புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
6 Posts - 46%
heezulia
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
372 Posts - 49%
heezulia
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
25 Posts - 3%
prajai
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_m10போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 12, 2014 12:52 pm

ஆண்டு தவறாமல் வந்துவிடும் புத்தாண்டையும், பொங்கல் திருநாளையும் முன்வைத்து, தமக்குத் தெரிந்த மரபில் பாக்கள் பல புனைந்து அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்தாய் அனுப்பும் புலவர் கூட்டம் தமிழில் மலிந்திருந்த காலம் அது.

பாக்களைவிடவும் எழுதியனுப்பும் பாவலர்களுக்கு முன்னொட்டாய் அமையும் புலவர், கவிராயர் உள்ளிட்ட பகட்டுப் பட்டங்கள் பலவாக இருக்கும். அதுகண்டு எரிச்சலுற்றார் ஓர் எழுத்தாளர்.

அவருக்கு இவ்வழக்கம் இல்லை. என்றாலும், எரிச்சல் தாளாமல், இப்போலிப் புலவர்களை எச்சரிக்க வேண்டி,

பொங்கல் செய்தி என்ற தலைப்பில் ஒரு வாழ்த்துக் கவிதையை அச்சிட்டு அனுப்பினார்.

"போலிப் புலவர்களை அடையாளங்கண்டு தண்டிக்க, பிள்ளைப்பாண்டியன், வில்லியார், ஒட்டக்கூத்தன் போன்றோர் இல்லாத காரணத்தால், தேசமெங்கும் புலவர் எனப்பலர் திரிகிறார்கள்' எனக் கூறும் பாடல் அது. தனிப்பாடல் திரட்டில் இடம்பெறும் படிக்காசுத் தம்பிரானின், "குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங்கில்லை' என்ற அப்பாடலின் இறுதியில் இடம்பெறும் "தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே' என்ற அடியை மட்டும், தெருத் தெருவாய்ப் புலவர் எனத் திரியலாமே என்று திருத்தி அச்சிட்டுப் பலருக்கும் அனுப்பினார் அவர்.

பலனாய், இருவரைத் தவிர வேறு எவரும் அவருக்குப் பதில் எழுதவில்லை. ஒருவர் ஆறுதலாய் ""ஹிம்சை என்பது அனாதியான தத்துவம். இதற்கு நாமெல்லாம் கவலைப்படுவானேன்'' என்று எழுதினார். அவர் ரசிகமணி டி.கே.சி.

இன்னொருவரோ, இலக்கணத்தைப் பொருட்படுத்தாமல், இரண்டு வெண்பாக்களைப் பதிலாக எழுதி அனுப்பினார்:

குட்டுவதற்கும் வெட்டுவதற்கும் கூட்டமுடன் அன்னவரைச்
சுட்டு எரித்துத் தகிப்பதற்கும் வெட்டரிவாள்
பாட்டுண்டு, நானுண்டு, நீயுண்டு, பாட்டறியா
மோட்டெருமைக் கவிராய னுண்டு.

மோட்டெருமைக் கவிராயன் முக்காரம் கேட்டால்தான்
நாட்டமுள்ள பாட்டின் நயந் தெரியும் - பாட்டுள்ள
ரகுநாதா, நெஞ்சே, ரவைவைத்துப் பாட்டிசைக்கும்
ரகுநாதா ஏங்காதே நீ


வேளூர்க் கவிராயரின் வெண்பாக்களைப் பெற்ற அந்த எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் விட்டபாடில்லை. பதிலுக்கு நான்கு வெண்பாக்களில் தன் வயிற்றெரிச்சலை விரித்து எழுதி அனுப்பிவைத்தார் இப்படி:

வேளூர்க் கவிராயா, விண்ணாரச் செந்தமிழில்
வாளத்த கவியிரண்டும் வாசித்தேன் - நாளெல்லாம்
வெந்தழலால் பாட்டெழுதும் விருத்தா சலப்பெரியோய்
தந்திட்டேன் மிகவந் தனம்.

தோணியப்பர் பாடிவச்ச சூத்திரத்தைப் பார்த்தபின்னும்
வீணுக்கே கவியெழுதும் வெட்டிகளைக் - கோணிக்குள்
போட்டடைச்சி, பெருச்சாளி போலடிச்சிச் சாகடிக்கப்
பாட்டெழுதின் உண்டு பலன்.

காமனையும் சோமனையும் காலினையும் தென்றலையும்
வாம முலையழகும் வருணித்துச் - சாபத்தில்
குடைபிடித்துக் கூத்தாடும், கூட்டத்தார் தம்குடுமிச்
சடைபிடித்துச் சாத்தல் சரி.

தங்கக் கவியெனவே தமுக்கடிச்சிச் சொல்லிவரும்
வெங்கத் திருக்கூட்டம் வீடுபெறச் - சங்கத்து
நக்கீரன் நம்வழியில் நாமிருவர் சென்றுநிதம்
மொக்க வுண்டு பேனா முனை.


சரியாய், 68 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது, 12.1.1946 அன்று வேளூர் வேனாக் காணா என்று கையொப்பமிட்டு, ரகுநாதனுக்கு அனுப்பிய, விருத்தாசலம் என்னும் இயற்பெயர் உடைய வேளூர்க்கவிராயர் வேறு யாரும் இல்லை. சொ.வி எனப்படும் புதுமைப்பித்தன்தான்.

வந்ததில் சிறந்ததைத் தேர்ந்து தனது வாழ்த்தாகப் பலருக்கும் அனுப்பும் குறுஞ்செய்திக் காலத்தில், இந்த வசைமொழி வாழ்த்து, ஒரு வரலாறாக நினைவுகூரத் தக்கதுதானே!
-முனைவர் சொ. சேதுபதி / dinamani



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 12, 2014 1:10 pm

குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங்கில்லை;
குரும்பி அளவாக் காதை குடைந்து தோண்டி
எட்டின மட்டு அறுப்பதற்கோ வில்லியில்லை;
இரண்டொன்றா முடிந்து தலை இறங்கப் போட்டு
வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தன் இல்லை;
விளையாட்டாய் கவிதைதனை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லா துரைகள் உண்டு;
தேசமெங்கும் புலவரென திரியலாமே!
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 14, 2014 2:02 pm

ஆதிரா பாடல் கவனிக்கத் தக்கது ! தேசம் எங்கும் புலவர் எனத் திரிபவர்கள்தான் இன்று பிரபலமாகிறார்கள் ! புலமை பெற்ற நாம் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறோம் ! அன்றும் இன்றும் இதுதான் உண்மை !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Fri Jan 31, 2014 4:35 pm

பகட்டுப்பட்டங்கள்தான் பலரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது.


பகட்டுப்பட்டங்கள் கொண்டவன்
கூறும் உரைநடையையும்
ஹைக்கூ என்கும் உலகம்.





[You must be registered and logged in to see this link.]

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக