புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாமரர் தேவாரம்
Page 2 of 20 •
Page 2 of 20 • 1, 2, 3 ... 11 ... 20
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)
(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)
அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1
[அன்னதானச் செய்தி: Aadalvallan
மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2
[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]
கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3
[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]
ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4
[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]
புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5
[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]
அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6
உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7
கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8
பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9
ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10
ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11
--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114
*****
பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)
(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)
அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1
[அன்னதானச் செய்தி: Aadalvallan
மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2
[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]
கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3
[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]
ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4
[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]
புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5
[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]
அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6
உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7
கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8
பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9
ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10
ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11
--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பறைகொட்டப் பேய்கூடும் அனலேந்தும் கரமாடும்
எறிசடையிற் றிழியாறும் பிறைமதியுந் தடுமாறும்
உறியடியாய் அண்டமெலாம் துகளாகித் துண்டெனவே
அறுவினையான் ஐந்தொழிலே நல்லூரில் கைத்தொழுமே. ... 5
ஆடற்கொரு மாடற்றலம் பாடற்பெறும் ஈடற்றதே
தேடத்துணை நல்லூரினில் சேமந்தர வல்லானென
ஓடதனைக் கொள்ளும்பவ ஓடமதைத் தள்ளும்சிவ
வேடத்தினன் பரமனென வேதத்தறம் அருளுவனே. ... 6
எறிசடையிற் றிழியாறும் பிறைமதியுந் தடுமாறும்
உறியடியாய் அண்டமெலாம் துகளாகித் துண்டெனவே
அறுவினையான் ஐந்தொழிலே நல்லூரில் கைத்தொழுமே. ... 5
ஆடற்கொரு மாடற்றலம் பாடற்பெறும் ஈடற்றதே
தேடத்துணை நல்லூரினில் சேமந்தர வல்லானென
ஓடதனைக் கொள்ளும்பவ ஓடமதைத் தள்ளும்சிவ
வேடத்தினன் பரமனென வேதத்தறம் அருளுவனே. ... 6
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
உயிர்தேவன் ஆதிசேடன் உரம்காணச் சேதமாகிக்
கயிலைச்சேண் ஆவூரில் அமர்ந்ததுவே நல்லூரில்
எயிலெரித்த எண்டோளன் ஏத்துவோருள் நின்றாடச்
செயிரெல்லாம் சிதைந்தேகச் சீர்மலியும் நல்லூரே. ... 7
[உயிர்தேவன் = வாயுபகவன்; சேண் = சிகரம், முகடு; செயிர் = குற்றம், கோபம், நோய்.
ஆவூரில் அமர்ந்ததுவே நல்லூரில் = ஆவூரில், நல்லூரில் அமர்ந்ததுவே
என்று அன்வயம் செய்துகொள்க.]
பழையாறை நாயனாரை ஆராய்ந்த நேயனாவான்
குழைக்காதன் நல்லூரின் கோவெனவே வல்லானாம்
மழுவாளி அகத்தியர்க்கு மணக்கோலம் புகட்டியவன்
பழவினையைப் புடைத்தாளும் பரனேநாம் கடைத்தேற. ... 8
[பழையாறை நாயனார் = அமர்நீதி நாயனார். இவரது வரலாறு இங்கே:
http://www.shaivam.org/baktas/nayanmar/nayanmar-amarneethi.htm]
கயிலைச்சேண் ஆவூரில் அமர்ந்ததுவே நல்லூரில்
எயிலெரித்த எண்டோளன் ஏத்துவோருள் நின்றாடச்
செயிரெல்லாம் சிதைந்தேகச் சீர்மலியும் நல்லூரே. ... 7
[உயிர்தேவன் = வாயுபகவன்; சேண் = சிகரம், முகடு; செயிர் = குற்றம், கோபம், நோய்.
ஆவூரில் அமர்ந்ததுவே நல்லூரில் = ஆவூரில், நல்லூரில் அமர்ந்ததுவே
என்று அன்வயம் செய்துகொள்க.]
பழையாறை நாயனாரை ஆராய்ந்த நேயனாவான்
குழைக்காதன் நல்லூரின் கோவெனவே வல்லானாம்
மழுவாளி அகத்தியர்க்கு மணக்கோலம் புகட்டியவன்
பழவினையைப் புடைத்தாளும் பரனேநாம் கடைத்தேற. ... 8
[பழையாறை நாயனார் = அமர்நீதி நாயனார். இவரது வரலாறு இங்கே:
http://www.shaivam.org/baktas/nayanmar/nayanmar-amarneethi.htm]
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
(இறுதிப் பகுதி)
நலங்கிளருந் திருவடியென் றலைமேலென் றாரப்பர்
மலைமல்கு கோயிலிலே மகிழ்ந்தீரென் றார்பிள்ளை
கலைமல்கு நல்லூரில் களித்திருக்கும் வல்லானைத்
தலைமேல்கை வைத்தேற்றின் அலராதோ மெய்த்தேற்றே. ... 11
கருவறையில் குயிறலுற்ற அரனுருளை பயப்புறுமே
பெருவுருவாய் மாலயனும் இருபுறமும் பாலகராய்
அரனம்மை பின்னிற்கும் மணக்கோலம் முன்நிறகத்
தருவெனவே நல்லூரில் அருளுவரே எல்லாமே. ... 12
[குயிறல் = துளைத்தல்; உருளை = இலிங்கம்; பயப்பு = நிறம் மாறுதல்.
நல்லூர்க் கருவரை மூலவர் படம் இங்கே:
http://temple.dinamalar.com/New.php?id=367]
--ரமணி, 16-27/03/2014, kali.14/12/5114
*****
நலங்கிளருந் திருவடியென் றலைமேலென் றாரப்பர்
மலைமல்கு கோயிலிலே மகிழ்ந்தீரென் றார்பிள்ளை
கலைமல்கு நல்லூரில் களித்திருக்கும் வல்லானைத்
தலைமேல்கை வைத்தேற்றின் அலராதோ மெய்த்தேற்றே. ... 11
கருவறையில் குயிறலுற்ற அரனுருளை பயப்புறுமே
பெருவுருவாய் மாலயனும் இருபுறமும் பாலகராய்
அரனம்மை பின்னிற்கும் மணக்கோலம் முன்நிறகத்
தருவெனவே நல்லூரில் அருளுவரே எல்லாமே. ... 12
[குயிறல் = துளைத்தல்; உருளை = இலிங்கம்; பயப்பு = நிறம் மாறுதல்.
நல்லூர்க் கருவரை மூலவர் படம் இங்கே:
http://temple.dinamalar.com/New.php?id=367]
--ரமணி, 16-27/03/2014, kali.14/12/5114
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
திருப்பாச்சிலாச்சிரமம் (திருவாசி)
(எழுசீர் விருத்தம்: விளம் மா விளம் மா விளம் விளம் மா)
கோவில்:
http://temple.dinamalar.com/New.php?id=118
http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_paccil_acciramam.htm
http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=195
பதிகம்:
’துணிவளர் திங்கள்’ (சம்பந்தர்)
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=10440
’வைத்தனன் தனக்கே’ (சுந்தரர்)
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=70140
அன்னையின் நேரே அமர்ந்தருள் புரியும்
. அனுக்கைவி நாயக போற்றி!
அன்னமாம் பொய்கைத் தெளியமு தாக
. மன்னியென் னுளம்நிறைந் தமர்ந்தே
முன்னவ னுந்தை யெந்தையா யுணர்ந்தே
. முக்கணன் மேவிநின் றருளி
நன்னலம் பாய்ச்சும் பாச்சிலாச் சிராமத்
. தாலயம் பரவிட அருள்வாய்! ... 1
[அமுது = நீர்; அன்னமாம் பொய்கை = கோவில் தீர்த்தப் பெயர்]
மாற்றுரை வரதர் பிரம்மபு ரீசர்
. அத்துடன் சமீவனே சரெனப்
போற்றவே பலபேர் தாங்கிடு மீசர்
. உருத்திரை பாலசௌந் தரியாய்
காற்றினுங் கடுகிக் குறைதீர்த் தருளி
. அடியவர் காத்தொழில் செய்யும்
ஆற்றுவ டகரை பாச்சிலாச் சிராமத்
. தாலயம் அழித்திடும் வினையே. ... 2
[உருத்திரை = உமையன்னை; ஆற்று வடகரை = காவிரியாற்றின் வடகரையில்]
*****
(எழுசீர் விருத்தம்: விளம் மா விளம் மா விளம் விளம் மா)
கோவில்:
http://temple.dinamalar.com/New.php?id=118
http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_paccil_acciramam.htm
http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=195
பதிகம்:
’துணிவளர் திங்கள்’ (சம்பந்தர்)
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=10440
’வைத்தனன் தனக்கே’ (சுந்தரர்)
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=70140
அன்னையின் நேரே அமர்ந்தருள் புரியும்
. அனுக்கைவி நாயக போற்றி!
அன்னமாம் பொய்கைத் தெளியமு தாக
. மன்னியென் னுளம்நிறைந் தமர்ந்தே
முன்னவ னுந்தை யெந்தையா யுணர்ந்தே
. முக்கணன் மேவிநின் றருளி
நன்னலம் பாய்ச்சும் பாச்சிலாச் சிராமத்
. தாலயம் பரவிட அருள்வாய்! ... 1
[அமுது = நீர்; அன்னமாம் பொய்கை = கோவில் தீர்த்தப் பெயர்]
மாற்றுரை வரதர் பிரம்மபு ரீசர்
. அத்துடன் சமீவனே சரெனப்
போற்றவே பலபேர் தாங்கிடு மீசர்
. உருத்திரை பாலசௌந் தரியாய்
காற்றினுங் கடுகிக் குறைதீர்த் தருளி
. அடியவர் காத்தொழில் செய்யும்
ஆற்றுவ டகரை பாச்சிலாச் சிராமத்
. தாலயம் அழித்திடும் வினையே. ... 2
[உருத்திரை = உமையன்னை; ஆற்று வடகரை = காவிரியாற்றின் வடகரையில்]
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
கருவறை சுயம்பு விலிங்கமா யருள்வார்
. அனையுடன் நின்றொரு கோலம்
உருவினில் சகஸ்ர லிங்கமாய் வெளியிற்
. கொலுவுயர் சன்னிதி யொன்றாம்
திருவுருள் பெற்ற நால்வரில் பதிகம்
. இருவரும் பாடியே வந்தார்
ஒருவரின் பாட்டில் பிணியினைத் தீர்த்தின்
. னொருவருக் காடகம் தந்தார். ... 3
[அனை = அன்னை; இருவர் = சம்பந்தர், சுந்தரர்; ஆடகம் = சிறந்த பொன்.]
முயலகன் நோயால் மழவனின் மகளுக்
. குறுதுயர் தீரவே கூத்தன்
தயவினை வேண்டிக் குரவரும் பாட
. அவள்துயர் நீக்கிய அரனும்
முயலகன் இன்றி விடதரம் மீதே
. ஒருவடி யூன்றியே ஆடும்
மயலறும் ஆடற் கூத்தனின் கோலம்
. மனமிழிந் தால்வரும் உய்வே. ... 4
[மயல் = மயக்கம்; குரவர் = இங்கு சம்பந்தர்;
இழிதல் = இறங்குதல்.]
. அனையுடன் நின்றொரு கோலம்
உருவினில் சகஸ்ர லிங்கமாய் வெளியிற்
. கொலுவுயர் சன்னிதி யொன்றாம்
திருவுருள் பெற்ற நால்வரில் பதிகம்
. இருவரும் பாடியே வந்தார்
ஒருவரின் பாட்டில் பிணியினைத் தீர்த்தின்
. னொருவருக் காடகம் தந்தார். ... 3
[அனை = அன்னை; இருவர் = சம்பந்தர், சுந்தரர்; ஆடகம் = சிறந்த பொன்.]
முயலகன் நோயால் மழவனின் மகளுக்
. குறுதுயர் தீரவே கூத்தன்
தயவினை வேண்டிக் குரவரும் பாட
. அவள்துயர் நீக்கிய அரனும்
முயலகன் இன்றி விடதரம் மீதே
. ஒருவடி யூன்றியே ஆடும்
மயலறும் ஆடற் கூத்தனின் கோலம்
. மனமிழிந் தால்வரும் உய்வே. ... 4
[மயல் = மயக்கம்; குரவர் = இங்கு சம்பந்தர்;
இழிதல் = இறங்குதல்.]
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
வணிகனின் மகளாய்ப் பிறந்தபா லாம்பாள்
. வன்னிம ரத்தடித் தவத்தால்
மணிமிடற் றரனின் பிரிவினை யறுத்தே
. மணம்கொளப் பெற்றவின் னாமம்
அணங்கவள் கமலம் நின்றருள் செய்ய
. மழலையர் நோயற வாழ்வர்
பணிமகள் வாயிற் பெண்ணிரு யுருவிற்
. கணியெனக் காஞ்சனித் தொட்டில். ... 5
[மிடறு = கழுத்து; வாயிற் பணிமகள் = துவாரபாலகி;
காஞ்சனி = மஞ்சள்]
சூரியன் மனையாள் இருவரும் பக்கம்
. சூழவே நின்றிடும் நவக்கோள்
ஆரமாய் மற்ற கோளெலாம் அவரைப்
. பார்க்கவே கோள்வினை குன்றும்
ஆரமாய்க் குவியும் கரங்களிற் றாளம்
. ஆர்த்திட நிற்குமா ரூரர்
பூரணன் தந்த பொன்னை-ஐ யுற்றே
. ஊடலில் நின்றதோர் கோலம்! ... 6
. வன்னிம ரத்தடித் தவத்தால்
மணிமிடற் றரனின் பிரிவினை யறுத்தே
. மணம்கொளப் பெற்றவின் னாமம்
அணங்கவள் கமலம் நின்றருள் செய்ய
. மழலையர் நோயற வாழ்வர்
பணிமகள் வாயிற் பெண்ணிரு யுருவிற்
. கணியெனக் காஞ்சனித் தொட்டில். ... 5
[மிடறு = கழுத்து; வாயிற் பணிமகள் = துவாரபாலகி;
காஞ்சனி = மஞ்சள்]
சூரியன் மனையாள் இருவரும் பக்கம்
. சூழவே நின்றிடும் நவக்கோள்
ஆரமாய் மற்ற கோளெலாம் அவரைப்
. பார்க்கவே கோள்வினை குன்றும்
ஆரமாய்க் குவியும் கரங்களிற் றாளம்
. ஆர்த்திட நிற்குமா ரூரர்
பூரணன் தந்த பொன்னை-ஐ யுற்றே
. ஊடலில் நின்றதோர் கோலம்! ... 6
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
அன்னமாய் மாறி அழலென நின்ற
. அரன்முடி தேடிய அயன்தான்
சொன்னபொய் யுரையால் அன்னமாய் நிற்க
. உருத்திரன் அருளினால் தவம்செய்
துன்னியே போற்றத் தன்னுருப் பெறவே
. முன்னுரு நீங்கிய தீர்த்தம்
அன்னமாம் பொய்கை என்றுபேர் பெற்றே
. நம்வினை யழிநிலை நீரே. ... 7
எழுமையும் அடியேன் அடியவர்க் கடியேன்
. இவரினும் புரப்பவர் இல்லை
தொழுதுமேன் காட்டார் சேவடி யானே
. உரிமையா யவர்பொருள் ஆனேன்
உழல்மனம் ஆறப் பாச்சிலாச் சிரமத்
. துறைபவ னேத்தியா ரூரர்
மொழிந்திடும் பாடல் உளம்வரப் பெற்றால்
. ஒழியுமே இனிவரும் பிறப்பே. ... 8
[எழுமை = ஏழு பிறப்பிலும்]
. அரன்முடி தேடிய அயன்தான்
சொன்னபொய் யுரையால் அன்னமாய் நிற்க
. உருத்திரன் அருளினால் தவம்செய்
துன்னியே போற்றத் தன்னுருப் பெறவே
. முன்னுரு நீங்கிய தீர்த்தம்
அன்னமாம் பொய்கை என்றுபேர் பெற்றே
. நம்வினை யழிநிலை நீரே. ... 7
எழுமையும் அடியேன் அடியவர்க் கடியேன்
. இவரினும் புரப்பவர் இல்லை
தொழுதுமேன் காட்டார் சேவடி யானே
. உரிமையா யவர்பொருள் ஆனேன்
உழல்மனம் ஆறப் பாச்சிலாச் சிரமத்
. துறைபவ னேத்தியா ரூரர்
மொழிந்திடும் பாடல் உளம்வரப் பெற்றால்
. ஒழியுமே இனிவரும் பிறப்பே. ... 8
[எழுமை = ஏழு பிறப்பிலும்]
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
(இறுதிப் பகுதி)
புனற்சடை கலையும் கொன்றையும் உறையப்
. பூதமும் பேய்களும் சூழ
வனத்திடை நீறு பூசியே ஆடும்
. அனல்விழிப் பரமனும் பெண்ணைக்
கனற்றிடும் நோயைப் பாச்சிலாச் சிரமக்
. காவலன் மகிழவே தீர்க்க
மனங்கொளப் பாடிக் காழியர் விளைத்த
. அற்புதம் ஆழ்ந்திட உய்வே. ... 9
வானமும் உயிரும் வையமும் அறமும்
. மானிட மனமுறை குணமும்
ஆனவோர் இறையை அறிதலே உய்வென்
. றாமெனும் மறைநெறி பழிக்கும்
கானலாம் நெறிகள் தவிர்த்திடும் அடியார்
. காத்திடும் பாச்சிலாச் சிரம
ஞானனைப் போற்ற நன்மைகள் சேர
. நலிவெலாம் ஓடியே போமே. ... 10
பாச்சிலாச் சிராமப் பாழியின் மூர்த்தி
. பாரினில் அவரது கீர்த்தி
மூச்சினில் நாமம் மந்திரம் ஒலிக்க
. மூழ்கிடச் செய்திடும் தீர்த்தம்
வாச்சியம் வேதம் ஒலித்திட இறையை
. வழிபடும் அடியவர் கூட்டம்
பேச்சினில் செயலில் பாட்டினில் ஐயன்
. பேர்வர ஏர்வரு மன்றோ? ... 11
*****
புனற்சடை கலையும் கொன்றையும் உறையப்
. பூதமும் பேய்களும் சூழ
வனத்திடை நீறு பூசியே ஆடும்
. அனல்விழிப் பரமனும் பெண்ணைக்
கனற்றிடும் நோயைப் பாச்சிலாச் சிரமக்
. காவலன் மகிழவே தீர்க்க
மனங்கொளப் பாடிக் காழியர் விளைத்த
. அற்புதம் ஆழ்ந்திட உய்வே. ... 9
வானமும் உயிரும் வையமும் அறமும்
. மானிட மனமுறை குணமும்
ஆனவோர் இறையை அறிதலே உய்வென்
. றாமெனும் மறைநெறி பழிக்கும்
கானலாம் நெறிகள் தவிர்த்திடும் அடியார்
. காத்திடும் பாச்சிலாச் சிரம
ஞானனைப் போற்ற நன்மைகள் சேர
. நலிவெலாம் ஓடியே போமே. ... 10
பாச்சிலாச் சிராமப் பாழியின் மூர்த்தி
. பாரினில் அவரது கீர்த்தி
மூச்சினில் நாமம் மந்திரம் ஒலிக்க
. மூழ்கிடச் செய்திடும் தீர்த்தம்
வாச்சியம் வேதம் ஒலித்திட இறையை
. வழிபடும் அடியவர் கூட்டம்
பேச்சினில் செயலில் பாட்டினில் ஐயன்
. பேர்வர ஏர்வரு மன்றோ? ... 11
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
திருப்பூவனூர் - 2.
(எண்சீர் விருத்தம்: அரையடி வாய்பாடு: காய் காய் மா தேமா )
கோவில்:
http://temple.dinamalar.com/New.php?id=331
http://www.shivatemples.com/sofct/sct103.php
பதிகம்:
’பூவனூர்ப் புனிதன்’ (அப்பர்)
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50650
சதுரங்க வல்லவனாய் அருள்செய் யீசன்
. சாமுண்டி மூலமாகச் செய்யும் கோவிற்
பொதுமன்றில் நடம்செய்யும் பூவ னூரே
. பொருளுரைத்தே வினைபோக்கும் தலமென் றாக
நிதம்சூலி நாமத்தை நெஞ்சிற் கொண்டே
. நிமலன்பேர் நனிபரவி முத்தி யுற்றார்
பதம்போற்றித் தலைவணங்கி யுளங்க னிந்தால்
. பாவங்கள் நமைவிட்டு நீங்கும் இன்றே. ... 1
தத்தாநமர் என்றுதன தாவி நீங்கும்
. தருணத்தில் பகைவனையே பக்த னாக்கி
முத்தநாதன் கொலைவஞ்சம் எதிர்கொள் கோவி
. லூர்வேந்தன் மெய்ப்பொருளார் சரிதை கண்டே
இத்தருணம் இகல்தன்னை எதிர்கொள் யாரும்
. ஈசனருள் பெற்றுய்வார் பூவ னூரில்
பத்திவரும் பயம்போகும் வளரும் பான்மை
. அத்தனடி தலைவணங்கிப் போற்று வோர்க்கே. ... 2
*****
(எண்சீர் விருத்தம்: அரையடி வாய்பாடு: காய் காய் மா தேமா )
கோவில்:
http://temple.dinamalar.com/New.php?id=331
http://www.shivatemples.com/sofct/sct103.php
பதிகம்:
’பூவனூர்ப் புனிதன்’ (அப்பர்)
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50650
சதுரங்க வல்லவனாய் அருள்செய் யீசன்
. சாமுண்டி மூலமாகச் செய்யும் கோவிற்
பொதுமன்றில் நடம்செய்யும் பூவ னூரே
. பொருளுரைத்தே வினைபோக்கும் தலமென் றாக
நிதம்சூலி நாமத்தை நெஞ்சிற் கொண்டே
. நிமலன்பேர் நனிபரவி முத்தி யுற்றார்
பதம்போற்றித் தலைவணங்கி யுளங்க னிந்தால்
. பாவங்கள் நமைவிட்டு நீங்கும் இன்றே. ... 1
தத்தாநமர் என்றுதன தாவி நீங்கும்
. தருணத்தில் பகைவனையே பக்த னாக்கி
முத்தநாதன் கொலைவஞ்சம் எதிர்கொள் கோவி
. லூர்வேந்தன் மெய்ப்பொருளார் சரிதை கண்டே
இத்தருணம் இகல்தன்னை எதிர்கொள் யாரும்
. ஈசனருள் பெற்றுய்வார் பூவ னூரில்
பத்திவரும் பயம்போகும் வளரும் பான்மை
. அத்தனடி தலைவணங்கிப் போற்று வோர்க்கே. ... 2
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மேனியெங்கும் வெண்ணீறாய் மாதோர் பாகன்
. மேவியருள் புரிகின்ற பூவ னூரில்
வானிறங்கும் கங்கையாறு தலையிற் றாங்கி
. வானமுதை வையமுறச் செய்த வேந்தன்
கான்தனிலே பேயார்க்க நடனம் செய்யும்
. காட்சியுளம் கொள்வார்க்கே அச்சம் நீங்கி
தானென்ற உணர்வழிந்து மேன்மை யார
. அன்பொன்றே சிவமென்னும் பான்மை யாமே. ... 3
பூச்சொரியும் கொன்றைசிவ நினைவை யூட்டப்
. பூவுலகம் மேலுலகம் நின்றே கேட்கப்
பாச்சொரியும் ஐந்தெழுத்தைக் குழலில் ஊதிப்
. பரமனடி சேர்ந்தார்-ஆ னாய னாரின்
ஆச்சரியக் கதைகேட்டே பூவ னூரில்
. அம்மையப்பன் தாளிணையைப் பற்று வோர்க்கே
மாச்சரியம் முதலான பகையாம் ஆறும்
. மனம்விட்டு நீங்கிடவே மல்கும் அன்பே! ... 4
*****
. மேவியருள் புரிகின்ற பூவ னூரில்
வானிறங்கும் கங்கையாறு தலையிற் றாங்கி
. வானமுதை வையமுறச் செய்த வேந்தன்
கான்தனிலே பேயார்க்க நடனம் செய்யும்
. காட்சியுளம் கொள்வார்க்கே அச்சம் நீங்கி
தானென்ற உணர்வழிந்து மேன்மை யார
. அன்பொன்றே சிவமென்னும் பான்மை யாமே. ... 3
பூச்சொரியும் கொன்றைசிவ நினைவை யூட்டப்
. பூவுலகம் மேலுலகம் நின்றே கேட்கப்
பாச்சொரியும் ஐந்தெழுத்தைக் குழலில் ஊதிப்
. பரமனடி சேர்ந்தார்-ஆ னாய னாரின்
ஆச்சரியக் கதைகேட்டே பூவ னூரில்
. அம்மையப்பன் தாளிணையைப் பற்று வோர்க்கே
மாச்சரியம் முதலான பகையாம் ஆறும்
. மனம்விட்டு நீங்கிடவே மல்கும் அன்பே! ... 4
*****
- Sponsored content
Page 2 of 20 • 1, 2, 3 ... 11 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 20
|
|