ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!

Go down

குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Empty குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!

Post by sundaram77 Wed Dec 18, 2013 1:23 pm



நண்பர்களே ,
தமிழர்களின் அலட்சியத்தினால் அழிந்த தமிழ்ப் பனுவல்கள் பல ; நமது அபார பொறுமையினாலும் அக்கறையின்மையாலும் இப்போது கூட தமிழ்ச் சரித்திரம் இருட்டடிக்கப்படுவதை சகித்துக் கொண்டுதானே உள்ளோம்....
இப்படித்தான் எனது கடைசி இடுகையின் துவக்கம் அமைந்திருந்தது...

இந்த இடுகையின் முக்கிய நோக்கம் தமிழர் ஆதி , ஆதி ...காலந்தொட்டிருந்தே தமிழகத்தில் வாழ்ந்து வருபவர் என்பதை வலியுறுத்துவதே; ஏனெனில் இன்றும் சிலர் , தமிழர் நண்ணிலப் பகுதியிலிருந்து  ( Mediterranean )
பெயர்ந்து இங்கு வந்து குடியேறியவர்கள் என்று சாதிக்கப் பார்ப்பது...

இது நிற்க ; மிகச் சமீபத்தில் புதுகை அருகே உள்ள திருமயம் கோட்டைப் பகுதியில் மிகப் பழங்காலத்திய சித்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ மையமானத் தமிழகப்பகுதிதான் புதுக்கோட்டை மாவட்டம் ஆகும் ; இன்னும் சரியாகச் சொல்லப்போனால் , சோழ மண்டலத்தையும் பாண்டிய நாட்டையும் பிரிக்கும் வெள்ளாறு புதுக்கோட்டை நகரின் தென் புறமாகத்தான் ஓடுகிறது ; பல சண்டைகளுக்கும் போர்களுக்கும் களமாக இவ்வாற்றங்கரை அமைந்திருக்கிறது . இப்பகுதியில்தான் இதைப் பதிப்பிக்கும் இவ்வெழுத்தன் பிறந்ததும் , வளர்ந்ததும் வசிப்பதும் !

சங்க காலத்தில் புகழுடன் இலங்கிய பல புலவர்கள் இப்பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர் .

திருமயம் கோட்டையானது தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள கடைசி கோட்டை என்றே எனக்குத்
தோன்றுகிறது . இதற்கு தெற்கே இதைப்போன்ற அமைப்புகள் இல்லை ! இக்கோட்டையானது இராமநாதபுரம் மன்னரான விஜயரகுநாத சேதுபதியால் கட்டப்பட்டது. இது புதுகை வழி செல்லும் தஞ்சை - மதுரை நெடுஞ்சாலையில் , புதுகையில் இருந்து 20 கி.மீ உள்ளது ! இதன் உட்புறமுள்ள சிவன் கோயிலும் , கோட்டையின் ஆக உச்சியில் இன்றும் உள்ள
பீரங்கியும் அதற்கு அருகில் , அவ்வளவு உயரத்திலும் என்றும் வற்றாத சுனையும் எவரையும் ஆச்சரியப்படச் செய்யும். ஆனாலும் , இதைக் காண வருகை தருவோர் மிகக் குறைவே !

தற்போது இக்கோட்டையின் நுழைவாயிலுக்கு மிக அருகில் அபாயகரமாய்த் தோன்றும் நிலையில் நிற்கும் ஒரு பெரும் தனிப்பாறையில் பூர்வ குடி மக்கள் தீட்டிய ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன ! இதை கண்ணுற்று , முதன் முதலாக உலகளாவிய கவனத்தை ஈர்த்திருப்பவர் தொல்பொருள் ஆய்வுத் துறையைச் சாராத ஒருவர்தான் ! இதே போன்றதொரு சித்திரம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள் பிம்பேத்கா ( Bimbethka ) என்ற இடத்திலும் காணப்பட்டுள்ளது ! அது 30,000 ( முப்பதினாயிரம் ) வருடங்கள் பழமையானது ஆகும் ! அங்கு மட்டுமல்ல ; இன்னும் மெக்ஸிகோ , அர்ஜென்டினா முதலிய நாடுகளிலும் இதே அமைப்பிலும் இதே வண்ணத்திலும் உள்ள பாறை ஓவியங்கள் உள்ளன ! இவற்றின் பழமையும் இதே கால அளவிலேயே - 30,000 வருடங்கள் - உறுதிப்படுத்தப் பட்டுள்ளன .

ஆனால் , திருமயம் பாறையிலுள்ள பழங்குடியினர் வரைந்த ஓவியங்களின் வயதினை தொல்லியலாளர்கள் இனிமேல்தான் நிர்ணயிக்க வேண்டும் !

இன்னும் பத்தாண்டுகளானாலும் அப்படி ஏதும் உருப்படியாக நடந்து விடுமென நான் எண்ணவில்லை ...!!!???


[You must be registered and logged in to see this image.]


மேலே உள்ள படத்தில் உள்ள சித்திரங்கள் நாடோடி வாழ்க்கை முறையிலான வேட்டை ஆடும் விதத்தையும் அவர்களின் நடன அசைவுகளையும் காட்சிப் பொருளாக்குகின்றன. இவ்வோவியங்களைக் கண்டறிந்தவர் , இவற்றை மக்கள் சிதைத்து விடாமல் காக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருப்பதுடன் , இப்பகுதியில் இன்னும் பல இருக்க வாய்ப்புள்ளதென்றும் கூறியுள்ளார் .

புதுகைப் பகுதி மிகப்பழங்காலத்தில் இருந்தே மக்கள் வாழும் இடமாக இருந்திருக்கிறது . இங்கு ஏராளமாகக்
காணப்படும் புதை இடங்களே இதற்கு சான்றாகும் ! புதுகைக்கு அண்மையில் ஜைன முனிவர்கள் வாழ்விடங்கள்
அமைந்துள்ள பழமையான சித்தன்னவாசலின் முன்புறத்திலும் இத்தகைய முன்னோர் புதை இடங்கள உள்ளன ;
அவற்றைச் சுற்றி வட்டமாக 20 அடி விட்டத்தில் செங்குத்தாக பட்டையான கருங்கற்கள் நிறுத்தப்பட்டிருந்தன ;
அவற்றையெல்லாம் நமது ' பெரு மக்கள் ' பெயர்த்து எடுத்து விட்டனர் !


இதற்கும் மிகப் பிற்காலமான சங்க காலத்திலும் இவை தமிழர் வதியும் இடங்களாக இருந்தன என்பதற்கு சங்க நூல்களே சான்று ! திருமயம் தாலுகாவிலுள்ள ஒலியமங்கலம் ஆனது ' ஒல்லையூர் ' என அப்போது வழங்கப்பட்டுள்ளது ;
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் இவ்விடத்தை சார்ந்தவனே ; இவன் மறைந்த போது கீரத்தனார் என்பவரால் பாடப்பட்டு புறநானுறில் இடம் பெற்ற 242 - வது பாடலின் கடைசி வரிகள்


" வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே."

இவனின் மாண்பினை பறை சாற்றும் !

அதன்றியும் ஆவூர் ( ஆவூர் மூலம் கிழார் ) , எரிச்சி எனும் எரிச்சாலூர் , அவ்வையுடன் இணைத்து பார்க்கப்படும்
அவ்வையாபட்டி என்பனவெல்லாம் புதுகைப் பகுதியில் அமைந்தவையே .

கடல் வாணிபத்திலும் சிறந்திருந்தனர் இப்பகுதி மக்கள் என்பதனை இங்குள்ள கருக்காக்குறிச்சியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 500 - க்கும் மேற்பட்ட ரோமானியர்களின் தங்க , வெள்ளிக் காசுகள் தெள்ளெனக் காட்டும்!



இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள அகஸ்டஸ் தலை பொறித்த பொற்காசின் படம் ஈண்டுள்ளது ஆகும் !




[You must be registered and logged in to see this image.]

இந்தியாவிலேயே ரோமானியப் பேரரசின் காசுகளும் மற்றவையும் மிக அதிகமாக
அமராவதி ஆற்றங்கரைகளில்தான் கண்டெடுக்கப்பட்டுள்ளன ....இன்றும் கண்டெடுக்கப்படுகின்றன..!!


அன்புடன்,
சுந்தரம்
sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum