புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_m10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10 
91 Posts - 61%
heezulia
வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_m10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_m10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_m10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_m10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10 
1 Post - 1%
viyasan
வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_m10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10 
1 Post - 1%
eraeravi
வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_m10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_m10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10 
283 Posts - 45%
heezulia
வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_m10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_m10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_m10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_m10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10 
19 Posts - 3%
prajai
வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_m10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_m10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_m10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_m10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10 
7 Posts - 1%
mruthun
வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_m10வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2009 12:52 am

ஒரு நாட்டில் தந்திலன் என்ற வணிகன் ஒருவன் இருந்தான்.

தந்திலன் செல்வச் செழுமையும், சிறந்த அறிவும், நல்ல தகுதியும் பெற்றவனாக இருந்தான். மக்களிடமும் அவனுக்கு நன்மதிப்பு இருந்தது.

அந்த நாட்டின் மன்னரிடம் நல்ல செல்வாக்கையும், பேராதரவையும் பெற்ற அவன் மன்னருடைய கருவூலத்துக்கும் அதிகாரியாக இருந்தான்.

ஒரு நாள் தந்திலன் தன்னுடைய மகள் திருமணத்தை மிகவும் சிறப்பாக நடத்தினான்.

திருமணத்துக்கு மன்னரும் - அரசியாரும் முக்கிய விருந்தினராக வந்து சிறப்பித்தனர்.

தந்திலனின் அழைப்பை ஏற்று அரசாங்க அதிகாரிகளும், சிப்பந்திகளும், பொது மக்களும் திருமண விழாவுக்கு திரளாக வந்திருந்தனர்.

திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் அரண்மனையைப் பெருக்கிச் சுத்தப்படுத்தும் பணியாளனான கோரபன் என்பவனும் வந்திருந்தான்.

அவன் தன்னைப் போன்ற சிப்பந்திகளுக்கென ஒதுக்கபட்ட ஆசனத்தில் அமராமல் அமைச்சர்கள் போன்ற அந்தஸ்துமிக்கவர்களுக்காகப் போடப்பட்டிருந்த ஆசனம் ஒன்றில் சென்று அமர்ந்து கொண்டான்.

அதைக் கண்ட தந்திலன் கோரபனிடம் சென்று அவனுக்கு உரிய ஆசனத்தில் சென்று அமருமாறு கேட்டுக் கொண்டான்.

கோரபன் தான் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்திருக்க மாட்டேன் என்று வீம்புக்காக அடம் பிடித்தான்.

நியாயமாகப் பல தடவை சொல்லியும் கோரபன் கேட்காததால் தந்திலன் தன் ஏவலாளரை விட்டு பலாத்காரமாக ஆசனத்தைவிட்டுக் கிளப்பி வெளியே துரத்திவிட்டான்.

அந்தக் காட்சியைக் கண்டு திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் கைகொட்டிச் சிரிக்கலானார்கள்.

கோரபனுக்கு அவமானமாகப் போய்விட்டது. தன்னைப் பலர் முன்னிலையில் கேவலப் படுத்திய தந்திலனை எவ்விதமாவது பழி வாங்கித் தீருவது என்று மனத்திற்குள் தீர்மானித்து அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மறுநாள் அதிகாலையில் கோரபன் அரண்மனையைப் பெருக்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தான்.

மன்னரின் படுக்கை அறையைச் சுத்தம் செய்ய வந்தவன் உள்ளே மன்னன் மட்டும் படுக்கையிலிருந்து எழாமல் அரைத் தூக்கத்திலிருப்பதைக் கவனித்தான்.

படுக்கையறையின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்யும் போது மன்னன் காதில் விழும் வகையில் அவன் கீழ்க்கண்டவாறு முனகிக் கொண்டான்.

இந்த தந்திலனை மன்னர் எவ்வளவு தூரம் நம்பி அரண்மனைக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதிக்கிறார். ஆனால் அந்த மூடனோ மன்னருடைய பெருந்தன்மைக்கு இழுக்கு தேடும் விதத்தில் மகாராணியாரை மானபங்கப்படுத்த முயலுகிறான் என்ன கேவலம்.

இந்தச் சொற்கள் மன்னரின் காதில் தெளிவாக விழவே அவர் திடுக்கிட்டு எழுந்து படுக்கையில் உட்கார்ந்து கொண்டு கோரபனை அழைத்தான்.

கோரபன் வந்து பணிந்து நின்றான்.

இப்போது என்ன சொன்னாய் ? என்று மன்னன் கேட்டான்.

எஜமான் நான் ஒன்றும் சொல்லவில்லையே. நேற்று இரவு சற்று அதிகமாக மது அருந்திவிட்டேன். இன்னும் சரியாக மயக்கம் தெளியவில்லை. ஒரு அரைகுறை மது போதையில் ஏதாவது உளறினேனோ என்னவோ * நான் ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் எசமான் மன்னிக்க வேண்டும் என்று தந்திரமாகக் கூறினான்.

மன்னர் கோரபனை அனுப்பி விட்டார். ஆனால் அவன் சொன்ன விஷயங்கள் அவர் மனத்தைக் குடையத் தொடங்கின.

அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் செல்ல தந்திலனுக்கு மன்னவர் உரிமையளித்திருந்தார். ஆகவே அந்தப்புரத்திற்குச் சென்று தந்திலன் தமது மனைவியைச் சந்திப்பதுகூட சாத்தியந்தான்.

ஏதோ நடக்காமலா கோரபன் அந்தச் தகவலைச் சொல்லியிருக்க முடியும் என்று மன்னர் கொதிப்படைந்தார்.

தந்திலன் மீது அவருக்கு கடுங்கோபம் ஏற்பட்டது. அதே சமயம் தமது மனைவியைப் பற்றியும், அவநம்பிக்கை எண்ணங்கள் அவர் மனத்தில் அலைமோதத் தொடங்கின.

பெண்களை ஒருபோதும் நம்பக்கூடாது என்று முன்னோர் தெரியாமலா சொல்லி வைத்தார்கள்.

பெண்கள் எப்போதும் சஞ்சல சுபாவம் உள்ளவர்கள் தானே.

கணக்கு வழக்கின்றி விறகைப் போட்டுக் கொண்டிருந்தாலும் நெருப்புக்குத் திருப்தி ஏற்படுவது இல்லை. ஆயிரக்கணக்கில் ஆறுகள் சென்று கலந்தாலும் கடலுக்கு நிறைவு ஏற்படாது. கோடிகணக்கில் உயிர்களை அபகரிப்பினும் யமனுடைய மனது நிறைவு பெறுவது இல்லை. இதே போல் எத்தனை ஆடவர்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டாலும் பெண்களுக்கு முழுமையான திருப்தி ஏற்படாது போலும்.


தன் மனைவி தன்னை மட்டுமே காதலிக்கிறாள் என்று மனப்பூர்வமாக நம்புகின்ற ஒருவனைப் போல முட்டாள் உலகத்தில் இருக்கவே முடியாது.

மன்னர் இவ்வாறெல்லாம் எண்ணியெண்ணி மனம் நொந்து நிம்மதி இழந்தார்.

உடனே தனது காவலர்களை விளித்து இனி தந்திலன் அரண்மனைக்கு வந்தால் அவனை உள்ளே பிரவேசிக்க அனுமதிக்காதீர்கள் என்று உத்தரவு போட்டு விட்டார்.

மறுநாள் காலை வழக்கப்படி தந்திலன் அரண்மனைக்கு வந்தபோது காவலர்கள் அவனை சற்றே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விட்டனர்.

என்ன காரணம் ? என்று திடுக்கிட்டவனாக தந்திலன் கேட்டான்.

காரணம் எங்களுக்கு தெரியாது. உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார். அவ்வளவு தான் எங்களுக்குத் தெரியும் என்று காவலர்கள் கூறி விட்டனர்.

தந்திலன் என்ன யோசித்தும் தாம் மன்னர் மனம் நோகச் செய்த குற்றம் என்ன என்று விளங்கவில்லை.

நாம் என்ன தவறு செய்தோம் என மனக்குழப்பத்தோடு திரும்பத் திரும்ப யோசித்த வண்ணம் அரண்மனை வாசலிலேயே சற்று நேரம் நின்றான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2009 12:53 am

அப்போது அந்தப் பக்கமாக வந்த கோரபன் தந்திலனை நோக்கி ஏளனமாக நகைத்து, ஐயோ
பாவம், மன்னர் உங்களை அவமானப்படுத்தி மனம் நோகச் செய்துவிட்டார் போலும் *
ஆமாம் மனம் வேதனையடையத்தான் செய்யும். அன்று திருமண வீட்டிலே பலர்
முன்னிலையிலே என்னை அவமானப்படுத்திய போது கூட என் மனம் எவ்வளவோ
வேதனைப்படத்தான் செய்தது. தலைவிதியே என்று சகித்துக் கொண்டேன்.
நீங்களும் அதே மாதிரி சகித்துக் கொள்ள வேண்டியதுதான் என்றான்.

தந்திலனுக்கு இப்போது தான் விஷயம் பளிச்சென விளங்கியது.

தன்னைப் பழிவாங்குவதற்காக கோரபன் திட்டமிட்டு மன்னரிடம் ஏதோ கலகமூட்டியிருக்கிறான் என்று யூகித்துக் கொண்டான்.

அப்போதுதான் தந்திலனுக்குச் சில உலகியல் உண்மைகள் விளங்கின.

முட்டாளாக இருந்தாலும், இழி குலத்தில் பிறந்தவனாக இருந்தாலும், கேவலமான
வேலை செய்பவனாக இருந்தாலும் அரண்மனையில் பணி புரிபவனை அலட்சியம் செய்யக்
கூடாது. அவனையும் மதித்து - அவனுக்கு தக்க மரியாதையைக் கொடுத்தாக
வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், மன்னரிடமோ கலகமூட்டி பழி வாங்கி
விடுவார்கள்.

கோரபனை எவ்விதமாவது சரி கட்டினாலொழிய என்மீது மன்னருக்கு இருக்கும் மனக்கசப்பு மாறாது.

இவ்வாறு எண்ணியவாறு தந்திலன் தனது இல்லம் சென்றடைந்தான்.

உடனே தனது பணியாளர்களை அனுப்பி கோரபனை அழைத்து வரச் செய்தான்.

கோரபன் வந்ததும் அவனை வரவேற்று உபசரித்து, கோரபா திருமணத்தன்று உன்னை
அவமானப்படுத்தியது தவறு என் மனத்தில் பட்டது. ஆட்களை விட்டு உன்னைத்
தேடிக்கொண்டு வரச் சொன்னேன். உன்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நடந்து
போனதை மனத்தில் வைத்துக் கொள்ளாதே என்று கூறி தந்திலன் உயர்ந்த ஆடை
அணிகளும், மற்றும் பொன்னும் பொருளுமாக அன்பளிப்பு தந்து அனுப்பி வைத்தான்.

மறுநாள் காலை கோரபன் அரண்மனையில் மன்னரின் படுக்கை அறை பக்கமாகப் பெருக்கி
சுத்தம் செய்துக் கொண்டிருந்தபோது உள்ளே அறைக்குள் படுக்கையில் இருந்த
மன்னர் காதில் விழும் வண்ணம் கீழ்கண்டவாறு முனகினான்.

வர வர மன்னரின் நடவடிக்கைகள் சகிக்கவே முடியவில்லையே. நேற்று மலம்
கழித்துக் கொண்டிருக்கும் அதே சமயம், ஒரு தட்டில் உணவையும் வைத்துக்
கொண்டு சாப்பிட்டாரே * என்ன அசிங்கம் *

மன்னரின் செவியில் கோரபன் சொன்ன சொற்கள் தெளிவாக விழுந்தன.

கோரபனை அழைத்தார்.

கோரபன் அறைக்குள் வந்து அடக்க ஒடுக்கமாக கைகட்டி நின்றான்.

இப்போது ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாயே அது என்ன ? என்று கேட்டார்.

நான் ஏதோ சொன்னேனா ? அப்படி ஒன்றும் இல்லையே. ஒருவேளை நேற்று இரவு சற்று
அதிகமாக மது அருந்திவிட்டேன். மயக்கம் இன்னும் தெளியவில்லை போதை
மயக்கத்தில் ஏதாவது உளறினேனோ என்னவோ என்று சாதுரியமாகப் பதிலளித்தான்.

உண்மையிலேயே மது போதையில்தான் கோபரன் சற்று முன் உளறியிருக்க வேண்டுமென்று மன்னருக்குத் தெளிவாகத் தோன்றியது.

அப்படியானால் அன்றொரு நாள் தந்திலனைப் பற்றியும், தனது மனைவியைப்
பற்றியும் இவன் கூறியவை மது போதை உளறவாகத்தான் இருக்க வேண்டும் என்று
மன்னர் நினைத்தார்.

குடிகாரன் பேச்சை நம்பி அன்பும் பண்பும் போன விஷயங்களைப் பொருட்படுத்த
வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு பழையபடி அவனுக்கு முழு அதிகாரமும் வழங்கி
சிறப்புச் செய்தான்.

தந்திலனும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் பெற்றுத் தனது அலுவல்களை வழக்கம் போலக் கவனிக்கத் தொடங்கினான்.

பெரியோரிடத்தில் நெருக்கமான உறவும், ஆதரவும் கிடைத்துவிட்டது என்பதற்காக யாரையும் கேவலப்படுத்தக்கூடாது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக