ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கொடூரர்களை தெரிந்துக் கொள்வோம்

2 posters

Go down

உலக கொடூரர்களை தெரிந்துக் கொள்வோம் Empty உலக கொடூரர்களை தெரிந்துக் கொள்வோம்

Post by யாழவன் Sat Oct 31, 2009 9:31 am




ஹிட்லர், இடி அமீன் மட்டுமல்ல... வரலாற்றையே நடுங்க வைக்கும் கொடூர வில்லன்கள் ஏராளம். சிலரைப்பற்றி மட்டும் இங்கே....

அந்திரேய் சிக்காட்டிலோ (Andrei Chikatilo)

உலக கொடூரர்களை தெரிந்துக் கொள்வோம் Scan0001ரஷ்ய எல்லையோர நாடான உக்ரைனில் 1936 -ம் ஆண்டு பிறந்த சிக்காட்டிலோ இளமையில் தாழ்வு மனப்பான்மை கொண்ட சவலைப் பிள்ளை. அந்தத் தாழ்வு மனப்பான்மையே அவனை வேறு திசைக்குத் திருப்பியது. பதின்ம வயதில் தனக்கு ஆண்மை இல்லையோ என்ற சந்தேகத்தில் 9 வயதான சிறுமியைப் பாலியல் சித்ரவதை செய்தான். பிறகு திருமணம், குழந்தைகள் என நார்மல் வாழ்க்கையை முயற்சித்தாலும் அவனது வக்கிர மனம் அடங்கவில்லை. 78 -ல் ஒரு சிறுமியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, கத்தியால் குத்திக் கொன்றான். அந்தக் கொலையும் அது தந்த திருப்தியும் அவனுக்குள் வெறியாக ஊறின. விளைவு, அந்த ஆண்டு மட்டும் இவனால் கொல்லப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை ஏழு. பிறகு, கொன்று ரத்தம் பார்த்தால் மட்டுமே செக்ஸில் 'திருப்தி' அடையும் எடாகுட நிலையை எட்டினான்.

இளம் பெண்களையும் சிறுவர்களையும் ஏமாற்றிக் கடத்தும் கலையில் தேர்ந்து, அவர்களைச் சித்ரவதை செய்து கொலை செய்வதில் இன்பம் கூடிக் கொண்டே போனதாம் இவனுக்கு. ஒரே வருடத்தில் சிறுவர்கள் உட்பட 15 பேர் மர்மமாக கொல்லப்பட்டனர். போலிஸ் குழம்பியது. சைக்கோவோ, ஹோமோவா, சீரியல் கில்லரா என வகை பிரிக்க முடியாமல் தடுமாறியது. 1990 ல் இவன் சிக்கியபோது அவன் செய்த கொலைகள் உலகத்தையே நடுங்கச் செய்தது. மொத்தம் 53 கொலைகள் செய்திருப்பதை ஒப்புக்கொண்டான். 'நான் ஒரு அப்பாவி, என்னை விட்டுவிடுங்கள் என்னும் இவனுடைய கருணை மனு நிராகரிக்கப்பட்டது. 1992 பிப்ரவரி 14-ம் நாள் துப்பாக்கியால் பின் மண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

போல் பாட் (Pol Pot)

உலக கொடூரர்களை தெரிந்துக் கொள்வோம் Scan0002கம்போடியாவில் பிறந்து கம்யூனிசம் பயின்ற போல் பாட்டுக்கு இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம். 'கம்பூசியன் கம்யூனிச இயக்கம்' என்ற பெயரில் கம்போடியாவின் ஆட்சியைப் பிடித்த இவன் சித்ரவதை, சித்தாந்த அடிப்படையிலானது!

'விவசாயிகளைத் தவிர, மற்ற அனைவரும் சோம்பேறிகள், வாழத் தகுதியற்றவர்கள்' என்று தீர்ப்பு எழுதினான். அரசுப் பணியாளர்கள், ஆலை முதலாளிகள், படித்தவர்கள், வியாபாரிகள் என அனைவரும் கேள்வி இல்லாமல் போட்டுத்தள்ளப்பட்டனர். மருத்துவமனைகள் மூடப்பட்டதால் ஆண்டிபயாடிக் மருந்துகூட இல்லாமல் 15 லட்சம் மக்கள் செத்து மடிந்தார்கள்.

'எதிரிகளை அழிக்கிறேன்' என்ற பெயரில் இவன் ஆரம்பித்த S-21 என்னும் சித்ரவதைக் கூடத்தில் சுமார் 20,000 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கிளைகள் வேறு! மக்களின் வாயில் மனித மலத்தைத் திணிப்பது, எலக்ட்ரானிக் ஷாக் கொடுப்பது, தலையில் ஆணி அடிப்பது, கோழிகளைப் போல வரிசையாக மக்களின் கழுத்தை அறுத்துத் தண்ணீரில் போடுவது... என்பதெல்லாம் இவனது சித்ரவதைக் கூடத்தின் சில சாம்பிள்கள். அதிலிருந்து தப்பிய வான் நாத் என்பவர் சமீபத்தில் தான் தப்பிய திகில் கதையை உலகுக்கு வெளியிட்டார். மனித பிணங்களையும், புழு பூச்சிகளையும் தின்று அவர் உயிர் தப்பிய கதை பயங்கரத்திலும் பயங்கரம். 1998-ல் மர்மமாக செத்துப் போனான் இந்த போல் பாட்! அடுக்கடுக்கான மண்டை ஓடுகள் இவன் வெறிக்கு சாட்சி!

மாக்ஸ்மில்லன் ராபெஸ்பியர் (Maximilien Robespierre)

உலக கொடூரர்களை தெரிந்துக் கொள்வோம் Scan0003'தீவிரவாதம் இல்லாத அரசியல் ஆண்மை இல்லாதது. அரசியல் வாழ்க்கையில் படுகொலை செய்வது தவிர்க்க முடியாதது' என பேஜார் ஸ்டேட்மென்ட் விட்ட இவன், பிரெஞ்சு நாட்டில் நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்த இயக்கம்தான் பின்னர் புகழ்பெற்ற ஜகோபியன் கிளப் ஆனது. 1790 -ல் ஜகோபியன் கிளப்பின் தலைவரான மாக்ஸ்மில்லன், தனது அரசியல் எதிரிகள் மட்டுமில்லாமல், தன்னை எதிர்த்தவர்கள், விமர்சித்தவர்கள் என அத்தனை போரையும் கில்லட்டின் இயந்திரத்தில் வைத்து தலையைத் துண்டித்தான். இப்படி 10 மாதங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே குறைந்தபட்சம் 40,000 என்கிறது வரலாறு. 1794 -ல் கைது செய்யப்பட்டவனை எவ்வித விசாரணையும் இன்றி கில்லட்டின் அடியில் குனியவைத்து தலையை எகிறச் செய்தார்கள்!

ஜோசப் கோணி:

உலக கொடூரர்களை தெரிந்துக் கொள்வோம் Scan0004இடி அமீன் கோரத்தாண்டவமாடிய உகாண்டாவில் இருந்து வந்தவன். 'கடவுளின் பேரால் நாட்டுக்கு நல்லாட்சி கொடுக்கப் போகிறேன்!" என்று உகாண்டாவையே ரணகளம் ஆக்கியவன். இவன் ஆரம்பித்த 'கடவுளின் தற்காப்புப் படை'க்கு முதல் சிப்பாய் குழந்தைகள்தான்.

வாழிடங்களுக்குச் சென்று நாய்களைப் பிடிப்பது மாதிரி குழந்தைகளை வலைவீசிப் பிடிப்பான். பிடிபடும் குழந்தைகளுக்கு துப்பாக்கிச் சுடக் கற்றுக்கொடுப்பான். பின்னர், அந்தக் குழந்தைகள் மூலமாகவே அவர்களது பெற்றோர்களைச் சுட்டுக் கொல்வான். இப்போது பல நாடுகளும் கோணியை 'மனித குலத்தின் எதிரி' என்று அறிவித்து உகாண்டா காடுகளில் தேடி வருகிறது.
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

உலக கொடூரர்களை தெரிந்துக் கொள்வோம் Empty Re: உலக கொடூரர்களை தெரிந்துக் கொள்வோம்

Post by ரிபாஸ் Sat Oct 31, 2009 9:42 am

அன்பான ஈகரை நண்பர்களுக்கு எனது இனிய காலை வணக்கம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum