவள் தெரிசனத்தை
இடைமரு தூரினில் இறைஞ்சினரே. ... 3

அன்னையும் தரிசன அழகருளித்
தன்னள வில்சிவ தவமிருக்க
தன்னையே தான்துதி தலமெனவே
இன்னருள் செய்தனன் இடைமருதே. ... 4

வடமரு தூரென வரும்சயிலம்
புடைமரு தூரெனப் புகலொருவூர்
விடையவன் நடுவனாய் வீற்றிருக்க
இடமளிக் கும்தலம் இடைமருதே. ... 5

வீதியின் நாற்றிசை வீற்றருளும்
மேதகு லிங்கமாய் மெருகிடவே
பாதியில் நின்றருள் பரமனென
ஈதையை நீக்குவன் இடைமருதே. ... 6 ... [ஈதை = துன்பம்]
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 17 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி Wed Jul 08, 2015 7:43 am

மூவகைச் சுற்றினில் முடிவுறவே
தேவதை பலவெனத் திருவுருவே
சாவினை நிறுத்திடும் சடைமுடியன்
ஈவதே அறமென இடைமருதே. ... 7

மூகனை வதைத்தவள் முழுமுதலாள்
ஏகமாய் நின்றருள் இருதலத்தில்
ஊகமாய் உடுப்பிகொல் லூரினிலே ... ... [ஊகம் = நினைவு, தியானம்]
ஏகமாய் அருள்செயும் இடைமருதே. ... 8

முப்பதின் இரண்டென முழுகிடவே
ஒப்பிலாத் தீர்த்தமாய் உறைதலமாம்
கப்பிடும் வினைகளின் கதியறவே
எப்பொழு தும்மருள் இடைமருதே. ... 9

வரகுண பாண்டியன் வாழ்வினிலே
வருவினை அந்தண வதையெனவே
வரகுணன் ஈசனை வழிபடவே
இருந்தருள் செய்தது இடைமருதே. ... 10
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 17 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி Thu Jul 09, 2015 7:36 pm

மனத்துயர் நீங்கிடும் வரன்குதிரும்
வனமிகு குழந்தைகள் வரம்கிடைக்கும்
தனம்வரும் வளம்வரும் தானகலும்
இனியவன் போற்றிட இடைமருதே. ... 11

கருத்தரிக் கச்செயும் கருணையினாள்
கருச்சிதை மனப்பிணி கழித்திடுவாள்
உருத்திரன் சக்தியாய் உமையவளை
இருத்திடும் தலமென இடைமருதே. ... 12

மாலினைக் கணையாய் மாட்டியவர்
காலற முப்புரம் கரித்தழித்தார்
மோலியில் சந்திரன் சூடியவர் ... [மோலி = மௌலி = சடைமுடி]
ஏலுவர் முக்தியை இடைமருதே. ... 13

கரத்தலும் தொழிலெனக் களிப்பவரே
புரத்தலும் அழித்தலும் பூணுவராம்
பிரமனின் தலையினைப் பிதிர்த்தவராய்
இரந்தருள் செய்குவர் இடமருதே. ... 14
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 17 Empty Re: பாமரர் தேவாரம்

Post by shobana sahas Thu Jul 09, 2015 8:01 pm

சிவபிரான் பற்றியும் உமை அம்மை பற்றிய பாடல்களும் அருமையாக உள்ளது அய்யா .
உங்கள் பணிக்கு என் வாழ்த்துக்கள் .. அன்பு மலர் அன்பு மலர்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 17 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி Tue Jul 14, 2015 8:59 am

நந்தியைக் குரங்கென நகையரக்கன்
மந்தியால் அழிந்திடும் வாக்குணவே
அந்தகன் மலையடி அலறவைத்த
எந்தையின் தரிசனம் இடமருதே. ... 15

[குறிப்பு: கயிலை மலைமேல் செல்லலாகாது என்று நந்திதேவர் தடுத்தபோது இராவணன்
அவரைக் குரங்கென நகைக்க குரங்கால் அவன் அழிவான் என்று அவர் சாபமிட்டார்.]

தந்திறம் காட்டிய தானவனை
முந்துறு கால்விரல் மொத்தியபின்
அந்தகன் அரற்றிட அருள்செய்தே
எந்தையாய் மேவினர் இடைமருதே. ... 16

பெரியவர் தானெனும் பேச்சினிலே
மாதவன் மலரவன் வாதமுற
எரியழற் றூணென எம்பெருமான்
இருந்தனர் எழுந்தனர் இடைமருதே. ... 17

அடிமுடி தேடியே அயனரியும்
உடல்மனம் சோரவே உள்ளுணர்ந்தார்
உடையவர் என்றுமே உமைபாகன்
எடுபதம் காணுவோம் இடைமருதே. ... 18
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 17 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி Thu Jul 16, 2015 7:39 pm

அமணமும் புத்தமும் ஆரணம்தள்
சமயமாய் நால்வரும் சாற்றினரே
இமயவன் நெறியதே ஏற்றதென
இமையெனக் காப்பவன் இடைமருதே. ... 19

ஆரணம் தவிர்த்திடும் அயல்நெறிகள்
தேர்வழி பிழையெனும் சிந்தைவர
நேர்வழி செல்லவே நீறணியான்
ஏர்வழிப் படுத்துவர் இடைமருதே. ... 20

பறையதன் ஓசையும் பண்ணுடனே
மறையுடன் சேர்ந்திடும் மாண்பினிலே
அறைந்திடும் உண்மையை அப்பரவர்
இறையெனக் கண்டனர் இடைமருதே. ... 21

இலைமலி பொழிலிடை மருதிறையைக்* ... [சம்பந்தர் பதிகப் பாடலடி]
கலந்தருள் பெற்றவர் காழியர்கோன்
பலன்மிகு பதிகமாய்ப் பாடிநின்றார்
இலையினி துன்பமே இடைமருதே. ... 22

--ரமணி, 04-06/07/2015

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 17 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி Fri Jul 31, 2015 9:16 am

திருச்சிராப்பள்ளி
(நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா)

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=313
http://www.shivatemples.com/sofct/sct006.php

பதிகம்
சம்பந்தர்: 1.098: நன்றுடையானைத் தீயதிலானை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=10980
அப்பர்: 5.085: மட்டு வார்குழ லாளொடு மால்விடை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50850
சிவசிவாவின் வலைப்பூ: http://madhisudi.blogspot.in/2015/06/01.html

காப்பு
மண்ணிலே மாணிக்கம் மாடியில் செவ்வந்தி
விண்தொடும் உச்சி விநாயக - பண்படும்
சொற்களில் தாயான சொக்கனைப் பாடுதற்(கு)
உற்றருள் செய்வாயென் னுள்.

பதிகம்
(நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா)

ஈச்சுரன் தாயான இத்தலந்தான் தோன்றிலிங்கம்
ஆச்சரி யம்தரும் ஆகிருதி பூச்சொரிந்து
பாச்சொரிந் தீரடியார் பண்ணிசைத்தே போற்றிவைத்த
தீச்சொரி கண்ணுதலான் திருச்சிராப் பள்ளியிலே. ... 1

மட்டுவார் குழலம்மை மாதவத்தாள் அடியவருக்(கு)
இட்டமாய் அருள்செய்தே இறைப்பற்றை வளர்ப்பதிலே
கட்டுகள் நீங்கிடவே கறைமிடற்றன் காட்சிவரத்
திட்டமாய் மேவினனே திருச்சிராப் பள்ளியிலே. ... 2

அப்பனின் கோவிலிலே அதிபதியாய்ப் பிள்ளையாராம்
சுப்பனைப் பாடினரே சொல்வேந்தர் அருணகிரி
ஒப்பிலா வில்வமரம் ஓங்கிநிற்கும் தலமரமாய்த்
தெப்பமண் டபக்குளமாம் திருச்சிராப் பள்ளியிலே. ... 3
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 17 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி Sat Aug 01, 2015 8:27 am

கோவிலில் ஈசனவன் கொடிமரமே பின்னுறுமாம்
காவிரி யில்வெள்ளம் கரைமீறத் தாய்தவிக்கச்
சேய்விரித் தருள்செய்தே சிறுமகளைக் காத்தவனாய்த்
தீவிரித் தாடுபவன் திருச்சிராப் பள்ளியிலே. ... 4

தட்சிணா மூர்த்தியென தருப்பைப்புல் மீதமர்ந்தே
எட்டுமு னிவர்சூழ இருந்தருள் செய்பவனாம்
விட்டக லாவாழை வீற்றிருக்கும் தார்வைத்தே
சிட்டனை வழிபடுவர் திருச்சிராப் பள்ளியிலே. ... 5

மன்னனின் நந்தவன மலர்திருட்டால் முனிசெய்த
முன்னவன் வழிபாட்டு முறைபிறழ முறையிட்டார் ... ... [முன்னவன் = சிவன்]
அன்னவர்க் கருள்செய்தான் அரசவைமேல் மண்மழையால்
சின்னமாய் வீற்றிருப்பன் திருச்சிராப் பள்ளியிலே. ... 6

முப்புரம் எரிசெய்தே மூவர்க்கும் அருள்செய்தான்
அப்பரின் சூலநோயை அகற்றியே ஆட்கொண்டான்
சப்பரம் ஊர்பவனாய்ச் சகலர்க்கும் காட்சிதந்தே
தெப்பமும் ஊர்ந்திடுவான் திருச்சிராப் பள்ளியிலே. ... 7
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 17 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி Tue Aug 04, 2015 9:04 am

(இறுதிப் பகுதி)

வல்லரக் கன்மலையை வலிகரத்தால் அசைத்திடவே
கல்லடி யில்தலைகள் கால்விரலால் வீழ்த்தினனே
வில்லடி வாங்கியவன் விசயனுக்குக் கணைதந்தான்
தில்லையில் ஆடுவபன் திருச்சிராப் பள்ளியிலே. ... 8

புகழ்ந்தனர் அயனரியும் புண்ணியன்தாள் தலைதேடி
மகிழ்ந்தனர் அவனடியார் மழுவாளி பதம்நாடி
அகழ்ந்தனர் மெய்ப்பொருளை ஆலமர்ந்தான் குருவாகித்
திகழ்ந்தனர் பேறுபெற்றுத் திருச்சிராப் பள்ளியிலே. ... 9

ஆரணம் தள்ளிநிற்கும் அவலநெறி யாவையுமே
காரணன் நெறியல்ல காரிருளுள் வீழ்த்துவன
மாரணம் நேரவரும் மறுபிறப்பின் வினைகளெலாம்
சீரணம் செய்தருள்வான் திருச்சிராப் பள்ளியிலே. ... 10

தீநயம் போம்நாமம் திருச்சிராப் பள்ளியென்ற
நாநய வேந்தர்பா நாலுமட்டும் இன்றுளவே
ஞானசம் பந்தர்பண் ணால்வருமே நன்மையெலாம்
தேனயம் பாடுகின்ற திருச்சிராப் பள்ளியிலே. ... 11

[தீநயம் = தீயன நயத்தல்; நாநய வேந்தர் = திருநாவுக்கரசர்
தேனயம் பாடுகின்ற = சம்பந்தர் பாடல் சொற்றொடர்: தேன் = வண்டு;
நயம் = கனமும் தேசிகமும் கலந்து பாடும் வகை]

--ரமணி, 30/07/2015, கலி.15/04/5116

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 17 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி Tue Aug 18, 2015 9:01 am

திருச்சேறை
(எழுசீர் விருத்தம்: ’தான தானன தான தானன தான தானன தானனா’
ஒரோவழி ’தான’ என்பது ’தனன’ என்று வரும். இப்பாடல்களில்,
ஈற்றடிதோறும் மூன்றாம் சீரிலும் எதுகை அமைந்துள்ளது.)


(சுந்தரர் தேவாரம்: 7.48.1: மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பாத மேமனம் பாவித்தேன்
சம்பந்தர் தேவாரம்: 3.39.1: மானி னேர்விழி மாத ராய்வழு திக்கு மாபெருந் தேவிகேள்)

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=1002
http://www.shivatemples.com/sofct/sct095.php

பதிகம்
சம்பந்தர்: 3.086: முறியுறு நிறமல்கு
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=30860
அப்பர்:
4.073: பெருந்திரு விமவான் பெற்ற
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40730
5.077: பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடும்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50770

காப்பு
செந்நெறி யப்பரின் சீர்தனைப் பாடவே
இன்னருள் செய்தருள் ஏரம்ப - இன்னருஞ்
சேறைத் தலத்துறை தெய்வ உருவினர்
கூறையும் பாடக் கொடு.

பதிகம்
(எழுசீர் விருத்தம்: ’தான தானன தான தானன தான தானன தானனா’
ஒரோவழி ’தான’ என்பது ’தனன’ என்று வரும். இப்பாடல்களில்,
ஈற்றடிதோறும் மூன்றாம் சீரிலும் எதுகை அமைந்துள்ளது.)


பற்று மூவினைப் பங்கு சேர்ந்திடப்
. பாவ புண்ணியம் மேவினேன்
பற்று மூன்றினைத் தீர்க்கும் காரியம்
. பாசம் மேவிட ஆற்றினேன்
உற்ற வாழ்வினில் சுற்றி யேவினை
. ஊறு செய்வது குன்றவே
சிற்ச பைதனில் பொற்ப தம்தரும்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 1

[மூவினை = சஞ்சித, பிராரப்த, ஆகாமி கர்மாக்கள்;
பற்று மூன்று = வாழ்வில் முனிவர், தேவர், முன்னோர் பொருட்டுள்ள மூன்று கடன்கள்]

அன்னை யின்னுரு ஞான வல்லியென்
. றாகி நேர்வழி காட்டுவாள்
இன்னும் மூவகை துர்க்கை யாயுரு
. யேற்று வல்வினை வீட்டுவாள்
மின்னும் வெஞ்சுடர் மாசி யிற்கரம்
. மீது பட்டொளி வீசுமே
சென்னி யிற்சடை பின்ன லோடுடைச்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 2

[அன்னையின் பெயர் இத்தலத்தில் ஞானவல்லி; அவள் சிவ, விஷ்ணு, வைஷ்ணவி என்று
மூன்று துர்க்கை யுருவிலும் காட்சி தருகிறாள். வெஞ்சுடர் = சூரியன்; மாசியில்
மூன்று நாட்கள் சூரியன் ஒளி இறைவன், அன்னை பாதம் தொடும்]
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 17 Empty Re: பாமரர் தேவாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 20 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum