புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_lcapகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_voting_barகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_rcap 
19 Posts - 49%
mohamed nizamudeen
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_lcapகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_voting_barகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_rcap 
5 Posts - 13%
heezulia
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_lcapகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_voting_barகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_rcap 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_lcapகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_voting_barகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_lcapகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_voting_barகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_lcapகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_voting_barகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_lcapகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_voting_barகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_lcapகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_voting_barகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_rcap 
141 Posts - 40%
ayyasamy ram
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_lcapகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_voting_barகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_lcapகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_voting_barகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_lcapகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_voting_barகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_lcapகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_voting_barகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_lcapகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_voting_barகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_rcap 
7 Posts - 2%
prajai
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_lcapகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_voting_barகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_lcapகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_voting_barகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_lcapகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_voting_barகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_lcapகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_voting_barகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 3:49 am


70 இடங்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 32, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க டெல்லி துணைநிலை கவர்னர் நஜீப்சிங் அழைத்தார். ஆனால் ஆட்சி அமைக்க பா.ஜ.க. மறுத்து விட்டது.

இதையடுத்து 2–வது அதிக இடங்களை பிடித்த கட்சியான ஆம்ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப்சிங் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கவர்னரை சந்தித்த ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 23–ந் தேதி வரை அவகாசம் கேட்டார். கடந்த 6 நாட்களாக அவர் டெல்லியில் 280 கூட்டங்களை நடத்தி ஆட்சி அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டார். அவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.

பேஸ்புக், டுவிட்டர், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் ஆம்ஆத்மி கட்சி கருத்து கேட்டது. சுமார் 6½ லட்சம் பேர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதில் பெரும்பாலானவர்கள் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றனர். இதை ஏற்று ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்க முடிவு செய்தது. இன்று பகல் 11 மணியளவில் டெல்லி காசியாபாத்தில் மக்கள் முன்னிலையில் நடந்த ஆம்ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடந்தது. அதில் ஆட்சி அமைக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘‘280 மக்கள் சபை கூட்டங்களை நாங்கள் நடத்தினோம். அதில் 257 கூட்டங்களில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க மக்கள் சம்மதித்துள்ளனர்’’ என்றார்.

அவரைத் தொடர்ந்து 11.20 மணிக்கு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை கேட்டதும் திரண்டிருந்த ஆம்ஆத்மி கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிறகு ஆம்ஆத்மி கட்சி மூத்த தலைவர்களுடன் கெஜ்ரிவால் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். மதியம் 12.30 மணியளவில் அவர் கவர்னர் நஜீப்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதோடு ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தன்னை சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுத்தார்.

கெஜ்ரிவாலின் கடிதத்தை கவர்னர் நஜீப்சிங் ஏற்றுக் கொண்டார். ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க அவர் சம்மதம் தெரிவித்தார். அப்போது கெஜ்ரிவால், பதவி ஏற்பு விழாவை ‘‘ஜந்தர் மந்திர்’’ பகுதியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஊழலுக்கு எதிராக ஜந்தர் மந்திர் பகுதியில் நடந்த போராட்டங்கள் தான் கெஜ்ரிவாலை நாடெங்கும் பிரபலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் பதவி ஏற்பு விழாவை ஜந்தர்மந்திரில் நடத்த கெஜ்ரிவால் விரும்புகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் 26–ந்தேதி (வியாழக்கிழமை) பதவி ஏற்பார் என்று தெரிய வந்துள்ளது. அவர் பதவி ஏற்றதும் சட்டசபை கூட்டப்படும். எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பார்கள். அந்த கூட்டத்திலேயே சில அறிவிப்புகளை நிறைவேற்ற கெஜ்ரிவால் திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக லோக்பால் மசோதாவை அவர் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கெஜ்ரிவால் ஆட்சியில் நீடிக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. சட்டசபையில் கெஜ்ரிவால் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்கும். மற்றபடி காங்கிரசிடம் இருந்து ஆம்ஆத்மி நேரடி ஆதரவை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 3:49 am


கெஜ்ரிவால் புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளதன் மூலம் டெல்லியில் கடந்த 2 வாரமாக நீடித்த இழு பறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்கும் கெஜ்ரிவால் உடனடியாக 5 உறுதி மொழிகளை நிறைவேற்ற உள்ளார். அவை வருமாறு:–

1. டெல்லியில் வி.ஐ.பி. கலாச்சாரம் ஒழிக்கப்படும். ஆம்ஆத்மி மந்திரிகள் சிவப்பு விளக்கு பொருத்தப்பட மாட்டாது.

