ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

4 posters

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Empty சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by சிவா Thu Dec 19, 2013 5:01 pm

First topic message reminder :



பால முருகன்


சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்

வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்

பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்

கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by சிவா Thu Dec 19, 2013 10:52 pm

புத்தகம் இதோ !

புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம் நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !

முத்து முத்துக் கதைக ளெல்லாம்
விரும்பி நாமும் படித்திட
உத்த மர்கள் வாழ்க்கை தன்னை
உணர்ந்து நாமும் நடந்திட

புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம் நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !

குருவைப் போல நல்ல தெல்லாம்
கூறி நம்மை உயர்த்திட
அருமை நண்பன் போல் நமக்கு
அருகில் இருந்து உதவிட

புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம் நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !

மெத்தப் பெரிய கவிஞ ரோடும்
வேண்டும் போது பேசிட
சித்தம் மகிழச் செய்யும் நல்ல
சித்தி ரங்கள் பார்த்திட

புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம் நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !

இரவும் பகலும் எந்த நாளும்
ஏற்ற கல்வி கற்றிட
உரிய முறையில் அறிவு பெற்றே
உயர்ந்து நாமும் சிறந்திட

புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம் நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by சிவா Thu Dec 19, 2013 10:53 pm

என் கடிதம்

அருமை மிக்க நண்ப னுக்குக்
கடிதம் எழுதவே
ஆசை யாக வெள்ளைத் தாளை
எடுத்துக் கொள்ளுவேன்.

‘அன்பு மிக்க சோமு வுக்கு,’
என்று தொடங்குவேன்.
அச்ச டித்த எழுத்தைப் போல
அழகாய் எழுதுவேன்.

‘வணக்கம்’ என்றே அடுத்த வரியில்
தனியாய் எழுதுவேன்.
வரிசை யாகத் தகவல் யாவும்
புரியக் கூறுவேன்.

ஆசை யாகக் கடிதம் தன்னை
எழுதி முடித்ததும்
‘அன்பு நண்பன்,’ என்றே எழுதி
அதற்கும் அடியிலே,

‘கண்ணன்’ என்றே கையெ ழுத்தைப்
போட்டு நானுமே,
கடிதம் அதனை உறைக்குள் வைத்துக்
கருத்தாய் ஒட்டுவேன்.

குண்டு குண்டாய் நண்ப னுடைய
விலாசம் எழுதுவேன்.
குறையில் லாமல் அஞ்சல் தலையை
உறைமேல் ஒட்டுவேன்.

அஞ்சல் பெட்டி வாய்க்குள் போட்டு
வீடு திரும்புவேன்.
அருமை நண்பன் பதிலைக் காண
ஆவல் கொள்ளுவேன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by சிவா Thu Dec 19, 2013 10:54 pm

கொய்யாப் பூவே !

கொய்யாப் பூவே, கொய்யாப் பூவே,
தரையில் கிடப்பதேன்?

குருவி, காகம் கிளையில் அமர்ந்து
கொத்திப் போட்டதோ?-இல்லை,
பெரிய காற்று விரைந்து வந்து
பிய்த்துப் போட்டதோ?

கொய்யாப் பூவே, கொய்யாப் பூவே,
தரையில் கிடப்பதேன்?

குறும்புப் பையன் எறிந்த கல்லால்
பிரிய நேர்ந்ததோ? - இல்லை,
கொறிக்கும் அணில்தான் உன்னைக் கீழே
பறித்துப் போட்டதோ?

கொய்யாப் பூவே, கொய்யாப் பூவே,
தரையில் கிடப்பதேன்?

ஃ ஃ ஃ

பூவே, நீயே காய்ஆவாய்.
காயி லிருந்து கனிஆவாய்.

கனியை உடனே பறித்திடலாம்
கடித்துக் கடித்துச் சுவைத்திடலாம்

என்றே நானும் சிலநாளாய்
எண்ணி யிருந்தேன். ஆனால்என்

எண்ணத் தினிலே மண்விழவா
இப்படி மண்ணில் நீ விழுந்தாய் ?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by சிவா Thu Dec 19, 2013 10:55 pm

மத்தாப்பு
(முன்னும் பின்னும்)

கம்பி மத்தாப்பு-அதைக்
கையில் பிடித்ததுமே
தம்பி கொளுத்தினான்-நண்பர்
தாவி வந்தனர்.

நண்பர் அனைவரும்-பார்த்து
நன்கு ரசித்தனர்.
வண்ணப் பொறிகளை-கண்டு
மகிழ்ந்து குதித்தனர்.

“எரிந்த கம்பியை-உடன்
எடுத்துச் சென்றுநீ
தெருவின் ஓரமாய்-போட்டுத்
திரும்பி வந்திடு.

நட்ட நடுவிலே-போட்டால்,
நடப்போர் கால்களைச்
சுட்டுப் பொசுக்கிடும்”-எனச்
சொன்னார் தந்தையும்.

எரியும் போதிலே-‘ஓஹோ!‘
என்று புகழ்ந்தனர்.
எரிந்து முடிந்ததும்-அந்தோ,
இந்த நிலைமையா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by சிவா Thu Dec 19, 2013 10:56 pm

சிறுவர் பத்திரிகை

சிறுவருக் கான பத்திரி கைகள்
நிறைய வேண்டும்.
சித்திரம் எல்லாப் பக்கங் களிலும்
திகழ வேண்டும்.
அருமை யான கதையும் பாட்டும்
இருக்க வேண்டும்.
அறிவைப் புகட்டும் கட்டுரை பலவும்
அமைய வேண்டும்.
தெய்வ பக்தி, தேச பக்தி
ஊட்ட வேண்டும்.
சிரிக்க வைக்கும் செய்தி கூட
இருக்க வேண்டும்.
ஐயம் தீர்க்கக் கேள்வியும் பதிலும்
அவசியம் வேண்டும்.
அறிஞர் வாழ்வை அழகாய் எடுத்துக்
கூற வேண்டும்.

புத்தம் புதிய கலைகள் எல்லாம்
விளக்க வேண்டும்.
புதிர்கள் போட்டு நமது அறிவை
வளர்க்க வேண்டும்.
நித்தம் நமது பண்பை மேலும்
உயர்த்த வேண்டும்.
நிலைத்த புகழைப் பெறவே வழிகள்
காட்ட வேண்டும்.

உற்ற நண்பர் போலே அவையும்
உதவ வேண்டும்.
உதவி, உதவி நமது வாழ்வை
உயர்த்த வேண்டும்.
பெற்றோர் அவற்றைக் காசு கொடுத்து
வாங்க வேண்டும்.
பிள்ளைக ளுக்குப் பிரியத் துடனே
வழங்க வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by சிவா Thu Dec 19, 2013 10:57 pm

அண்ணனின் வேலை

எங்கள் அண்ணன் செய்த வேலை
என்ன என்று தெரியுமா?

வேளா வேளை தின்று விட்டு
விழுந்து படுத்துத் தூங்க வில்லை.
பாழாய்ப் போன சினிமாப் பார்க்கப்
பகலில் க்யூவில் நிற்க வில்லை.

கெட்ட நண்பர் கூடச் சேர்ந்து
வட்ட மிட்டுத் திரிய வில்லை.
வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டு
வீம்புச் சண்டை போடவில்லை.

எங்கள் அண்ணன் செய்த வேலை
என்ன என்று தெரியுமா?

பார தத்தைத் தாக்க வந்தார்
பகைவர் என்று தெரிந்ததும்,
வீரம் பொங்கத் தீரத் தோடு
விரைந்து சென்றார் போர்க்களம்.

உறக்கம் இன்றி, உணவும் இன்றி
உயிரை மதித்தி டாமலே,
அரக்க ரான எதிரிப் படையை
அலற அலற விரட்டினார்.

மூர்க்க மான டாங்கிப் படையை
முறிய டித்து நொறுக்கினார்.
தாக்க வந்த விமானம் யாவும்
தவிடு பொடியாய் ஆக்கினார்.

சிங்கம் போல வீரத்தோடு
தேசம் தன்னைக் காக்கவே
எங்கள் அண்ணன் செய்த வேலை
எனக்குப் பெருமை அல்லவோ?

எனக்கு மட்டும் பெருமையில்லை;
இந்தி யர்க்கே பெருமையாம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by சிவா Thu Dec 19, 2013 10:58 pm

பெருமை மிக்க பாரதம்

பெருமை மிக்க பார தத்தில்
பிறந்த குழந்தைகள்-என்ற
பெருமை யோடு நாமெல் லோரும்
வளர்ந்து வருகிறோம்.
சிறந்த குணங்கள் பெற்று நமது
நாடு செழிக்கவே
செயல்கள் பலவும் திருத்த மாகச்
செய்து மகிழுவோம்.

அன்னை, தந்தை மகிழும் வகையில்
கற்று வருகிறோம்-நல்ல
அறிஞர் சொன்ன வழியில் நாளும்
நிற்க முயல்கிறோம்.
உண்மை ஒன்றே கடவுள் என்றே
உணர்ந்து வருகிறோம்.
உழைத்து நாமும் உயர்வோம் என்றே
உறுதி கொள்கிறோம்.

ஏழை யென்றும் எளியோ ரென்றும்.
எண்ணங் கொண்டிடோம்-நாம்
இந்தி யர்கள் அனைவ ருக்கும்
சொந்த மாகிறோம்.
நாளை இந்த நாட்டை நாமே
ஆளப் போகிறோம்-இன்றே
நல்ல முறையில் அடித்த ளத்தை
அமைத்துக் கொள்ளுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by சிவா Thu Dec 19, 2013 10:58 pm

ஆறு சிறுவர்கள்

சின்னஞ் சிறிய ஊரு-இதில்
தென்னை மரங்கள் நூறு.
என்னை சேர்த்து மொத்தம்-இங்கே
இருக்கும் சிறுவர் ஆறு.

கடைகள் இங்கே இல்லை.
கல்விக் கூடம் இல்லை.
நடந்து சென்றே கற்போம்,
நான்கு கிலோ மீட்டர்.

முருகன் முதலாம் வகுப்பு.
மோசஸ் இரண்டாம் வகுப்பு.
கறுப்பன் மூன்றாம் வகுப்பு.
காசிம் நான்காம் வகுப்பு.

நந்தன் ஐந்தாம் வகுப்பு.
நானோ ஆறாம் வகுப்பு.
ஐந்து பேரும் என்னை
அண்ணா என்றே அழைப்பார்.

சுட்டுப் பொசுக்கும் வெயிலில்,
சுழற்றி அடிக்கும் காற்றில்
கொட்டும் மழையில் கூட
கூடி நாங்கள் செல்வோம்.

படித்துப் படித்து மேலும்
பட்டம் பலவும் பெறுவோம்.
படித்து முடித்த பின்னர்
பலரும் போற்ற வாழ்வோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by சிவா Thu Dec 19, 2013 10:59 pm

நான்கு குழந்தைகள்

எங்கள் வீட்டில் குழந்தைகள்
என்னைச் சேர்த்து நான்கு பேர்.

தங்கைப் பாப்பா ஒன்று.
சமர்த்துப் பையன் இரண்டு.
சின்னக் கண்ணன் மூன்று.
சிரிக்கும் முருகன் நான்கு.

தங்கைப் பாப்பா மீனா.
சமர்த்துப் பையன் நானே.
சின்னக் கண்ணன் எங்கே?
சிரிக்கும் முருகன் எங்கே?

எங்கே என்றா கேட்கிறீர்?
இங்கே வந்து பாருங்கள்.
எங்கள் பூசை அறையிலே
இருக்கி றாரே இருவரும் !
அம்மா தினமும் சொல்லுவாள்
அவர்கள் தெய்வக் குழந்தைகள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by சிவா Thu Dec 19, 2013 11:00 pm

நமது இமயம்

உலகில் மிகவும் உயர்ந்த மலை
நமது இமயமாம்.
உறுதி யோடு என்றும் நிமிர்ந்தே
நிற்கும் இமயமாம்.
பல முனிவர் தவம் இருக்க,
பார்த்த இமயமாம்.
பகைவர் உள்ளே புகுந்தி டாமல்
தடுக்கும் இமயமாம்.

பனியை முதுகில் போர்த்துக் கொண்டு
மின்னும் இமயமாம்.
பயமு றுத்தும் கரடி புலிகள்
வாழும் இமயமாம்.

கனிகி ழங்கு மூலிகைகள்
காணும் இமயமாம்.
கங்கை, சிந்து, பிரம்ம புத்ரா
பிறக்கும் இமயமாம்.

இந்தி யாவின் வடக்கில் உள்ள
எல்லை இமயமாம்.
எவரெஸ்ட் என்னும் உயர்ந்த சிகரம்
இருக்கும் இமயமாம்.
டென்சிங் போல நானும் இமயம்
ஏறப் போகிறேன்.
திடமாய் நமது கொடியை உயரே
ஏற்றப் போகிறேன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 7 Empty Re: சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

Back to top

- Similar topics
» என்ன செய்யலாம் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» 1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம்
» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
» ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் ! நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum