Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)
+4
ayyasamy ram
Muthumohamed
M.M.SENTHIL
சிவா
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)
First topic message reminder :
இது ஜாலியான கதை கொண்ட படம் என்பதால், நாமும் சும்மா ஜாலியாகவே ஒரு விமர்சனம் செய்வோம்.
காரமான கதையில், காமெடி கிஸ்மிஸ்களை வழி நெடுக தூவி, நடுவே லெக் பீஸ் (கவர்ச்சி) ஒன்றையும் வைத்து, கையில் கிடைத்த தன் அப்பா காலத்து பழைய மசாலா சரக்கையெல்லாம் சேர்த்து இனிப்பும், புளிப்பும், கசப்புமாக ‘பிரியாணி’ சமைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
ஆனால் சாப்பிட்டு முடித்தவுடன் தான் தெரிகிறது. அதில் பெரிய ‘மட்டன் பீஸ்’ ஒன்று கிடக்கிறது என்று.
யார் அந்த ‘மட்டன் பீஸ்’ என்று யோசிக்கிறீர்களா? அட நம்ம கார்த்தி தான்.
தொடர்ந்து தோல்விப் படங்களாக கொடுத்து வந்த கார்த்தியின் நடிப்பு பசியை ‘பிரியாணி’ ஆவது தீர்க்கும் என்று நினைத்தால், இந்த படத்திலும் குடியும், பெண்களிடம் ஜொள் விடுவதும், அசட்டுத்தனமாக சிரிப்பதும் என்று மீண்டும் பலிகடாவாக்கப்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.
படம் தொடங்கியது முதல் இடைவேளை வரை பிரேம்ஜி தான் நமக்கு ‘பிளாஷ்பேக்’ கதை சொல்கிறார்.
இடைவேளைக்கு பிறகு, “போலீஸ் துரத்தும், ஓடிகிட்டே இருப்பாங்க… இவங்களே குற்றவாளியை தேடி கண்டுபிடிப்பாங்க. கடைசில போலீஸ் வரும்” என்று பக்கத்து சீட்டில் உள்ளவர் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் (பிரேம்ஜி குரல் – “என்ன கொடுமை சார் இது?”)
சமீபத்தில் வெளிவந்த படங்களில், ‘டிவிஸ்ட்’ என்ற பெயரில், கிளைமாக்ஸில் நாம் எதிர்பார்க்காத ஒரு கதாப்பாத்திரத்தை குற்றவாளியாக காட்டுகிறார்கள்.
அதே போல், இந்த படத்திலும் அப்படி ஒரு கதாப்பாத்திரத்தை கிளைமாக்ஸில் கை காட்டுகிறார் வெங்கி…
ஆனால் படம் பார்ப்பவர்களுக்கு அந்த குறிப்பிட்ட கதாப்பாத்திரத்தின் மேல் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, இன்னொரு கதாப்பாத்திரம் மேல் நமது சந்தேகத்தை திசை திருப்ப அவர் கடும் முயற்சிகள் செய்திருக்கிறார்…
சக்தி சரவணன் ஒளிப்பதிவு சுமார் ரகம். யுவன் சங்கர் ராஜாவிற்கு இது 100 வது படமாம். ஆனால் மனதை தொடும் இசை என்று படத்தில் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.
இது ஜாலியான கதை கொண்ட படம் என்பதால், நாமும் சும்மா ஜாலியாகவே ஒரு விமர்சனம் செய்வோம்.
காரமான கதையில், காமெடி கிஸ்மிஸ்களை வழி நெடுக தூவி, நடுவே லெக் பீஸ் (கவர்ச்சி) ஒன்றையும் வைத்து, கையில் கிடைத்த தன் அப்பா காலத்து பழைய மசாலா சரக்கையெல்லாம் சேர்த்து இனிப்பும், புளிப்பும், கசப்புமாக ‘பிரியாணி’ சமைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
ஆனால் சாப்பிட்டு முடித்தவுடன் தான் தெரிகிறது. அதில் பெரிய ‘மட்டன் பீஸ்’ ஒன்று கிடக்கிறது என்று.
யார் அந்த ‘மட்டன் பீஸ்’ என்று யோசிக்கிறீர்களா? அட நம்ம கார்த்தி தான்.
தொடர்ந்து தோல்விப் படங்களாக கொடுத்து வந்த கார்த்தியின் நடிப்பு பசியை ‘பிரியாணி’ ஆவது தீர்க்கும் என்று நினைத்தால், இந்த படத்திலும் குடியும், பெண்களிடம் ஜொள் விடுவதும், அசட்டுத்தனமாக சிரிப்பதும் என்று மீண்டும் பலிகடாவாக்கப்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.
படம் தொடங்கியது முதல் இடைவேளை வரை பிரேம்ஜி தான் நமக்கு ‘பிளாஷ்பேக்’ கதை சொல்கிறார்.
இடைவேளைக்கு பிறகு, “போலீஸ் துரத்தும், ஓடிகிட்டே இருப்பாங்க… இவங்களே குற்றவாளியை தேடி கண்டுபிடிப்பாங்க. கடைசில போலீஸ் வரும்” என்று பக்கத்து சீட்டில் உள்ளவர் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் (பிரேம்ஜி குரல் – “என்ன கொடுமை சார் இது?”)
சமீபத்தில் வெளிவந்த படங்களில், ‘டிவிஸ்ட்’ என்ற பெயரில், கிளைமாக்ஸில் நாம் எதிர்பார்க்காத ஒரு கதாப்பாத்திரத்தை குற்றவாளியாக காட்டுகிறார்கள்.
அதே போல், இந்த படத்திலும் அப்படி ஒரு கதாப்பாத்திரத்தை கிளைமாக்ஸில் கை காட்டுகிறார் வெங்கி…
ஆனால் படம் பார்ப்பவர்களுக்கு அந்த குறிப்பிட்ட கதாப்பாத்திரத்தின் மேல் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, இன்னொரு கதாப்பாத்திரம் மேல் நமது சந்தேகத்தை திசை திருப்ப அவர் கடும் முயற்சிகள் செய்திருக்கிறார்…
சக்தி சரவணன் ஒளிப்பதிவு சுமார் ரகம். யுவன் சங்கர் ராஜாவிற்கு இது 100 வது படமாம். ஆனால் மனதை தொடும் இசை என்று படத்தில் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.
Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)
மேற்கோள் செய்த பதிவு: 1040243சிவா wrote:இதற்கு மேல் நடிகர் கார்த்தி படங்களைப் பார்க்க யாரும் தியேட்டர் பக்கமே செல்ல மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி..! இவர் வேறு தொழிலை தேடிச் செல்வது சிறந்தது...!
இவரது இந்த வீழ்ச்சிக்குக் காரணம் தன்னை உயர்த்தியவர்களை மதிக்க மறந்தது தான்..!
ஓரிரு படம் நல்ல ஓடியதுமே இவர்களை போன்றவர்களுக்கு ரஜினி , கமல் போல ஆயிட்டோம்னு நினைப்பு
Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)
அடடே அஞ்சு ரூபா காக்கா பிரியாணியா? கா கா கா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)
தினமலர் விமர்சனம்
உடனடியாக சாப்பிட ஏதாவது தேவை என்றால் "உப்புமா கிண்டுவார்கள்... கார்த்திக்கு உடனடியாக ஒரு வெற்றி தேவை என்பதால் "பிரியாணி கிண்டி இருக்கிறார்கள். ஆனால் உஷாராக கார்த்தியும், அவரது உறவு தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜாவும் அதை வெங்கட்பிரபுவை விட்டு சமைத்து, கார்த்தியின், "பிரியாணி, வெங்கட்பிரபுவின், "டயட் என விளம்பரப்படுத்தி வெற்றி பெற முயற்சித்திருக்கிறார்கள். "பசி - ருசி அறியாது என்பது போல் படமும் அவர்களுக்கு "பீஸ் புல்லாக வந்திருக்கிறது! ரசிகர்களுக்கு.?!
கதைப்படி சுகன் - கார்த்தியும், பரசுராம் - பிரேம்ஜி அமரனும் நான்காம் வகுப்பு படிக்கும் காலந்தொட்டு நண்பர்கள். வகுப்பில் முதல் மாணவனாக தேறும் பிரேம்ஜி, கார்த்தியின் சகவாசத்திற்கு பின் தான் சகல துன்பங்களையும் அனுபவிக்க ஆரம்பித்ததாக கதை சொல்ல ஆரம்பிக்கிறார். அதுவும் எப்படி? முடியாத பாலத்தில் படுவேகமாக ஒரு காரில், பின்னால் போலீஸ் வாகனங்கள் துரத்த பறந்து வந்து கீழே விழும் நிலையில் பிரேம்ஜி கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.
அதாகப்பட்டது, பிரேம்ஜி பார்த்து ஜொள் விடும் பெண்களை எல்லாம் இராத்திரி எந்நேரம் ஆனாலும் ஒரு பிளேட் பிரியாணி திண்ணாது, உறங்கபோகாத கார்த்தி உஷார் பண்ணி ஓரங்கட்டுவது ஒருபக்கம் என்றால், கதாநாயகி ஹன்சிகாவையும் சின்ஸியராக மற்றொருபக்கம் லவ்வுகிறார் கார்த்தி! நட்புக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு கார்த்தியை சகித்து கொள்ளும் பிரேம்ஜியும், கார்த்தியும் ஒருநாள் தங்களது பிரியாணி மற்றும் பெண் சபல புத்தியால் பிரபல கிரானைட் தொழில் அதிபர் நாசர் கொலையில் வகையாக சிக்குகின்றனர். அப்புறம்? அப்புறமென்ன, தங்களது புத்தி சாதுர்யத்தால் தங்களை வலை வீசித்தேடும் போலீஸ்க்கும், நாசரின், ராம்கி உள்ளிட்ட உறவுகளுக்கும் தண்ணிகாட்டி உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கார்த்தி, பிரேம்ஜி இருவரும் தப்பித்து, ஹன்சிகா கழுத்தில் தாலி கட்டு(ஹீ, ஹீ... கார்த்தி மட்டும்தான்...)வது தான் "பிரியாணி படத்தின் மொத்தகதையும்!
சுகனாக, கார்த்தி ஒருசில இடங்களில் அண்ணன் சூர்யா சாயலில் தெரிவது மட்டுமின்றி, "சிங்கம் சூர்யா மாதிரி ஆக்ஷ்ன் காட்சிகளிலும் அடித்து தூள் பரத்தியிருக்கிறார். ஹன்சிகாவுடனான காதலில் அவ்வளவு ஒட்டுதல் இல்லை! காரணம் வூட்வுக்காரம்மாவா? அல்லது படம் முழுக்க பீஸ்களாக (கார்த்தி - பிரேம்ஜி பாணியில்) பவனி வரும் பெண்களா? என்பது கார்த்திக்கே வெளிச்சம்!
ஹன்சிகா, நம் டிவி நிருபராக வந்து போகிறார். கார்த்தியுடன் கொள்ளும் ஊடலிலும், காதலிலும் அவ்வளவாக ஈர்ப்பு இல்லை! என்னாச்சு ஹன்ஸ்? சிம்புவுடனான நிஜ ஊடல், கூடல் தான் காரணமா..?!
பிரேம்ஜி அமரன் படம் முழுக்க காமெடி என்ற பெயரில் "வாவ் என வாயை பிளந்தபடி கலாய்க்கிறார். நல்லவேளை கடிக்கவில்லை! அதேநேரம் நான் உன் கேர்ள்ப்ரண்ட் அல்ல, ப்ரண்ட் என்று "பன்ச் டயலாக் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர்!
பிரியாணி படத்தின் மொத்தத்திற்கு பெரிய "லெக்பீஸ் மாயவாக வரும் மாண்டி தக்கார் தான். வாவ்! அம்மணி ஆடி அசத்தும் அந்த ஒற்றை பாடல் போதும் மொத்த படத்திற்கும்! ஆனாலும் அநியாமாய் அவரை, உமா ரியாஸ் ரயிலில் தள்ளி விடுவது கொடுமை!
வில்லன் மாதிரி பூச்சாண்டி காட்டி நல்லவராகி விடும் ராம்கி, நாசர், சம்பத், உமா ரியாஸ், ஜெய்பிரகாஷ், சாட் ஆண்டர்சன் தொடங்கி கெஸ்ட் ரோலில் வரும் ஜெய், விஜய் வஸந்த், விஜயலட்சுமி எல்லோரும் "லெக்பீஸ் பிரியாணியில் எக்ஸ்ட்ராவாக கிடைக்கும் துண்டங்கள் எனும் வகையில் ஆறுதல்!
யுவன்சங்கர்ராஜாவின் இசையில் ஆறேழு பாடல்கள். ஆனாலும், "மிசிசிபி... பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. காரணம் யுவன் மட்டுமல்ல, அதில் ஆடும் மாயாவும் தான்! ஹீ... ஹீ...!!
சக்திசரணவணனின் ஒளிப்பதிவு தான் வெங்கட்பிரபுவின் எழுத்து - இயக்கத்தில் "பிரியாணி படத்தை பல இடங்களில் தூக்கி நிறுத்துகிறது. ஆனாலும் லாஜிக் இல்லாத கதை, தலையை சுற்றி மூக்கை தொட முயன்றிருக்கும் திரைக்கதை எல்லாம் சேர்ந்து "பிரியாணியை இன்னும் கொஞ்சம் வேகவைத்திருக்கலாமோ? என கேட்க வைத்து விடுகின்றன!
மொத்தத்தில், "பிரியாணி, "பீஸ்கள் (அழகிய பெண்கள்) இருந்தும் இல்லாதது மாதிரி தெரியும் "குஸ்கா!
உடனடியாக சாப்பிட ஏதாவது தேவை என்றால் "உப்புமா கிண்டுவார்கள்... கார்த்திக்கு உடனடியாக ஒரு வெற்றி தேவை என்பதால் "பிரியாணி கிண்டி இருக்கிறார்கள். ஆனால் உஷாராக கார்த்தியும், அவரது உறவு தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜாவும் அதை வெங்கட்பிரபுவை விட்டு சமைத்து, கார்த்தியின், "பிரியாணி, வெங்கட்பிரபுவின், "டயட் என விளம்பரப்படுத்தி வெற்றி பெற முயற்சித்திருக்கிறார்கள். "பசி - ருசி அறியாது என்பது போல் படமும் அவர்களுக்கு "பீஸ் புல்லாக வந்திருக்கிறது! ரசிகர்களுக்கு.?!
கதைப்படி சுகன் - கார்த்தியும், பரசுராம் - பிரேம்ஜி அமரனும் நான்காம் வகுப்பு படிக்கும் காலந்தொட்டு நண்பர்கள். வகுப்பில் முதல் மாணவனாக தேறும் பிரேம்ஜி, கார்த்தியின் சகவாசத்திற்கு பின் தான் சகல துன்பங்களையும் அனுபவிக்க ஆரம்பித்ததாக கதை சொல்ல ஆரம்பிக்கிறார். அதுவும் எப்படி? முடியாத பாலத்தில் படுவேகமாக ஒரு காரில், பின்னால் போலீஸ் வாகனங்கள் துரத்த பறந்து வந்து கீழே விழும் நிலையில் பிரேம்ஜி கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.
அதாகப்பட்டது, பிரேம்ஜி பார்த்து ஜொள் விடும் பெண்களை எல்லாம் இராத்திரி எந்நேரம் ஆனாலும் ஒரு பிளேட் பிரியாணி திண்ணாது, உறங்கபோகாத கார்த்தி உஷார் பண்ணி ஓரங்கட்டுவது ஒருபக்கம் என்றால், கதாநாயகி ஹன்சிகாவையும் சின்ஸியராக மற்றொருபக்கம் லவ்வுகிறார் கார்த்தி! நட்புக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு கார்த்தியை சகித்து கொள்ளும் பிரேம்ஜியும், கார்த்தியும் ஒருநாள் தங்களது பிரியாணி மற்றும் பெண் சபல புத்தியால் பிரபல கிரானைட் தொழில் அதிபர் நாசர் கொலையில் வகையாக சிக்குகின்றனர். அப்புறம்? அப்புறமென்ன, தங்களது புத்தி சாதுர்யத்தால் தங்களை வலை வீசித்தேடும் போலீஸ்க்கும், நாசரின், ராம்கி உள்ளிட்ட உறவுகளுக்கும் தண்ணிகாட்டி உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கார்த்தி, பிரேம்ஜி இருவரும் தப்பித்து, ஹன்சிகா கழுத்தில் தாலி கட்டு(ஹீ, ஹீ... கார்த்தி மட்டும்தான்...)வது தான் "பிரியாணி படத்தின் மொத்தகதையும்!
சுகனாக, கார்த்தி ஒருசில இடங்களில் அண்ணன் சூர்யா சாயலில் தெரிவது மட்டுமின்றி, "சிங்கம் சூர்யா மாதிரி ஆக்ஷ்ன் காட்சிகளிலும் அடித்து தூள் பரத்தியிருக்கிறார். ஹன்சிகாவுடனான காதலில் அவ்வளவு ஒட்டுதல் இல்லை! காரணம் வூட்வுக்காரம்மாவா? அல்லது படம் முழுக்க பீஸ்களாக (கார்த்தி - பிரேம்ஜி பாணியில்) பவனி வரும் பெண்களா? என்பது கார்த்திக்கே வெளிச்சம்!
ஹன்சிகா, நம் டிவி நிருபராக வந்து போகிறார். கார்த்தியுடன் கொள்ளும் ஊடலிலும், காதலிலும் அவ்வளவாக ஈர்ப்பு இல்லை! என்னாச்சு ஹன்ஸ்? சிம்புவுடனான நிஜ ஊடல், கூடல் தான் காரணமா..?!
பிரேம்ஜி அமரன் படம் முழுக்க காமெடி என்ற பெயரில் "வாவ் என வாயை பிளந்தபடி கலாய்க்கிறார். நல்லவேளை கடிக்கவில்லை! அதேநேரம் நான் உன் கேர்ள்ப்ரண்ட் அல்ல, ப்ரண்ட் என்று "பன்ச் டயலாக் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர்!
பிரியாணி படத்தின் மொத்தத்திற்கு பெரிய "லெக்பீஸ் மாயவாக வரும் மாண்டி தக்கார் தான். வாவ்! அம்மணி ஆடி அசத்தும் அந்த ஒற்றை பாடல் போதும் மொத்த படத்திற்கும்! ஆனாலும் அநியாமாய் அவரை, உமா ரியாஸ் ரயிலில் தள்ளி விடுவது கொடுமை!
வில்லன் மாதிரி பூச்சாண்டி காட்டி நல்லவராகி விடும் ராம்கி, நாசர், சம்பத், உமா ரியாஸ், ஜெய்பிரகாஷ், சாட் ஆண்டர்சன் தொடங்கி கெஸ்ட் ரோலில் வரும் ஜெய், விஜய் வஸந்த், விஜயலட்சுமி எல்லோரும் "லெக்பீஸ் பிரியாணியில் எக்ஸ்ட்ராவாக கிடைக்கும் துண்டங்கள் எனும் வகையில் ஆறுதல்!
யுவன்சங்கர்ராஜாவின் இசையில் ஆறேழு பாடல்கள். ஆனாலும், "மிசிசிபி... பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. காரணம் யுவன் மட்டுமல்ல, அதில் ஆடும் மாயாவும் தான்! ஹீ... ஹீ...!!
சக்திசரணவணனின் ஒளிப்பதிவு தான் வெங்கட்பிரபுவின் எழுத்து - இயக்கத்தில் "பிரியாணி படத்தை பல இடங்களில் தூக்கி நிறுத்துகிறது. ஆனாலும் லாஜிக் இல்லாத கதை, தலையை சுற்றி மூக்கை தொட முயன்றிருக்கும் திரைக்கதை எல்லாம் சேர்ந்து "பிரியாணியை இன்னும் கொஞ்சம் வேகவைத்திருக்கலாமோ? என கேட்க வைத்து விடுகின்றன!
மொத்தத்தில், "பிரியாணி, "பீஸ்கள் (அழகிய பெண்கள்) இருந்தும் இல்லாதது மாதிரி தெரியும் "குஸ்கா!
Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)
சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
ஹீரோவும், அவரோட ஃபிரண்டும் சின்ன வயசுல இருந்தே கிளாஸ்மேட். அப்போ இருந்தே ஹீரோ காதல் இளவரசன். மடங்காத ஃபிகரெல்லாம் அவருக்கு மடங்கிடும். நண்பர் ரூட் போட்ட பொண்ணை இவர் கரெக்ட் பண்ணிடுவாரு. வில்லன் ஒரு கோடீஸ்வரர். நெம்பர் டூ இல்லீகல் பிஸ்னெஸ்ல நெம்பர் ஒன். அவரோட செட்டப் கில்மா லேடி, வாலண்ட்ரியா ஹீரோவை ஹோட்டல் ரூமுக்கு கூப்பிடுது. ஹீரோவும், நண்பரும் போறாங்க. ஏதோ மாத்திரையைக்கலந்து கொடுத்துடுது. மப்பும், மயக்கமும் தெளிஞ்சு பார்த்தா அந்த லேடியைக்காணோம்.
கோடீஸ்வரர் வில்லன் கொலை செய்யப்பட்டு கிடக்கார். போலீஸ் இவங்களைத்துரத்துது. யார் கொலையாளி ?
1. ஹீரோ மேல சின்ன வயசுல இருந்தே கடுப்பா இருக்கும் கூட இருக்கும் நண்பனா?
2. வில்லனோட சொத்துக்கும், நிர்வாகத்துக்கும் ஆசைப்பட்டு அவரோட இடத்தை அடைய நினைக்கும் ராம்கியா?
3. போலீஸ் சதியா ?
இந்த 3 சந்தேகங்களைக்கிளப்பி பின் பாதியில் அழகிய திருப்பங்களோட க்ரைம் த்ரில்லர் கதை கொடுதிருக்காங்க.
படத்தின் ஹீரோ இயக்குநர் வெங்கட் பிரபுதான். அவருக்குனு என்ன எதிர்பார்ப்பு இருக்கோ அதை கச்சிதமா நிறைவேற்றிட்டார். முன் பாதி வரை கிளாமர், காமெடி, பின் பாதியில் சஸ்பென்ஸ், சேசிங்க் இதுதான் இவரோட ஃபார்முலா. நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கு.
கார்த்திக்கு 3 சறுக்கல்களுக்குப்பின் கிடைத்த ஹிட் படம். நல்ல வேளை, இந்தப்படம் ஹிட் ஆகலைன்னா மேரேஜ் ஆன ராசி தான் சரி இல்லைன்னு சொல்லி இருப்பாங்க. பல பெண்கள் தானாக வந்து வலிய லவ்வும் ப்ளேபாய் கேரக்டர். கமல் , சிம்பு மாதிரி ஆட்கள் செய்ய வேண்டிய கேரக்டர். ஜாலியா செஞ்சு இருக்கார்.பெரும்பாலும் திரைக்கதையும், இயக்கமும் தான் இந்தப்படத்தில் முன்னிலை என்பதால் பல குறைகள் தெரியல. வெல்டன் கார்த்தி.
பிரேம்ஜிக்கு உண்மையில் லக் தான். தம்பிக்கு முக்கியத்துவம் வரும் மாதிரி கேரக்டரை ரெடி பண்ணி படம் பூராவும் ஹீரோவுக்கு இணையா வர வெச்சது நல்ல ஐடியா. இடைவேளை வரை பொண்ணுங்களைப்பார்த்து 2 பேரும் ஜொள் விடுவதே கலகலப்பு.
ராம்கி முக்கிய ரோல். நல்ல வில்லத்தனம். நாசர் தான் அந்த கோடீஸ்வரர். அதிக வாய்ப்பில்லை.ஆனா மகளிர் மட்டும்ல நாகேஷ் பிணமா நடிச்சது போல் இவர் ஃபிரிட்ஜ்க்குள் பிணமா நடிக்கும் காட்சிகள் எல்லாம் குட்.
ஹன்சிகா தான் நாயகி. ஒப்புக்குச்சப்பானி மாதிரி, படத்துல இவருக்கு வேலை அதிகம் இல்லை.
மாயா கேரட்கரில் கில்மா லேடியாக வரும் மாண்டி தாக்கர் தான் மெயின் கேரக்டர். செம கிளாமர். அந்தக்கால சில்க் ஸ்மிதாவை நினைவுபடுத்துகிறார்.
உமா ரியாஸ்கான்க்கு செம கேரகட்ர். விஜய் சாந்தி போல் அவர் போடும் ஃபைட்டுக்கு தியேட்டரில் விசில் சத்தம் பறக்குது. அவரது முகபாவனைகள், நடிப்பு, பாடி லேங்குவேஜ் பிரமாதம்.
ஹீரோவும், அவரோட ஃபிரண்டும் சின்ன வயசுல இருந்தே கிளாஸ்மேட். அப்போ இருந்தே ஹீரோ காதல் இளவரசன். மடங்காத ஃபிகரெல்லாம் அவருக்கு மடங்கிடும். நண்பர் ரூட் போட்ட பொண்ணை இவர் கரெக்ட் பண்ணிடுவாரு. வில்லன் ஒரு கோடீஸ்வரர். நெம்பர் டூ இல்லீகல் பிஸ்னெஸ்ல நெம்பர் ஒன். அவரோட செட்டப் கில்மா லேடி, வாலண்ட்ரியா ஹீரோவை ஹோட்டல் ரூமுக்கு கூப்பிடுது. ஹீரோவும், நண்பரும் போறாங்க. ஏதோ மாத்திரையைக்கலந்து கொடுத்துடுது. மப்பும், மயக்கமும் தெளிஞ்சு பார்த்தா அந்த லேடியைக்காணோம்.
கோடீஸ்வரர் வில்லன் கொலை செய்யப்பட்டு கிடக்கார். போலீஸ் இவங்களைத்துரத்துது. யார் கொலையாளி ?
1. ஹீரோ மேல சின்ன வயசுல இருந்தே கடுப்பா இருக்கும் கூட இருக்கும் நண்பனா?
2. வில்லனோட சொத்துக்கும், நிர்வாகத்துக்கும் ஆசைப்பட்டு அவரோட இடத்தை அடைய நினைக்கும் ராம்கியா?
3. போலீஸ் சதியா ?
இந்த 3 சந்தேகங்களைக்கிளப்பி பின் பாதியில் அழகிய திருப்பங்களோட க்ரைம் த்ரில்லர் கதை கொடுதிருக்காங்க.
படத்தின் ஹீரோ இயக்குநர் வெங்கட் பிரபுதான். அவருக்குனு என்ன எதிர்பார்ப்பு இருக்கோ அதை கச்சிதமா நிறைவேற்றிட்டார். முன் பாதி வரை கிளாமர், காமெடி, பின் பாதியில் சஸ்பென்ஸ், சேசிங்க் இதுதான் இவரோட ஃபார்முலா. நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கு.
கார்த்திக்கு 3 சறுக்கல்களுக்குப்பின் கிடைத்த ஹிட் படம். நல்ல வேளை, இந்தப்படம் ஹிட் ஆகலைன்னா மேரேஜ் ஆன ராசி தான் சரி இல்லைன்னு சொல்லி இருப்பாங்க. பல பெண்கள் தானாக வந்து வலிய லவ்வும் ப்ளேபாய் கேரக்டர். கமல் , சிம்பு மாதிரி ஆட்கள் செய்ய வேண்டிய கேரக்டர். ஜாலியா செஞ்சு இருக்கார்.பெரும்பாலும் திரைக்கதையும், இயக்கமும் தான் இந்தப்படத்தில் முன்னிலை என்பதால் பல குறைகள் தெரியல. வெல்டன் கார்த்தி.
பிரேம்ஜிக்கு உண்மையில் லக் தான். தம்பிக்கு முக்கியத்துவம் வரும் மாதிரி கேரக்டரை ரெடி பண்ணி படம் பூராவும் ஹீரோவுக்கு இணையா வர வெச்சது நல்ல ஐடியா. இடைவேளை வரை பொண்ணுங்களைப்பார்த்து 2 பேரும் ஜொள் விடுவதே கலகலப்பு.
ராம்கி முக்கிய ரோல். நல்ல வில்லத்தனம். நாசர் தான் அந்த கோடீஸ்வரர். அதிக வாய்ப்பில்லை.ஆனா மகளிர் மட்டும்ல நாகேஷ் பிணமா நடிச்சது போல் இவர் ஃபிரிட்ஜ்க்குள் பிணமா நடிக்கும் காட்சிகள் எல்லாம் குட்.
ஹன்சிகா தான் நாயகி. ஒப்புக்குச்சப்பானி மாதிரி, படத்துல இவருக்கு வேலை அதிகம் இல்லை.
மாயா கேரட்கரில் கில்மா லேடியாக வரும் மாண்டி தாக்கர் தான் மெயின் கேரக்டர். செம கிளாமர். அந்தக்கால சில்க் ஸ்மிதாவை நினைவுபடுத்துகிறார்.
உமா ரியாஸ்கான்க்கு செம கேரகட்ர். விஜய் சாந்தி போல் அவர் போடும் ஃபைட்டுக்கு தியேட்டரில் விசில் சத்தம் பறக்குது. அவரது முகபாவனைகள், நடிப்பு, பாடி லேங்குவேஜ் பிரமாதம்.
Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)
மேற்கோள் செய்த பதிவு: 1040482சிவா wrote:தினமலர் விமர்சனம்
மொத்தத்தில், "பிரியாணி, "பீஸ்கள் (அழகிய பெண்கள்) இருந்தும் இல்லாதது மாதிரி தெரியும் "குஸ்கா!
நச்
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)
அருண் wrote:நல்ல வேலை ப பீஸ்க்கு ஆசைப்பட்டு பிரியாணி வாங்க தியேட்டருக்கு போகல..
தெளிவாக பீசின் ருசியை அறியத்தந்தமைக்கு நன்றி தல!
இந்தப் படத்தைப் பார்க்க ஏன் திரையரங்கிற்கு செல்கிறீர்கள்! இதோ இங்கு பாருங்கள்!
Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)
பிரியாணி - சினிமா விமர்சனம்
ஓர் இரவு, ஒரு பிரியாணி, ஓர் அழகி, ஒரு கொலை... தடதடக்கும் துரத்தல் மிரட்டலே படம்!
உதவி இயக்குநர்: சார் கதை..?
வெங்கட் பிரபு: டோன்ட் வொர்ரி!
உ. இயக்குநர்: சார் லாஜிக்..?
வெ.பிரபு: கண்டுக்க மாட்டாங்கப்பா!
உ. இயக்குநர்: சார்..?!
வெ.பிரபு: அட, கார்த்தி இருக்காரு... ஹன்சிகா, பிரேம்ஜி இருக்காங்க... மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் இருக்காங்க... பார்த்துக்கலாம்!
- இப்படியாக முடிவெடுத்து, தனது பார்ட்டி பட்டாளத்துடன் 'பிரியாணி டின்னர்’ அடித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. பீர், ஃபிகர், பிரியாணி, காமெடி, காதல், சஸ்பென்ஸ், க்ரைம், கிளப், மப்பு... என சகல மசாலாக்களையும் கலந்து கட்டியிருக்கிறார்கள். இடைவேளை ப்ளாக்கில்தான் கதையே ஆரம்பம். அதுவரை கார்த்தி - பிரேம்ஜி இடையிலான ஃபிகர் உஷார் அத்தியாயங்கள் மட்டுமே!
'உனக்காகத்தான் மச்சான் நம்பர் வாங்குனேன்... ஆனா பாரு, கொடுக்க மறந்துட்டேன்!'' என்று பிரேம்ஜியை சதாய்க்கும்போதும், பார்க்கும் பெண்களை எல்லாம் வசீகரமாகக் கவரும்போதும்... செம காஸனோவா கார்த்தி!
''நீ ஆசைப்படுறது எல்லாம் உனக்குக் கிடைக்குது ஓ.கே. ஆனா, நான் ஆசைப்படுறதும் உனக்கே கிடைக்குதே அது எப்படி?'' என்று போங்கு வாங்கிப் பொங்குவதும், புலி டான்ஸ் போடுவதுமாகக் கலகல பிரேம்ஜி. ஹன்சிகா இருந்தும், விசில் விசிறிகளுக்கு வேலை வைப்பது என்னவோ, 'ஹிட் ஹாட்’ மாண்டி தக்கர்.
'இவர் டைரக்டரோட க்ளோஸ் ஃப்ரெண்ட். டேட்ஸ் ஃப்ரீயா இருக்குனு நடிச்சுக் கொடுத்திருக்கார்’ என்று ஜெய்க்கு கார்டு போடுவதில் இருந்து, 'எனக்கு சண்டை சீன் இல்லையா?’ என்று சாம் ஆண்டர்சன் விரக்தியாவது வரை, பிரியாணியில் ஆங்காங்கே நச் நச் லெக் பீஸ்!
ஃபிரிட்ஜுக்குள் பிணம், டி.வி. சேனல் டிராமா, ஹிட் வுமன் அதிரடிகள், அத்தனை விவரமான சி.பி.ஐ. அதிகாரி, கார்த்தியை சட்டென நிரபராதி என்று நம்புவது... ம்ஹும்... எந்த லாஜிக்குக்கும் மெனக்கெடாமல் லெஃப்ட் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் திரும்புகிறது திரைக்கதை!
100-வது படத்தில் 'டீன் டியூன்’ அடித்து இளமை விருந்து படைத்திருக்கிறது யுவனின் இசை!
'நீங்க ரெண்டு பேரும் காரைப் பத்தி மட்டும்தானே பேசிட்டு இருக்கீங்க?’, 'டேய்... போன உடனே வேலையை முடிச்சுடு... பாட்டுலாம் பாடிட்டு இருக்காத...’ - போன்ற 'அசைவ’ வசனங்கள், உங்களுக்கு அலர்ஜி இல்லையென்றால், சொல்லலாம் ஒரு பிளேட் 'பிரியாணி’!
விகடன் விமர்சனக் குழு
Page 2 of 2 • 1, 2
Similar topics
» குறும்படம் இயக்குகிறார் வெங்கட் பிரபு
» ஆக 30-ல் அஜீத்தின் மங்காத்தா! - வெங்கட் பிரபு
» மங்காத்தா சீரியஸ் த்ரில்லர்! - வெங்கட் பிரபு
» மங்காத்தா பட சர்ச்சை : வெங்கட் பிரபு பதில்
» மங்காத்தா 2- வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
» ஆக 30-ல் அஜீத்தின் மங்காத்தா! - வெங்கட் பிரபு
» மங்காத்தா சீரியஸ் த்ரில்லர்! - வெங்கட் பிரபு
» மங்காத்தா பட சர்ச்சை : வெங்கட் பிரபு பதில்
» மங்காத்தா 2- வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|