2. டெல்லியில் தண்ணீர், மின்சாரத்துக்கான கட்டணம் குறைக்கப்படும்.

3. டெல்லியில் ஒவ்வொரு வீட்டுக்கும் 700 லிட்டர் சுத்தமான குடிநீர் வழங்கப்படும். இதற்கு அரசுக்கு கூடுதலாக ரூ. 340 கோடி செலவாகும்.

4. அரசின் முக்கிய கொள்கை முடிவுகள் மக்கள் சபை கூட்டங்கள் நடத்தி முடிவு செய்யப்படும். மக்கள் விருப்பத்துக்கு ஏற்பவே முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

5. அடுத்த 15 நாட்களுக்குள் ஊழலை ஒழிக்கும் ஜன் லோக்பால் சட்டம் நிறைவேற்றப்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 4:02 am

26ல் முதல்வராக பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடில்லி: காங்கிரசின் குழப்பமான ஆதரவு, பா.ஜ.,வின் கடுமையான விமர்சனம் ஆகியவற்றுக்கு மத்தியில், டில்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், 'ஆம் ஆத்மி' கட்சி, ஆட்சி அமைவது நேற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம், இரண்டு வாரங்களாக, டில்லியில் காணப்பட்ட, அரசியல் முட்டுக்கட்டை, முடிவுக்கு வந்துள்ளது.

பா.ஜ., 28 இடங்களில் வெற்றி:

மொத்தம், 70 இடங்களைக் கொண்ட, டில்லி சட்டசபைத் தேர்தலில், எந்த கட்சிக்கும், ஆட்சி அமைக்கத் தேவையான, 36 இடங்கள் கிடைக்காததால், அதிக இடங்களில், அதாவது, 32 இடங்களில் வென்ற, பா.ஜ., ஆட்சி அமைக்க முடியாது என, ஒதுங்கிக் கொண்டது.எட்டு இடங்களில் வெற்றி பெற்ற, காங்கிரஸ் கட்சி, 28 இடங்களில் வெற்றி பெற்றிருந்த, ஆம் ஆத்மி கட்சிக்கு, ஆதரவு அளிக்க முன்வந்ததை அடுத்து, அக்கட்சிக்கு, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.ஆனாலும், மக்களிடம் கருத்து கேட்ட பிறகே முடிவெடுப்போம் என, கூறி, டில்லி முழுவதும், ஆம் ஆத்மி கட்சி, தெருமுனை கூட்டங்களை நடத்தியது. 'இ மெயில்' எஸ்.எம்.எஸ்., மூலமும், மக்களிடம் கருத்துகளைக் கேட்டது.மக்கள் கருத்துக் கேட்பை, நேற்றுடன் முடித்துக் கொண்டது. நேற்று காலை, ஆம் ஆத்மி கட்சியின், தலைமை அரசியல் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.காஜியாபாத் அருகே, கோசாம்பியில் உள்ள, ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தில், இந்த கூட்டம், நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது. அரவிந்த் கெஜ்ரிவாலோடு சேர்ந்து, முக்கிய தலைவர்கள், யேகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண், குமார் விஸ்வாஸ், மணிஷ் சிசோடியா, கோபால் ராய் உள்ளிட்டோரும், ஒரு சில எம்.எல்.ஏ.,க்களும், கலந்து கொண்டனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 4:03 am

அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர்:


இரண்டு மணி நேர ஆலோசனைக்கு பிறகு, மணிஷ் சிசோடியா கூறுகையில், ''280 இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில், 257 கூட்டங்களில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்கப்பட்டது. முதல்வர் யார் என்பதில், எந்த குழப்பமும் வேண்டாம். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் தான், நாங்கள் செயல்பட்டோம்.எனவே, அவர் தான் முதல்வராக பொறுப்பேற்பார்,'' என்றார்.

அடுத்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “கட்சி எடுத்த முடிவின்படி, ஆம் ஆத்மி சார்பில், ஆட்சியமைக்க உரிமை கோரப்படும்,” என்றார்.

அதையடுத்து, டில்லி, ராஜ்பவனுக்கு சென்றார். அங்கு, லெப்டினன்ட் கவர்னர், நஜிப் ஜங்கை சந்தித்து, ஒரு சில நிமிடங்களில் வெளியே வந்த போது, அங்கிருந்த நிருபர்களிடம், “ஆட்சியமைக்க, ஆம் ஆத்மி தயார் என்ற தகவலை, கவர்னரிடம் தெரிவித்தேன். இந்த தகவலை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி, அவரது பதிலுக்கு பிறகு, என்னை தொடர்பு கொள்வதாக கவர்னர் கூறியுள்ளார். பதவியேற்பு விழா, ராம்லீலா மைதானத்தில் நடைபெறும். எந்த தேதி என்பதெல்லாம், பிறகு முடிவு செய்யப்படும்,” என்றார்.

பிறகு, 'கான்ஸ்டிடியூஷன் கிளப்'பிற்கு விரைந்த, அரவிந்த் கெஜ்ரிவால், அங்கு, ஆம் ஆத்மி கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.பதவியேற்பு விழா, வரும், 26ம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெறலாம் என்றும், கட்சியின் முக்கியஸ்தர்களான, மணிஷ் சிசோடியா, வினோத்குமார் பின்னி, ராக்கி பிர்லா போன்றோர், அமைச்சரவையில் இடம்பெறலாம் என்றும், டில்லி வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 4:04 am

நிறைவேறுமா தேர்தல் வாக்குறுதிகள்?


*ஊழலை கட்டுப்படுத்த, டில்லியில் ஜன் லோக்பால் சட்டத்தை ஆட்சிக்கு வந்த 15 நாட்களில் இயற்றுவது.

*நேர்மையான அதிகாரிகளுக்கும், ஊழலை வெளிப்படுத்துபவர்களுக்கும் பாதுகாப்பு.

*ஒவ்வொரு பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை, அந்தந்த பகுதியில் உள்ள, 'மொகல்லா சபா'க்கள் தான் முடிவு செய்யும். அந்தப் பணிகள் நிறைவு பெற்ற பிறகு, மொகல்லா சபாக்கள் அனுமதி அளித்தால் தான், பணிகளுக்கான பணம் பட்டுவாடா செய்யப்படும்.

*பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரேஷன் கடைகளை, மொகல்லா சபாக்கள் கண்காணிக்கும்.

*டில்லிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

*மின் கட்டணம், 50 சதவீதம் அளவுக்கு குறைக்கப்படும்.

*டில்லியில் உள்ள, 50 லட்சம் பேருக்கும், தினமும், 700 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்.

*இரண்டு லட்சம் கழிவறைகள் கட்டப்படும்.

*பெண்கள் பாதுகாப்பிற்கு, வார்டு வாரியாக, குடிமக்கள் பாதுகாப்பு படை அமைக்கப்படும்.

*டில்லியின் பொது போக்குவரத்து வசதிகள் தரம் வாய்ந்தவையாக மாற்றப்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 4:13 am

ஆம் ஆத்மி'க்கு லாபமா, நஷ்டமா?


ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களை பெறாத நிலையிலும், ஆட்சி அமைக்க முன்வந்துள்ள, ஆம் ஆத்மி கட்சியின் முடிவு, அந்தக் கட்சிக்கு லாபமா, நஷ்டமா என்ற கேள்வி, அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.மொத்தம், 70 இடங்களைக் கொண்ட, டில்லி சட்டசபையில், 36 இடங்களை பெற்றிருந்தால் தான், ஆட்சி அமைக்க முடியும். 28 இடங்களைப் பெற்றுள்ள, ஆம் ஆத்மி, ஆட்சி அமைத்தால், அந்த ஆட்சி நிலைக்குமா?

இதில் பல அம்சங்கள் விவாதிக்கப்படுகின்றன;

*ஆட்சி அமைக்க இப்போது ஆதரவு அளிக்கும் காங்கிரஸ், ஆதரவை விலக்கிக் கொண்டால், அந்த கட்சியின் சுயரூபத்தை ெவளிக்காட்ட, ஆம் ஆத்மியால் முடியும்.

*அதன் மூலம் எழும், அனுதாப அலையை, அடுத்த தேர்தல்களில் பயன்படுத்தி, வெற்றி பெற முடியும்.

*கொஞ்ச நாள் ஆட்சியில் இருந்தாலும், வித்தியாசமான அணுகு முறை, திட்டங்கள் மூலம், மக்களின் நன்மதிப்பை பெற வாய்ப்பு உள்ளது.

*முக்கிய முடிவுகளை, மக்களே எடுப்பர் என அறிவிக்கப்பட்டு உள்ளதால், மக்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கிறது. இதன் மூலம், ஆட்சி முடிவு, தலைகீழாக மாறினாலும், ஆட்சியை கவிழ்த்த கட்சியை, மக்கள் பார்த்துக் கொள்வர் என்ற கணக்கும் உள்ளது.

கனவு கூட கண்டதில்லை - கெஜ்ரிவால்:

டில்லியின் இளம் முதல்வராகஉள்ள, அரவிந்த் கெஜ்ரிவால்:இது, நான் அடைந்த வெற்றி அல்ல. சாதாரண மக்களின் வெற்றி தான், இது. முதல்வராக ஆக வேண்டுமென்று, நான் ஒருபோதும், கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. இது, ஒரு சவாலான காரியம் தான். இதையும், ஆம் ஆத்மி எதிர்கொள்ளும். மக்களின் கருத்துக்கு ஏற்பவே, நாங்கள் ஒவ்வொன்றையும் செய்வோம்.ஆட்சிக்கு வந்தவுடன் குடிநீர் பிரச்னை, மின்சார பிரச்னை, ஜன் லோக்பால் நிறைவேற்றம், வி.ஐ.பி., கலாசாரத்தை ஒழிப்பது ஆகிய நான்கு விஷயங்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும்.அமைச்சர்கள் என்ற தோரணை, இனி இருக்காது. மக்களுக்கான சேவகர்களாகவே வலம் வருவோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 4:15 am

'ஆம் ஆத்மி' கட்சி விரிவடையுமா?

காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கட்சிகள் நினைத்தால், டில்லியில் எப்படியாகிலும், ஆட்சி அமைத்திருக்க முடியும். அந்த முயற்சியை அந்த இருகட்சி களும் அறவே துவக்காததற்கு காரணம், ஆம் ஆத்மி கட்சியை, டில்லிக்குள்ளேயே முடக்க வேண்டும் என்பது தான்.இன்னும், நான்கைந்து மாதங்களில், லோக்சபா தேர்தல் வரவுள்ளது. அந்தத் தேர்தலிலும், ஆம் ஆத்மி, குட்டையை குழப்ப விடாமல் தடுக்க, அந்த கட்சிக்கு, டில்லியை மட்டும் கொடுத்து, ஆட்சி அமைக்கச் செய்து, அதன் பரவலை, பிற மாநிலங்களில் தடுக்க, இரு முக்கிய கட்சிகளும் திட்டமிட்டது வெற்றியாகியுள்ளது.டில்லி முதல்வரான பிறகு, வேலைப்பளு அதிகரித்த பிறகு, பிற மாநிலங்களில், தேர்தல் பணியாற்ற, அரவிந்த் கெஜ்ரிவாலால் முடியாது என்பது, இரு முக்கிய கட்சிகளின் எண்ணம்.அதன் மூலம், அரியானா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களிலும், லோக்சபா தேர்தலிலும், ஆம் ஆத்மியை தடை செய்து விட முடியும் என்பது, அவர்களின் வியூகம்.

காங்கிரஸ் சார்பில், நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்படுவதாகக் கூறவில்லை. வெளியில் இருந்து தான், காங்கிரஸ் ஆதரவை வழங்கும். தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை, நிறைவேற்றுகின்றனரா என்பதை பொறுத்து தான், எங்களது முடிவுகள் இருக்கும்.
ஷீலா தீட்சித்,முன்னாள் முதல்வர்

நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகத் தான், காங்கிரஸ் முதலில் சொன்னது. இப்போது மாற்றிச் சொல்கின்றனர். பிறரது ஆட்சியைக் கவிழ்ப்பது, காங்கிரசின் பழக்கம். இப்போதும், எவ்வளவு காலம், ஆதரவு அளிக்கின்றனர் என, மக்கள் பார்க்கலாம்.
பிரசாந்த் பூஷண்,ஆம் ஆத்மி

'ஊழல் கட்சி' என, காங்கிரசை, இத்தனை நாளும் விமர்சனம் செய்து விட்டு, இப்போது, அந்த கட்சி ஆதரவுடன், ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கிறது.இதன் மூலம், டில்லி மக்களுக்கு, மிகப் பெரிய துரோகத்தை, 'ஆம் ஆத்மி' செய்துள்ளது.
ஹர்ஷவர்த்தன்,பா.ஜ.,

அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி மாநில முதல்வராகப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவருக்கு என் வாழ்த்துகள். மக்களுக்கு எது நல்லதோ, அதை, அவர் செய்ய வேண்டும். அவருக்கு, என் ஆசிகள் எப்போதும் உண்டு.
அன்னா ஹசாரே,சமூக ஆர்வலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 4:16 am

ஓராண்டிற்குள் ஆட்சிக்கட்டில் கெஜ்ரிவால் சாதனை:

கட்சி ஆரம்பித்த ஒரு ஆண்டுக்குள், டில்லியின் இளம் முதல்வர் என்ற பெருமையுடன் ஆம் ஆத்மி கட்சி தலைவர்

அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வராக பதவியேற்கிறார்.2012 அக்., 2: சமூக சேவகர் அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இருந்து விலகிய அரவிந்த கெஜ்ரிவால், காந்தி ஜெயந்தி தினத்தன்று, அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவிப்பு.

நவ., 26: "ஆம் ஆத்மி' (ஏழை மக்கள்) என்ற கட்சியை தொடங்கினார். கட்சி நிதியாக முன்னாள் சட்ட அமைச்சரும், அன்னா குழுவில் இருந்தவருமான சாந்தி பூஷன், 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.

2013 மார்ச் 22: தேர்தல் ஆணையத்தில், முறைப்படி கட்சி பதிவு செய்யப்பட்டது.

மார்ச் 23: மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம். "யாரும் மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணத்தை செலுத்தாதீர்கள்' என மக்களை வலியுறுத்தினார்.

ஏப்., 6: 15 நாள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார். 3 லட்சம் பேர் இதற்கு ஆதரவு என தகவல்.

ஏப்., 15: டில்லி சட்டசபை தேர்தலில் "ஆம் ஆத்மி' போட்டியிடும் என அறிவிப்பு.

ஜூலை: டில்லி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். ஆளும் காங்., அரசின் ஊழலை மக்களிடம் எடுத்து வைத்தார்.

ஆக., 3: ஆம் ஆத்மி கட்சி தேர்வு செய்த "துடைப்பம்' சின்னத்துக்கு, தேர்தல் கமிஷன் ஒப்புதல்.

நவ., 20: ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை வெளியீடு. ஆட்சிக்கு வந்தால், 15 நாட்களில் "ஜன் லோக்பால்' கொண்டு வரப்படும் என உறுதி.

டிச., 8: டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 70 இடங்களில் 28 இடங்களில் வென்று பா.ஜ.,வுக்கு (32), அடுத்ததாக 2வது பெரிய கட்சி என்ற சாதனை படைத்தது.

டிச 12: ஆட்சியமைக்க வருமாறு பா.ஜ., வுக்கு, டில்லி கவர்னர் விடுத்த அழைப்பை, மெஜாரிட்டி இல்லாததால் பா.ஜ., ஏற்க மறுப்பு.

டிச., 13: 8 இடங்களில் வென்ற காங்., ஆம் ஆத்மி கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக, கவர்னரிடம் மனு. ஆம் ஆத்மி கட்சிக்கு கவர்னர் அழைப்பு.

டிச., 14: ஆட்சியமைக்க வேண்டுமெனில், 18 நிபந்தனைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு காங்., மற்றும் பா.ஜ., கட்சிகளுக்கு கெஜ்ரிவால் கடிதம்.

டிச., 18: காங்., ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாமா என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்க, ஆம் ஆத்மி முடிவு.

டிச., 21: ஆம் ஆத்மிக்கான நிபந்தனையற்ற ஆதரவு என்பது, அவர்களின் செயல்பாடு பொறுத்தது. செயல்பாடு சரியில்லையெனில் ஆதரவு திரும்ப பெறப்படும் என காங்., விளக்கம்.

டிச., 23: மக்களிடம் நடத்திய கருத்து கேட்பு கூட்டங்களில், ஆதரவு பெருகியதால் ஆட்சியமைக்க விரும்புவதாக அறிவிப்பு. கவர்னரை சந்தித்த கெஜ்ரிவால், டிச., 26ல் ராம் லீலா மைதானத்தில் பதவியேற்க விரும்புவதாக அறிவிப்பு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 4:19 am

அதிகாரி முதல் முதல்வர் வரை

அரியானாவில் 1968 ஆக., 16ல், அரவிந்த கெஜ்ரிவால் பிறந்தார். இவரது பெற்றோர் கோபிந்த் ராம் கெஜ்ரிவால் - கீதா தேவி.

இவரது தந்தை எலக்ட்ரிகல் இன்ஜினியர். அதனால் கெஜ்ரிவாலின் இருப்பிடம் மாறிக்கொண்டே இருந்தது. பள்ளி படிப்பை அரியானாவின் சோனாபட் மற்றும் உ.பி.யின் காசியாபாத் ஆகிய இடங்களில் முடித்தார்.

காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற கெஜ்ரிவால், "டாட ஸ்டீல்' நிறுவனத்தில் சேர்ந்தார். பின் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்வதற்காக 1992ல் அந்த வேலையை விட்டு விலகினார்.

கோல்கட்டாவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷனில் தங்கி தேர்வுக்கு தயார் செய்தார். 1995ல் "இந்தியன் ரெவன்யூ சர்வீஸ்' (ஐ.ஆர்.எஸ்.,) தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், வருமான வரித்துறையில் சேர்ந்தார். 2000ம் ஆண்டு உயர்கல்விக்காக 2 ஆண்டு விடுமுறை எடுத்தார். பின் 2003ல் மீண்டும் பணியில் சேர்ந்து, 2006ல் "வருமான வரி இணை கமிஷனர்' என்ற பொறுப்போடு, வேலையில் இருந்து விலகினார்.

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், அரசு நிறுவனங்களில் நடந்த முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.

மக்கள் விரும்பினால் எம்.எல்.ஏ., /எம்.பி.,க்களை திரும்ப பெறும் வசதியை தேர்தல் கமிஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினார்.

2011ல் அன்னா ஹசாரே தொடங்கிய "ஊழலுக்கு எதிரான இயக்கத்தில்' சேர்ந்து, ஜன் லோக்பால் மசோதா கொண்டு வர, போராட்டம் நடத்தினார்.

சுனிதா என்பவரை திருமணம் செய்த இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ஹசாரே குழுவில் இருந்து விலகி, 2012 நவ., 26ல் "ஆம் ஆத்மி' என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

டிச., 4ல் நடந்த டில்லி தேர்தலில் இவரது கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது.

15 ஆண்டுகள் டில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை, எதிர்த்து போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனார்.

"ஸ்வராஜ்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். "ராமன் மகசாசே விருது' உள்ளிட்ட சில விருதுகளை பெற்றுள்ளார்.

டிச., 26ல் டில்லி முதல்வராக பதவியேற்கிறார்.

தினமலர்

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Tue Dec 24, 2013 6:54 am

ஈகரை நண்பர்கள் அணைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

அர்ஜுன் திரைப்படத்தில் ஒருநாள் முதல்வன் ஆக நடித்தார். நிஜ வாழ்வில் தற்பொழுது ஒரு வருடத்தில் கெஜ்ரிவால் முதல்வராக இருக்கிறார்.

எனவே, நாம் கெஜ்ரிவால் அவர்களை ஒருவருடத்தில் முதல்வர் என்று சொல்லலாமே

நா.செ.மணி

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக