ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்!

3 posters

Go down

சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Empty சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்!

Post by சிவா Sat Dec 28, 2013 5:43 pm

சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! 1524811_603266146413153_1658720133_n

புதுக்கோட்டை: சுடுகாட்டில் தான் புதிய பேருந்து நிலையத்தை கொண்டு வருவேன் என அமைச்சரும், பழைய பேருந்து நிலையத்திலேயே புதிய பேருந்து நிலையத்தை கட்ட வேண்டும் என பொதுமக்களும் மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது புதுக்கோட்டைக்கு வந்த ஜெயலலிதா கந்தர்வக்கோட்டையில் தான் தனது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரசாரத்தை துவக்கி வைத்தார். அப்போதே நான் ஆட்சிக்கு வந்தால் இங்கு புதிய பேருந்து நிலையம் கட்டித்தருவேன் என வாக்குறுதியும் தந்து விட்டுப்போனார்.

இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்ற சுப்ரமணியன் ஆதி திராவிட நலத்துறை அமைச்சரானார். கடந்த ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக இரண்டு கோடி ரூபாயை ஒதுக்கினார் முதல்வர். அதிலிருந்தே பிரச்னையும் தொடங்கி விட்டது.

நம்மிடம் பேசிய அங்கமுத்து என்பவர், ''கந்தர்வக்கோட்டையில முதல்வர் பஸ் ஸ்டாண்ட் கட்டனும்னு நிதி ஒதுக்கி இருக்காங்க. ஆனா இப்ப இருக்குற இடத்தில அதை கட்டாததோட கந்தர்வக்கோட்டை பஞ்சாயத்தை தாண்டி அக்கச்சிப்பட்டி பஞ்சாயத்துல கட்டப்போறதா சொல்றாரு அமைச்சர். இப்ப அமைச்சர் சொல்ற இடம் மழைக்காலங்கள்ல வெள்ளம் தேங்கி நிக்கிற இடம்.

கீரனூர் தொடங்கி கந்தர்வக்கோட்டை வரைக்கும் உள்ள ஊர்ல வெள்ளம் போனா இப்ப பஸ் ஸ்டாண்ட் கட்டப்போற இடத்துக்கு பக்கத்துல ஓடுற காட்டாத்துல தான் ஓடும். இந்த பகுதியை ஒட்டி குடியிருக்குறவங்கள்லாம் வெள்ள காலங்கள்ல வெளில போயிருவாங்க. அது மட்டுமில்லாம இவங்க பார்த்துருக்குற இடத்துக்கு பக்கத்துல செட்டியூரணின்னு ஒரு குளம் இருக்கு. அந்த குளத்துல தான் இந்த பகுதி மக்கள்லாம் குளிப்பாங்க. இங்க பஸ் ஸ்டாண்ட் வந்தா அதுவும் பிரச்னையாகிடும்'' என்றார்.

தொடர்ந்த மதன் கிருஷ்ணமூர்த்தி என்பவர், ''இப்ப பார்த்திருக்கிற இடம் ஒரு தனி நபருக்கு சொந்தமான இடம். ஏற்கனவே இன்னுமொரு இடத்தை அமைச்சரே பார்த்தாரு. அந்த இடம் அரசு பொறம்போக்கு இடம் தான். ஆனாலும் ஏனோ இந்த இடத்துல தான் பேருந்து நிலையத்தை கட்டுவோம்னு அமைச்சர் பிடிவாதமா இருக்காரு. அந்த இடத்துக்கு பக்கத்துல அனைத்து ஜாதியினருக்குமான ஐந்து சுடுகாடுகள் இருக்கு. அதோட அந்த பகுதியில தான் மாட்டுக்கறி விக்கிறாங்க. மார்க்கெட் கழிவெல்லாம் கொண்டு வந்து கொட்டுறாங்க.

இப்ப தஞ்சாவூர்ல இருந்து மதுரை, காரைக்குடின்னு நெடுந்தூரம் போற பேருந்துகள் பஸ் ஸ்டாண்ட்ல மட்டும் தான் நிப்பாட்டுவாங்க. இப்ப ஊரைவிட்டு ஒரு கிலோமீட்டர் தூரத்துல பஸ் ஸ்டாண்ட்டை கட்டினாங்கன்னா மறுபடி ஊருக்குள்ள வர வேறு வாகனத்தை தேடனும். அதனால இப்ப பஸ் ஸ்டாண்ட் இருக்குற இடத்துக்கு பக்கத்துல அம்மாகுட்டைனு ஒரு குளம் இருக்கு. இந்த குளத்தை யாரும் பயன்படுத்தாததால மலம் ஜலம் கழிச்சி அசிங்கப்படுத்தி சாக்கடையாக்கிட்டாங்க. அதனால அந்த குளத்தை தூர்த்து புதிய பேருந்து நிலையத்தை அங்க கட்டுங்கன்னு பலர் அமைச்சர் கிட்ட சொன்னாங்க.

ஆனால் அது நீர் நிலை பொறம்போக்கு அந்த இடத்துல கட்டிடம் கட்ட முடியாதுன்னு அமைச்சர் மறுத்துட்டார். இந்த குட்டை இருக்குற இடத்தை வகைமாற்றம் செய்யலாம்னும் சொல்றாங்க. அப்படி செஞ்சி இங்கேயே கட்டினாங்கன்னா ரொம்ப வசதியா இருக்கும்'' என்றார்.

அடுத்து பேசிய புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவர், ''இப்ப பேருந்து நிலையம் கட்ட பார்த்திருக்கிற இடம் ஒரு காலத்துல இந்த பகுதி தி.மு.க. சேர்மனா இருந்த அடைக்கலம் செட்டியாருடைய நிலம். அந்த இடத்துக்கு பக்கத்துல சுடுகாடுகள் இருந்ததால அந்த இடத்தை விற்க முடியல. அதை பயன்படுத்தி தஞ்சாவூரை சேர்ந்த பரசுராமன் என்பவர் இந்த இடம் பதினைந்து ஏக்கரையும் குறைந்த விலைக்கு வாங்கிட்டார். இப்ப புதிய பேருந்து நிலையம் கட்டப்போறாங்கன்னு சொன்ன உடனே அமைச்சரை ரகசியமா சந்திச்சி பேசியிருக்காரு.

அவர் குடுத்த ஐடியாபடி அந்த பதினைந்து ஏக்கர் நிலத்துல நாலு ஏக்கர் நிலத்தை அரசாங்கத்துக்கு இலவசமா எழுதி குடுத்துருக்கார் பரசுராமன். அந்த பத்திரத்துல நான் கொடுக்கும் இடத்தில் பேருந்து நிலையம் தான் கட்டனும்னு எழுதியிருக்கு. முதல்வர் கந்தர்வக்கோட்டையில தான் பேருந்து நிலையம் கட்டித்தர்றதா சொன்னாங்க. அதுக்கு தான் நிதியும் ஒதுக்கி இருக்காங்க.

ஆனா அமைச்சரோட சுயலாபத்துக்காக அக்கச்சிப்பட்டிங்கிற பஞ்சாயத்துல பேருந்து நிலையத்தை கட்ட முயற்சி செய்றாரு. அமைச்சர்கிட்ட கேட்டா இந்த ஊருல பொறம்போக்கு இடம் இல்லன்னு சொல்றாரு. ஆனா கந்தர்வக்கோட்டையில 49/9, 307/1, 206 ஆகிய சர்வே நம்பர்கள்ல பொறம்போக்கு இடம் இருக்கு. மக்களுக்காக தான் திட்டம் என்கிறத அமைச்சர் மறந்து செயல்படுறார்'' என்றார்.

இவர்களின் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் சுப்ரமணியனிடம் விளக்கம் கேட்டோம். ‘‘அந்த ஊருல வேற இடமே இல்லை. அந்த இடம் கூட நாங்களாக எழுதி கேட்டு வாங்கி இருக்கிறோம். அவர்கள் கூறுவது போல் அந்த இடத்தில் சுடுகாடே இல்லை என்றவரிடம், பரசுராமனின் இட மதிப்பை கூட்டும் உள்நோக்கத்தோடுதான் அரசுக்கு இலவசமாக எழுதி கொடுத்திருப்பதாக சொல்கிறார்களே என்றோம்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், அவரோட இடத்தை அவர் எவ்வளவுக்கு வேண்ணாலும் விக்கட்டும். அதைப்பத்தி பிரச்னை இல்லை. நீர் நிலை பொறம்போக்குல கட்ட முடியாது. வேற இடமும் இல்லை. அதனால்தான் அந்த இடத்தை தேர்வு செய்து இருக்கிறோம்'' என்றார்.

வீ.மாணிக்கவாசகம் @ விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Empty Re: சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்!

Post by T.N.Balasubramanian Sun Dec 29, 2013 4:25 pm

பேருந்திற்கும் சுடுகாட்டிக்கும் எப்போதும் சம்பந்தம் உண்டு என்று கூறாமல் கூறுகிறாரோ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Empty Re: சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்!

Post by Muthumohamed Sun Dec 29, 2013 4:31 pm

அமைச்சருக்கு எதுக்கு இந்த வீண் வாசி



சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Mசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Uசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Tசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Hசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Uசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Mசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Oசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Hசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Aசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Mசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Eசுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்! Empty Re: சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வண்டலூரில் புதிய பேருந்து நிலையம்
» ஹைடெக் மாற்றத்துக்காக மூடப்படவிருக்கிறது மதுரை பெரியார் பேருந்து நிலையம்!
» வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!
» வண்டலூரில் அமையவிருந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றம்
» அயோத்தியில் உலக தரம்வாய்ந்த பேருந்து நிலையம்: ரூ.400 கோடியில் அமைக்க உ.பி., அமைச்சரவை ஒப்புதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum