ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..15...!!!..சங்கத் தமிழ்ச் சமூகம் தாய் வழிச் சமூகமா....

Go down

 குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..15...!!!..சங்கத் தமிழ்ச் சமூகம் தாய் வழிச் சமூகமா.... Empty குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..15...!!!..சங்கத் தமிழ்ச் சமூகம் தாய் வழிச் சமூகமா....

Post by sundaram77 Fri Dec 20, 2013 1:39 pm


நண்பர்களே ,
தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல , உலகில் தோன்றி , மறைந்த சமூகங்களிலும் இன்னும் நிலைபெற்று வாழ்கின்ற மற்றைய சமூகங்களிலும் மனித உறவுகள் தந்தை வழியும் , தாய் வழியும் அறியப்பட்டு வந்துள்ளன .சமூகத் தடத்தில் சில போழ்து தாயே குடும்ப உறவுகளை மட்டுமல்லாது , நிதி நிலைகளைக்கூட ஆண்டு வந்திருக்கிறாள். மிகச் சமீப காலம் வரை நமது அண்டை மாநிலமான கேரளாவில் தாய் வழி மாமன்களுக்கே பரம்பரை சொத்துரிமை மாற்றப்பட்டு வந்திருக்கிறது. இதனால் விளையும் தீங்குகளை உணர்வுடன் விரித்துரைப்பதே கவிமணி அவர்களின் ' மருமக்கள் வழி மான்யம்'!

இந்த விவரங்கள் இப்போது எதற்கு ...

சங்க இலக்கிய காலத்தில் - ஏறத்தாழ கி.மு 400-லிருந்து கி.பி. 200 வரை - குடும்பத்தினை வழி நடத்திச் செல்வதில்
தாயே சீர்மையான தலைமைப் பண்பினை பெற்றிருந்தாள் என்பதற்கு சான்றாக சங்க இலக்கியப்பாடல்கள் பல உள்ளன. ஆனாலும் , எனக்கு அவ்வப்போது மனதில் மிதந்து செல்லும் சங்க இலக்கிய வரிகளில் இவையும் உண்டு :


" என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்
அன்னார் இருவரைக் காணீரோ பெரும ! "


இவ்வரிகளுக்கு விளக்கம் தேவையில்லைதானே ....விஷயம் இதுதான் :
காளை ஒருவன் மனதும் கன்னி ஒருத்தியின் மனதும் ஒன்றிப்போய் விடுகின்றன ; காதலர் இருவரின் களவினை பெண்ணின் பெற்றோர் ஏற்கத தயங்குவது அன்றும் அவர்களுக்கு நேர்ந்தமையால் வேறு வழிப் புலப்படாது , கன்னி அவள் தன் மனதை கொள்ளை கொண்டவனுடன் இல்லறம் நடத்த அவனுடன் தன் இல்லத்தில் இருந்து வெளியேறி விடுகிறாள் ! இதனை 'உடன் போக்கு ' என்று தமிழ்ச் சமுதாயம் அன்று பரிவுடன் பார்த்தே அங்கீகரித்திருக்கிறது !!

சரி , நம் பாடலுக்கு வருவோம் . இது கலித்தொகையில் இடம் பெற்றுள்ள 9 - ஆம் பாடல். கன்னியின் இல்லத்தில் இளங்காலைப் பொழுதிலிருந்தே அவளைக் காணாதது தாய்க்கு கவலை தருகிறது . சிறிது நேரத்தில் மகளைத் தேடத் தொடங்கி விடுகிறாள் ; ஊர் எங்கும் தேடியும் பலனில்லை ; கடைசியாக ஊருக்கு வெளியில் சில அந்தணர்கள் தென்படுகின்றனர் - அவர்கள் அந்த நேரத்தில்தான் அருகமைந்த காட்டினின்றும் வெளிப்பட்டு ஊருக்குள் வரத் தலைப்படுகின்றனர் . அவர்களிடம்தான் அத்தாய் மனம் சோர்ந்து அவ்வினாவைத் தொடுக்கின்றாள் !அவள் கேட்பது இப்படித்தான் : ' எங்கள் மகளைக் காணவில்லை ; பிறிதொரு குடும்பத்தில் உள்ள ஒருவனைக் காணவில்லை ' எனக் கேட்கவில்லை ; " என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் " என்றே சொல்கிறாள் ; இருவரின் தந்தையர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை !
இது சில முக்கியமான வினாக்களைத் தோற்றுவிக்கிறது .


1. பிறந்த நாளிலிருந்து தங்கள்'குழந்தைகளை' வளர்த்து இன்று 'உடன் போக்கு' செல்லும் அளவிற்கு வந்ததற்கு தாய்கள் மட்டுமே பொறுப்பு என்றதலா...??!!
2. தந்தைகளின் பெயர்களை இதில் கொணர்தல் அவர்களுக்கு அவப்பெயர் உண்டாக்கும் என்பதாலா...??!!
3. இல்லை , காளையும் கன்னியும் உடன்பட்டு சென்ற காலத்தில் தமிழ்க் குடும்பங்களில் தாயே தலைமை வகித்ததாலா ...??!!

இது பற்றிய ஆழ்ந்த பொறுப்பான சமூகவியல் மற்றும் மொழியியல் ஆராய்ச்சியே இவ்வினாக்களுக்குத் தகுந்த விடையளிக்க முடியும்...!!

மேலும் இந்தப் பாடலில் , அத்தாயின் வினாவிற்கு அவ்வந்தணர்கள் அளிக்கும் ஆறுதலான சொற்கள் நம்மை உய்த்து , உணர்ந்து உளம் மகிழ்வடையச் செய்யும் !

அம்முதியோர்களின் முதல் வார்த்தைகளே 'காணேம் அல்லேம்' என்பதே ! ; தாயின் கவலை தோய்ந்த மனதிற்கு உடன் ஒத்தடம் கொடுப்பது போன்ற வார்த்தகள் அல்லவா இவை ! அதாவது , 'உன் மகளைக் காட்டிடைக் கண்டோம்' என்பதே அது ! இன்னமும் தண்ணென்ற குளிர் சொற்களில் அத்தாயை ஆறுதல் படுத்த முனைகின்றனர் ;


" ஆண் எழில் அண்ணலொடு அருஞ்சுரம் முன்னிய
மாண் இழை மடவரல் தாயிற் நீர் போறிர் "


அவளின் மகளைக் கற்புநிலை தவறா மாதரசி என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் , அக்காளையை அழகான உருவுடன் உயர்குணமும் கொண்ட அண்ணல் என்றும் போற்றிச் சொல்கின்றனர் ; உங்கள் மகள் பிழையான தேர்வினைச் செய்யவில்லை என அவளின் மனதில் கருணை ஒளி தோன்றச் செய்கின்றனர் .

அத்தோடு நிற்காது , மகளை இழந்தோமே எனும் தாங்கவொண்ணா துயரில் தவிக்கும் அத்தாய்க்கு இன்னும் பலவாறு தேறுதலும் ஆறுதலும் கூற முற்படுகின்றனர் !

தாயே , மலையிலே சந்தனம் தோன்றினும் அம்மலைக்கு அச்சந்தனம் பயனாவதில்லையே !

" மலை உளே பிறப்பினும், மலைக்கு அவை தாம் என் செய்யும்? "

நீருள்ளே இருந்துதான் முத்துக்கள் தேடி எடுக்கப்பட்டாலும் அணிபவர்க்குதானே அவை அழகூட்டுகிறன!
"....வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீர் உளே பிறப்பினும், நீர்க்கு அவை தாம் என் செய்யும்?"


இன்னிசை எழும்புவது யாழ் நரம்புகளிலிருந்துதான் எனினும் அதனை மீட்டுபவர்க்கு அன்றி யாழுக்கு அதனால் ஏது இன்பம் !

" ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழ் உளே பிறப்பினும், யாழ்க்கு அவை தாம் என் செய்யும்? "


இவ்வாறுதான் , அன்னையே , உங்களின் அருந்தவ மகளும் ! அவள் யாண்டும் உனை நீங்கிச் செல்ல வேண்டியவள் தானே ! மிகச் சிறந்த அருங்குணங்களோடு அழகிற் சிறந்தவனை அறம் வழுவாது ஒட்டி சென்ற அவளுக்கும் எத்தீங்கும் நேராது ; ஆதலால் , தாயே , நீங்களூம் வருந்த வேண்டா !

பெண்ணானவள் பிறந்த விடத்து உரியாராகார் என்பதையும் காதல் மணத்தினைக் கூட்டுவிக்க பெற்றோர் தடை செய்யலாகாது என்பதையும் இப்பாடல் நயமான இனிய உவமைகளால் அழகு படக் கூறுகிறது !

பெருங்கொடுக்கோவின் கவித்துவத்தையும் மனித வாழ்வின் இயல்பு நிலை அறிவையும் இப்பாடல் மனங்கவர் தன்மையோடு நம்மை நிறைக்கிறது !


முழுப்பாடல் :

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்,
உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!-
வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை,

என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,
தம்முள்ளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!'
'காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை;
ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய

மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்;
பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,

நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்?
தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

எனவாங்கு,
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே.


சில சொற்களுக்கான பொருள் :

தாழ்ந்த - தங்கிய
கரகம் - மண்டலம்
சுவல் - தோள்
ஓரா - கருதாத
மாலை - இயல்பு
கொளை - கொள்கை
நடை - ஒழுக்கம்
கடத்திடை - வழியில்
கடம் - கடுமையான வழி
இறந்த - மிகுந்த
எவ்வம் - துன்பம்

நட்புடன்,

சுந்தரம்
sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum