Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐந்து பெண்டாட்டிக்காரர்!...........
4 posters
Page 1 of 1
ஐந்து பெண்டாட்டிக்காரர்!...........
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டி. அதன் புறநகர்ப் பகுதி. நீளமான பெரிய வீடு. அந்தப் பெரிய வீட்டில் 30 பேர். ஓர் அப்பா... ஐந்து அம்மாக்கள்... மொத்தம் 24 பிள்ளைகள். இந்தக் காலத்தில் இப்படியா? என்று மூக்கில் விரலை வைக்கிறீர்களா?
"ரெண்டு பொண்டாட்டிக்காரர்கள்' பாடே இங்கே திண்டாட்டமாக இருக்கும்போது ஐந்து மனைவியருடன் அதுவும் ஒரே வீட்டில்... வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாராம் பிராடி வில்லியம்ஸ்.
அவரின் இந்த "பலதுணைக் குடும்பம்' பற்றி இப்போது உலகமெங்கும் தெரிய வந்தது, டிஎல்சி தொலைக்காட்சியால்தான். இந்தத் தொலைக்காட்சி வரும் மார்ச் மாதத்திலிருந்து "எனது ஐந்து மனைவிகளும் 24 குழந்தைகளும்' என்ற தொலைக்காட்சித் தொடரை ஒளிபரப்பப் போவதாக அறிவித்தது. அதன் முன்னோட்டமாக, கடந்த செப்டம்பர் மாதம் ஒரு மணி நேர "முன்னோட்ட நிகழ்ச்சி'யை ஒளிபரப்பியது. அந்த நிகழ்ச்சி பிராடி வில்லியம்ஸ் குடும்பத்தைப் பற்றித்தான். நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு உலகமெங்கும் இருந்து வந்து குவிந்த வரவேற்பில் திக்குமுக்காடிப் போயிருக்கிறது டிஎல்சி தொலைக்காட்சி.
பிராடி வில்லியம்ஸ் தனது 16 வயது வரை பலதுணைக் குடும்பம் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாத சின்னப் பையனாகவேதான் இருந்திருக்கிறார். கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவான மார்மன் பிரிவைச் சேர்ந்தது அவர்களுடைய குடும்பம். ஒழுக்கம், நெறிமுறைகள் போன்றவற்றைக் கடுமையாகக் கடைப்பிடிக்கும் மதப் பிரிவு அது. அந்தப் பின்னணியில் வளர்ந்த அவர்தான் ஐந்து பெண்களைத் திருமணம் செய்திருக்கிறார்.
இவ்வளவு பெரிய குடும்பத்தின் தேவைகளை வில்லியம்ஸ் எப்படி சமாளிக்கிறார்? அவருடைய சகோதரர் நடத்தும் கட்டுமானத் தொழிலில் புராஜெக்ட் மேனேஜராக வேலை செய்கிறார் அவர்.
முதல் மனைவி பாலியை 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன 9 மாதத்தில் ரோபின் என்ற இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்ததும் முதல் மனைவி பாலி இவரைக் கடித்துக் குதறவில்லை. குறைந்தபட்சம் தரையில் விழுந்து அழுது புரளவில்லை. கவலைப்படவுமில்லை. அவர் பாட்டுக்கு அவருடைய பல் மருத்துவத் தொழிலைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
இரண்டாவதாக வந்த ரோபின் கைவினைப் பொருட்கள் செய்யும் கலைஞர். கைவினைப் பொருட்களை எப்படிச் செய்வது என்று வகுப்பு எடுப்பவர். முதல் மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்ததுமே தானுண்டு தன் இரு மனைவிகள் உண்டு என்று இருந்திருக்கலாம் வில்லியம்ஸ்.
ரோஸ் மேரி என்ற பெண்ணை 3 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டார். ரோஸ்மேரியும் வில்லியம்ûஸப் போலவே குடும்பக் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். ஆனால் படிப்பில் அவருக்கு நிறைய ஆர்வம். அந்தப் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படிப்பதற்கு உதவித் தொகை அவருக்குக் கிடைத்ததும், படிக்கக் கிளம்பிவிட்டார். இசையில் பட்டம் பெற படித்துக் கொண்டிருக்கிறார்.
நானி என்ற பெண் மான்டனா மாகாணத்தைச் சேர்ந்தவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம்ûஸக் கண்டதும் காதல் கொண்டுவிட்டார் நானி. பிறகென்ன? வில்லியம்ஸின் நான்காவது மனைவியானார். இப்போது நானி 5 குழந்தைகளின் தாய். வில்லியம்ஸ் வேலை செய்யும் அதே கட்டுமானத் தொழிலின் நிர்வாகப் பிரிவை இவர்தான் கவனித்துக் கொள்கிறார்.
இரண்டாவது மனைவி ரோபினின் சொந்தக்காரப் பெண் ரோன்டா. மருத்துவ உதவியாளர் வேலை. 12 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம்ஸின் 5 ஆவது மனைவியானார் ரோன்டா. இப்போது 4 குழந்தைகள் பிறந்துவிட்டன.
இவ்வாறு ஐந்து மனைவிகளுமே "வீட்டோடு' இருக்காமல், வேலை செய்து கொண்டிருப்பதால் இவ்வளவு பெரிய குடும்பச் சுமையை வில்லியம்ஸால் சுமக்க முடிகிறது.
எல்லாரும் ஒரே வீட்டில் வாழ்வதுதான் இதில் அதிசயப்பட வேண்டிய ஒன்று.
""எனது குழந்தைகளுக்கு நான் ஒருத்தி மட்டும் அம்மா அல்ல. என்னைத் தவிர நான்கு அம்மாக்கள் அவர்களுக்கு இருக்கிறார்கள். என்னைப் போலவே அவர்களும் என் குழந்தைகளின் மீது அன்பு செலுத்துவார்கள்'' என்கிறார் ஐந்தாவது மனைவி ரோன்டா. இதே மனநிலையுடன் ஐந்து பேரும் இருப்பதால் பிரச்னைகள் எழுவதில்லை.
ஐந்து மனைவிகளுடன் குடும்பம் நடத்துவது சிரமமாக இல்லையா? என்று வில்லியம்ûஸக் கேட்டால், ""எல்லாருடைய தேவைகள், நம்பிக்கைகள், ஏமாற்றங்கள், பயங்கள் எல்லாவற்றையும் சமாளித்து, பாலன்ஸ் பண்ணி வாழப் பழகிவிட்டேன். அதனால் பிரச்னை எதுவுமில்லை'' என்கிறார்.
""பெண்களை உயிரற்ற பொருட்களைப் போல நடத்தக் கூடாது. எனது மனைவியரின் பல்வேறு தேவைகளைச் சமமான அளவில் நிறைவேற்றிவிடுகிறேன். இந்த வீட்டில் தான் மிகவும் முக்கியமானவர் என்று ஒவ்வொருவரும் உணர்கிறார்கள்'' என்கிறார்.
அவர் சார்ந்திருந்த மதப்பிரிவு இப்படி பல மனைவிகளை அவர் திருமணம் செய்து கொண்டதற்காக கண்டனம் தெரிவித்திருக்கிறது. இவருடைய "பலதுணை' வாழ்க்கை முறை கலாசாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.
இதனால் வில்லியம்ஸ் குடும்பத்தினர் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க முடியவில்லை.
அவருடைய சொந்தக்காரர்கள் - நண்பர்கள் - சிலர் இப்போது பகைவர்களாகிவிட்டனர்.
ஆனாலும் வில்லியம்ஸ் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
தான் சார்ந்திருந்த மதப்பிரிவின் புறக்கணிப்பால் விரட்டப்பட்ட அவர், தனது குழந்தைகளுக்கு நன்னெறி காட்ட புத்தரின் கருத்துகளைச் சொல்லிக் கொடுக்கிறாராம்.
dinamani
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: ஐந்து பெண்டாட்டிக்காரர்!...........
ஈகரையில இப்படி யாரும் இருந்தா இப்பவே சொல்லிடுங்க, படத்தோட இங்கே பதிவு பண்ணிடுவோம்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: ஐந்து பெண்டாட்டிக்காரர்!...........
இப்படிப்பட்ட நல்ல மனம் உள்ள மனைவிமார்கள் கிடைத்தால் - 5 என்ன சார் , 500 கூட பண்ணிகொள்ளலாம்
jayaravi- இளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
Re: ஐந்து பெண்டாட்டிக்காரர்!...........
இது உங்களுக்கே சரியா படுதா?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: ஐந்து பெண்டாட்டிக்காரர்!...........
Yes sir - I agree it is not correct & fair that Williams married 5 girls
jayaravi- இளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
Similar topics
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» அய்க்கூ ஐந்து
» எல்லாமே ஐந்து!
» ஆரோக்கியத்தின் எண் ஐந்து…
» ஐந்து முக முருகன்
» அய்க்கூ ஐந்து
» எல்லாமே ஐந்து!
» ஆரோக்கியத்தின் எண் ஐந்து…
» ஐந்து முக முருகன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|