புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10 
2 Posts - 1%
prajai
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10 
441 Posts - 47%
heezulia
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10 
30 Posts - 3%
prajai
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா


   
   

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 5:01 pm

First topic message reminder :



பால முருகன்


சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்

வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்

பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்

கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:52 pm

புத்தகம் இதோ !

புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம் நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !

முத்து முத்துக் கதைக ளெல்லாம்
விரும்பி நாமும் படித்திட
உத்த மர்கள் வாழ்க்கை தன்னை
உணர்ந்து நாமும் நடந்திட

புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம் நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !

குருவைப் போல நல்ல தெல்லாம்
கூறி நம்மை உயர்த்திட
அருமை நண்பன் போல் நமக்கு
அருகில் இருந்து உதவிட

புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம் நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !

மெத்தப் பெரிய கவிஞ ரோடும்
வேண்டும் போது பேசிட
சித்தம் மகிழச் செய்யும் நல்ல
சித்தி ரங்கள் பார்த்திட

புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம் நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !

இரவும் பகலும் எந்த நாளும்
ஏற்ற கல்வி கற்றிட
உரிய முறையில் அறிவு பெற்றே
உயர்ந்து நாமும் சிறந்திட

புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம் நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:53 pm

என் கடிதம்

அருமை மிக்க நண்ப னுக்குக்
கடிதம் எழுதவே
ஆசை யாக வெள்ளைத் தாளை
எடுத்துக் கொள்ளுவேன்.

‘அன்பு மிக்க சோமு வுக்கு,’
என்று தொடங்குவேன்.
அச்ச டித்த எழுத்தைப் போல
அழகாய் எழுதுவேன்.

‘வணக்கம்’ என்றே அடுத்த வரியில்
தனியாய் எழுதுவேன்.
வரிசை யாகத் தகவல் யாவும்
புரியக் கூறுவேன்.

ஆசை யாகக் கடிதம் தன்னை
எழுதி முடித்ததும்
‘அன்பு நண்பன்,’ என்றே எழுதி
அதற்கும் அடியிலே,

‘கண்ணன்’ என்றே கையெ ழுத்தைப்
போட்டு நானுமே,
கடிதம் அதனை உறைக்குள் வைத்துக்
கருத்தாய் ஒட்டுவேன்.

குண்டு குண்டாய் நண்ப னுடைய
விலாசம் எழுதுவேன்.
குறையில் லாமல் அஞ்சல் தலையை
உறைமேல் ஒட்டுவேன்.

அஞ்சல் பெட்டி வாய்க்குள் போட்டு
வீடு திரும்புவேன்.
அருமை நண்பன் பதிலைக் காண
ஆவல் கொள்ளுவேன்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:54 pm

கொய்யாப் பூவே !

கொய்யாப் பூவே, கொய்யாப் பூவே,
தரையில் கிடப்பதேன்?

குருவி, காகம் கிளையில் அமர்ந்து
கொத்திப் போட்டதோ?-இல்லை,
பெரிய காற்று விரைந்து வந்து
பிய்த்துப் போட்டதோ?

கொய்யாப் பூவே, கொய்யாப் பூவே,
தரையில் கிடப்பதேன்?

குறும்புப் பையன் எறிந்த கல்லால்
பிரிய நேர்ந்ததோ? - இல்லை,
கொறிக்கும் அணில்தான் உன்னைக் கீழே
பறித்துப் போட்டதோ?

கொய்யாப் பூவே, கொய்யாப் பூவே,
தரையில் கிடப்பதேன்?

ஃ ஃ ஃ

பூவே, நீயே காய்ஆவாய்.
காயி லிருந்து கனிஆவாய்.

கனியை உடனே பறித்திடலாம்
கடித்துக் கடித்துச் சுவைத்திடலாம்

என்றே நானும் சிலநாளாய்
எண்ணி யிருந்தேன். ஆனால்என்

எண்ணத் தினிலே மண்விழவா
இப்படி மண்ணில் நீ விழுந்தாய் ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:55 pm

மத்தாப்பு
(முன்னும் பின்னும்)

கம்பி மத்தாப்பு-அதைக்
கையில் பிடித்ததுமே
தம்பி கொளுத்தினான்-நண்பர்
தாவி வந்தனர்.

நண்பர் அனைவரும்-பார்த்து
நன்கு ரசித்தனர்.
வண்ணப் பொறிகளை-கண்டு
மகிழ்ந்து குதித்தனர்.

“எரிந்த கம்பியை-உடன்
எடுத்துச் சென்றுநீ
தெருவின் ஓரமாய்-போட்டுத்
திரும்பி வந்திடு.

நட்ட நடுவிலே-போட்டால்,
நடப்போர் கால்களைச்
சுட்டுப் பொசுக்கிடும்”-எனச்
சொன்னார் தந்தையும்.

எரியும் போதிலே-‘ஓஹோ!‘
என்று புகழ்ந்தனர்.
எரிந்து முடிந்ததும்-அந்தோ,
இந்த நிலைமையா!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:56 pm

சிறுவர் பத்திரிகை

சிறுவருக் கான பத்திரி கைகள்
நிறைய வேண்டும்.
சித்திரம் எல்லாப் பக்கங் களிலும்
திகழ வேண்டும்.
அருமை யான கதையும் பாட்டும்
இருக்க வேண்டும்.
அறிவைப் புகட்டும் கட்டுரை பலவும்
அமைய வேண்டும்.
தெய்வ பக்தி, தேச பக்தி
ஊட்ட வேண்டும்.
சிரிக்க வைக்கும் செய்தி கூட
இருக்க வேண்டும்.
ஐயம் தீர்க்கக் கேள்வியும் பதிலும்
அவசியம் வேண்டும்.
அறிஞர் வாழ்வை அழகாய் எடுத்துக்
கூற வேண்டும்.

புத்தம் புதிய கலைகள் எல்லாம்
விளக்க வேண்டும்.
புதிர்கள் போட்டு நமது அறிவை
வளர்க்க வேண்டும்.
நித்தம் நமது பண்பை மேலும்
உயர்த்த வேண்டும்.
நிலைத்த புகழைப் பெறவே வழிகள்
காட்ட வேண்டும்.

உற்ற நண்பர் போலே அவையும்
உதவ வேண்டும்.
உதவி, உதவி நமது வாழ்வை
உயர்த்த வேண்டும்.
பெற்றோர் அவற்றைக் காசு கொடுத்து
வாங்க வேண்டும்.
பிள்ளைக ளுக்குப் பிரியத் துடனே
வழங்க வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:57 pm

அண்ணனின் வேலை

எங்கள் அண்ணன் செய்த வேலை
என்ன என்று தெரியுமா?

வேளா வேளை தின்று விட்டு
விழுந்து படுத்துத் தூங்க வில்லை.
பாழாய்ப் போன சினிமாப் பார்க்கப்
பகலில் க்யூவில் நிற்க வில்லை.

கெட்ட நண்பர் கூடச் சேர்ந்து
வட்ட மிட்டுத் திரிய வில்லை.
வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டு
வீம்புச் சண்டை போடவில்லை.

எங்கள் அண்ணன் செய்த வேலை
என்ன என்று தெரியுமா?

பார தத்தைத் தாக்க வந்தார்
பகைவர் என்று தெரிந்ததும்,
வீரம் பொங்கத் தீரத் தோடு
விரைந்து சென்றார் போர்க்களம்.

உறக்கம் இன்றி, உணவும் இன்றி
உயிரை மதித்தி டாமலே,
அரக்க ரான எதிரிப் படையை
அலற அலற விரட்டினார்.

மூர்க்க மான டாங்கிப் படையை
முறிய டித்து நொறுக்கினார்.
தாக்க வந்த விமானம் யாவும்
தவிடு பொடியாய் ஆக்கினார்.

சிங்கம் போல வீரத்தோடு
தேசம் தன்னைக் காக்கவே
எங்கள் அண்ணன் செய்த வேலை
எனக்குப் பெருமை அல்லவோ?

எனக்கு மட்டும் பெருமையில்லை;
இந்தி யர்க்கே பெருமையாம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:58 pm

பெருமை மிக்க பாரதம்

பெருமை மிக்க பார தத்தில்
பிறந்த குழந்தைகள்-என்ற
பெருமை யோடு நாமெல் லோரும்
வளர்ந்து வருகிறோம்.
சிறந்த குணங்கள் பெற்று நமது
நாடு செழிக்கவே
செயல்கள் பலவும் திருத்த மாகச்
செய்து மகிழுவோம்.

அன்னை, தந்தை மகிழும் வகையில்
கற்று வருகிறோம்-நல்ல
அறிஞர் சொன்ன வழியில் நாளும்
நிற்க முயல்கிறோம்.
உண்மை ஒன்றே கடவுள் என்றே
உணர்ந்து வருகிறோம்.
உழைத்து நாமும் உயர்வோம் என்றே
உறுதி கொள்கிறோம்.

ஏழை யென்றும் எளியோ ரென்றும்.
எண்ணங் கொண்டிடோம்-நாம்
இந்தி யர்கள் அனைவ ருக்கும்
சொந்த மாகிறோம்.
நாளை இந்த நாட்டை நாமே
ஆளப் போகிறோம்-இன்றே
நல்ல முறையில் அடித்த ளத்தை
அமைத்துக் கொள்ளுவோம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:58 pm

ஆறு சிறுவர்கள்

சின்னஞ் சிறிய ஊரு-இதில்
தென்னை மரங்கள் நூறு.
என்னை சேர்த்து மொத்தம்-இங்கே
இருக்கும் சிறுவர் ஆறு.

கடைகள் இங்கே இல்லை.
கல்விக் கூடம் இல்லை.
நடந்து சென்றே கற்போம்,
நான்கு கிலோ மீட்டர்.

முருகன் முதலாம் வகுப்பு.
மோசஸ் இரண்டாம் வகுப்பு.
கறுப்பன் மூன்றாம் வகுப்பு.
காசிம் நான்காம் வகுப்பு.

நந்தன் ஐந்தாம் வகுப்பு.
நானோ ஆறாம் வகுப்பு.
ஐந்து பேரும் என்னை
அண்ணா என்றே அழைப்பார்.

சுட்டுப் பொசுக்கும் வெயிலில்,
சுழற்றி அடிக்கும் காற்றில்
கொட்டும் மழையில் கூட
கூடி நாங்கள் செல்வோம்.

படித்துப் படித்து மேலும்
பட்டம் பலவும் பெறுவோம்.
படித்து முடித்த பின்னர்
பலரும் போற்ற வாழ்வோம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:59 pm

நான்கு குழந்தைகள்

எங்கள் வீட்டில் குழந்தைகள்
என்னைச் சேர்த்து நான்கு பேர்.

தங்கைப் பாப்பா ஒன்று.
சமர்த்துப் பையன் இரண்டு.
சின்னக் கண்ணன் மூன்று.
சிரிக்கும் முருகன் நான்கு.

தங்கைப் பாப்பா மீனா.
சமர்த்துப் பையன் நானே.
சின்னக் கண்ணன் எங்கே?
சிரிக்கும் முருகன் எங்கே?

எங்கே என்றா கேட்கிறீர்?
இங்கே வந்து பாருங்கள்.
எங்கள் பூசை அறையிலே
இருக்கி றாரே இருவரும் !
அம்மா தினமும் சொல்லுவாள்
அவர்கள் தெய்வக் குழந்தைகள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 11:00 pm

நமது இமயம்

உலகில் மிகவும் உயர்ந்த மலை
நமது இமயமாம்.
உறுதி யோடு என்றும் நிமிர்ந்தே
நிற்கும் இமயமாம்.
பல முனிவர் தவம் இருக்க,
பார்த்த இமயமாம்.
பகைவர் உள்ளே புகுந்தி டாமல்
தடுக்கும் இமயமாம்.

பனியை முதுகில் போர்த்துக் கொண்டு
மின்னும் இமயமாம்.
பயமு றுத்தும் கரடி புலிகள்
வாழும் இமயமாம்.

கனிகி ழங்கு மூலிகைகள்
காணும் இமயமாம்.
கங்கை, சிந்து, பிரம்ம புத்ரா
பிறக்கும் இமயமாம்.

இந்தி யாவின் வடக்கில் உள்ள
எல்லை இமயமாம்.
எவரெஸ்ட் என்னும் உயர்ந்த சிகரம்
இருக்கும் இமயமாம்.
டென்சிங் போல நானும் இமயம்
ஏறப் போகிறேன்.
திடமாய் நமது கொடியை உயரே
ஏற்றப் போகிறேன்

Sponsored content

PostSponsored content



Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக