புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_vote_lcapசிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_voting_barசிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_vote_lcapசிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_voting_barசிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_vote_lcapசிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_voting_barசிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_vote_lcapசிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_voting_barசிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_vote_lcapசிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_voting_barசிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_vote_lcapசிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_voting_barசிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_vote_lcapசிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_voting_barசிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_vote_lcapசிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_voting_barசிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_vote_lcapசிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_voting_barசிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_vote_lcapசிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_voting_barசிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 9 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா


   
   

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 5:01 pm

First topic message reminder :



பால முருகன்


சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்

வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்

பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்

கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 11:13 pm


“பாரதத்தாய் நலமுடனே
வாழ்க ! வாழ்க !
பாரதியார் புகழ்வாழ்க !
வாழ்க !” என்றே

குழந்தைகளும் பெரியோரும்
கூடி ஒன்றாய்க்
குரல்எழுப்பி, உணர்ச்சியுடன்
முழங்கும் போது,

“பாரதத்தாய் நலமுடனே
வாழ்க ! வாழ்க !
பாரதியார் புகழ்என்றும்
வாழ்க ! வாழ்க !”

எனஅந்தச் சேவகரும்
உணர்ச்சி யோடே
எங்களுடன் வாய்விட்டுப்
பாட லானார்.

‘இந்தியரே நாமும்’ என
அந்த நேரம்
எண்ணியதால் தமைமறந்து
பாடி னாரே !


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 20, 2013 4:19 pm

அழகான அருமையான பாடல்கள் பகிர்வுக்கு நன்றி தம்பி



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:31 pm

ஆண்எலியும் பெண்எலியும்

ஆண்எலி ஒன்று, பெண்எலி ஒன்று
அன்பாய் வளையில் வசித்தனவே.

ஆண்எலி எதிரே, பெண்எலி எதிரே
அப்பம் பெரிதாய் இருந்ததுவே.

ஆண்எலி தின்றது, பெண்எலி தின்றது.
ஆயினும் ஆசை தீரவில்லை.

ஆண்எலி புகுந்தது, பெண்எலி புகுந்தது
அருகில் இருந்த வீட்டினிலே.

ஆண்எலி பார்த்தது, பெண்எலி பார்த்தது
அருமைப் பண்டம் பொறியினிலே.

ஆண்எலி பாய்ந்தது, பெண்எலி பாய்ந்தது
ஆசை தீரத் தின்றிடவே.

ஆண்எலி கேட்டது, பெண்எலி கேட்டது
அதிரும் சத்தம் பட்டெனவே.

ஆண்எலி திகைத்தது, பெண்எலி திகைத்தது
அந்தோ ! பொறியில் சிக்கினவே.

ஆண்எலி கதையும் பெண்எலி கதையும்
அப்புறம் அறியேன், அறியேனே !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:32 pm

கழுதையும் கட்டெறும்பும்


கட்டெ றும்பு ஊர்ந்து ஊர்ந்து
கழுதை அருகில் சென்றதாம்.
கழுதை காலில் ஏறி ஏறிக்
காதுப் பக்கம் போனதாம்.

காதில் புகுந்து மெல்ல மெல்லக்
கடித்துக் கடித்துப் பார்த்ததாம்.
காள்கா ளென்று கழுதை கத்த
கட்டெ றும்பு மிரண்டதாம் !

காதி லிருந்து தரையை நோக்கிக்
கர்ணம் போட்டுக் குதித்ததாம்.
அந்தச் சமயம் பார்த்துக் கழுதை
அதன்மேல் காலை வைத்ததாம்.

காலில் சிக்கிக் கொண்ட எறும்பின்
கதை முடிந்து போனதாம் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:32 pm

பொன்னைவிட உயர்ந்தது ?

‘பொன்னை விட உயர்ந்தது
என்ன?’ என்ற கேள்வியை
சின்ன வயதில் காந்தியும்
தேர்வுத் தாளில் கண்டனர்.

‘பொன்னை விட உயர்ந்தது
உண்மை, உண்மை, உண்மைதான்’
என்ற பதிலை காந்தியும்
எழுதி னாரே மகிழ்வுடன்.

சின்ன வயதில் உண்மையின்
சிறப்பை உணர்ந்த காந்திதான்
பின்னர் உலகில் மிகமிகப்
பெரிய மனிதர் ஆயினார் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:33 pm

கோழியின் பதில்


பையன் :

பெட்டைக் கோழி, பெட்டைக் கோழி,
தட்டு நெல்லைத் தருகிறேன்.
இட்ட முட்டை எத்த னையோ?
இன்றே எண்ணித் தந்திடு.

கோழி :

எட்டு நாளாய்த் தினமுமே
இட்டு வைத்தேன் முட்டைகள்.
இட்ட முட்டை எட்டையும்
எடுத்துக் கொண்டான் ஒருவனே.

அவயங் காக்க நானுமே
ஆசை கொண்டேன்; ஆயினும்
அபயம் தந்த மனிதனே
அனைத்தும் தின்று தீர்த்தனன் !

குஞ்சு பொரித்துப் பார்க்கவே
கொண்டேன் ஆசை ; ஆயினும்
மிஞ்ச வில்லை முட்டைகள் ;
முழுதும் அவனே தின்றனன்.

எட்டு முட்டை தின்றவன்
என்னை என்ன செய்வனோ?
விட்டு வைக்க வேண்டுமே.
மிஞ்சு வேனோ நானுமே !




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:35 pm

பாம்பைக் கொன்ற வீரன் !

சாலிக் கிராமம் அருகிலே
சைக்கிள் ஓட்டிச் செல்கையில்,
நாலு மீட்டர் இருக்கலாம்;
நடுவே பாம்பு கிடந்தது.

அஞ்ச வில்லை நானுமே;
அலற வில்லை நானுமே;
கொஞ்ச மேனும் தயக்கமும்
கொள்ள வில்லை நானுமே.

நிலவின் ஒளியில் வேகமாய்
நேராய் எனது சைக்கிளைத்
தலையைப் பார்த்து ஏற்றினேன்;
‘சட்னி’ என்றே எண்ணினேன்.

சிறிது தூரம் சென்றதும்,
திரும்பிப் பார்த்தேன் நானுமே.
சிறுவர் இருவர் என்னிடம்
சிரித்துக் கொண்டே வந்தனர்.

“உண்மைப் பாம்பு என்றுநீ
ஓலைப் பாம்பை எண்ணினாய்.
நன்கு வீரம் காட்டினாய்,
நண்பா” என்றே நகைத்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:35 pm

மனிதனும் தேனீயும்

மனிதன் :

தேடிச் சென்று பூவிலே
தேனை எடுக்கும் ஈயே வா.
ஜாடி நிறையத் தேனையே
தருவேன்; குடித்துச் செல்லுவாய்.

தேனீ :

என்னைப் போலத் தினம்தினம்
ஈக்கள் தேனை எடுத்தன.
கொண்டு வந்து கவனமாய்க்
கூட்டில் சேர்த்து வைத்தன.

கூட்டைக் கலைத்தே ஈக்களைக்
கொன்று விட்டுத் தேனையே
வீட்டில் சேர்த்து வைக்கிறீர்.
விருந்து தரவா அழைக்கிறீர் ?

எத்திப் பிழைக்க நானுமே
எண்ண மாட்டேன். ஆதலால்,
புத்தம் புதிய தேனையே
பூவில் எடுக்கப் போகிறேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:36 pm

கிட்டுவின் கீர்த்தி

பட்டம் ஒன்றைப் பெரியதாய்க்
கட்டி அதனின் நடுவிலே
கொட்டை எழுத்தில் என்பெயர்
பட்டை அடித்து எழுதினேன்.

வெட்ட வெளியில் நின்றுநான்
விட்டேன் நூலில் கட்டியே.
வெட்டி வெட்டி இழுக்கவே
பட்டம் மேலே சென்றதே !

எட்டி வானைத் தொட்டிடும்
இன்ப மான வேளையில்,
பட்டென் றந்த நூலுமே
நட்ட நடுவில் அறுந்ததே !

கட்ட விழ்ந்த காளைபோல்
காற்ற டித்த திசையிலே
பட்டம் பறந்து சென்றதே!
விட்டுத் திரும்ப முடியுமோ?

முட்டு கின்ற மூச்சுடன்
குட்டி மான்போல் ஓடினேன்.
எட்டி டாத தொலைவிலே
ஏய்த்துப் பறந்து சென்றதே !

பட்ட ணத்தை நோக்கிஎன்
பட்டம் பறந்து செல்லுமே.
எட்டு மாடி உள்ளதோர்
கட்ட டத்தில் இறங்குமே !

பட்ட ணத்தில் உள்ளவர்
பலரும் இதனைக் காணுவர்;
வட்ட மாகக் கூடுவர்;
மகிழ்ச்சி யோடு நெருங்குவர்.

பட்டம் நடுவே பெரியதாய்க்
கொட்டை எழுத்தில் என்பெயர்
‘கிட்டு’ என்றே தெரிந்திடும்.
கீர்த்தி அதனால் பெருகிடும் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:37 pm

வாழைப் பழத்தின் மகிழ்ச்சி

ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு
அவற்றுடன் என்னை வைத்தார்கள்.
‘சாப்பிடு வீர்’ என வந்தவர்முன்
தட்டில் வைத்துக் கொடுத்தார்கள்.

வந்தவர் மிகவும் பணக்காரர்.
“வயிற்றில் இல்லை இடம்” என்றார்.
“இந்தப் பைக்குள் வைக்கின்றோம்,
எடுத்துக் காரில் சென்றிடலாம்.”

என்றதும் பையுடன் பணக்காரர்
ஏறினர் தமது காரினிலே.
சென்றிடும் வழியில் திராட்சையுடன்
தின்றனர் ஆப்பிள், ஆரஞ்சை.

‘வாழைப் பழத்தை என்னுடைய
வாழ்க்கையில் தின்றதே இல்லை. இது
ஏழைகள் தின்னும் பழம்’ என்றே
எறிந்தார் என்னைச் சாலையிலே.

காலையில் இருந்து மாலைவரை
கடும்பசி யாலே துடிதுடித்துச்
சாலையில் நின்ற ஒருசிறுவன்
சட்டென என்னைப் பிடித்தானே !

ஏழைச் சிறுவன் பசிதீர்த்தே
இன்பம் மிகமிக நான்பெறுவேன்.
வாழை மரமாம் என் அம்மா
மனசு குளிரச் செய்வேனே!

Sponsored content

PostSponsored content



Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக