ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

+3
ந.கார்த்தி
ராஜா
krishnaamma
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! Empty அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by krishnaamma Mon Dec 30, 2013 8:34 pm

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! TLkVnMXRwa4NC8vihzay+images

"அம்மா... வடை பண்றியா? வாசனை கமகமன்னு வருது...!'"ஸ்கூல்ல இருந்து வர்றப்பவே மூக்கு நமநமன்னுடுமே உனக்கு! கொஞ்சம் பொறு ஆஞ்சநேயருக்கு நைவேத்தியம் செய்துட்டு தரேன்...'"அனுமான்னு சொன்னதும் எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வருதும்மா. இன்னிக்கு எங்க ஸ்கூல்ல டீச்சர் ராமாயண சம்பவம் ஒன்னை சொன்னாங்க.. அதை சொல்றதுக்கு முன்னால உங்கிட்டே ஒரு கேள்வி! ராமர் வனவாசம் செய்தப்ப தன்னோட மனைவி சீதையைப் பறிகொடுத்துட்டு ரொம்ப வருத்தப்பட்டார் இல்லையா?'

"ஏய்... ராமாயணம் எல்லாம் எனக்குத் தெரியும்.. நீ சீக்கிரம் கேள்வியைச் சொல்லு!'"ராமரோட துன்பம் தீர்ந்து போகறதுக்காக பிள்ளையார் சுழி எப்ப, யாரால் போடப்பட்டது?'"என்னடீ கேள்வி இது? ராமாயணத்துல பிள்ளையார் சுழியா?'"ஆமாம். தெரிஞ்சா சொல்லு. இல்லைனா நான் சொல்றேன்.'"நீயே சொல்லு. நான் கேட்டுக்கிட்டே வடையைத் திருப்பி விடறேன். இந்த யோசனையோட வடை செஞ்சா, ஒண்ணு அது வேகாது, இல்லைன்னா தீய்ஞ்சுடும்!'

"ராமபிரானோட வருத்தங்கள் எல்லாம் மறையறதுக்காக பிள்ளையார் சுழி போட்டவர், அனுமார்.'"புரியுது. வனவாசம் வந்த ராமரை, ஆஞ்சநேயர் சந்திச்சதை சொல்றே, கரெக்டா?' "ஊஹூம்.. அப்போல்லாம் ராமரோட கஷ்டம் தீர்றதுக்கான முயற்சி எதுவுமே தொடங்கப்படலை. வாலி வதத்துக்கு அப்புறம் சீதையைத் தேடிக்கிட்டு வானரங்கள் புறப்பட்டப்ப, அனுமன் தெற்குப் பக்கமா போய் தேடறேன்னு புறப்பட்டார் இல்லையா? அப்பதான் ஆஞ்சநேயர் பிள்ளையார் சுழி போட்டார்.'
"இது என்ன புதுக்கதை?'
"புதுக்கதை இல்லைம்மா.. பழைய கதைதான். இலங்கை நோக்கி தாவறதுக்காக அனுமன் மகேந்திரமலைமேல் ஏறி, வாலைத் தலைக்கு மேலே உயர்த்தி இடதுகாலை தென்திசை நோக்கி நகர்த்தி கம்பீரமாக நின்னார் இல்லையா?
தென்னிலங்கை புறப்படத் தயாரா இருந்த மாருதியோட உயர்த்திய வாலையும், நகர்த்திய திருவடியையும் ஒரு கோட்டுல வைச்சுப் பார்த்தா, பிள்ளையார் சுழி போட்டது மாதிரி இருக்கும்!'

"ஒரு நிமிஷம் இரு... மனசுல அந்த வடிவத்தை நினைச்சுப் பார்க்கறேன். அட ஆமாம். இதை உங்க டீச்சர் சொன்னாங்களா?'
"ம்.. அவங்க ஒரு ஆஞ்சநேயர் கோயிலுக்கு போயிட்டு வந்தாங்களாம். அங்கே மூலவரைப் பார்த்தப்பதான் இந்த எண்ணம் அவங்களுக்கு வந்துச்சாம்.'"அப்பன்னா, கோயிலைப் பத்தியும் சொல்லியிருப்பாங்களே?'

"ம்... சொன்னாங்க. சொல்றேன். சுமார் முன்னூறு வருஷத்துக்கு முன்னால, சென்னை, சென்னப்பட்டணமா இருந்த காலத்துல அமைஞ்ச ஆஞ்சநேயர் கோயிலாம் அது. மைசூர்ல வாழ்ந்த சாலிவாகன மரபுக்காரங்க சிலர், இங்கே குடிபெயர்ந்து வந்தப்ப தங்களோட குல தெய்வமான அனுமந்தராயரை இங்கே எடுத்துகிட்டு வந்து பிரதிஷ்டை செய்திருக்காங்க.

தெலுங்கு பேசும் அந்த மக்கள் எடுத்துக்கிட்டு வந்து ராமநாமம் சொல்லிக் கும்பட்டதால மகிழ்ந்த அனுமன், பக்கத்துல அமைஞ்சிருக்கற சமஸ்கிருதக் கல்லூரியில இருந்து தினமும் வேதமந்திரங்கள் கேட்டதால மேலும் சந்தோஷம் அடைஞ்சு நற்பலன்களை வாரிவழங்கத் தொடங்கினாராம். அன்றைய வரம் தர ஆரம்பிச்ச வாயுமகன் இன்றும் அதை நிறுத்தாம தொடர்றதால அவரோட பக்தர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிச்சு, கோயிலும் கோபுரம், மண்டபம்னு வளர்ந்து கம்பீரமா காட்சி தருது.
மேற்கு பார்த்து இருக்கற கோயிலோட கோபுரத்துக்கு தலைவணங்கி உள்ளே நுழைஞ்சா, நேர் எதிர் சன்னதியில இருக்கார் வீர ஆஞ்சநேயர். மூர்த்தி சிறிதானாலும் இவரோட கீர்த்தி ரொம்ப அபாரமானதாம்.
தெற்கு நோக்கி அடியெடுத்துவைக்கிற பாவனையில இருக்கற அனுமன், ஒரு கையால அபயம் காட்டறார். இன்னொரு கையில கதாயுதம் இருக்கு. ரொம்ப அபூர்வமான அர்த்த சிலா ரூபத்துல அமைஞ்சிருக்கற மாருதியோட திருமேனியில ஒர கண் மட்டும்தான் நமக்குத் தெரியும்.

கங்கணம், கேயூரம், தண்டை எல்லாம் அணிஞ்சு தாமரை மலர்மேல திருவி பதிச்சு காட்சிதர்ற இவரோட தோற்றத்துக்கு ஏற்ற மாதிரி, வீர ஆஞ்சநேயர்னு திருநாமம். அதேசமயம், எந்தப் பிரார்த்தனையையும் உடனே நிறைவேற்றி வைக்கிறவர் இவர்ங்கறதால, வாஞ்சிதார்த்த பிரதாயனன் அப்படின்னும் சொல்றாங்க. இந்தப் பேருக்கு, உடனுக்குடன் அருள்பவர்னு அர்த்தமாம்.
தலைதொட்டு வால் நுனிவளைந்து உயர்ந்து இருக்க, இடக்காலை முன்வைத்து தென் திசை நோக்கி இருக்கற அனுமனை தரிசிக்கறப்ப, ராமபிரானுடைய கஷ்டங்கள் நீங்க இலங்கை நோக்கி அடியெடுத்து வைச்சு பிள்ளையார் சுழி போட்ட சம்பவம் மனசுல காட்சியா வருது. அதோட, அவதார புருஷனின் துயரம் தீர உதவிய இவர், நம்முடைய சங்கடங்கள் நீங்கவும் அருள்புரிவார் என்ற நம்பிக்கை எழுது.

மூலவருக்கு முன்னாலேயே உற்சவரும் இருக்கார். பக்கத்துலயே ராமருக்கு தனிச் சன்னதி இருக்கு. ராமர்கூட அவரோட தாரமும் தம்பியும் இருக்காங்க. தாசபாவத்துல அனுமனும் கூட இருக்கார்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேதரா, ருக்மணி தாயார், ஆண்டாள் உடன் இருக்க வேணுகோபாலரும் இந்தக் கோயில்ல இருக்கார்.
கோயிலை வலம் வந்தா சொர்க்க லோகத்தையே சுற்றிவந்த மாதிரி மனசுபூரா நிம்மதி நிறையுது..'

"இப்படியெல்லாம் எங்க டீச்சர் சொன்னதைக் கேட்டதும், எனக்கும் அந்தக் கோயிலுக்குப் போகணும்னு ஆசை வந்திடுச்சும்மா?'
"கண்டிப்பா போகலாம். இதோ வடை ரெடியாயிடுச்சு.. முதல்ல அனுமனுக்கு வடைமாலை சாத்தறதுதான் ரொம்ப பிரசித்தமாம். தினம் தினம் யாராவது பக்தர்கள் வடமாலை சாத்திக்கிட்டே இருப்பாங்களாம். வியாழன், சனிக்கிழமைகள்ல இந்த வேண்டுதல் அதிகமாகவே இருக்குமாம்.

ஆரம்ப காலத்துல இருந்து எத்தனையோ பிரபலங்கள் இந்த அனுமனை தரிசிக்கறதை வழக்கமா கொண்டிருக்காங்களாம். கம்பர், தான் எழுதின ராமாயணத்தை ஸ்ரீரங்கம் கோயில்ல அரங்கேற்ற செய்த மாதிரி, மூதறிஞர் ராஜாஜி, சக்ரவர்த்தித் திருமகன்கற பேர்ல ராமாயணத்தை எழுதினதும் இந்தக் கோயில்ல வைச்சுதான் அரங்கேற்றம் செய்தாராம்.

அனுமத் ஜெயந்தி, ஸ்ரீராம நவமி தினங்கள், புரட்டாசி, மார்கழி மாதங்கள், வைகுண்ட ஏகாதசி இப்படி வருஷத்துல பல முறை திருவிழா நடக்குது இந்தக் கோயில்ல. இந்த வருஷம், புத்தாண்டு தினத்தன்னிக்கே அனுமத் ஜெயந்தி வர்றதால, அன்னிக்கு கூட்டம் அதிகமா இருக்கும், அர்ச்சனை ஆராதனை பண்றது சிரமம் என்பதால முன்கூட்டியே 28.12.2013ம் தேதியில் இருந்து 31.12.2013 வரைக்கும் லட்சார்ச்சனை பண்றாங்களாம்! அவசியம் நாமளும் போயிட்டு வரணும்மா!'

"நீ சொன்னதை எல்லாம் கேட்டதும், வாழ்க்கைல பிரச்சனை உள்ள ஒவ்வொருத்தரும் அவசியம் போயிட்டு வர வேண்டிய கோயில் இதுன்னு புரியுது. கண்டிப்பா நாமளும் போயிட்டு வருவோம்.'

எங்கே இருக்கு: சென்னை மயிலாப்பூரில் லஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் தண்ணீர்துரை மார்க்கெட் அருகே உள்ளது ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயில்.

தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by ராஜா Tue Dec 31, 2013 12:52 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா , எனக்கு இஷ்ட தெய்வம் ஆஞ்சநேயர்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by ந.கார்த்தி Tue Dec 31, 2013 1:50 pm

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! 3838410834 அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! 3838410834 


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by jayaravi Thu Jan 02, 2014 1:57 pm

Any one knows the Hanuman chalisa?In Hanuman Chalisa, it is said :

"Yug sahastra yojan per Bhanu! Leelyo taahi madhur phal janu!!

1 Yug = 12000 years
1 Sahastra = 1000
1 Yojan = 8 Miles

Yug x Sahastra x Yojan = par Bhanu
12000 x 1000 x 8 miles = 96000000 miles

1 mile = 1.6kms

96000000 miles = 96000000 x 1.6kms =
1536000000 kms to Sun

NASA has said that, it is the exact distance between Earth and Sun (Bhanu). Which proves Hanuman ji did jump to Planet Sun, thinking it as a sweet fruit (Madhu phal)..

It is really interesting how accurate and meaningful our ancient scriptures are..Unfortunately barely it is recognized, interpreted accurately or realized by any in today's time...
GAYATRI MANTRA"   the most powerful hymn in the world

Dr.Howard Steingeril, an american scientist, collected Mantras, Hymns and invocations from all over the world and tested their strength in his Physiology Laboratory…

Hindus' Gayatri Mantra produced 110,000 sound waves /second...

This was the highest and was found to be the most powerful hymn in the world. Through the combination of sound or sound waves of a particular frequency, this Mantra is claimed to be capable of developing specific spritual potentialities. The Hamburg university initiated research into the efficacy of the Gayatri Mantra both on the mental and physical plane of CREATION...

The GAYATRI MANTRA is broadcasted daily for 15 minutes from 7 P.M. onwards over Radio Paramaribo, Surinam, South America for the past two years, and in Amsterdam, Holland for the last six months.

"Om Bhoor Bhuwah Swah, Tat Savitur Varenyam, Bhargo Devasya Dheemahi, Dhiyo Yo Nah Pra-chodayaat !"

"It's meaning:
God is dear to me like my own breath, He is the dispeller of my pains, and giver of happiness. I meditate on the supremely adorable Light of the Divine Creator, that it may inspire my thought and understanding."

This is a great information worth circulating and sharing with one and all !! How wonderful vedas
Anbudan Ravi
 புன்னகை
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by krishnaamma Thu Jan 02, 2014 2:06 pm

jayaravi wrote:Any one knows the Hanuman chalisa?In Hanuman Chalisa, it is said :

"Yug sahastra yojan per Bhanu! Leelyo taahi madhur phal janu!!

1 Yug = 12000 years
1 Sahastra = 1000
1 Yojan = 8 Miles

Yug x Sahastra x Yojan = par Bhanu
12000 x 1000 x 8 miles = 96000000 miles

1 mile = 1.6kms

96000000 miles = 96000000 x 1.6kms =
1536000000 kms to Sun

NASA has said that, it is the exact distance between Earth and Sun (Bhanu). Which proves Hanuman ji did jump to Planet Sun, thinking it as a sweet fruit (Madhu phal)..

It is really interesting how accurate and meaningful our ancient scriptures are..Unfortunately barely it is recognized, interpreted accurately or realized by any in today's time...
GAYATRI MANTRA"   the most powerful hymn in the world

Dr.Howard Steingeril, an american scientist, collected Mantras, Hymns and invocations from all over the world and tested their strength in his Physiology Laboratory…

Hindus' Gayatri Mantra produced 110,000 sound waves /second...

This was the highest and was found to be the most powerful hymn in the world. Through the combination of sound or sound waves of a particular frequency, this Mantra is claimed to be capable of developing specific spritual potentialities. The Hamburg university initiated research into the efficacy of the Gayatri Mantra both on the mental and physical plane of CREATION...

The GAYATRI MANTRA is broadcasted daily for 15 minutes from 7 P.M. onwards over Radio Paramaribo, Surinam, South America for the past two years, and in Amsterdam, Holland for the last six months.

"Om Bhoor Bhuwah Swah, Tat Savitur Varenyam, Bhargo Devasya Dheemahi, Dhiyo Yo Nah Pra-chodayaat !"

"It's meaning:
God is dear to me like my own breath, He is the dispeller of my pains, and giver of happiness. I meditate on the supremely adorable Light of the Divine Creator, that it may inspire my thought and understanding."

This is a great information worth circulating and sharing with one and all !! How wonderful vedas
Anbudan Ravi
 புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1042348

ரொம்ப அருமையான விவரங்கள் ரவி, தமிழ்படுத்திப்போடுங்கள் , ரொம்ப நல்லா இருக்கும் புன்னகை இது அன்பு வேண்டுகோள் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Jan 02, 2014 2:16 pm

http://www.mediafire.com/download/14chmwqnd18z592/SriHanumanChalisa-PBS.mp3#!
இங்கு இருக்கிறது அம்மா ஹனுமன் சாலிசா .


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by jayaravi Thu Jan 02, 2014 2:34 pm

கண்டிப்பாக செய்கிறேன்
- நேரம் இன்மையால் , ஆங்கிலத்தில் பதிவிடும்படி ஆகி விட்டது

அன்புடன் ரவி
 அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! 1571444738
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by jayaravi Thu Jan 02, 2014 2:36 pm

எனக்கு பிடித்த , ஏன் எல்லோருக்கும் பிடித்த திருவாசகம் - இதற்க்கு  உருகார் ஒரு வாசகத்திர்க்கும்  உருகார் :  

கூறும்  நாவே முதலாக கூறும்
காரணம் எல்லாம் நீ ,
தேறும் வகை நீ , திகைப்பும் நீ ,
தீமை நன்மை முழுதும் நீ
வேறோர் பரிசு இங்கு ஒன்றில்லை ;
மெய்ம்மை உன்னை விரிந்துரைக்கில்
தேறும் வகைஎன் ? சிவலோகா !
திகைத்தால்  தேற்ற வேண்டாவோ ?
வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதுந் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைய்  பணி கொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்
அதுவும் உன்  தன் விருப்பன்றே

அன்புடன் ரவி
 புன்னகை புன்னகை
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by jayaravi Thu Jan 02, 2014 2:49 pm

இந்த ஸ்லோகத்தின் கடைசி இரண்டு வரிகள் தெரியவில்லை - யாராவது உதவி செய்ய முடியுமா ? - இந்த சுலோகம் கணபதியை பற்றியது

" திருவும் கல்வியும் சீரும் சிறப்பும்
உன் திருவடி புகழ் பாடும் திறமும்
நல் உருவமும் , ஊக்கமும் தந்து
என் உள்ளத்தில் அமர்ந்தவா
குருவும் தெய்வமும்மாகி
அன்பாளர்கள் தம் குறை தவிர்க்கும்
குணம் பெரும் குன்றமே -----------
---------------------------------------------??

அன்புடன் ரவி
 சிரி 
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by krishnaamma Thu Jan 02, 2014 6:58 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:http://www.mediafire.com/download/14chmwqnd18z592/SriHanumanChalisa-PBS.mp3#!
இங்கு இருக்கிறது அம்மா ஹனுமன் சாலிசா .
மேற்கோள் செய்த பதிவு: 1042353

நன்றி பாண்டியன், எனக்கு மனபடமாகவே ஹனுமான் சாலிசா தெரியும் புன்னகை ஆனால் அவரின் பதிவும் விளக்கமும் ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழில் பதிவிட சொன்னேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum