Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
4 posters
Page 10 of 14
Page 10 of 14 • 1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
First topic message reminder :
பால முருகன்
சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்
வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்
பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்
கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்
பால முருகன்
சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்
வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்
பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்
கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்
Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
நாயும் நிலவும்
வட்ட மான வெண்ணி லாவைப்
பார்த்துப் பார்த்துமே
வள்வள் ளென்று எங்கள் வீட்டு
நாய் குரைத்தது.
கிட்டச் சென்றே என்ன சொல்லிக்
குரைக்கு தென்றுநான்
கேட்டு வந்தேன்; அந்தச் செய்தி
கூறப் போகிறேன்:
நிலாவிடம் நாய் சொன்னது:
அமா வாசை இருட்டிலே
ஆகா யத்தில் தேடினேன்.
எங்கே போனாய்? நிலவேநீ
எவரைக் கண்டே அஞ்சினாய்?
அமா வாசை நாளிலே
அண்டங் காக்கை இருளிலே
திருட்டு முனியன் பூனைபோல்
தெருவில் நடந்து வந்தனன்.
பார்த்து விட்டேன் நானுமே.
பாய்ந்தேன் அந்த நிமிடமே.
கோபக் குரலில் கத்தினேன்;
குரைத்துக் கொண்டே துரத்தினேன்.
என்னைப் பார்த்துத் திருடனும்
எடுத்தான் ஓட்டம் வேகமாய்.
தலை தெறிக்க ஓடியே
தப்பிப் பிழைத்து விட்டனன்.
ஆனை போல உருவமும்
ஆட்டுக் கடா மீசையும்
கோவைப் பழத்துக் கண்களும்
கொண்ட திருடன் முனியனைப்
பார்த்துத் தானே நீயுமே
பயந்தே ஓடிப் பதுங்கினாய்?
அமா வாசை இருளிலே
அஞ்சி ஓடி ஒளிந்தநீ
திருடன் போன மறுதினம்
சிறிதே தலையை நீட்டினாய்.
மெல்ல மெல்லத் தினமுமே
வெளியே எட்டிப் பார்த்தநீ
திருடன் இல்லை என்பதைத்
தெரிந்து கொண்டாய் இன்றுதான்.
வாரம் இரண்டு ஆனபின்
வந்து முழுசாய் நிற்கிறாய்.
ஏனோ என்னைப் பார்த்துநீ
இளப்ப மாகச் சிரிக்கிறாய்?
வட்ட மான வெண்ணி லாவைப்
பார்த்துப் பார்த்துமே
வள்வள் ளென்று எங்கள் வீட்டு
நாய் குரைத்தது.
கிட்டச் சென்றே என்ன சொல்லிக்
குரைக்கு தென்றுநான்
கேட்டு வந்தேன்; அந்தச் செய்தி
கூறப் போகிறேன்:
நிலாவிடம் நாய் சொன்னது:
அமா வாசை இருட்டிலே
ஆகா யத்தில் தேடினேன்.
எங்கே போனாய்? நிலவேநீ
எவரைக் கண்டே அஞ்சினாய்?
அமா வாசை நாளிலே
அண்டங் காக்கை இருளிலே
திருட்டு முனியன் பூனைபோல்
தெருவில் நடந்து வந்தனன்.
பார்த்து விட்டேன் நானுமே.
பாய்ந்தேன் அந்த நிமிடமே.
கோபக் குரலில் கத்தினேன்;
குரைத்துக் கொண்டே துரத்தினேன்.
என்னைப் பார்த்துத் திருடனும்
எடுத்தான் ஓட்டம் வேகமாய்.
தலை தெறிக்க ஓடியே
தப்பிப் பிழைத்து விட்டனன்.
ஆனை போல உருவமும்
ஆட்டுக் கடா மீசையும்
கோவைப் பழத்துக் கண்களும்
கொண்ட திருடன் முனியனைப்
பார்த்துத் தானே நீயுமே
பயந்தே ஓடிப் பதுங்கினாய்?
அமா வாசை இருளிலே
அஞ்சி ஓடி ஒளிந்தநீ
திருடன் போன மறுதினம்
சிறிதே தலையை நீட்டினாய்.
மெல்ல மெல்லத் தினமுமே
வெளியே எட்டிப் பார்த்தநீ
திருடன் இல்லை என்பதைத்
தெரிந்து கொண்டாய் இன்றுதான்.
வாரம் இரண்டு ஆனபின்
வந்து முழுசாய் நிற்கிறாய்.
ஏனோ என்னைப் பார்த்துநீ
இளப்ப மாகச் சிரிக்கிறாய்?
Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
உறுதி! உறுதி! உறுதி!
உண்மை பேச நானுமே
உறுதி கொண்டேன். ஆயினும்
சின்னச் சின்னப் பொய்களைத்
தினமும் ஏனோ சொல்கிறேன்.
“என்றன் மாமா லண்டனில்
இருக்கி றாரே, தெரியுமா?”
என்று நானும் புளுகுவேன்.
இதிலே பெருமை கொள்ளுவேன்.
நல்ல பாம்பு, பாம்பென
நண்பர் கூடி இருக்கையில்
சொல்வேன். அவர்கள் யாவரும்
துடித்தே ஓட மகிழுவேன்.
கவனக் குறைவால் நானுமே
கண்ணா டியை உடைத்தபின்
தவறு தங்கை செய்ததாய்த்
தந்தை யிடத்தில் கூறுவேன்.
எனக்குப் படிப்பில் போட்டியாய்
இருக்கும் கோபு, முரளியின்
கணக்கைக் காப்பி அடித்ததாய்க்
கதையும் கட்டி விடுகிறேன்.
அன்னை தூங்கும் வேளையில்
ஆசை யாக லட்டையே
தின்று விட்டு யார்அந்தத்
திருடன் என்று தேடுவேன்.
ஃ ஃ ஃ
தினம் தினம் இப்படி நான்சொன்ன
சிறுசிறு பொய்கள் எத்தனையோ?
கணக்கே இல்லை. இதற்கெல்லாம்
காரணம் என்ன? நானறிவேன்.
பெருமைக் காகப் பொய்சொன்னேன்.
பிறரை ஏய்க்கப் பொய்சொன்னேன்.
அடிக்குப் பயந்து பொய்சொன்னேன்.
ஆத்திரத் தாலே பொய்சொன்னேன்.
ஆசையி னாலும் பொய்சொன்னேன்.
ஐயோ! தினமும் பொய்சொன்னேன்.
ஃ ஃ ஃ
இப்படித் தினம்தினம் பொய்சொன்னால்
எவர்தான் என்னை நம்பிடுவார்?
தப்பிதம் அன்றோ? இதைநானும்
சரியாய் உணர்ந்தேன். எப்பொழுது?
காந்தித் தாத்தா வரலாற்றைக்
கருத்துடன் இன்று படிக்கையிலே,
உண்மை ஒன்றே இவ்வுலகில்
உயர்ந்தது, மிகவும் உயர்ந்ததென
உணர்ந்தேன். இனிமேல் எப்பொழுதும்
உத்தமர் காந்தி வழிநடப்பேன்.
சோதனை பற்பல தோன்றிடினும்,
தொல்லைகள் தொடர்ந்து வந்திடினும்
உண்மை ஒன்றே பேசிடுவேன்.
உறுதி, உறுதி, உறுதி இது !
உண்மை பேச நானுமே
உறுதி கொண்டேன். ஆயினும்
சின்னச் சின்னப் பொய்களைத்
தினமும் ஏனோ சொல்கிறேன்.
“என்றன் மாமா லண்டனில்
இருக்கி றாரே, தெரியுமா?”
என்று நானும் புளுகுவேன்.
இதிலே பெருமை கொள்ளுவேன்.
நல்ல பாம்பு, பாம்பென
நண்பர் கூடி இருக்கையில்
சொல்வேன். அவர்கள் யாவரும்
துடித்தே ஓட மகிழுவேன்.
கவனக் குறைவால் நானுமே
கண்ணா டியை உடைத்தபின்
தவறு தங்கை செய்ததாய்த்
தந்தை யிடத்தில் கூறுவேன்.
எனக்குப் படிப்பில் போட்டியாய்
இருக்கும் கோபு, முரளியின்
கணக்கைக் காப்பி அடித்ததாய்க்
கதையும் கட்டி விடுகிறேன்.
அன்னை தூங்கும் வேளையில்
ஆசை யாக லட்டையே
தின்று விட்டு யார்அந்தத்
திருடன் என்று தேடுவேன்.
ஃ ஃ ஃ
தினம் தினம் இப்படி நான்சொன்ன
சிறுசிறு பொய்கள் எத்தனையோ?
கணக்கே இல்லை. இதற்கெல்லாம்
காரணம் என்ன? நானறிவேன்.
பெருமைக் காகப் பொய்சொன்னேன்.
பிறரை ஏய்க்கப் பொய்சொன்னேன்.
அடிக்குப் பயந்து பொய்சொன்னேன்.
ஆத்திரத் தாலே பொய்சொன்னேன்.
ஆசையி னாலும் பொய்சொன்னேன்.
ஐயோ! தினமும் பொய்சொன்னேன்.
ஃ ஃ ஃ
இப்படித் தினம்தினம் பொய்சொன்னால்
எவர்தான் என்னை நம்பிடுவார்?
தப்பிதம் அன்றோ? இதைநானும்
சரியாய் உணர்ந்தேன். எப்பொழுது?
காந்தித் தாத்தா வரலாற்றைக்
கருத்துடன் இன்று படிக்கையிலே,
உண்மை ஒன்றே இவ்வுலகில்
உயர்ந்தது, மிகவும் உயர்ந்ததென
உணர்ந்தேன். இனிமேல் எப்பொழுதும்
உத்தமர் காந்தி வழிநடப்பேன்.
சோதனை பற்பல தோன்றிடினும்,
தொல்லைகள் தொடர்ந்து வந்திடினும்
உண்மை ஒன்றே பேசிடுவேன்.
உறுதி, உறுதி, உறுதி இது !
Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
நடந்து போன நாற்காலி !
இரண்டு கால்கள் உள்ள மனிதர்
இங்கும் அங்கும் நடக்கிறார்.
ஏணி மேலே காலை வைத்தே
ஏறி ஏறிச் செல்கிறார்.
குறுக்கே பள்ளம் இருந்தால் உடனே
குதித்துத் தாவிக் கடக்கிறார்.
குடுகு டென்று வேக மாகக்
குதிரை போலச் செல்கிறார்.
இரண்டு கால்கள் உள்ள மனிதர்
இவற்றை யெல்லாம் செய்கையில்
இரண்டு மடங்கு கால்கள் எனக்கு
இருந்தும் சும்மா இருப்பதோ?
இருந்த இடத்தில் இருந்து இருந்து
எனக்குச் சலித்துப் போனதே.
இன்றே நானும் மனிதர் போலே
எங்கும் நடந்து செல்லுவேன்.
இப்படி -
நான்கு கால்கள் கொண்டஒரு
நாற்கா லியுமே நினைத்ததுவே.
நகர்ந்து நகர்ந்து சென்றதுவே;
நலமாய் முகப்பை அடைந்ததுவே.
எட்டுப் படிகள் வாசலிலே
இருந்தன. அவற்றில் இறங்கிடவே
முன்னங் கால்கள் இரண்டையுமே
முதலாம் படியில் வைத்ததுவே.
மடித்துக் காலை வைக்காமல்
வாயிற் படியில் இறங்கியதால்
அடுத்த நிமிடம் தடதடென
அங்கே சத்தம் கேட்டதுவே.
உருண்டு விழுந்தது நாற்காலி !
ஒடிந்தன மூன்று கால்களுமே !
மிச்சம் ஒற்றைக் காலுடனே
முடமாய்க் கிடந்தது நாற்காலி.
நடக்கும் முன்னே நாற்காலி.
நடந்த பிறகோ ஒருகாலி !
இருந்த இடத்தில் இருந்திருந்தால்
இன்னும் அதன்பெயர் நாற்காலி !
இரண்டு கால்கள் உள்ள மனிதர்
இங்கும் அங்கும் நடக்கிறார்.
ஏணி மேலே காலை வைத்தே
ஏறி ஏறிச் செல்கிறார்.
குறுக்கே பள்ளம் இருந்தால் உடனே
குதித்துத் தாவிக் கடக்கிறார்.
குடுகு டென்று வேக மாகக்
குதிரை போலச் செல்கிறார்.
இரண்டு கால்கள் உள்ள மனிதர்
இவற்றை யெல்லாம் செய்கையில்
இரண்டு மடங்கு கால்கள் எனக்கு
இருந்தும் சும்மா இருப்பதோ?
இருந்த இடத்தில் இருந்து இருந்து
எனக்குச் சலித்துப் போனதே.
இன்றே நானும் மனிதர் போலே
எங்கும் நடந்து செல்லுவேன்.
இப்படி -
நான்கு கால்கள் கொண்டஒரு
நாற்கா லியுமே நினைத்ததுவே.
நகர்ந்து நகர்ந்து சென்றதுவே;
நலமாய் முகப்பை அடைந்ததுவே.
எட்டுப் படிகள் வாசலிலே
இருந்தன. அவற்றில் இறங்கிடவே
முன்னங் கால்கள் இரண்டையுமே
முதலாம் படியில் வைத்ததுவே.
மடித்துக் காலை வைக்காமல்
வாயிற் படியில் இறங்கியதால்
அடுத்த நிமிடம் தடதடென
அங்கே சத்தம் கேட்டதுவே.
உருண்டு விழுந்தது நாற்காலி !
ஒடிந்தன மூன்று கால்களுமே !
மிச்சம் ஒற்றைக் காலுடனே
முடமாய்க் கிடந்தது நாற்காலி.
நடக்கும் முன்னே நாற்காலி.
நடந்த பிறகோ ஒருகாலி !
இருந்த இடத்தில் இருந்திருந்தால்
இன்னும் அதன்பெயர் நாற்காலி !
Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
பச்சைக் கண்ணன்
சீனி மிட்டாய்க் கடையிலே
சின்னச் சின்னப் பொம்மைகள்.
சின்னச் சின்னப் பொம்மைகள்
சீனி மிட்டாய்ப் பொம்மைகள்.
கண்ணன் பொம்மை இருந்தது.
காந்தி பொம்மை இருந்தது.
வண்ண வண்ணப் பொம்மைகள்
வரிசை யாக இருந்தன.
காசு கொடுத்து நானுமே
கண்ணன் பொம்மை வாங்கினேன்.
ஆசை யாக எனதுவாய்
அருகில் கொண்டு போயினேன்.
பச்சை நிறத்துக் கண்ணனோ
பார்க்க அழகாய் இருந்ததால்
எச்சில் படுத்தித் தின்னவே
எனக்கு விருப்பம் இல்லையே!
அறையில் மாடம் இருந்தது.
அதிலே வைத்தேன், கண்ணனை!
உறங்கிப் போனேன், இரவிலே.
ஒன்றும் அறியேன் நானுமே.
காலை எழுந்து பார்க்கையில்
காண வில்லை கண்ணனை.
நாலு புறமும் வீட்டினுள்
நன்கு நானும் தேடினேன்.
அப்பா வந்தார்; கூறினேன்.
அவரும் தேடிப் பார்த்தனர்.
அப்போ தவரின் கண்களோ
அறையின் ஓரம் பார்த்தன.
ஓர மாகச் சென்றுநான்
உற்றுப் பார்த்தேன் அவருடன்.
சாரை சாரை யாகவே
தரையில் கண்டேன், எறும்புகள்.
பச்சை நிறத்துக் கண்ணனைப்
பங்கு போட்டே எறும்புகள்
இச்சை யோடு வாயிலே
எடுத்துக் கொண்டு சென்றன.
சீனி மிட்டாய்க் கடையிலே
சின்னச் சின்னப் பொம்மைகள்.
சின்னச் சின்னப் பொம்மைகள்
சீனி மிட்டாய்ப் பொம்மைகள்.
கண்ணன் பொம்மை இருந்தது.
காந்தி பொம்மை இருந்தது.
வண்ண வண்ணப் பொம்மைகள்
வரிசை யாக இருந்தன.
காசு கொடுத்து நானுமே
கண்ணன் பொம்மை வாங்கினேன்.
ஆசை யாக எனதுவாய்
அருகில் கொண்டு போயினேன்.
பச்சை நிறத்துக் கண்ணனோ
பார்க்க அழகாய் இருந்ததால்
எச்சில் படுத்தித் தின்னவே
எனக்கு விருப்பம் இல்லையே!
அறையில் மாடம் இருந்தது.
அதிலே வைத்தேன், கண்ணனை!
உறங்கிப் போனேன், இரவிலே.
ஒன்றும் அறியேன் நானுமே.
காலை எழுந்து பார்க்கையில்
காண வில்லை கண்ணனை.
நாலு புறமும் வீட்டினுள்
நன்கு நானும் தேடினேன்.
அப்பா வந்தார்; கூறினேன்.
அவரும் தேடிப் பார்த்தனர்.
அப்போ தவரின் கண்களோ
அறையின் ஓரம் பார்த்தன.
ஓர மாகச் சென்றுநான்
உற்றுப் பார்த்தேன் அவருடன்.
சாரை சாரை யாகவே
தரையில் கண்டேன், எறும்புகள்.
பச்சை நிறத்துக் கண்ணனைப்
பங்கு போட்டே எறும்புகள்
இச்சை யோடு வாயிலே
எடுத்துக் கொண்டு சென்றன.
Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
நான் :
கண்ணன் பொம்மை முழுவதும்
கடித்துக் கடித்தே எறும்புகள்
கொண்டு செல்லு கின்றன.
கொடுமை கொடுமை, கொடுமையே !
அப்பா :
பச்சைக் கண்ணன் இவைகளின்
பசியைப் போக்கத் தன்னையே
மிச்ச மின்றி உதவினன்.
வீணில் வருத்தம் கொள்வதேன்?
கண்ணன் பொம்மை முழுவதும்
கடித்துக் கடித்தே எறும்புகள்
கொண்டு செல்லு கின்றன.
கொடுமை கொடுமை, கொடுமையே !
அப்பா :
பச்சைக் கண்ணன் இவைகளின்
பசியைப் போக்கத் தன்னையே
மிச்ச மின்றி உதவினன்.
வீணில் வருத்தம் கொள்வதேன்?
Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
பல்லில்லாத பாட்டி
பல்லில் லாத பாட்டிக்குப்
பத்துப் பேரப் பிள்ளைகள்.
எல்லாப் பேரப் பிள்ளையும்
எதிரே ஒருநாள் வந்தனர்.
“பத்துப் பத்துச் சீடைகள்
பாட்டி உனக்கே” என்றனர்.
மொத்தம் நூறு சீடைகள்
முன்னே வைத்துச் சென்றனர்.
ஏக்கத் தோடு பாட்டியும்
எதிரே இருந்த சீடையைப்
பார்க்க வில்லை; சிரித்தனள்;
பைய எழுந்து நின்றனள்.
சின்னத் தூக்கு ஒன்றிலே
சீடை யாவும் வைத்தனள்.
என்ன செய்தாள், தெரியுமா?
எடுத்துச் சொல்வேன், கேளுங்கள்;
பல்லில் லாத பாட்டிக்குப்
பத்துப் பேரப் பிள்ளைகள்.
எல்லாப் பேரப் பிள்ளையும்
எதிரே ஒருநாள் வந்தனர்.
“பத்துப் பத்துச் சீடைகள்
பாட்டி உனக்கே” என்றனர்.
மொத்தம் நூறு சீடைகள்
முன்னே வைத்துச் சென்றனர்.
ஏக்கத் தோடு பாட்டியும்
எதிரே இருந்த சீடையைப்
பார்க்க வில்லை; சிரித்தனள்;
பைய எழுந்து நின்றனள்.
சின்னத் தூக்கு ஒன்றிலே
சீடை யாவும் வைத்தனள்.
என்ன செய்தாள், தெரியுமா?
எடுத்துச் சொல்வேன், கேளுங்கள்;
Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
தடியை ஊன்றி ஊன்றியே
தன்னந் தனியாய்ப் பாட்டியும்
நடந்து நடந்து சென்றனள்;
நான்கு தெருவைக் கடந்தனள்.
மாவு அரைக்கும் ஓரிடம்
வந்த பிறகே நின்றனள்.
ஆவ லாக நுழைந்தனள்;
“அரைத்துக் கொடுப்பீர்” என்றனள்.
உருண்டைச் சீடை யாவுமே
உடைந்து நொறுங்கிக் கடைசியில்
அருமை மாவாய் மாறின.
ஆஹா ! பாட்டி மகிழ்ந்தனள்.
வீடு வந்து சேர்ந்தனள்
வேக மாகப் பாட்டியும்.
சீடை மாவில் நெய்யுடன்
சீனி சேர்த்துப் பிசைந்தனள்.
தின்னப் போகும் வேளையில்
சேர்ந்து பேரப் பிள்ளைகள்
முன்னே வந்து நின்றனர்.
“என்ன பாட்டி?” என்றனர்.
பாட்டி சீடை மாவினைப்
பத்துப் பேரப் பிள்ளைக்கும்
ஊட்டி ஊட்டி விட்டனள்;
ஒருவாய் அவளும் உண்டனள் !
தன்னந் தனியாய்ப் பாட்டியும்
நடந்து நடந்து சென்றனள்;
நான்கு தெருவைக் கடந்தனள்.
மாவு அரைக்கும் ஓரிடம்
வந்த பிறகே நின்றனள்.
ஆவ லாக நுழைந்தனள்;
“அரைத்துக் கொடுப்பீர்” என்றனள்.
உருண்டைச் சீடை யாவுமே
உடைந்து நொறுங்கிக் கடைசியில்
அருமை மாவாய் மாறின.
ஆஹா ! பாட்டி மகிழ்ந்தனள்.
வீடு வந்து சேர்ந்தனள்
வேக மாகப் பாட்டியும்.
சீடை மாவில் நெய்யுடன்
சீனி சேர்த்துப் பிசைந்தனள்.
தின்னப் போகும் வேளையில்
சேர்ந்து பேரப் பிள்ளைகள்
முன்னே வந்து நின்றனர்.
“என்ன பாட்டி?” என்றனர்.
பாட்டி சீடை மாவினைப்
பத்துப் பேரப் பிள்ளைக்கும்
ஊட்டி ஊட்டி விட்டனள்;
ஒருவாய் அவளும் உண்டனள் !
Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
எட்டுக் கோழிக் குஞ்சுகள்
எட்டுக் கோழிக் குஞ்சுகள்
இரையைத் தேடிச் சென்றன.
குட்டை யாக ஒருபுழு
குறுக்கே செல்லக் கண்டன.
பார்த்த வுடனே எட்டுமே
பாய்ந்து கொல்ல முயன்றன.
யார்தான் புழுவைத் தின்பது?
என்று சண்டை போட்டன.
சிறகை அடித்துக் கொண்டன;
சீறித் தாவிக் கொத்தின;
குரலைக் காட்டி வேகமாய்க்
கோபத் தோடு கூவின.
அம்மாக் கோழி குரலுமே
அந்தச் சமயம் கேட்கவே,
வம்புச் சண்டை நிறுத்தின.
மனத்தைக் கட்டுப் படுத்தின.
சண்டை ஓய்ந்து போனதும்
தரையைக் கூர்ந்து நோக்கின.
கண்ணில் அந்தப் புழுவையே
காண வில்லை; இல்லையே !
சண்டை முடியும் வரையிலும்
சாவ தற்கு நிற்குமோ ?
மண்டு அல்ல அப்புழு.
மகிழ்ந்து தப்பி விட்டதே!
எட்டுக் கோழிக் குஞ்சுகள்
இரையைத் தேடிச் சென்றன.
குட்டை யாக ஒருபுழு
குறுக்கே செல்லக் கண்டன.
பார்த்த வுடனே எட்டுமே
பாய்ந்து கொல்ல முயன்றன.
யார்தான் புழுவைத் தின்பது?
என்று சண்டை போட்டன.
சிறகை அடித்துக் கொண்டன;
சீறித் தாவிக் கொத்தின;
குரலைக் காட்டி வேகமாய்க்
கோபத் தோடு கூவின.
அம்மாக் கோழி குரலுமே
அந்தச் சமயம் கேட்கவே,
வம்புச் சண்டை நிறுத்தின.
மனத்தைக் கட்டுப் படுத்தின.
சண்டை ஓய்ந்து போனதும்
தரையைக் கூர்ந்து நோக்கின.
கண்ணில் அந்தப் புழுவையே
காண வில்லை; இல்லையே !
சண்டை முடியும் வரையிலும்
சாவ தற்கு நிற்குமோ ?
மண்டு அல்ல அப்புழு.
மகிழ்ந்து தப்பி விட்டதே!
Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
நன்றி
மாட்டு வண்டி ஒன்றில் கறுப்பன்
மூட்டை ஏற்றிச் சென்றான்.
மேட்டில் வண்டி ஏறும் போது
மூட்டை விழவே நின்றான்.
உருளைக் கிழங்கு மூட்டை அதனை
ஒருவ னாகத் தூக்கப்,
பெரிதும் கறுப்பன் முயன்ற போது
பெரியார் ஒருவர் வந்தார்.
“இருவர் நாமும் சேர்ந்தால் இதனை
எளிதில் தூக்க முடியும்.
சிரமம் இன்றி இருந்த இடத்தில்
திரும்ப வைத்து விடலாம்”
பெரியார் இதனைக் கூறிவிட்டுப்
பெரிய மூட்டை அதனைக்
கறுப்ப னோடு சேர்ந்து தூக்கிக்
கட்டை வண்டி சேர்த்தார்.
“இந்த ஏழை சிரமம் தீர்க்க
இனிய உதவி செய்தீர்.
எந்த வகையில் நன்றி சொல்வேன்?”
என்று கறுப்பன் கூற,
“வாயால் நன்றி கூற வேண்டாம்.
மகிழ்ச்சி யோடு பிறர்க்கு
நீயும் உதவி செய்தால் எனது
நெஞ்சு குளிரும்” என்றார்.
மாட்டு வண்டி ஒன்றில் கறுப்பன்
மூட்டை ஏற்றிச் சென்றான்.
மேட்டில் வண்டி ஏறும் போது
மூட்டை விழவே நின்றான்.
உருளைக் கிழங்கு மூட்டை அதனை
ஒருவ னாகத் தூக்கப்,
பெரிதும் கறுப்பன் முயன்ற போது
பெரியார் ஒருவர் வந்தார்.
“இருவர் நாமும் சேர்ந்தால் இதனை
எளிதில் தூக்க முடியும்.
சிரமம் இன்றி இருந்த இடத்தில்
திரும்ப வைத்து விடலாம்”
பெரியார் இதனைக் கூறிவிட்டுப்
பெரிய மூட்டை அதனைக்
கறுப்ப னோடு சேர்ந்து தூக்கிக்
கட்டை வண்டி சேர்த்தார்.
“இந்த ஏழை சிரமம் தீர்க்க
இனிய உதவி செய்தீர்.
எந்த வகையில் நன்றி சொல்வேன்?”
என்று கறுப்பன் கூற,
“வாயால் நன்றி கூற வேண்டாம்.
மகிழ்ச்சி யோடு பிறர்க்கு
நீயும் உதவி செய்தால் எனது
நெஞ்சு குளிரும்” என்றார்.
Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
கழுகுக் காட்சி
திருக்கழுக் குன்ற மலையினிலே
தினமும் உச்சி வேளையிலே
அருமைக் காட்சி கண்டிடவே
அங்கே மக்கள் கூடுவரே.
வானை நிமிர்ந்து பார்த்திடுவர்;
வருகை தன்னை நோக்கிடுவர்;
ஏனோ இன்னும் வரவில்லை?
என்றே சிலரும் ஏங்கிடுவர்.
சட்டென வானில் இருகழுகு
வட்டம் போடும் காட்சியினைச்
சுட்டிக் காட்டுவர் சிலபேர்கள்.
துள்ளிச் சிறுவர் குதித்திடுவர்.
திருக்கழுக் குன்ற மலையினிலே
தினமும் உச்சி வேளையிலே
அருமைக் காட்சி கண்டிடவே
அங்கே மக்கள் கூடுவரே.
வானை நிமிர்ந்து பார்த்திடுவர்;
வருகை தன்னை நோக்கிடுவர்;
ஏனோ இன்னும் வரவில்லை?
என்றே சிலரும் ஏங்கிடுவர்.
சட்டென வானில் இருகழுகு
வட்டம் போடும் காட்சியினைச்
சுட்டிக் காட்டுவர் சிலபேர்கள்.
துள்ளிச் சிறுவர் குதித்திடுவர்.
Page 10 of 14 • 1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14
Similar topics
» என்ன செய்யலாம் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» 1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம்
» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
» ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் ! நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
» 1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம்
» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
» ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் ! நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
Page 10 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|