ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள்

2 posters

Go down

தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Empty தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள்

Post by சிவா Tue Dec 24, 2013 3:29 am

தெற்கு சூடானில் ஐ.நா. முகாம் மீது அரசு எதிர்ப்புப் படையினர் 2,000 பேர் அண்மையில் தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு பணியில் இருந்த ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த 43 இந்திய வீரர்கள் தீரத்துடன் போரிட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக ஐ.நா. சபை அதிகாரி புகழாரம் சூட்டியுள்ளார்.

தெற்கு சூடானில் அதிபர் சல்வா கிர்க், முன்னாள் துணை அதிபர் ரிக் மசார் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி உள்நாட்டுப் போராக வெடித்துள்ளது.

அதிபர் சல்வா கிர்க், திங்கா என்ற பெரும்பான்மை பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். ரிக் மசார், நியூர் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். கடந்த 15-ம் தேதி முதல் இரு பிரிவினரும் பயங்கரமாக மோதி வருகின்றனர். தெற்கு சூடான் ராணுவத்திலேயே இனரீதியாக பிளவு ஏற்பட்டுள்ளது. நியூர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தளபதி ஜெனரல் பீட்டர் கேடட் தலைமையில் அரசு எதிர்ப்புப் படையினர் அணிதிரண்டு போரிட்டு வருகின்றனர். முக்கிய எண்ணெய் வயல்கள், சில நகரங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் கடந்த 19-ம் தேதி தெற்கு சூடானின் அகோபா நகரில் உள்ள ஐ.நா. முகாமை சுமார் 2000-க்கும் மேற்பட்ட அரசு எதிர்ப்புப் படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அந்த முகாமில் திங்கா பழங்குடி இனத்தைச் சேர்ந்த அகதிகள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

திடீரென முகாமை சுற்றி வளைத்த எதிர்ப்புப் படையினர் நாலாபுறமும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அப்போது ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த 43 இந்திய வீரர்கள் மட்டுமே முகாமில் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.

சுமார் 2,000 பேர் முகாமை சுற்றி வளைத்தபோதும் அஞ்சாத 43 இந்திய வீரர்களும் நெஞ்சுறுதியுடன் இறுதிவரை போரிட்டனர். இதில் தர்மேஷ் சங்வான், குமார் பால் சிங் ஆகியோர் உயிரிழந்தனர். மண்டல் சாபுல் என்பவர் நெஞ்சில் குண்டுபாய்ந்து படுகாயமடைந்தார். 11 அகதிகள் உயிரிழந்தனர். சண்டை நடந்தபோது முகாமில் நூற்றுக்கணக்கான அகதிகளும் ஐ.நா. சபை ஊழியர்களும் இருந்தனர். அவர்களைப் பாதுகாக்க இந்திய வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து போரிட்டனர். இதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

உயிரிழந்த ஐ.நா. அமைதிப் படை வீரர்களுக்காக தெற்கு சூடானின் ஜூபா நகரில் சனிக்கிழமை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய ஐ.நா. தூதர் ஹிட்லி ஜான்சன், இந்திய வீரர்களின் தியாகத்தை வெகுவாகப் புகழ்ந்தார். இந்திய வீரர்கள் தீரத்துடன் போரிடாவிட்டால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.

தி இந்து
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Empty Re: தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள்

Post by சிவா Tue Dec 24, 2013 3:30 am

தெற்கு சூடான் கலவரம்: ஓ.என்.ஜி.சி ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றம்

தெற்கு சூடானில், கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் இருக்கும் எண்ணெய் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்கள், பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். சூடானில் வளர்ந்து பெருகி வரும் வன்முறையால் அந்நிறுவனமும் மூட்டப்பட்டுள்ளது.

நைல் எண்ணெய் திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 11 ஊழியர்களும் மீட்கப்பட்டனர் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு குழுக்களாக இந்த வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அனைத்து ஊழியர்களும் பத்திரமாக இந்தியா திரும்பினர்.

அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர், அங்கிருந்த இந்திய நிர்வாகிகள், கடைசி வேலையாக, எண்ணெய் வயல்களை மூடினர்.

இந்தியாவின் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் வெளிநாட்டு பிரிவான ஓ.என்.ஜி.சி விதேஷ் நிறுவத்தில், இந்தியாவிலிருந்து 11 ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். அங்கு நைல் எண்ணெய் திட்டத்திலும், 5ஏ பிளாக்கிலும் இந்திய ஊழியர்கள் வேலை செய்து வந்தனர்.

சூடானில் நடந்து வரும் கலவரத்தில், பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் துணை அதிபர் ரெய்க் மேகர் ஆதரவு போராட்டக்காரர்கள், எண்ணெய் வயல்கள் அதிகம் இருக்கும் பகுதியைக் கைப்பற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்தே இந்திய ஊழியர்களின் வெளியேற்றம் திட்டமிடப்பட்டது.

ஓ.வி.எல் நிறுவனம், நைல் எண்ணெய் திட்டத்தில் 25 சதவித பங்குகளைக் கொண்டுள்ளளது. ஒரு நாளைக்கு 40,000 எண்ணெய் பேரல்கள் இத்திட்டத்தில் தயாரிக்கப்படுகிறது. 5000 பேரல்கள் தயாரிக்கப்படும் பிளாக் 5 ஏ-விலும் ஓ.வி.எல் நிறுவனத்திற்கு 24.125 சதவித பங்கு உள்ளது. இத்திட்டத்தில் பங்கு கொண்டுள்ள சீனாவின் சி.என்.பி.சி மற்றும் மலேசியாவின் பெட்ரோனஸ் நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிசம்பர் 15-ஆம் தேதி தெற்கு சூடானில் ஆரம்பித்த கலவரத்தால் 500 பேர் பலியாகியுள்ளனர். இதில் ஐ.நாவின் அமைத்திப்படையில் உள்ள இந்திய வீரர்களும் அடக்கம். போராட்டக்காரர்கள் ஓ.வி.எல்-இன் எண்ணெய் வயல்களை இன்னும் கைப்பற்றவில்லையென்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவை மூடப்பட்டுவிட்டன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Empty Re: தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள்

Post by SajeevJino Tue Dec 24, 2013 8:21 am

Rest In Peace my fellow Soldiers


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Empty Re: தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தெற்கு சூடானில் தீவிரவாத தாக்குதலில் 200 பேர் பலி
» மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை
» இந்திய ராணுவ தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
» தெற்கு கரோலினா ஆளுநர் பதவிக்கான தேர்தல் : இந்திய வம்சாவளிப் பெண் மீண்டும் வெற்றி
» காங்கோவில் இந்திய வீரர்கள் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum