Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!
Page 1 of 1
குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!
நண்பர்களே ,
தமிழர்களின் அலட்சியத்தினால் அழிந்த தமிழ்ப் பனுவல்கள் பல ; நமது அபார பொறுமையினாலும் அக்கறையின்மையாலும் இப்போது கூட தமிழ்ச் சரித்திரம் இருட்டடிக்கப்படுவதை சகித்துக் கொண்டுதானே உள்ளோம்....
இப்படித்தான் எனது கடைசி இடுகையின் துவக்கம் அமைந்திருந்தது...
இந்த இடுகையின் முக்கிய நோக்கம் தமிழர் ஆதி , ஆதி ...காலந்தொட்டிருந்தே தமிழகத்தில் வாழ்ந்து வருபவர் என்பதை வலியுறுத்துவதே; ஏனெனில் இன்றும் சிலர் , தமிழர் நண்ணிலப் பகுதியிலிருந்து ( Mediterranean )
பெயர்ந்து இங்கு வந்து குடியேறியவர்கள் என்று சாதிக்கப் பார்ப்பது...
இது நிற்க ; மிகச் சமீபத்தில் புதுகை அருகே உள்ள திருமயம் கோட்டைப் பகுதியில் மிகப் பழங்காலத்திய சித்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
ஏறத்தாழ மையமானத் தமிழகப்பகுதிதான் புதுக்கோட்டை மாவட்டம் ஆகும் ; இன்னும் சரியாகச் சொல்லப்போனால் , சோழ மண்டலத்தையும் பாண்டிய நாட்டையும் பிரிக்கும் வெள்ளாறு புதுக்கோட்டை நகரின் தென் புறமாகத்தான் ஓடுகிறது ; பல சண்டைகளுக்கும் போர்களுக்கும் களமாக இவ்வாற்றங்கரை அமைந்திருக்கிறது . இப்பகுதியில்தான் இதைப் பதிப்பிக்கும் இவ்வெழுத்தன் பிறந்ததும் , வளர்ந்ததும் வசிப்பதும் !
சங்க காலத்தில் புகழுடன் இலங்கிய பல புலவர்கள் இப்பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர் .
திருமயம் கோட்டையானது தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள கடைசி கோட்டை என்றே எனக்குத்
தோன்றுகிறது . இதற்கு தெற்கே இதைப்போன்ற அமைப்புகள் இல்லை ! இக்கோட்டையானது இராமநாதபுரம் மன்னரான விஜயரகுநாத சேதுபதியால் கட்டப்பட்டது. இது புதுகை வழி செல்லும் தஞ்சை - மதுரை நெடுஞ்சாலையில் , புதுகையில் இருந்து 20 கி.மீ உள்ளது ! இதன் உட்புறமுள்ள சிவன் கோயிலும் , கோட்டையின் ஆக உச்சியில் இன்றும் உள்ள
பீரங்கியும் அதற்கு அருகில் , அவ்வளவு உயரத்திலும் என்றும் வற்றாத சுனையும் எவரையும் ஆச்சரியப்படச் செய்யும். ஆனாலும் , இதைக் காண வருகை தருவோர் மிகக் குறைவே !
தற்போது இக்கோட்டையின் நுழைவாயிலுக்கு மிக அருகில் அபாயகரமாய்த் தோன்றும் நிலையில் நிற்கும் ஒரு பெரும் தனிப்பாறையில் பூர்வ குடி மக்கள் தீட்டிய ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன ! இதை கண்ணுற்று , முதன் முதலாக உலகளாவிய கவனத்தை ஈர்த்திருப்பவர் தொல்பொருள் ஆய்வுத் துறையைச் சாராத ஒருவர்தான் ! இதே போன்றதொரு சித்திரம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள் பிம்பேத்கா ( Bimbethka ) என்ற இடத்திலும் காணப்பட்டுள்ளது ! அது 30,000 ( முப்பதினாயிரம் ) வருடங்கள் பழமையானது ஆகும் ! அங்கு மட்டுமல்ல ; இன்னும் மெக்ஸிகோ , அர்ஜென்டினா முதலிய நாடுகளிலும் இதே அமைப்பிலும் இதே வண்ணத்திலும் உள்ள பாறை ஓவியங்கள் உள்ளன ! இவற்றின் பழமையும் இதே கால அளவிலேயே - 30,000 வருடங்கள் - உறுதிப்படுத்தப் பட்டுள்ளன .
ஆனால் , திருமயம் பாறையிலுள்ள பழங்குடியினர் வரைந்த ஓவியங்களின் வயதினை தொல்லியலாளர்கள் இனிமேல்தான் நிர்ணயிக்க வேண்டும் !
இன்னும் பத்தாண்டுகளானாலும் அப்படி ஏதும் உருப்படியாக நடந்து விடுமென நான் எண்ணவில்லை ...!!!???
[You must be registered and logged in to see this image.]
மேலே உள்ள படத்தில் உள்ள சித்திரங்கள் நாடோடி வாழ்க்கை முறையிலான வேட்டை ஆடும் விதத்தையும் அவர்களின் நடன அசைவுகளையும் காட்சிப் பொருளாக்குகின்றன. இவ்வோவியங்களைக் கண்டறிந்தவர் , இவற்றை மக்கள் சிதைத்து விடாமல் காக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருப்பதுடன் , இப்பகுதியில் இன்னும் பல இருக்க வாய்ப்புள்ளதென்றும் கூறியுள்ளார் .
புதுகைப் பகுதி மிகப்பழங்காலத்தில் இருந்தே மக்கள் வாழும் இடமாக இருந்திருக்கிறது . இங்கு ஏராளமாகக்
காணப்படும் புதை இடங்களே இதற்கு சான்றாகும் ! புதுகைக்கு அண்மையில் ஜைன முனிவர்கள் வாழ்விடங்கள்
அமைந்துள்ள பழமையான சித்தன்னவாசலின் முன்புறத்திலும் இத்தகைய முன்னோர் புதை இடங்கள உள்ளன ;
அவற்றைச் சுற்றி வட்டமாக 20 அடி விட்டத்தில் செங்குத்தாக பட்டையான கருங்கற்கள் நிறுத்தப்பட்டிருந்தன ;
அவற்றையெல்லாம் நமது ' பெரு மக்கள் ' பெயர்த்து எடுத்து விட்டனர் !
இதற்கும் மிகப் பிற்காலமான சங்க காலத்திலும் இவை தமிழர் வதியும் இடங்களாக இருந்தன என்பதற்கு சங்க நூல்களே சான்று ! திருமயம் தாலுகாவிலுள்ள ஒலியமங்கலம் ஆனது ' ஒல்லையூர் ' என அப்போது வழங்கப்பட்டுள்ளது ;
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் இவ்விடத்தை சார்ந்தவனே ; இவன் மறைந்த போது கீரத்தனார் என்பவரால் பாடப்பட்டு புறநானுறில் இடம் பெற்ற 242 - வது பாடலின் கடைசி வரிகள்
" வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே."
இவனின் மாண்பினை பறை சாற்றும் !
அதன்றியும் ஆவூர் ( ஆவூர் மூலம் கிழார் ) , எரிச்சி எனும் எரிச்சாலூர் , அவ்வையுடன் இணைத்து பார்க்கப்படும்
அவ்வையாபட்டி என்பனவெல்லாம் புதுகைப் பகுதியில் அமைந்தவையே .
கடல் வாணிபத்திலும் சிறந்திருந்தனர் இப்பகுதி மக்கள் என்பதனை இங்குள்ள கருக்காக்குறிச்சியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 500 - க்கும் மேற்பட்ட ரோமானியர்களின் தங்க , வெள்ளிக் காசுகள் தெள்ளெனக் காட்டும்!
இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள அகஸ்டஸ் தலை பொறித்த பொற்காசின் படம் ஈண்டுள்ளது ஆகும் !
[You must be registered and logged in to see this image.]
இந்தியாவிலேயே ரோமானியப் பேரரசின் காசுகளும் மற்றவையும் மிக அதிகமாக
அமராவதி ஆற்றங்கரைகளில்தான் கண்டெடுக்கப்பட்டுள்ளன ....இன்றும் கண்டெடுக்கப்படுகின்றன..!!
அன்புடன்,
சுந்தரம்
sundaram77- பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குறுந்தொகையின்வளமும் பிறவும்.உலகளாவிய தமிழராய்ச்சிக்கு வித்திட்டவர்... .!!! .12..
» குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!
» குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!
» குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!
» மழை நாளின் சித்திரங்கள் !
» குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!
» குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!
» குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!
» மழை நாளின் சித்திரங்கள் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|