புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு.........
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு.........
#1040812- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
‘தமிழகத்தை குறைந்த நீராதாரம் கொண்ட மாநிலம் என்று கூறமுடியாது. முறையான நீர்நிர்வாகம் இல்லாததே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்குக் காரணம்’ என்று ஆணித்தரமாக கூறுகிறார் சென்னை முகப்பேரைச் சேர்ந்த பொறியாளர் எஸ்.நடேசன்.
அடிப்படையில் இயந்திரவியல் பொறியாளரான இவர், விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல ஆண்டுகளாக நீர்நிர்வாக முறைகளை சுயமாக தெரிந்துகொண்டு, அவற்றை திறமையாக பயன்படுத்தியும் வருகிறார். இவர் குடியிருக்கும் முகப்பேர் ஜீவன் பீமா நகரில், நிலத்தடி நீர் மிக மோசமாக இருந்தது. ஆழ்துளை கிணறு மூலம் கிடைக்கும் தண்ணீர், மஞ்சள் நிறத்தில் சாம்பார் போல இருந்தது. அதைக் குடிக்கவே முடியாது. துணி துவைத்தாலும் சுத்தமாக நுரை வராது. கொஞ்சம் நாட்களிலேயே துணிகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும். இந்த நீரில் குளிப்பவர்களுக்கு முடி கொட்டுவது, ஒவ்வாமை என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.
இதனால், தண்ணீரை கழிவறைப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர். குடிநீருக்கு செலவு அப்பகுதியில் நிலத்தடி நீரை ஆய்வு செய்தபோது 2300 டிடிஎஸ் (டோட்டல் டிசால்வ்ட் சாலிட்ஸ்) இருந்தது. அதாவது அந்த நீரில் இரும்பு, உப்பு உள்ளிட்ட பல்வேறு தாதுப் பொருட்கள் அதிகமாக கலந்திருந்தன. 600 டிடிஎஸ் வரை இருக்கும் தண்ணீர்தான் குடிக்க ஏற்றது. எனவே, அப்பகுதி மக்கள், ஆயிரக்கணக்கில் செலவு செய்து லாரிகளில் குடிநீரை வாங்கி தொட்டிகளில் சேமித்து பயன்படுத்தி வந்தனர். கோடை காலத்தில் பணம் கொடுத்தாலும் குடிநீர் கிடைப்பது சிரமமாக இருந்தது. 10 ஆயிரம் லிட்டர் கொண்ட ஒரு லாரி தண்ணீர் வாங்க, ஆயிரம் ரூபாய் செலவாகும். கடந்த ஆண்டில் மட்டும் நடேசனின் பிளாக்கில் தண்ணீருக்காக ரூ.76 ஆயிரம் செலவிடப்பட்டது.
இதையடுத்து, நிலத்தடி நீரை சுத்திகரித்து பயன்படுத்துவதற்காக தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் வாட்டர் ஃபில்டர்களை வாங்கிப் பொருத்த முயற்சி மேற்கொள்ளப் பட்டது. தினமும் 5 ஆயிரம் லிட்டர் குடிநீரைப் பெறுவதற்கான வாட்டர் ஃபில்டர் விலை ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய். அதைத் தொடர்ந்து பராமரிக்க ஒருவரை பணிக்கு நியமிக்க வேண்டும், தனியாக மின் கட்டணம், ஆண்டுக்கு ஒருமுறை அதில் உள்ள வடிகட்டிகளை மாற்ற ரூ.10 ஆயிரத்துக்கு மேல் என்று செலவுக் கணக்கு எகிறிவிடும்.
இதையெல்லாம் தவிர்த்து குறைந்த செலவில் நிரந்தர தீர்வு காண நடேசன் திட்டமிட்டார். அனைவரிடமும் கலந்து பேசி தனது திட்டம் குறித்து விளக்கினார். பல ஆண்டுகளாக தண்ணீர் கஷ்டத்தை அனுபவித்த மக்கள், அவரது திட்டத்துக்கு இணங்கினர். உடனடியாக தனது பொறியியல் திறமையை பயன்படுத்தி களத்தில் இறங்கினார் நடேசன். இப்போது அவர்கள், நிலத்தடி நீரையே குடிக்கின்றனர். குழம்பிய நீரை குடிநீராக மாற்றியது குறித்து நடேசன் கூறியதாவது:
தண்ணீரில் உள்ள வண்டல் (செடிமென்ட்) அடியில் தேங்கும் வகையிலான அமைப்பு கொண்ட 2 தொட்டிகளை தரைதளத்தில் ஒன்றுடன் ஒன்றாக குழாய் மூலம் இணைத்தேன். அவை ஒவ்வொன்றும் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டவை. ஆழ்துளைக் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர், இந்த செடிமென்ட் தொட்டிகளில் நிரப்பப்பட்டது. படிகாரம், சலவை சோடா, நீர்த்த சுண்ணாம்பு போன்றவை உரிய விகிதத்தில் கலக்கும் வகையில் சிறிய அமைப்பை செய்து பொருத்தினேன். தொட்டி நீரில் படிகாரம் உள்ளிட்ட பொருட்கள் கலந்ததும், 1300 முதல் 1500 டிடிஎஸ் அளவுக்கு கடினத் தன்மை குறைந்தது. நிறமும் 95% வரை மாறி, தண்ணீர் தெளிவானது.
மழைநீர் சேகரிப்பு
செடிமென்ட் தொட்டியில் தண்ணீரை 24 மணி நேரம் தேக்கினால், வண்டல் அடியில் தங்கி தெளிந்த தண்ணீர் மேலே இருக்கும். அந்த நீரை சென்னைக் குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படும் தண்ணீருடன் ஸ்பிரே முறையில் கலந்துவிடுகிறோம். இதனால் நீரின் கடினத்தன்மை மேலும் குறைந்து 600 டிடிஎஸ்-க்கு சற்று கூடுதலாக மட்டும் இருக்கும். இதனால் இந்தத் தண்ணீரை காய்ச்சி அல்லது வடிகட்டி குடிக்க முடியும்.
அதுமட்டுமின்றி ஆழ்துளை கிணற்றை சுற்றிலும் 10 அடி ஆழத்துக்கு தோண்டி 10 வட்ட உறைகளை இறக்கினேன். அதன் கீழ் அடுக்கில் பெரிய கூழாங்கற்கள், அதற்கு மேலே சிறிய கூழாங்கற்கள், அதற்கு மேல் மணல் நிரப்பப்பட்டது. எங்கள் பிளாக்கில் பெய்யும் மழை நீர் முழுவதும் இதற்குள் செல்லும் வகையில் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டன. மழை நீரை நன்கு வடிகட்டும் வகையில், குழாயில் சல்லடை பொருத்தப்பட்டது. மழை நீர் அந்த வடிகால் அமைப்பில் இறங்கி ஆழ்துளை கிணறு குழாய் வழியாக பூமியில் இறங்கிவிடும். இதனால் நீரில் கடினத் தன்மை மேலும் குறையும்.
இந்தக் கட்டமைப்புகளுக்கு மொத்தத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வரை செலவானது. அதே நேரத்தில் குடிநீரை லாரிகளில் வாங்க மாதந்தோறும் பல ஆயிரங்களை செலவழிப்பதும், வாட்டர் ஃபில்டர் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் பல ஆயிரங்களை செலவழிப்பதும் தவிர்க்கப்பட்டது.
செடிமென்ட் தொட்டியில் தண்ணீரின் அளவு குறையும்போது பம்ப் தானாக இயங்கவும், தண்ணீர் நிரம்பியவுடன் தானாகவே அணையவும் தேவையான அமைப்பும் மிகக் குறைந்த செலவில் வடிவமைத்து பொருத்தியுள்ளேன். இதனால் தண்ணீரின் அளவை அடிக்கடி பரிசோதித்து பம்ப்பை இயக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு நடேசன் கூறினார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. தேவைப்படுவோருக்கு முற்றிலும் இலவசமாக சேவை செய்ய தயாராக இருக்கிறேன் (செல்: 9444907316). வயது, உடல்நிலை காரணமாக நேரடியாக வர முடியாது என்றாலும் உதவி தேவைப்படுபவர்கள் என்னிடம் வந்தால், அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை சொல்வேன். மேலும் எந்தெந்தப் பொருட்கள் எங்கு கிடைக்கும் என்ற வழிமுறைகளையும் சொல்லிக் கொடுப்பேன் என்கிறார் நடேசன்...
the hindu
அடிப்படையில் இயந்திரவியல் பொறியாளரான இவர், விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல ஆண்டுகளாக நீர்நிர்வாக முறைகளை சுயமாக தெரிந்துகொண்டு, அவற்றை திறமையாக பயன்படுத்தியும் வருகிறார். இவர் குடியிருக்கும் முகப்பேர் ஜீவன் பீமா நகரில், நிலத்தடி நீர் மிக மோசமாக இருந்தது. ஆழ்துளை கிணறு மூலம் கிடைக்கும் தண்ணீர், மஞ்சள் நிறத்தில் சாம்பார் போல இருந்தது. அதைக் குடிக்கவே முடியாது. துணி துவைத்தாலும் சுத்தமாக நுரை வராது. கொஞ்சம் நாட்களிலேயே துணிகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும். இந்த நீரில் குளிப்பவர்களுக்கு முடி கொட்டுவது, ஒவ்வாமை என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.
இதனால், தண்ணீரை கழிவறைப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர். குடிநீருக்கு செலவு அப்பகுதியில் நிலத்தடி நீரை ஆய்வு செய்தபோது 2300 டிடிஎஸ் (டோட்டல் டிசால்வ்ட் சாலிட்ஸ்) இருந்தது. அதாவது அந்த நீரில் இரும்பு, உப்பு உள்ளிட்ட பல்வேறு தாதுப் பொருட்கள் அதிகமாக கலந்திருந்தன. 600 டிடிஎஸ் வரை இருக்கும் தண்ணீர்தான் குடிக்க ஏற்றது. எனவே, அப்பகுதி மக்கள், ஆயிரக்கணக்கில் செலவு செய்து லாரிகளில் குடிநீரை வாங்கி தொட்டிகளில் சேமித்து பயன்படுத்தி வந்தனர். கோடை காலத்தில் பணம் கொடுத்தாலும் குடிநீர் கிடைப்பது சிரமமாக இருந்தது. 10 ஆயிரம் லிட்டர் கொண்ட ஒரு லாரி தண்ணீர் வாங்க, ஆயிரம் ரூபாய் செலவாகும். கடந்த ஆண்டில் மட்டும் நடேசனின் பிளாக்கில் தண்ணீருக்காக ரூ.76 ஆயிரம் செலவிடப்பட்டது.
இதையடுத்து, நிலத்தடி நீரை சுத்திகரித்து பயன்படுத்துவதற்காக தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் வாட்டர் ஃபில்டர்களை வாங்கிப் பொருத்த முயற்சி மேற்கொள்ளப் பட்டது. தினமும் 5 ஆயிரம் லிட்டர் குடிநீரைப் பெறுவதற்கான வாட்டர் ஃபில்டர் விலை ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய். அதைத் தொடர்ந்து பராமரிக்க ஒருவரை பணிக்கு நியமிக்க வேண்டும், தனியாக மின் கட்டணம், ஆண்டுக்கு ஒருமுறை அதில் உள்ள வடிகட்டிகளை மாற்ற ரூ.10 ஆயிரத்துக்கு மேல் என்று செலவுக் கணக்கு எகிறிவிடும்.
இதையெல்லாம் தவிர்த்து குறைந்த செலவில் நிரந்தர தீர்வு காண நடேசன் திட்டமிட்டார். அனைவரிடமும் கலந்து பேசி தனது திட்டம் குறித்து விளக்கினார். பல ஆண்டுகளாக தண்ணீர் கஷ்டத்தை அனுபவித்த மக்கள், அவரது திட்டத்துக்கு இணங்கினர். உடனடியாக தனது பொறியியல் திறமையை பயன்படுத்தி களத்தில் இறங்கினார் நடேசன். இப்போது அவர்கள், நிலத்தடி நீரையே குடிக்கின்றனர். குழம்பிய நீரை குடிநீராக மாற்றியது குறித்து நடேசன் கூறியதாவது:
தண்ணீரில் உள்ள வண்டல் (செடிமென்ட்) அடியில் தேங்கும் வகையிலான அமைப்பு கொண்ட 2 தொட்டிகளை தரைதளத்தில் ஒன்றுடன் ஒன்றாக குழாய் மூலம் இணைத்தேன். அவை ஒவ்வொன்றும் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டவை. ஆழ்துளைக் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர், இந்த செடிமென்ட் தொட்டிகளில் நிரப்பப்பட்டது. படிகாரம், சலவை சோடா, நீர்த்த சுண்ணாம்பு போன்றவை உரிய விகிதத்தில் கலக்கும் வகையில் சிறிய அமைப்பை செய்து பொருத்தினேன். தொட்டி நீரில் படிகாரம் உள்ளிட்ட பொருட்கள் கலந்ததும், 1300 முதல் 1500 டிடிஎஸ் அளவுக்கு கடினத் தன்மை குறைந்தது. நிறமும் 95% வரை மாறி, தண்ணீர் தெளிவானது.
மழைநீர் சேகரிப்பு
செடிமென்ட் தொட்டியில் தண்ணீரை 24 மணி நேரம் தேக்கினால், வண்டல் அடியில் தங்கி தெளிந்த தண்ணீர் மேலே இருக்கும். அந்த நீரை சென்னைக் குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படும் தண்ணீருடன் ஸ்பிரே முறையில் கலந்துவிடுகிறோம். இதனால் நீரின் கடினத்தன்மை மேலும் குறைந்து 600 டிடிஎஸ்-க்கு சற்று கூடுதலாக மட்டும் இருக்கும். இதனால் இந்தத் தண்ணீரை காய்ச்சி அல்லது வடிகட்டி குடிக்க முடியும்.
அதுமட்டுமின்றி ஆழ்துளை கிணற்றை சுற்றிலும் 10 அடி ஆழத்துக்கு தோண்டி 10 வட்ட உறைகளை இறக்கினேன். அதன் கீழ் அடுக்கில் பெரிய கூழாங்கற்கள், அதற்கு மேலே சிறிய கூழாங்கற்கள், அதற்கு மேல் மணல் நிரப்பப்பட்டது. எங்கள் பிளாக்கில் பெய்யும் மழை நீர் முழுவதும் இதற்குள் செல்லும் வகையில் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டன. மழை நீரை நன்கு வடிகட்டும் வகையில், குழாயில் சல்லடை பொருத்தப்பட்டது. மழை நீர் அந்த வடிகால் அமைப்பில் இறங்கி ஆழ்துளை கிணறு குழாய் வழியாக பூமியில் இறங்கிவிடும். இதனால் நீரில் கடினத் தன்மை மேலும் குறையும்.
இந்தக் கட்டமைப்புகளுக்கு மொத்தத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வரை செலவானது. அதே நேரத்தில் குடிநீரை லாரிகளில் வாங்க மாதந்தோறும் பல ஆயிரங்களை செலவழிப்பதும், வாட்டர் ஃபில்டர் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் பல ஆயிரங்களை செலவழிப்பதும் தவிர்க்கப்பட்டது.
செடிமென்ட் தொட்டியில் தண்ணீரின் அளவு குறையும்போது பம்ப் தானாக இயங்கவும், தண்ணீர் நிரம்பியவுடன் தானாகவே அணையவும் தேவையான அமைப்பும் மிகக் குறைந்த செலவில் வடிவமைத்து பொருத்தியுள்ளேன். இதனால் தண்ணீரின் அளவை அடிக்கடி பரிசோதித்து பம்ப்பை இயக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு நடேசன் கூறினார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. தேவைப்படுவோருக்கு முற்றிலும் இலவசமாக சேவை செய்ய தயாராக இருக்கிறேன் (செல்: 9444907316). வயது, உடல்நிலை காரணமாக நேரடியாக வர முடியாது என்றாலும் உதவி தேவைப்படுபவர்கள் என்னிடம் வந்தால், அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை சொல்வேன். மேலும் எந்தெந்தப் பொருட்கள் எங்கு கிடைக்கும் என்ற வழிமுறைகளையும் சொல்லிக் கொடுப்பேன் என்கிறார் நடேசன்...
the hindu
Re: மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு.........
#1040890- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
உபயோகமான பதிவு. நன்றி!
Re: மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு.........
#1040915- N.S.Maniபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
எங்கள் வீட்டில் ஆழ்துளை பைப் போட்டு அதிலிருந்து எடுத்த தண்ணீரும் அதிக மஞ்சள் நிறமில்லாமல் சற்று கலங்களாகவும் அதிக துகல்கள் கொண்டும் இருந்தபடியால் அதனை எதற்கும் உபயோகிக்க இயலவில்லை. எனது நண்பர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலைசெய்பவர், அந்த தண்ணீரை சுத்தகரிப்பதற்கான எளிய வழிமுறை ஒன்றை கூறினார். அதன் விளக்கம் கீழே கொடுத்துள்ளேன்.
அதாவது, வீட்டின் மொட்டை மாடியில் உள்ள மாடிப்படியின் மேல் தளத்தில் இரண்டு அடுக்கு தொட்டி கட்டினேன். கீழ் உள்ளது வடிகட்டிய நீரை சேமித்து, வீட்டு உபயோகத்திற்கு கொடுப்பதற்கு. மேலே உள்ள அடுக்கு நீரை வடிகட்டுவதற்கான கட்டமைப்பு கொண்டது.
![மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு......... J1Kol9LQQ7O38HbBqPkJ+வடிகட்டமைப்பு](https://www.filepicker.io/api/file/j1Kol9LQQ7O38HbBqPkJ+வடிகட்டமைப்பு.jpg)
![மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு......... B3SjmEeYRJ2wh0OcvQHw+தண்ணீர்சுத்தகரிப்புத்தொட்டிஅமைப்பு](https://www.filepicker.io/api/file/b3SjmEeYRJ2wh0OcvQHw+தண்ணீர்சுத்தகரிப்புத்தொட்டிஅமைப்பு.jpg)
படத்தில் காண்பித்துள்ளது போன்று வடிகட்டமைப்பு தொட்டியில் கீழிலிருந்து மேலாக ஒவ்வொன்றும் 6 அங்குல உயரத்திற்கு உபயோகப்படுத்தியுள்ள பொருட்களாவன:
நிலை – 7: பெரிய கருங்கல் ஜல்லி
நிலை – 6: சிறிய கருங்கல் ஜல்லி
நிலை – 5; கரித் துண்டுகள் – (நன்றாக நீரில் கழுவிய பிறகு)
நிலை – 4: மிகச் சிறிய ஜல்லி
நிலை – 3: பெரு மணல் – சல்லடையில் சலித்து மேலே தங்குவது.
நிலை – 2: மணலை சலித்ததில் கீழே வந்த சிறு மணல்.
நிலை – 1: இதில் பி.வி.சி பைபினால் ஒரு ஸ்பிரே அமைப்பு செய்து, சிறு மஞ்சள் நிறமுடைய கலங்கிய நீரை செலுத்தவேண்டும்
துகல்கள் சிறு மணல் மேலேயே தங்கிவிடும்.
இப்பொழுது மேலிருந்து கீழ்நோக்கி வரும் நீர் ஒவ்வொரு நிலையை கடந்து வரும்பொழுதும் சுத்தம் செய்யப்படுகிறது.
நிலை – 5 ல் உள்ள கரித்துண்டுகளை கடந்து செல்லும் பொழுது நீரில் உள்ள நச்சு கிருமிகளும் நீக்கப்பட்டுவிடுகிறது.
சுத்தமான நீர் – கடைகளில் விற்கப்படுகிற “மினரல் வாட்டர்” போல் இருக்கிறது. இந்த நீரை எல்லா விதமான உபயோகத்திற்கும் பயன் படுத்துகிறோம்.
இதனால் துணிகள் பளீர் வெண்மையுடன் உள்ளது. பாத்திரங்களில் கரை படிவதில்லை.
மேற்கொண்டு “அக்குவா பில்ட்டர்” மூலம் செலுத்தி குடிநீராகவும் பயன்படுத்துகிறோம்.
இறுதியாக, எவ்வித பிரச்சினையுமின்றி வீட்டின் அனைத்து விதமான உபயோகத்திற்கும் பயன் படுத்துகிறோம். (கட்டிய வருடம் 1993.)
இது பற்றி மேற்கொண்டு தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய
கைபேசி எண்: +91 98496 46407.
மேற்கூறிய தண்ணீரை சுத்தப்படுத்தும் அமைப்பு கடந்த 20 வருடமாக உபயோகத்தில் இருந்து வருகிறது.
இந்த அமைப்பினை நண்பர்கள் பலரிடமும் பகிர்ந்துள்ளேன். தவிர, இந்த அமைப்பினை, காண்டிராக்டர் அவர் அடுத்து கட்டிய பல வீடுகளில் ஏற்கனவே அமல் படுத்தியிருக்கிறார்.
நா.செ.மணி
அதாவது, வீட்டின் மொட்டை மாடியில் உள்ள மாடிப்படியின் மேல் தளத்தில் இரண்டு அடுக்கு தொட்டி கட்டினேன். கீழ் உள்ளது வடிகட்டிய நீரை சேமித்து, வீட்டு உபயோகத்திற்கு கொடுப்பதற்கு. மேலே உள்ள அடுக்கு நீரை வடிகட்டுவதற்கான கட்டமைப்பு கொண்டது.
![மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு......... J1Kol9LQQ7O38HbBqPkJ+வடிகட்டமைப்பு](https://www.filepicker.io/api/file/j1Kol9LQQ7O38HbBqPkJ+வடிகட்டமைப்பு.jpg)
![மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு......... B3SjmEeYRJ2wh0OcvQHw+தண்ணீர்சுத்தகரிப்புத்தொட்டிஅமைப்பு](https://www.filepicker.io/api/file/b3SjmEeYRJ2wh0OcvQHw+தண்ணீர்சுத்தகரிப்புத்தொட்டிஅமைப்பு.jpg)
படத்தில் காண்பித்துள்ளது போன்று வடிகட்டமைப்பு தொட்டியில் கீழிலிருந்து மேலாக ஒவ்வொன்றும் 6 அங்குல உயரத்திற்கு உபயோகப்படுத்தியுள்ள பொருட்களாவன:
நிலை – 7: பெரிய கருங்கல் ஜல்லி
நிலை – 6: சிறிய கருங்கல் ஜல்லி
நிலை – 5; கரித் துண்டுகள் – (நன்றாக நீரில் கழுவிய பிறகு)
நிலை – 4: மிகச் சிறிய ஜல்லி
நிலை – 3: பெரு மணல் – சல்லடையில் சலித்து மேலே தங்குவது.
நிலை – 2: மணலை சலித்ததில் கீழே வந்த சிறு மணல்.
நிலை – 1: இதில் பி.வி.சி பைபினால் ஒரு ஸ்பிரே அமைப்பு செய்து, சிறு மஞ்சள் நிறமுடைய கலங்கிய நீரை செலுத்தவேண்டும்
துகல்கள் சிறு மணல் மேலேயே தங்கிவிடும்.
இப்பொழுது மேலிருந்து கீழ்நோக்கி வரும் நீர் ஒவ்வொரு நிலையை கடந்து வரும்பொழுதும் சுத்தம் செய்யப்படுகிறது.
நிலை – 5 ல் உள்ள கரித்துண்டுகளை கடந்து செல்லும் பொழுது நீரில் உள்ள நச்சு கிருமிகளும் நீக்கப்பட்டுவிடுகிறது.
சுத்தமான நீர் – கடைகளில் விற்கப்படுகிற “மினரல் வாட்டர்” போல் இருக்கிறது. இந்த நீரை எல்லா விதமான உபயோகத்திற்கும் பயன் படுத்துகிறோம்.
இதனால் துணிகள் பளீர் வெண்மையுடன் உள்ளது. பாத்திரங்களில் கரை படிவதில்லை.
மேற்கொண்டு “அக்குவா பில்ட்டர்” மூலம் செலுத்தி குடிநீராகவும் பயன்படுத்துகிறோம்.
இறுதியாக, எவ்வித பிரச்சினையுமின்றி வீட்டின் அனைத்து விதமான உபயோகத்திற்கும் பயன் படுத்துகிறோம். (கட்டிய வருடம் 1993.)
இது பற்றி மேற்கொண்டு தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய
கைபேசி எண்: +91 98496 46407.
மேற்கூறிய தண்ணீரை சுத்தப்படுத்தும் அமைப்பு கடந்த 20 வருடமாக உபயோகத்தில் இருந்து வருகிறது.
இந்த அமைப்பினை நண்பர்கள் பலரிடமும் பகிர்ந்துள்ளேன். தவிர, இந்த அமைப்பினை, காண்டிராக்டர் அவர் அடுத்து கட்டிய பல வீடுகளில் ஏற்கனவே அமல் படுத்தியிருக்கிறார்.
நா.செ.மணி
Re: மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு.........
#1041263- N.S.Maniபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
நீரில் உள்ள துகளின் அடர்த்திக்கேற்ப, மேல் நிலையில் போட்டுள்ள சிறுமணல் மீது வண்டல் படியும் அளவு வேறுபடும். அதுவும் கோடைகாலத்தில் அதிகமாக படியும். எனவே, கோடைமுடிந்தவுடன் ஒருமுறை மேலே படிந்துள்ள வண்டலை நீக்கிவிட்டால் போதும்.
மற்றபடி மொத்தமாக வெளியில் இடித்துவிட்டு முழுவதுமாக நாங்கள் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றினோம்.
நா.செ.மணி
மற்றபடி மொத்தமாக வெளியில் இடித்துவிட்டு முழுவதுமாக நாங்கள் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றினோம்.
நா.செ.மணி
Re: மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு.........
#1041266- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1041263N.S.Mani wrote:நீரில் உள்ள துகளின் அடர்த்திக்கேற்ப, மேல் நிலையில் போட்டுள்ள சிறுமணல் மீது வண்டல் படியும் அளவு வேறுபடும். அதுவும் கோடைகாலத்தில் அதிகமாக படியும். எனவே, கோடைமுடிந்தவுடன் ஒருமுறை மேலே படிந்துள்ள வண்டலை நீக்கிவிட்டால் போதும்.
மற்றபடி மொத்தமாக வெளியில் இடித்துவிட்டு முழுவதுமாக நாங்கள் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றினோம்.
நா.செ.மணி
அருமை ஐயா, முன்பு ( 80 களில் ) திருவான்மியூரில் இது போல 'இவரின்' அத்தை பிள்ளை செய்திருக்கிறார், நாங்கள் சின்ன வயதில் இதை ஆச்சர்யமாய் பார்த்திருக்கோம். ஆனால் அவர் கருங்கற்களை வருடா வருடம் மாற்றுவார், அவை ஒரே வருடத்தில் சிவப்பு கற்கள் போல மாறிவிடும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு.........
#1041394- N.S.Maniபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
//"மற்றபடி மொத்தமாக வெளியில் இடித்துவிட்டு முழுவதுமாக நாங்கள் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றினோம்."//
சிறு திருத்தம்:
மற்றபடி மொத்தமாக வெளியில் [b]//"எடுத்துவிட்டு"// முழுவதுமாக நாங்கள் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றினோம்.
என திருத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்
சிறு திருத்தம்:
மற்றபடி மொத்தமாக வெளியில் [b]//"எடுத்துவிட்டு"// முழுவதுமாக நாங்கள் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றினோம்.
என திருத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்
Re: மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு.........
#1041395- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
![மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு......... 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு......... 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு......... 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திரியும் பால், குழையும் சோறு!: வடசென்னையில் ஊடுருவிய கடல் நீரால் 4 மடங்கு உப்பாக மாறிய நிலத்தடி நீர்..குடிநீருக்கு மக்கள் தவிப்பு..!!
» நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள்
» நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா
» மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும்
» தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் வற்றிவிட்டது- மத்திய அரசு தகவல்
» நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள்
» நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா
» மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும்
» தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் வற்றிவிட்டது- மத்திய அரசு தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|