Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 10:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 10:46 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 10:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 10:42 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 10:40 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 10:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 10:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 10:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 10:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 10:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 1:19 am
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 12:56 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 12:31 am
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 12:29 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:37 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 8:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:12 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:06 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:08 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 11:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 11:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 11:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:18 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
+6
krishnaamma
ராஜா
சதாசிவம்
ayyasamy ram
N.S.Mani
சிவா
10 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
First topic message reminder :
70 இடங்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 32, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க டெல்லி துணைநிலை கவர்னர் நஜீப்சிங் அழைத்தார். ஆனால் ஆட்சி அமைக்க பா.ஜ.க. மறுத்து விட்டது.
இதையடுத்து 2–வது அதிக இடங்களை பிடித்த கட்சியான ஆம்ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப்சிங் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கவர்னரை சந்தித்த ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 23–ந் தேதி வரை அவகாசம் கேட்டார். கடந்த 6 நாட்களாக அவர் டெல்லியில் 280 கூட்டங்களை நடத்தி ஆட்சி அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டார். அவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.
பேஸ்புக், டுவிட்டர், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் ஆம்ஆத்மி கட்சி கருத்து கேட்டது. சுமார் 6½ லட்சம் பேர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதில் பெரும்பாலானவர்கள் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றனர். இதை ஏற்று ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்க முடிவு செய்தது. இன்று பகல் 11 மணியளவில் டெல்லி காசியாபாத்தில் மக்கள் முன்னிலையில் நடந்த ஆம்ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடந்தது. அதில் ஆட்சி அமைக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘‘280 மக்கள் சபை கூட்டங்களை நாங்கள் நடத்தினோம். அதில் 257 கூட்டங்களில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க மக்கள் சம்மதித்துள்ளனர்’’ என்றார்.
அவரைத் தொடர்ந்து 11.20 மணிக்கு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை கேட்டதும் திரண்டிருந்த ஆம்ஆத்மி கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிறகு ஆம்ஆத்மி கட்சி மூத்த தலைவர்களுடன் கெஜ்ரிவால் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். மதியம் 12.30 மணியளவில் அவர் கவர்னர் நஜீப்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதோடு ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தன்னை சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுத்தார்.
கெஜ்ரிவாலின் கடிதத்தை கவர்னர் நஜீப்சிங் ஏற்றுக் கொண்டார். ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க அவர் சம்மதம் தெரிவித்தார். அப்போது கெஜ்ரிவால், பதவி ஏற்பு விழாவை ‘‘ஜந்தர் மந்திர்’’ பகுதியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஊழலுக்கு எதிராக ஜந்தர் மந்திர் பகுதியில் நடந்த போராட்டங்கள் தான் கெஜ்ரிவாலை நாடெங்கும் பிரபலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் பதவி ஏற்பு விழாவை ஜந்தர்மந்திரில் நடத்த கெஜ்ரிவால் விரும்புகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் 26–ந்தேதி (வியாழக்கிழமை) பதவி ஏற்பார் என்று தெரிய வந்துள்ளது. அவர் பதவி ஏற்றதும் சட்டசபை கூட்டப்படும். எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பார்கள். அந்த கூட்டத்திலேயே சில அறிவிப்புகளை நிறைவேற்ற கெஜ்ரிவால் திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக லோக்பால் மசோதாவை அவர் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கெஜ்ரிவால் ஆட்சியில் நீடிக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. சட்டசபையில் கெஜ்ரிவால் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்கும். மற்றபடி காங்கிரசிடம் இருந்து ஆம்ஆத்மி நேரடி ஆதரவை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
70 இடங்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 32, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க டெல்லி துணைநிலை கவர்னர் நஜீப்சிங் அழைத்தார். ஆனால் ஆட்சி அமைக்க பா.ஜ.க. மறுத்து விட்டது.
இதையடுத்து 2–வது அதிக இடங்களை பிடித்த கட்சியான ஆம்ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப்சிங் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கவர்னரை சந்தித்த ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 23–ந் தேதி வரை அவகாசம் கேட்டார். கடந்த 6 நாட்களாக அவர் டெல்லியில் 280 கூட்டங்களை நடத்தி ஆட்சி அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டார். அவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.
பேஸ்புக், டுவிட்டர், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் ஆம்ஆத்மி கட்சி கருத்து கேட்டது. சுமார் 6½ லட்சம் பேர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதில் பெரும்பாலானவர்கள் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றனர். இதை ஏற்று ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்க முடிவு செய்தது. இன்று பகல் 11 மணியளவில் டெல்லி காசியாபாத்தில் மக்கள் முன்னிலையில் நடந்த ஆம்ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடந்தது. அதில் ஆட்சி அமைக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘‘280 மக்கள் சபை கூட்டங்களை நாங்கள் நடத்தினோம். அதில் 257 கூட்டங்களில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க மக்கள் சம்மதித்துள்ளனர்’’ என்றார்.
அவரைத் தொடர்ந்து 11.20 மணிக்கு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை கேட்டதும் திரண்டிருந்த ஆம்ஆத்மி கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிறகு ஆம்ஆத்மி கட்சி மூத்த தலைவர்களுடன் கெஜ்ரிவால் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். மதியம் 12.30 மணியளவில் அவர் கவர்னர் நஜீப்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதோடு ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தன்னை சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுத்தார்.
கெஜ்ரிவாலின் கடிதத்தை கவர்னர் நஜீப்சிங் ஏற்றுக் கொண்டார். ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க அவர் சம்மதம் தெரிவித்தார். அப்போது கெஜ்ரிவால், பதவி ஏற்பு விழாவை ‘‘ஜந்தர் மந்திர்’’ பகுதியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஊழலுக்கு எதிராக ஜந்தர் மந்திர் பகுதியில் நடந்த போராட்டங்கள் தான் கெஜ்ரிவாலை நாடெங்கும் பிரபலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் பதவி ஏற்பு விழாவை ஜந்தர்மந்திரில் நடத்த கெஜ்ரிவால் விரும்புகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் 26–ந்தேதி (வியாழக்கிழமை) பதவி ஏற்பார் என்று தெரிய வந்துள்ளது. அவர் பதவி ஏற்றதும் சட்டசபை கூட்டப்படும். எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பார்கள். அந்த கூட்டத்திலேயே சில அறிவிப்புகளை நிறைவேற்ற கெஜ்ரிவால் திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக லோக்பால் மசோதாவை அவர் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கெஜ்ரிவால் ஆட்சியில் நீடிக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. சட்டசபையில் கெஜ்ரிவால் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்கும். மற்றபடி காங்கிரசிடம் இருந்து ஆம்ஆத்மி நேரடி ஆதரவை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதவியேற்பு விழாவில் 50,000 பேர் பங்கேற்பு?
புதுடில்லி : டில்லியில் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் இவ்விழாவில் சுமார் 50,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு யாருக்கும் விஐபி பாஸ் கிடையாது எனவும், யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என கெஜ்ரிவால் ஏற்கனவே அறிவித்துள்ளதால் எதிர்பார்த்ததை விட ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இது மற்றொரு சுதந்திர போராட்டம்:கெஜ்ரிவால்
புதுடில்லி : பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ராம் லீலா மைதானத்திற்கு புறப்படுவதற்கு முன் கெஜ்ரிவால் தனத வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இது எனக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; ஆம் ஆத்மி கட்சிக்க கிடைத்த வெற்றி; ஊழலுக்கு எதிரான எங்களின் நடவடிக்கைகள் தொடரும்; இது மற்றொரு சுதந்திர போராட்டம் என தெரிவித்துள்ளார்.
Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கெஜ்ரிவால் சிறப்பாக பணி செய்வார்:ஹசாரே
புதுடில்லி : டில்லி முதல்வராக பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனது பணியை சிறப்பாக செய்வார் என தனக்கு நம்பிக்கை உள்ளதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டில்லி முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால்
புதுடில்லி : டில்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுள்ளார். 6 அமைச்சர்களுடன் பதவியேற்ற கெஜ்வாலுக்கு டில்லி துணைநிலை ஆளுனர் நஜீப் ஜக் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டில்லி :புதிய அமைச்சரவை பதவியேற்பு
புதுடில்லி : டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றார். அவருடன் மனீஷ் சிசோடியா (சமூக ஆர்வலர்), சோம்நாத் பார்தி(வழக்கறிஞர்), சத்யேந்திர ஜெயந்த் ( கட்டிட வடிவமைப்பாளர்), ராக்கி பிர்லா ( முன்னாள் பத்திரிக்கையாளர்), கிரிஷ் சோனி, சவ்ரப் பரத்வாஜ் (முன்னாள் சாப்ட்வேர் இன்ஜினியர்) ஆகிய 6 அமைச்சர்கள் பதவியேற்றனர். பட்டதாரிகளையும், இளம் வயதினர்களையும் கொண்ட முதல் அமைச்சரவை இது என்பது குறிப்பிடத்தக்கது.
Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டில்லியின் 7 வது முதல்வர் பொறுப்பேற்பு ; அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார்
புதுடில்லி: டில்லியில் 7 வது முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நண்பகல் 12 மணிக்கு பதவியேற்றார். துணைநிலை ஆளுநர் நஜிப்ஜங் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு ஊழலை விரட்டுவோம் என்றும் இது எனது தனிப்பட்ட வெற்றி அல்ல என்றும் பதவியேற்க புறப்பட்டபோது கெஜ்ரிவால் குறிப்பிட்டார். பதவியேற்க கெஜ்ரிவால் மெட்ரோ ரயில் மூலம் புறப்பட்டு வந்தார்.
தகவல் உரிமை பெறும் சட்டம் மூலம் பல விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்தவரும், ஊழல் எதிர்ப்பு போரை துவங்கியவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சட்டசபை தேர்தலில் 28 இடங்களை பிடித்தது.
தற்போது காங்கிரஸ் வெளியில் இருந்து தரும் ஆதரவை பெற்று இன்று மக்களின் கருத்துக்களை கேட்டு ஆட்சி அமைக்கிறார். இவருடன் 6 பேர் மணீஷ் சிசோடியா , சத்யேந்திரஜெயந்த், அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
ஊழல் களையப்படும்:
முதல்வர் பதவியேற்றதும் விழா மேடையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில்: ஆம் ஆத்மியை தேர்வு செய்த டில்லி மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நேர்மையாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் என்பது நிரூபணமாகியுள்ளது. கடவுளுக்கும் , மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தற்போதுதான் எங்களின் உண்மையான போராட்டம் துவங்கியிருக்கிறது. இன்று நானும் எம்.எல்ஏ.,க்களும் பொறுப்பேற்கவில்லை. மக்களும் என்னுடன் இணைந்து பதவியேற்றுள்ளனர். இந்த இடத்தில்தான் ஹசாரேயுடன் இணைந்து 2 ஆண்டுகளுக்கு முன் போராட்டத்தை துவக்கினேன். இது போன்ற புரட்சி நடக்கும் என கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
மக்கள் இல்லாமல் நாம் ஆட்சியை நடத்த முடியாது. அதிகாரிகள் , போலீசாரின் ஆட்சி இங்கு நடக்காது. மக்களை வைத்துதான் ஆட்சி நடத்துவோம். மின்கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்படும். பார்லி., தேர்தலை எதிர்கொள்ள ஆம்ஆத்மி கட்சி தயாராக இருக்கிறது. அழுக்கு நிறைந்ததாக அரசியல் உள்ளது என அன்னா ஹசாரே கூறியுள்ளார். இந்த அழுக்கை நீக்கிட பாடுபடுவோம். எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள ஆம்ஆத்மி தயாராக உள்ளது. எந்தவொரு மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம். ஊழலை ஒழிக்க அயராது பாடுபடுவோம். ஊழல்வாதிகள் மீது கடும் நடடிக்கை எடுப்போம். பா.ஜ., தலைவர் ஹர்சவர்த்தன் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். நாட்டில் முழு சுதந்திரம் கிடைக்க பாடுபடுவோம். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.
பதவியேற்பு விழாவில் காங்கிரசார் மிஸ்ஸிங்
இன்றைய பதவியேற்பு விழாவில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் காங்கிரசார் யாரும் பங்கேற்கவில்லை. பா.ஜ., டில்லி தலைவர் ஹர்சவர்த்தன் பங்கேற்றார்.
கிரண்பேடி வாழ்த்து:
கெஜ்ரிவால் பதவியேற்றதும், இவருக்கு அன்னா ஹசாரேயின் அணியை சேர்ந்த கிரண்பேடி வாழ்த்தும், வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவால் மற்றும் அவரது அணியினர் பொறுப்பேற்பது மகிழ்ச்சி, இவர்கள் அரசியிலில் நல்லதொரு மாற்றத்தை செய்வார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கெஜ்ரிவால் மனைவி சுனிதா
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றுவார் என கெஜ்ரிவால் மனைவி சுனிதா கூறினார். அவர் மேலும் கூறுகையில், எனது கணவர் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறார். இவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். என்றார்
தலைமை செயலகம் சென்றார் முதல்வர்
டில்லி முதல்வராக பதவியேற்றதும், ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் முதல்வர் கெஜ்ரிவால் மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் டில்லி தலைமை செயலகம் சென்றார். அங்கு சென்று முதல்வராக ஒரு மணியளவில் பொறுப்பை ஏற்று கொண்டார்.
Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அமைச்சர்கள் இலாகா விவரம்:
இன்றைய அமைச்சரவையில் பொறுப்பேற்றவர்களின் இலாக்காக்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி
முதல்வர் கெஜ்ரிவால்; உள்துறை, நிதித்துறை , மின்சாரம், திட்டம், லஞ்ச ஒழிப்பு
மணீஷ் சிசோடியா: பொதுப்பணித்துறை, கல்வி , நகர் மற்றும் ஊரக வளர்ச்சி.
ராக்கி பிர்லா: குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை. சமூக நிதி
சத்யேந்திரா ஜெயின்: சுகாதாரத்துறை
சவ்ரப் பரத்வாஜ்: போக்குவரத்து துறை.சிவில் சப்ளை,
சோம்நாத் பார்த்தி: சுற்றுலா, சட்டம் மற்றும் கலைத்துறை .
கிரிஷ் சோனி: வேலை வாய்ப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கை வரலாறு
பிறந்த தேதி: ஆகஸ்ட் -16 , 1968 .
ஊர் : ஹிசார்
மனைவி: சுனிதா
பள்ளி படிப்பு : ஹிசார்
1989 - 92 வரை டாட்டா ஸ்டீல் பணியாற்றினார்
1995 - சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் இந்திய வருமான வரி துறையில் பணி.
2000- உயர் படிப்பிற்காக 2 ஆண்டுகள் விடுப்பு
2003 - மீண்டும் பணியில் சேர்ந்தார்
2006- வருமான வரி இணைகமிஷனர் பதவியில் இருந்து விலகல்
2012 நவம்பர் 26 ல் ஆம் ஆத்மி கட்சி துவக்கம்.
Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து!
புதுடெல்லி: டெல்லி முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று மாலை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என உறுதி அளித்தார்.
அதற்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கெஜ்ரிவால் ரொம்ப பிடிக்குமோ உங்களுக்கு???????????
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜாஹீதாபானு wrote:கெஜ்ரிவால் ரொம்ப பிடிக்குமோ உங்களுக்கு???????????
தனிப்பட்ட முறையில் இவரைப் பிடிக்க எந்தக்காரணமும் இல்லை அக்கா!
இந்திய அரசியல் ஊழலில் திளைத்திருக்கும் வேளையில், மக்கள் மாற்றம் தர யார் வருவார்கள் என காத்திருக்கும் வேளையில் கல்கி அவதாரம் போல் நான் இருக்கிறேன் என்று வந்தார், வென்றார். இன்று முதல்வராகவும் பதவியேற்றுவிட்டார்.
இவரது இந்த வெற்றியை இந்திய மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும், காரணம், இவரது வருகையாலும், மக்கள் இவரை ஆதரித்ததாலும், ஊழல் அரசியல்வாதிகளின் அடிமடியில் இந்நேரம் நெருப்புப் பற்றிக் கொண்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே! அந்த நெருப்பை உருவாக்கிய மாவீரன் அல்லவா கெஜ்ரிவால்!
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 200 யூனிட் வரை மின் கட்டணம் இலவசம்: 201 முதல் 400 வரை 50% மானியம்...டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு
» டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி - அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம்
» டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
» கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி துவக்கம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல்
» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி - அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம்
» டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
» கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி துவக்கம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல்
» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|