Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
+6
krishnaamma
ராஜா
சதாசிவம்
ayyasamy ram
N.S.Mani
சிவா
10 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
First topic message reminder :
70 இடங்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 32, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க டெல்லி துணைநிலை கவர்னர் நஜீப்சிங் அழைத்தார். ஆனால் ஆட்சி அமைக்க பா.ஜ.க. மறுத்து விட்டது.
இதையடுத்து 2–வது அதிக இடங்களை பிடித்த கட்சியான ஆம்ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப்சிங் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கவர்னரை சந்தித்த ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 23–ந் தேதி வரை அவகாசம் கேட்டார். கடந்த 6 நாட்களாக அவர் டெல்லியில் 280 கூட்டங்களை நடத்தி ஆட்சி அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டார். அவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.
பேஸ்புக், டுவிட்டர், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் ஆம்ஆத்மி கட்சி கருத்து கேட்டது. சுமார் 6½ லட்சம் பேர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதில் பெரும்பாலானவர்கள் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றனர். இதை ஏற்று ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்க முடிவு செய்தது. இன்று பகல் 11 மணியளவில் டெல்லி காசியாபாத்தில் மக்கள் முன்னிலையில் நடந்த ஆம்ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடந்தது. அதில் ஆட்சி அமைக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘‘280 மக்கள் சபை கூட்டங்களை நாங்கள் நடத்தினோம். அதில் 257 கூட்டங்களில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க மக்கள் சம்மதித்துள்ளனர்’’ என்றார்.
அவரைத் தொடர்ந்து 11.20 மணிக்கு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை கேட்டதும் திரண்டிருந்த ஆம்ஆத்மி கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிறகு ஆம்ஆத்மி கட்சி மூத்த தலைவர்களுடன் கெஜ்ரிவால் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். மதியம் 12.30 மணியளவில் அவர் கவர்னர் நஜீப்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதோடு ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தன்னை சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுத்தார்.
கெஜ்ரிவாலின் கடிதத்தை கவர்னர் நஜீப்சிங் ஏற்றுக் கொண்டார். ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க அவர் சம்மதம் தெரிவித்தார். அப்போது கெஜ்ரிவால், பதவி ஏற்பு விழாவை ‘‘ஜந்தர் மந்திர்’’ பகுதியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஊழலுக்கு எதிராக ஜந்தர் மந்திர் பகுதியில் நடந்த போராட்டங்கள் தான் கெஜ்ரிவாலை நாடெங்கும் பிரபலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் பதவி ஏற்பு விழாவை ஜந்தர்மந்திரில் நடத்த கெஜ்ரிவால் விரும்புகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் 26–ந்தேதி (வியாழக்கிழமை) பதவி ஏற்பார் என்று தெரிய வந்துள்ளது. அவர் பதவி ஏற்றதும் சட்டசபை கூட்டப்படும். எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பார்கள். அந்த கூட்டத்திலேயே சில அறிவிப்புகளை நிறைவேற்ற கெஜ்ரிவால் திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக லோக்பால் மசோதாவை அவர் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கெஜ்ரிவால் ஆட்சியில் நீடிக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. சட்டசபையில் கெஜ்ரிவால் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்கும். மற்றபடி காங்கிரசிடம் இருந்து ஆம்ஆத்மி நேரடி ஆதரவை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
70 இடங்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 32, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க டெல்லி துணைநிலை கவர்னர் நஜீப்சிங் அழைத்தார். ஆனால் ஆட்சி அமைக்க பா.ஜ.க. மறுத்து விட்டது.
இதையடுத்து 2–வது அதிக இடங்களை பிடித்த கட்சியான ஆம்ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப்சிங் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கவர்னரை சந்தித்த ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 23–ந் தேதி வரை அவகாசம் கேட்டார். கடந்த 6 நாட்களாக அவர் டெல்லியில் 280 கூட்டங்களை நடத்தி ஆட்சி அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டார். அவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.
பேஸ்புக், டுவிட்டர், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் ஆம்ஆத்மி கட்சி கருத்து கேட்டது. சுமார் 6½ லட்சம் பேர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதில் பெரும்பாலானவர்கள் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றனர். இதை ஏற்று ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்க முடிவு செய்தது. இன்று பகல் 11 மணியளவில் டெல்லி காசியாபாத்தில் மக்கள் முன்னிலையில் நடந்த ஆம்ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடந்தது. அதில் ஆட்சி அமைக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘‘280 மக்கள் சபை கூட்டங்களை நாங்கள் நடத்தினோம். அதில் 257 கூட்டங்களில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க மக்கள் சம்மதித்துள்ளனர்’’ என்றார்.
அவரைத் தொடர்ந்து 11.20 மணிக்கு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை கேட்டதும் திரண்டிருந்த ஆம்ஆத்மி கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிறகு ஆம்ஆத்மி கட்சி மூத்த தலைவர்களுடன் கெஜ்ரிவால் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். மதியம் 12.30 மணியளவில் அவர் கவர்னர் நஜீப்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதோடு ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தன்னை சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுத்தார்.
கெஜ்ரிவாலின் கடிதத்தை கவர்னர் நஜீப்சிங் ஏற்றுக் கொண்டார். ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க அவர் சம்மதம் தெரிவித்தார். அப்போது கெஜ்ரிவால், பதவி ஏற்பு விழாவை ‘‘ஜந்தர் மந்திர்’’ பகுதியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஊழலுக்கு எதிராக ஜந்தர் மந்திர் பகுதியில் நடந்த போராட்டங்கள் தான் கெஜ்ரிவாலை நாடெங்கும் பிரபலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் பதவி ஏற்பு விழாவை ஜந்தர்மந்திரில் நடத்த கெஜ்ரிவால் விரும்புகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் 26–ந்தேதி (வியாழக்கிழமை) பதவி ஏற்பார் என்று தெரிய வந்துள்ளது. அவர் பதவி ஏற்றதும் சட்டசபை கூட்டப்படும். எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பார்கள். அந்த கூட்டத்திலேயே சில அறிவிப்புகளை நிறைவேற்ற கெஜ்ரிவால் திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக லோக்பால் மசோதாவை அவர் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கெஜ்ரிவால் ஆட்சியில் நீடிக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. சட்டசபையில் கெஜ்ரிவால் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்கும். மற்றபடி காங்கிரசிடம் இருந்து ஆம்ஆத்மி நேரடி ஆதரவை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நேர்மை அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் அழைப்பு; ஆம் ஆத்மியின் அசத்தல் ஆரம்பம்
காஸியாபாத்: வருகிற சனிக்கிழமையன்று டெல்லி முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று தமது வீட்டிற்கு வெளியே மக்கள் குறைகேட்பு ( ஜனதா தர்பார்) நிகழ்ச்சியை நடத்தினார்.
தங்களது குறைகளை தெரிவிப்பதற்காக தனது வீட்டின் முன்னர் திரண்டிருந்த மக்களிடையே பேசிய கெஜ்ரிவால், "உங்களில் பெரும்பாலானோர் எனக்கு வாழ்த்து தெரிவிக்கத்தான் வந்துள்ளீர்கள் என எனக்கு தெரியும். இந்த வெற்றி என்னுடையதல்ல; உங்களுடைய வெற்றி" என்றார்.
தொடர்ந்து அங்கு வந்த மக்களில் பெரும்பாலானோர் குடிநீர் மற்றும் மின்சாரம் தொடர்பான குறைகளையும், புகார்களையுமே தெரிவித்தனர். அவற்றை கேட்ட கெஜ்ரிவால்," உங்களது குறைகள் மற்றும் புகார்களை கேட்டேன். அதன் மீது நிச்சயம் நான் நடவடிக்கை எடுப்பேன்" என்று உறுதி அளித்தார்.
பதவி ஏற்பு விழாவுக்கு விஐபி என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு
இதனிடையே, பதவி ஏற்பு விழாவிற்கு விஐபி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு விடுத்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,"எங்களது அரசு நேர்மையான மக்களை தேடுவதே அனைத்து நேர்மையான மக்களுக்கும் தகுந்த பொறுப்பு வழங்கப்படும்.ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்" என அழைப்பு விடுத்தார்.
நேர்மையான அதிகாரிகளுக்கு அழைப்பு
இதனிடையே ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக அனைத்து நேர்மையான அதிகாரிகளும் தம்மை இமெயில், எஸ்.எம். எஸ் மற்றும் கடிதம் மூலம் தொடர்புகொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளார் கெஜ்ரிவால்.
ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை
முன்னதாக தமது கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறபோதிலும், முந்தைய காங்கிரஸ் ஆட்சி மீதான ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
போலீஸ் பாதுகாப்பை நிராகரித்த கெஜ்ரிவால், அரசு பங்களாவை ஏற்கவும் மறுப்பு!
புதுடெல்லி: டெல்லி முதல்வராக பதவியேற்க உள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், காவல்துறை பாதுகாப்பை நிராகரித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. முதல்வராக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மறுதினம் பதவி ஏற்றுக்கொள்கிறார்.
ராம் லீலா மைதானத்தில் மக்கள் முன்னிலையில், முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொள்வதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதிய முதல்வராக பதவியேற்க உள்ள கெஜ்ரிவால், காவல்துறை பாதுகாப்பை நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தனக்கு எந்தவித பாதுகாப்பும் வேண்டாம் என்றும், கடவுள்தான் தமக்கு மிகப்பெரிய பாதுகாப்பு என்றும் கூறியுள்ளார்.
அரசு பங்களாவை ஏற்கவும் மறுப்பு
இதனிடையே முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசு பங்களா ஒதுக்குவதாக டெல்லி தலைமைச் செயலர் டி.எம். சபோலியா ஒதுக்க முன்வந்த நிலையில், அதனையும் ஏற்க கெஜ்ரிவால் மறுத்துள்ளார்.
Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மிக அதிக நாட்கள் முதல்வராக இவர் நீடிப்பார் என்று எனக்கு தோன்றவில்லை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் குரு அன்னா ஹசாரேவை அழைப்பேன் - கெஜ்ரிவால்
டெல்லி முதலமைச்சராக வரும் 28 ஆம் தேதி சனிக்கிழமை பதவியேற்கும் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவிற்கு அனைத்து பொதுமக்களையும் அழைத்துள்ளார். அவர் அன்னா ஹசாரேவிற்கும் தனிப்பட்ட முறையில் மீண்டும் அழைப்பு விடுக்கபோவதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வராக பதவி ஏற்கும் விழாவிற்கு வருகை தருமாறு அன்னாஹசாரேவிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் அழைப்பு விடுக்கபோவதாக தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவால் தலைமையிலான அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அன்னா ஹசாரே மறுத்துள்ளார். தமக்கு அழைப்பிதழ் ஏதும் வரவில்லை என்றும், மேலும் உடல் நலமும் சரியில்லாததால், பதவியேற்பு விழாவில் பங்கேற்க தம்மால் இயலாது என்றும், அதே சமயம் கெஜ்ரிவாலுக்கு தமது வாழ்த்தை தெரிவித்துக்கொள்வதாகவும் ஹசாரே செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
இதனிடையே இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ஹசாரே தமது குருநாதர் என்றும், பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு தாம் தொலைபேசி மூலம் ஹசாரேவிடம் பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஹசாரே, கிரண் பேடி, நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ஆகிய 'டீம் அன்னா' குழுவினருக்கு அரசு தரப்பிலிருந்து அழைப்பிதழ் அனுப்பப்படும் என்றும், கெஜ்ரிவால் கூறினார்.
பதவி ஏற்று 24 மணி நேரத்திற்குள் 700லிட்டர் தண்ணீரை இலவசமாக வழங்கும் திட்டத்தை நடைமுறைபடுத்த இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லியின் இளம்வயது அமைச்சர் ராக்கி பிர்லா
டெல்லியில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பதவியேற்கும் கட்சி பிரமுகர்களில் வெறும் 26 வயது ராக்கி பிர்லா என்ற பெண் பதவியேற்கிறார். இதன்மூலம் இவர் டெல்லியின் இளம் அமைச்சர் என்ற பெருமையை அடைகிறார்.
டெல்லி முதலமைச்சராக ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ளார். அவருடன் மணிஷ் சிசோடியா, சோம்நாத் பாரதி, ராக்கி பிர்லா, சவுரவ் பரத்வாஜ், சத்யேந்திர ஜெயின், கிரிஷ் சோனி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். இதற்காக ராம்லீலா மைதானத்தில் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பதவி ஏற்பு விழாவில் டெல்லி மட்டுமல்லாது ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தொண்டர்களும், ரஷியாவில் இருந்து பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள். டெல்லி மாநில வரலாற்றில் மிக இளம் வயதில் அமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் ராக்கி பிர்லா (வயது 26) முன்னாள் தொலைக்காட்சி நிருபராவார்.
டெல்லியின் இளம் வயது அமைச்சராவது குறித்து ராக்கி கூறுகையில், “நான் அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்ததில்லை. இது ஒரு அரசியல் கட்சி அல்ல. இது ஒரு புரட்சி. ஊழலை வேரறுக்க நாம் அரசிலமைப்பில் சேர வேண்டும் என்பதை நான் உணர்ந்துள்ளேன். எனவே நான் அதில் இணைந்துள்ளேன். எனது பெற்றோர் என்னை ஊக்குவித்ததே என்னுடைய இந்த முயற்சிக்கு காரணம்” என்றார்.
Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொதுமக்கள் அனைவரும் வருக - அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு
டெல்லி முதலமைச்சராக வரும் 28 ஆம் தேதி சனிக்கிழமை பதவியேற்கும் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பதவி ஏற்பு விழாவிற்கு அனைத்து பொதுமக்களையும் அழைத்துள்ளார் மேலும் பதவி ஏற்று 24 மணி நேரத்திற்குள் 700லிட்டர் தண்ணீரை இலவசமாக வழங்கும் திட்டத்தை நடைமுறைபடுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் சனிக்கிழமை 28 ஆம் தேதி டெல்லியில் முதலமைச்சராக பதவியேற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நண்பகல் 12 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
ஆட்சியமைப்பது பற்றிய துணைநிலை ஆளுநரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். டெல்லி தலைமை செயலாளர் கெஜ்ரிவாலை சந்தித்து ஒப்புதல் பற்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்தே பதவியேற்பு குறித்து முடிவாகி உள்ளது.
இதனிடையே காங்கிரஸ் உடன் கூட்டணியோ, உடன்பாடோ இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மக்களுக்கு அளித்த 18 வாக்குறுதிகளை சட்டசபையில் நிறைவேற்ற ஆதரவு கிடைக்கும் என அக்கட்சி நிர்வாகி யோகேந்திர யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆதரவு கிடைக்கவில்லை என்றால் வெளிறே தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைக்க முன்வந்துள்ள ஆம் ஆத்மி கட்சி அரசு 26 ஆம் தேதி பதவியேற்கும என அறிவித்திருந்தது.
இதனையடுத்து அமைச்சர்களும் அறிவிக்கப்பட்டனர். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்கப்படும் என கெஜ்ரிவால் கட்சி அறிவித்ததை அடுத்து டெல்லி அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், எப்போதும் நடப்பது போல முதலமைச்சராக பதவியேற்கும் விழாவில் வெறும் அரசியல் பிரமுகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து பொது மக்களுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், பதவி ஏற்று 24 மணி நேரத்திற்குள் 700லிட்டர் தண்ணீரை இலவசமாக வழங்கும் திட்டத்தை நடைமுறைபடுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதவியேற்க 'மெட்ரோ' ரயிலில் பயணம்: கெஜ்ரிவால் அதிரடி
காஜியாபாத் : டில்லி முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக, அரவிந்த் கெஜ்ரிவால், இன்று, மெட்ரோ ரயிலில் செல்கிறார். அவர் கட்சியை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களும், உடன் செல்கின்றனர்.
6 - அமைச்சர்கள்:
டில்லி மாநிலத்தில், காங்., ஆதரவுடன், 'ஆம் ஆத்மி' கட்சி, புதிய அரசு அமைக்கவுள்ளது. முதல்வராக, அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், அரவிந்த் கெஜ்ரிவால், ராம்லீலா மைதானத்தில், இன்று நடக்கும் விழாவில் பதவியேற்கிறார்.அவர் கட்சியை சேர்ந்த, ஆறு எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால், வழக்கமாக, மாநில முதல்வர்கள் பின்பற்றும், பாரம்பரிய மரபுகளை தகர்த்து வருகிறார்.'பாதுகாப்பு, அரசு பங்களா உள்ளிட்ட வசதிகள் வேண்டாம்' என, ஏற்கனவே, அவர் தெரிவித்துள்ளார். சாலையில், வாகனத்தில் செல்லும்போது, தனக்காக போக்குவரத்தை நிறுத்தக் கூடாது என்றும், அவர், டில்லி போலீஸ் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், காஜியாபாத்தில் உள்ள, அவரின் வீட்டில், நேற்று செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது:பதவியேற்பு விழாவுக்கு, நானும், என் கட்சியினரும், மெட்ரோ ரயிலில் பயணிக்க வுள்ளோம். எங்களுக்காக, ஆடம்பர வசதிகள், பாதுகாப்பு வசதிகள் தேவையில்லை என, ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.
எதிர்பார்ப்பு:
எங்கள் கட்சி சார்பில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்களும், மெட்ரோ ரயிலில் தான், பதவியேற்பு விழாவுக்கு செல்வர். டில்லியில் மேல் மட்டத்திலிருந்து, கீழ் மட்டம் வரை, நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. இதை மாற்ற வேண்டும்.இதனால் தான், ஒவ்வொரு பிரச்னைக்கும், மக்கள், முதல்வரை தேடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. டில்லி மக்களின் எதிர்பார்ப்பு, மிகவும் அதிகமாக உள்ளது. எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டுமானால், நாங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
விசாரணை:
எங்கள் கட்சிக்கு, வெளிநாட்டிலிருந்து நிதி வந்தது தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிடப் போவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. விசாரணை நடத்த வேண்டும் என்ற ஆர்வம், மத்திய அரசுக்கு இருந்தால், உடனடியாக அதைச் செய்யலாம். அதை விடுத்து, அறிவிப்புகளையும், அறிக்கைகளையும் வெளியிடுவது, வேடிக்கையாக உள்ளது.ஆம் ஆத்மி கட்சி அரசு அமையும் நேரத்தில், டில்லியில், வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும், 'காஸ்' விலை உயர்த்தப்பட்டுள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு, இப்போது என்ன அவசரம் வந்தது என, தெரியவில்லை. முதல்வராக பதவியேற்றதும், இதுகுறித்து ஆய்வு செய்வேன். இதேபோல், ஆட்டோ ரிக் ஷா கட்டணங்களும் மாற்றி அமைக்கப்படும்.டில்லி தலைமைச் செயலகத்தில், சில முக்கியமான கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், பல துறைகளில் ஊழல் நடந்துள்ளது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து, விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கெஜ்ரிவாலுக்கு ஹசாரே வாழ்த்து
புதுடில்லி : டில்லியின் புதிய முதல்வராக இன்று பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சமூக ஆர்வலரும், அவரது குருவுமான அன்னா ஹசாரே வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு, ஹசாரே கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் தான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கெஜ்ரிவால் பிரதமராகவும் வருவார்: மக்கள்
புதுடில்லி : டில்லியின் புதிய முதல்வராக இன்று பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரியானா மாநிலம் பிவானி கிராமத்தில் இருந்து வரும் 4வது முதல்வராவார். கெஜ்ரிவால் இன்று டில்லி முதல்வராக பதவியேற்க உள்ளதை பிவானி கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரும் கிராம மக்கள், கெஜ்ரிவால் டில்லியின் முதல்வராக மட்டுமல்ல, நாட்டின் பிரதமராகவும் வருவார் என தெரிவித்துள்ளனர்.
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» 200 யூனிட் வரை மின் கட்டணம் இலவசம்: 201 முதல் 400 வரை 50% மானியம்...டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு
» டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி - அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம்
» டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
» கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி துவக்கம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல்
» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி - அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம்
» டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
» கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி துவக்கம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல்
» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|