புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_c10நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_m10நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_c10நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_m10நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_c10நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_m10நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_c10நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_m10நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_c10நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_m10நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_c10நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_m10நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_c10நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_m10நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_c10நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_m10நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!!


   
   
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Sun Dec 22, 2013 10:38 pm


நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! PIO0ogT9RWeiDIg34quP+America


ஒருநிமிடம் இதையும் படியுங்கள் நண்பர்களே!!! நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!!

அதிகம் பகிர்ந்து நம் கண்முன் நடக்கும் அழிவை மற்றவருக்கும் காட்டுங்கள் சொந்தங்களே!!

►கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்பரேஷன் லிமிட்டட் என்ற அமெரிக்க நிறுவனம் நம் தமிழ்நாட்டில் மீதேன் வாயு எடுக்க மத்திய அரசிடமும்,மாநில அரசிடமும் அனுமதி பெற்றுள்ளது..

►மீதேன் வாயு எடுக்கப்படும் விதமும் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானவை.


• முதற்கட்டமாக நிலத்தடியிலுள்ள 1500 அடி ஆழத்திலுள்ள நீரை வெளியேற்றி விடுவார்கள்...
• அதன் காரணமாக நிலத்தடியில் நீரை வெளிஎர்ரியப் பின்னர் அவ்விடத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தின் காரணமாக அங்கு கடல்நீர் உட்புகுந்துவிடும்.
• நிலத்தடி நீர் உப்பானால் அங்கு விவசாயம் செய்ய முடியாது.
• குடிப்பதற்கு கூட நீர் இல்லாமல் போகும்.
• பயிர்களும் மரங்களும் கருகி போகும்..


►மீதேன் வாயுவை எடுக்க உங்களிடம் அமெரிக்க நிறுவனமான GELCL உங்களிடம் நிலத்தை நாப்பது வருட குத்தகைக்கு கேட்கும்.


►நாப்பது வருடத்திற்கான குத்தகை பணத்தை ஒரே காசோலையில் கொடுத்து விடுவார்கள்.


►நம் நிலம்தான் நாப்பது வருடத்தில் நம் கையிக்கு கிடைத்து விடுமே, அத்துடன் விவசாயம் செய்தாலும் நாப்பது வருடத்தில் இவ்வளவு சம்பாதிக்க முடியாதே என்று ஏமாந்து நீங்களும் நிலத்தை கொடுத்து விடுவீர்கள்.


►நாற்பது வருடத்தில் உங்கள் நிலம் உங்கள் கையிலும் கிடைத்துவிடும் ஆனால் சக்கையாகி, எதற்கும் உதவாத பாலைவன நிலமாகத்தான் அது இருக்கும்.


►ஏற்கனவே ஆற்று நீரும், குளத்து நீரும் இல்லாம போன நிலையில், நிலத்தடி நீரும் இல்லாமல் போய்விடும்


►எனவே இவர்கள் உங்களிடம் நிலத்தை குத்தகைக்கு கேட்டால் தயவு செய்து கொடுத்துவிடாதீர்கள்.


►நம் எதிர்கால சந்ததியினரை வஞ்சிக்காதீர்..


►நம் எதிர சந்ததியினருக்கு நம் பசுமையான தமிழ்நாட்டை விட்டுசெல்வோம் பாலைவனத்தை அல்ல..


►ரத்தம் சிந்தி ஈன்றெடுத்த சுதந்திரத்தை மீண்டும் அயல்நாட்டு முதலாளியிடம் அடகு வைத்து விடாதீர்..


►மயிலாடுதுறை நண்பர்களே இந்த திட்டம் முதல் கட்டமாக மயிலாடுதுறை சுற்றுப்பகுதியான திருவிடைமருதூர், நரசிங்கன்பேட்டை உட்பட்ட சில பகுதிகளில் எடுக்கப்பட உள்ளது. நம் நிலம் மலடாவதற்கு நீங்களே துணைபோகாதீர்கள் நண்பர்களே..

நா.செ.மணி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Dec 23, 2013 10:17 am

இத்தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதே மக்கள் கேட்க வேண்டிய கேள்வி..

நிலத்தடியில் இருக்கும் வாயு எடுத்தால் கடல் நீர் புகுந்து விடும் என்பது நம்புவதற்கு மிக கடினமாக உள்ளது...

அறிவியல் ரீதியில் இதற்கு விளக்கம் உண்டா ?? இது சாத்தியமானால் நிலத்தடியில் இருந்து எண்ணை எடுக்கும் பொழுதும் கடல் நீர் நுழைந்து விடுமே....ஏன் விவசாயம் செய்வதற்கு நீர் எடுத்தாலும் கடல் நீர் நுழைய வேண்டுமே ?? இது போல் எத்தனை இடத்தில் நடந்துள்ளது...

பொதுவாக சமவெளிப் பகுதிகளில் வாட்டர் டேபிள் 10-20 அடி முதலே தொடங்கும்.. 1500அடி ஆழத்தில் கடல் நீர் புகுவதாக வைத்துக் கொண்டாலும், அதன் அடர்த்தியின் காரணமாக அது மேலே எழும்பி நிலத்தின் தன்மையை பாதிக்குமா ???

அடுத்த கூடங்குளம் இது தான்.. இப்பிரச்சனை பெரிசாக்கி அந்த அமெரிக்க நிறுவனத்திடம் காசு வாங்கும் திட்டமே இது....




சதாசிவம்
நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Mon Dec 23, 2013 10:27 pm

ஐயா!

எங்கள் ஊர் வெட்டாராங்கரையில் உள்ளது. நாங்கள் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் பொழுது, 1962 - 1996 வரை, மழைக்காலங்களில் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் செல்லும். தற்பொழுது கர்நாடகத்தின் பிடிவாதத்தால் மிக குறிகிய நாட்களே தண்ணீர் வருகிறது.

இதற்கிடையில் தண்ணீர் இல்லாத காலங்களில் மணல் கொள்ளையர்கள் ஆற்றின் அடி பாதாளத்திற்கு மணலை சுரண்டி அள்ளிவிட்டனர். சாதாரண ஆழத்தைவிட மிக கீழே வரை மணலை அள்ளிவிட்டபடியால், தற்பொழுது எங்கள் வீட்டு கிணறுகளில் தண்ணீர் வரண்டுவிட்டது. நாங்கள் பஞ்சாயத்து போர்டு துணைகொண்டு ஆழ்குழாய் பம்ப் போட்டு நீர்த் தேக்க தொட்டியிலிருந்து வரும் தண்ணீரை நம்பியிருக்கிறோம்.

1. சாதாரண ஆற்றின் ஆழத்தை அதிகப்படுத்தியதன் விளைவே இதுவென்றால் 1500 அடி ஆழத்திலுள்ள நீரை வெளியேற்றி விடுவார்களானால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை நினைத்துப்பார்த்தால் மிகவும் பயமாக உள்ளது. நிச்சயம் இதனை அனைவராலும் நன்கு புரிந்துகொள்ளமுடிமே.

2. மேற்கூறியவாறு தண்ணீரை உறிஞ்சும் பொழுது சுற்றியுள்ள கிணறுகள், குட்டைகள், ஏரிகள் மற்றும் இதர நீர்த்தேக்கங்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை, "எரி வாயு இருக்கிறது என்று பரிசோதனை செய்யப்பட்ட ஊர்க்காரனான" என்னை போன்றோர்கள் எண்ணிப்பார்த்து கலங்கிப் போயிருக்கிறோம் என்பதே உண்மை.

3. கடந்த முப்பத்து ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள நீர் மட்ட அளவின் விளைவுகளை நேரில் பார்க்கும் எங்களால், அடுத்த நாற்பதாண்டுகள் கழிந்தால் நிலைமை எப்படி இருக்கும் என்பதை உணரமுடிகிறது.

4. இதற்கு அறிவியல் ரீதியிலான் விளக்கம் தேவையில்லை. நாங்கள் அனுபவித்து வருகின்ற 35 ஆண்டுகால சிரமமே சாட்சியாகும்.

"கை புண்ணிற்கு கண்ணாடி தேவையில்லையே."

6. ஆற்றின் ஆழத்தை அதிகப்படுத்தியதன் விளைவாக கிணறுகள் வரண்டு போய்விட்டதை பார்க்கும் பொழுது, 1500 அடி ஆழத்திலிருந்து எல்லாவற்றையும் (உறிஞ்ச்சிக்கொண்டிருக்கும் பொழுதே) உறிஞ்சிய பிறகு எங்கள் ஊரில் மக்கள் எப்படி வாழமுடியும்.

7. எனவே தயவு செய்து அனைவரும், அறிவியல் ரீதியான ஆய்வுகளுக்கு காத்திராமல் தற்பொழுது எங்களின் அனுபவ சிரமங்களை புரிந்துகொண்டு பிற்காலத்தில் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உதவிபுரியுமாறு பணிவுடனும் வேதனையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.

8. முன்னோர்கள் பாதுகாத்து வந்த வயல்களிலிருந்து நல்ல அரிசி கிடைக்கப்பெற்றும், வைத்து வளர்த்த மரங்களிலிருந்து நாம் பழங்கள் சாபிட்டும், ஆரோக்கியமாக இருக்கிறோம். இதுபோல் நாமும் நம்முடைய வயல்வெளிகளை காப்பற்றி (குறைந்த பட்சம் பாழ்படுத்தாமல்) நமது வாரிசுகளுக்கு பாதுகாப்பு அளிப்போமாக.

அன்புடன்,

நா.செ.மணி.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Dec 24, 2013 10:24 am

உங்களின் வருத்தம் கவனிக்கதக்கதே,, ஆயினும் ஒரு சில விஷயங்களை தாங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
 
மணல் அள்ளும் பொழுதும், ஆற்றின் ஆழத்தை அதிகப்படுத்தும் பொழுதும் கவலை கொள்ளாத மக்கள்,, இதற்கு மட்டும் கவலைப்படுவது வருத்தம் அளிக்கிறது.... இன்றைய நவீன யுகத்தில் உங்கள் ஊர் மட்டுமில்லை, பல ஊர்களில் வயல்வெளிகள், நீர் பிடிப்பு ஏரிகள் காணாமல் போய்விட்டது.  சென்னையைச் சுற்றி இருந்த வயல்வெளிகள் காணவில்லை...

மணல் அள்ளுபவரை, ரியல் எஸ்டேட் செய்து வயல்வெளிகளை நீர் பிடிப்பு ஏரிகளை பிடுங்குபவரை ஓட ஓட விரட்டமால், அமெரிக்க நிறுவனத்தை மட்டும் விரட்டுவதால் இங்கு ஒரு பயனும் ஏற்படாது.. 
 
எந்த ஒரு வளர்ச்சி திட்டம் வரும் பொழுதும் இது போன்ற இடைஞ்சல்கள் வரும்.. இன்றைய நீர் வழங்கும் அணைகள் கட்டப்படும் பொழுது ஒரு சில ஊர்கள் காணாமல் போய்விட்டது... ஆனால் பல ஊர்கள் பிழைத்தன.. நெய்வேலியில் இருப்பவர் நாங்கள் விவசாயம் செய்ய விரும்புகிறோம், நீங்கள் சுரங்கம் தோண்ட வேண்டாம் என்று கூறியதை அரசு கேட்டு இருந்தால் இன்றைக்கு நமக்கு நெய்வேலி மின் நிலையம் கிடைத்திருக்காது.. நெய்வேலி சரித்திரத்தை இணையத்தில் தெரிந்து கொள்ளுங்கள். அங்கும் இது போல் நிலத்தடி நீர் வெளியேற்றப்பட்டு சுரங்கங்கள் தோன்றின..நாட்டின் வளர்ச்சியில் இச்சுரங்கம் மிகப்பெரிய பங்களிக்கிறது.  அசாமிலும் இது போன்ற நிலத்தில் இருந்து இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகள் பல காலங்களாக நடைபெறுகிறது.. அப்பகுதி பாலைவனமாக மாறிவிடவில்லை.. இதை மக்கள் உணர வேண்டும்.
 
அது போல் இந்த கண்டுபிடிப்பும் தேவையான இயற்கை வாயுவை நமக்களித்து நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு சில சதவீதமாவது பங்களிக்கும். நிலத்தடி நீரை தக்க வைக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்து, அதற்கான வழியை செய்ய வேண்டும்.  அதை விடுத்து இது போன்ற வளர்ச்சிப் பணிகளை தடுப்பதால் என்ன பயன்???



சதாசிவம்
நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Dec 24, 2013 2:32 pm

சதாசிவம் wrote:

அடுத்த கூடங்குளம் இது தான்.. இப்பிரச்சனை பெரிசாக்கி அந்த அமெரிக்க நிறுவனத்திடம் காசு வாங்கும் திட்டமே இது....
மேற்கோள் செய்த பதிவு: 1040369

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு என்பது வெறும் காசுக்காக முன்னெடுக்கப்படும் போராட்டம் அன்று. இதன் பின் இருக்கும் பயங்கரங்கள் ஏராளம்.

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Tue Dec 24, 2013 10:19 pm

தங்களுடைய கருத்திலும் நியாயம் இருக்கிறது. யோசிக்கவைகிறது.

விவசாயத்தையே நம்பிக்கொண்டு இருக்கும் மக்களின் எதிர்கால வாழ்க்கையை பற்றி கவலை கொண்டுள்ள நிலையில்,

இந்த எதிர்ப்பை கூடங்குளத்துடன் ஒப்பிட்டும்,

//*இப்பிரச்சனை பெரிசாக்கி அந்த அமெரிக்க நிறுவனத்திடம் காசு வாங்கும் திட்டமே இது.*//

என அபிப்பிராயப்படுவதும், எங்கள் கிராமம் போன்ற இதர மக்களின் வாழ்வாதாரத்தை கொச்சைப்படுத்துவது போன்றும், வெந்தபுண்ணில் வேல்கொண்டு குத்துவதுபோல் உள்ளது.

நா.செ.மணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 25, 2013 11:00 am

N.S.Mani wrote:தங்களுடைய கருத்திலும் நியாயம் இருக்கிறது. யோசிக்கவைகிறது.

விவசாயத்தையே நம்பிக்கொண்டு இருக்கும் மக்களின் எதிர்கால வாழ்க்கையை பற்றி கவலை கொண்டுள்ள நிலையில்,

இந்த எதிர்ப்பை கூடங்குளத்துடன் ஒப்பிட்டும்,

//*இப்பிரச்சனை பெரிசாக்கி அந்த அமெரிக்க நிறுவனத்திடம் காசு வாங்கும் திட்டமே இது.*//

என அபிப்பிராயப்படுவதும், எங்கள் கிராமம் போன்ற இதர மக்களின் வாழ்வாதாரத்தை கொச்சைப்படுத்துவது போன்றும், வெந்தபுண்ணில் வேல்கொண்டு குத்துவதுபோல் உள்ளது.

நா.செ.மணி
மேற்கோள் செய்த பதிவு: 1040861


என்ன பண்ணுவது ஐயா , இது தான் நம் தலையெழுத்து.

உங்கள் கிராமத்து பிரச்சினைக்கு உங்களின் பக்கத்து ஊர் மக்கள் கூட உதவ வரமாட்டார்கள் இந்த நிலையில் ஒட்டு மொத்த தமிழக மக்களும் எப்படி ஆதரவு கொடுப்பார்கள் சோகம்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Dec 26, 2013 3:40 pm

N.S.Mani wrote:தங்களுடைய கருத்திலும் நியாயம் இருக்கிறது. யோசிக்கவைகிறது.

விவசாயத்தையே நம்பிக்கொண்டு இருக்கும் மக்களின் எதிர்கால வாழ்க்கையை பற்றி கவலை கொண்டுள்ள நிலையில்,

இந்த எதிர்ப்பை கூடங்குளத்துடன் ஒப்பிட்டும்,

//*இப்பிரச்சனை பெரிசாக்கி அந்த அமெரிக்க நிறுவனத்திடம் காசு வாங்கும் திட்டமே இது.*//

என அபிப்பிராயப்படுவதும், எங்கள் கிராமம் போன்ற இதர மக்களின் வாழ்வாதாரத்தை  கொச்சைப்படுத்துவது போன்றும், வெந்தபுண்ணில் வேல்கொண்டு குத்துவதுபோல் உள்ளது.





நா.செ.மணி

தங்கள் பதிவை கொச்சைப்படுத்துவது என் நோக்கமல்ல,,,தவறுக்கு வருந்துகிறேன்..


இணையத்தில் பல இடங்களில் இது போன்ற பதிவுகள் உலா வருகிறது. தண்ணீரில் மோட்டார் சைக்கிள் ஓட முடியும் என்று சொல்லுபவனை ஆஹா ஓஹோ என்று புகழ்வதும்,, அறிவியல், மருத்துவ ஆதாரங்கள் இல்லாமல் வெளிவரும் கட்டுரைகளை தங்கள் வசத்துக்கு தகுந்து மாற்றி மாற்றி எழுதுவதும், பிறரிடம் பரப்புவதும் பெருகி வருகிறது..பத்து நாட்களில் சக்கரை வியாதி பறந்து விடும், மூன்று நாட்களில் கிட்னி கல் காணாமல் போகும் என்பது போல்.

இன்றைக்கு இருக்கும் இணையக் குடிமகனுக்கு இருக்க வேண்டிய முக்கிய பொறுப்பு, நினைத்தை, படித்ததை, பார்த்ததை ஷேர் செய்யக் கூடாது. சற்று யோசித்து இது உண்மையென்று பட்டால் மட்டுமே ஷேர் செய்ய வேண்டும்... உலக நாடுகளில் முகனூலை நகைச்சுவை, வேடிக்கை, பொழுபோக்கு, சொந்த செயல்கள் குறித்த பரிமாற்றம் என்ற விஷயத்துக்கு பயன்படுத்துகிறார்கள்..

ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை....எது கிடைத்தாலும் ஷேர் ....செய்வது அல்லது லைக் செய்வது....கொஞ்சமும் யோசிக்காமல்...

இங்கு வெளியிடப்பட்ட கட்டுரை பல மாதங்களுக்கு முன்னாள் முகனூலில் படித்தேன். அப்பொழுது எழுத நினைத்தை இப்பொழுது எழுதினேன்.

நீர் ஆதாரம் மற்றுமில்லை, நாம் பல வளங்களை இழப்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று நமது அறியாமையும் கூட. Petroleum துறை சார்ந்த துறையில் நான் பணி புரிவதால் இது உண்மையா என்ற இணையத்தில் அலசியே பிறகு தான் கருத்திட்டேன்...ஆதார பூர்வமாக இச்செயல் தவறு என்றால் அதை வழிமொழிவேன்.



சதாசிவம்
நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக