புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதயானைக் கூட்டம் - விமர்சனம் Poll_c10மதயானைக் கூட்டம் - விமர்சனம் Poll_m10மதயானைக் கூட்டம் - விமர்சனம் Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
மதயானைக் கூட்டம் - விமர்சனம் Poll_c10மதயானைக் கூட்டம் - விமர்சனம் Poll_m10மதயானைக் கூட்டம் - விமர்சனம் Poll_c10 
2 Posts - 20%
heezulia
மதயானைக் கூட்டம் - விமர்சனம் Poll_c10மதயானைக் கூட்டம் - விமர்சனம் Poll_m10மதயானைக் கூட்டம் - விமர்சனம் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மதயானைக் கூட்டம் - விமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 5:25 am

மதயானைக் கூட்டம் - விமர்சனம் 1545599_602612586478509_127323567_n

ஒரு படம் பார்ப்பது போல் அல்லாமல், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் வீட்டிற்கு சென்று வந்தது போல இருக்கிறது இந்த 'மதயானைக்கூட்டம்'.

செல்வாக்கு உடையவராக வாழ்ந்து வந்த ஜெயக்கொடி தேவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு அவர் செய்த துரோகத்தால் பிரிந்து தன் அண்ணன் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.

மூத்த மனைவிக்கு ஒரு மகனும், இரண்டாவது மனைவிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். முதல் மனைவியும், அவரது அண்ணனும் இரண்டாவது மனைவியின் குடும்பத்தினை ஒதுக்கி வைக்கிறார்கள். ஜெயக்கொடி தேவர் மாரடைப்பால் இறந்தவுடன் நடைபெறும் பிரச்சினையில் கொலை நிகழுகிறது. அப்பழி நாயகன் மீது விழ, பழிதீர்த்தே ஆக வேண்டும் என்று தாய் மாமன் கிளம்புகிறார். இறுதி இந்தக் கூட்டம் என்னவானது என்பது இந்த 'மதயானைக்கூட்டம்'.

ஜெயக்கொடி தேவர் இறுதிச் சடங்கில் ஆரம்பிக்கிறது படம். அப்போது நடைபெறும் கூத்துக் கலைஞர்களின் பாடல் மூலம் ஒவ்வொரு பாத்திரத்தையும் அறிமுகப்படுத்தி இருக்கும் இயக்குநர் விக்ரம் சுகுமாரனை பாராட்டலாம். தேவர் சமூகத்தின் சாவு வீடு எப்படி இருக்கும், அவர்களது சம்பிரதாயங்கள் என்ன என்பதினை நம் கண்முன் அப்படியே காட்டியிருக்கிறார்கள். முக்கிய பாத்திரங்கள் அனைத்திற்கும் புதுமுக நடிகர்களை நடிக்க வைத்து, அவர்களைக் கையாண்டிருக்கும் யுக்திக்கு இயக்குநருக்கு ஒரு சபாஷ்.

ஓவியா மீது காதல் கொள்வது, தாய் மாமன் வெட்ட துரத்தும் போது ஓடுவது என நாயகன் கதிர் கவனம் ஈர்க்கிறார். வில்லனாக எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி படத்திற்கு மிகப்பெரிய பலம். கையை மடித்துக் கொண்டு, சிகரெட் புகைத்துக் கொண்டே அவர் நடித்திருப்பது, ஒரு புதிய நடிகர் என்பதற்கான உணர்வை தரவில்லை. தங்கையின் பாசத்திற்காக தன்மானத்தை விட்டுக் கொடுப்பது, மனக் கசப்பில் இருந்தாலும் மச்சானின் மீது மரியாதை வைத்திருப்பது, ஏலத்தில் மச்சானை கிண்டலாக பேசியவனை கொலை செய்வது, தன் மகனைக் கொன்றவனைக் கொன்றே தீர வேண்டும் என காத்திருப்பது என நடிப்பில் மிரட்டியிருக்கிறார் வேல.ராமமூர்த்தி.வீரத் தேவர் என்ற பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

விஜி, அம்மு, ஸ்ரீஜித் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இந்த பழிவாங்கல் கதைக்கு நாயகி வேண்டுமே என்று ஓவியாவை சேர்ந்து, 2 பாடலையும் வைத்திருக்கிறார்கள்.

ராகுல் தருமன் ஒவ்வொரு காட்சிக்கும் என்ன தேவையோ அதற்கு மிகாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘கோணக் கொண்டக்காரி’, ‘உன்னை வணங்காத’ உள்ளிட்ட பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன. பின்னணி இசை நம்மை காட்சியோடு ஒன்ற வைத்திருப்பது மிகப்பெரிய பலம்.

இந்த மதயானைக் கூட்டத்தில் யார் யாரை கொல்லப் போகிறார்கள் என்று க்ளைமாக்ஸ் காட்சியில் ரசிகர்களை உட்கார வைத்த விதத்தில் பாராட்டைப் பெறுகிறது படக்குழு.

படத்தின் மைனஸ் என்றால் வேகமாக பயணிக்கும் இரண்டாம் பாதியில் கேரளா காட்சிகள் வேகத் தடையாக இருக்கிறது.

தமிழ் திரையுலகில் பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம் போன்ற கூட்டமான படங்கள் வந்திருந்தாலும், அக்கூட்டத்தில் இருந்து தனித்து நின்று கவனம் ஈர்க்கிறது ’மதயானைக்கூட்டம்’.

தி இந்து

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 27, 2013 8:32 am

ம்............விமரிசனம் படித்தால் பார்க்கணும் போல இருக்கு புன்னகை நன்றி சிவா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 30, 2013 4:23 pm

வறட்டு கவுரவமும் பிடிவாத மும் ஊறிப்போன மனிதர் கள். அவற்றுக்காக ரத்தம் சிந்தவும் சிந்தவைக்கவும் தயங்காதவர்கள். இவர்களது கதைதான் மதயானைக் கூட்டம்.

சாவு வீட்டின் சடங்குகளைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியபடி தொடங்குகிறது படம். நடனமாடிக் கொண்டிருக்கும் திருநங்கைள் பேசும் வசனங்களினூடே பாத்திரங்களும் பின்னணியும் சொல்லப்படுகின்றன.

ஊர்ப் பெரிய மனிதருக்கு இரண்டு மனைவிகள். இரு குடும் பங்களுக்கிடையே இதனால் ஏற்படும் பகைமையும் வன்முறை வெறியாட்டமும்தான் கதையின் மையம்.

சாவு வீட்டிலிருந்து படத்தைத் தொடங்கும் புது இயக்குநர் விக்ரம் சுகுமாரன் கவனத்தைக் கவர்கிறார். பாத்திரப் படைப்பிலும் நிகழ்ச்சிகளைக் கட்டமைத்த விதத்திலும் முத்திரை பதிக்கிறார். வறட்டு கவுரவம், வீம்பு, சாவுச் சடங்குகளின்போது ஏற்படும் கடுமையான மனத்தாங்கல்கள், வன்முறையை அந்தச் சமூகம் அணுகும் விதம் ஆகியவை வலுவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. நாயகனின் அம்மா கொல்லப்படும் காட்சியில் தெறிக்கும் வன்மம் அச்சமூட்டக்கூடியது. வசனங்கள் இயல்பாக உள்ளன. கறுப்பு நிறத்தைக் கேவலப்படுத்தியே பழக்கப்பட்ட தமிழ் சினிமாவில் அதற்கு எதிரான குரலை நாயகன் எழுப்புவது ஆறுதல் அளிக்கிறது.

படத்தின் தொடக்கம் ஆவணப் படத்தின் தன்மை கொண்டதாக உள்ளது. இரண்டாம் பாதியில் தொய்வு ஏற்படுகிறது.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இசை ரகுநந்தன். பின்னணி இசையிலும் பாடல்களிலும் மண் வாசனை நிறைவாக உள்ளது.

நாயகன் கதிர் நன்றாக நடித்தி ருக்கிறார். முதல் மனைவியாக வரும் விஜி சந்திரசேகரின் நடிப்பு அற்புதம். அவர் அண்ணனாக வரும் வேல ராமமூர்த்தி மிடுக்கான தோற்றமும் சிறப்பான நடிப்புமாக மனதில் நிற்கிறார். கோழைத் தனமாகக் கொலை செய்த பிறகும் தன் நோக்கம் நிறைவேறிய திருப்தியில் அவர் கை, மீசையை முறுக்கும் காட்சி அபாரம்.

ஓவியா பாத்திரம் கொலை வெறிக்கு நடுவே மென்மையான இளைப்பாறலுக்குப் பயன்பட்டி ருக்கிறது. பொலிவான தோற்றத்தா லும் பளிச்சிடும் புன்னகையாலும் ஓவியா கவர்கிறார்.

ரகு தருமனின் ஒளிப்பதிவு குறிப் பிடத்தக்கது. இரவுக் காட்சிகள் இயல்பான வெளிச்சத்தில் தெளிவாகப் படமாக்கப்பட்டுள்ளன.

பிற்போக்குத்தனங்களை விமர்சனப் பார்வை இல்லாமல் அணுகுவதுதான் படத்தின் மிகப் பெரிய பலவீனம். ஒரு சமூகத்தை அதன் நிறை குறைகளோடு சித்தரிப்பதில் தவறில்லை. ஆனால் சிக்கலான சாதி அமைப்பும் வெவ்வேறு சாதியினருக்கிடையே கவலைக்குரிய உறவுகளும் உள்ள தமிழ்ச் சமூகத்தில் இது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களைப் பற்றிக் கவலை ஏற்படுகிறது. சாதிப் பெருமிதத்தை மட்டுமின்றி ‘வீரத்தையும்’ பறைசாற்றுகிறது இப்படம். இது இந்தச் சாதியினரிடமும் பிற சாதியினரிடமும் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.

பண்பாட்டுக் கூறுகளின் யதார்த்தமான சித்தரிப்பு, வலுவான பாத்திரப் படைப்புகள், வசனங்கள், நேர்த்தியான நடிப்பு ஆகியவை படத்தின் வலுவான அம்சங்கள். சாதியக் கூறுகளை அப்பட்டமாக முன்வைப்பது, திரைக்கதையின் தொய்வு ஆகியவை பலவீனங்கள்.

மதயானைக் கூட்டம் அதன் குறைகளை மீறி, மண் சார்ந்த வலுவான படமாக அமைந்துள்ளது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 30, 2013 4:32 pm

நல்ல விமர்சனம் ..

தரவிறக்கம் செய்ய தொடங்கி விட்டேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 30, 2013 4:35 pm

இன்னும் கள்ளர் சாதியினர் கையில் அருவாளுடன் திரிகிறார்கள் என்ற ரீதியில் படத்தின் கதை அமைந்துள்ளது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை!

எல்லோரும் மாறிட்டாங்கன்னு சொன்னா எவனும் கேட்கமாட்டேங்கிறான்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 30, 2013 4:52 pm

படம் பார்க்கலாமா ,வேண்டாம சொல்லுங்க தல ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 30, 2013 4:54 pm

பாலாஜி wrote:படம் பார்க்கலாமா ,வேண்டாம சொல்லுங்க தல ....


ஒருமுறை பார்க்கலாம் ஜீ! (தேவராக இருந்தால் பல முறை பார்க்கலாம்)  அய்யோ, நான் இல்லை 



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 30, 2013 5:02 pm

சிவா wrote:
பாலாஜி wrote:படம் பார்க்கலாமா ,வேண்டாம சொல்லுங்க தல ....


ஒருமுறை பார்க்கலாம் ஜீ! (தேவராக இருந்தால் பல முறை பார்க்கலாம்)  அய்யோ, நான் இல்லை 

மேற்கோள் செய்த பதிவு: 1041875

அப்போ நான் ஒரு முறைதான் பார்க்க இயலும் தல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக