ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை

Go down

கிறிஸ்துமஸ் பண்டிகை Empty கிறிஸ்துமஸ் பண்டிகை

Post by சிவா Tue Dec 17, 2013 1:50 am


புண்ணியத்தால் பாவத்தை வெற்றிகொள்
நன்மையால் தீமையை வெற்றிகொள்
நட்பால் பகைமையை வெற்றிகொள்
மன்னிப்பால் எதிரிகளை வெற்றிகொள்


நிலையற்ற மனித வாழ்வில், தனக்காகவும் தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் தனக்கு நன்மை செய்தவர்களுக்காகவும் மட்டும் இறைவனை வழிபடுபவன் சாதாரண மனிதன். தனக்குப் பாவமிழைத்த, வஞ்சித்த எதிரிகளின் செயல்பாடுகளை மன்னித்து, அவர்களின் நலனுக்காக இறைவனிடம் மன்றாடுபவன் மாமனிதன். அவன் கருணைபொழியும் ஆண்டவனுக்கு ஒப்பாகிறான். மற்றவர்கள் செய்த தவறையும், தீங்கையும் தன்மேல் ஏற்றுக் கொண்டு தண்டனையை அனுபவிப்பவன் இறைவனாகவே ஆகிறான்.

எல்லாம் வல்ல இயேசுபிரான் மனித குலத்தின் பாவங்களையும், அதன் விளைவான மரண தண்டனையையும் தான் ஏற்றுக் கொண்டு அதற்காகச் சிலுவையில் அறையப்பட்டு உயர் நீத்தவர். எவ்விதப் பேதமும் காட்டது மக்களுக்காகவே வாழ்ந்து எளியவர்க்கு அருள்புரிந்து, தீயோர்களை மன்னித்துத் தியாகச் சுடராய் வாழ்ந்து மறைந்து மீண்டும் மக்களுக்காகவே உயிர்த்தெழுந்து அற்புதம் நிகழ்த்தியவர் இயேசுநாதர்.

ஆங்கில மாதம் டிசம்பர் 25ம் நாள் கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படும் மிகமுக்கியமான திருநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை. குளிர்காலக் கொண்டாட்டங்களில் மிக முதன்மையானது இப்புனிதத் திருநாள். எல்லா மதத்தினராலும் சமயச் சார்பற்றுக் கொண்டாடுவதற்கு ஏதுவாகத் தொழில் நிறுவனங்கள், கல்விக்கூடங்கள் அனைத்திலும் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு எடுக்கப்படும் விழா இது.

முற்பிறப்பில் யூதர் குலத்து ராஜாவாக இருந்தவர். கிறிஸ்து எனவும், மனித குலத்துக்கு நன்மை செய்து ரட்சிக்கவே கன்னிமரியாள் வயிற்றில் மீண்டும் உதித்தார் என்றும் வரலாறு கூறுகின்றது.

கிறிஸ்துவ மறைநூலாகிய விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாடு தரும் தகவல்படி கபிரியேல் என்ற இறைத்தூதன் கன்னிமரியாளிடம் பரிசுத்த ஆவி மூலமாக இயேசுபிரான் பிறக்கப்போவதை அறிவித்தார். அந்தச் சமயம் மரியாள் யோசேப் (ஜோசப்) என்பவருக்கு மணமுடிக்க நிச்சயிக்கப்பட்டிருந்தார். மரியாள் கருவுற்றதையறிந்த யோசேப், மணம் முடிக்கத் தயங்கிட, இறைத்தூதர் யோசேப் முன்னால் தோன்றி, பரிசுத்த ஆவியாலேயே மரியாள் கருவுற்றாள் என்று தெரிவிக்கவே, யோசேப் மரியாளை மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

மரியாள் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோது பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த அகஸ்துஸ் மன்னனின் கட்டளைப்படி, யோசேப்பும், மியாளும் யோசேப்பின் முன்னோரான தாவீதின் நகரமான பெத்லகேமுக்குச் சென்றனர். தங்குவதற்கு இடம் ஏதும் கிடைக்காத நிலையில் மாட்டுத் தொழுவமொன்றில் தங்கினார்கள். அந்த மாட்டுத் தொழுவத்தில் பரவிக்கிடந்த வைக்கோல் புல்லில் மரியாள் இயேசுபிரானைப் பெற்றெடுத்தாள்.

அவர் அவதரித்த நேரம், அருகிலுள்ள புல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையரிடையே இறைத்தூதர் தோன்றி, ஏழை எளிய மக்களை இரட்சித்துக் காக்க இரட்சகர் பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவிக்கிறார். அப்போது வானில் இருந்த நட்சத்திரத்தின் ஒளியால் வழிகண்டு பிடித்து, இடையரும், மற்றவர்களும் குழந்தை ஏசுவை வணங்கினர்.

இதன் குறியீட்டாகவே அனைத்துக் கிறிஸ்துவ இல்லங்களிலும் நட்சத்திர வடிவிலான மின்விளக்குகள் அலங்காரமாகத் தொங்கவிடப்படுகின்றன. ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே வீட்டினைச் சுத்தம் செய்து கிறிஸ்துமஸ் மரம் வைத்து அலங்காரம் செய்வர். இதன் அர்த்தம் பசுமையான மரம்போல், வாழ்வில் எல்லா நலனும் பெற்று வளமையாக மேன்மேலும் உயர்வது என்பதாகும்.

இயேசுவின் பிறப்பிடமான மாட்டுத் தொழுவத்தையும், குடிலையும் அமைத்து மரியாள், யோசேப், இயேசுக்குழந்தை, இடையர்கள், மாடு கன்றுகள் ஆகிய உருவப் பொம்மைகளால் அலங்கரிப்பர்.

"சாண்டகிலாஸ்' எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு மிட்டாய்களும், பரிசுப்பொருட்களும் வழங்கி மகிழ்ச்சிப்படுத்துவர். டிசம்பர் 25ம் நாள் கிறிஸ்துவ ஆலயங்களில் பிரார்த்தனைப் பாடல்கள் பாடியும் இயேசுபிரான் நிகழ்த்திய அற்புதங்களைக் கூறியும் பிரார்த்தனை நடைபெறும். அன்றைய நாள் முழுவதும் உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து விருந்தளித்து மகிழ்வர்.
ஏழை எளியவர்களுக்குப் பணம் பொருட்களை வழங்கி நன்மை செய்வர்.

கிறிஸ்துமஸ் நாளின் ஒர வாரம் முன்பிருந்தே கிறிஸ்து பிறப்பை அறிவித்து மகிழும் விதமாக அனைவரும் இணைந்து கிறிஸ்துவர் இல்லங்களுக்குச் சென்று கரோல் எனப்படும் பாடல்கள் பாடிப் பிரார்த்தனை செய்வர். இப்பண்டிகையின் பிரதான விருந்தாகச் சமைக்கப்படுவது "கிறிஸ்துமஸ் கேக்' ஆகும்.

நன்றியறியாதவர்களுக்கும், துரோகிகளுக்கும் நன்மை செய்பவரான இயேசுவை மனதாரத் துதிக்க வேண்டும். நமக்கு யாரேனும் இம்சை செய்தாலும், அதைப் பொறுத்துக் கொண்டு, அவர்கள் மனம் திருத்த வேண்டும் என்பதற்காக ஜெபிக்க வேண்டும். அதற்கு மாறாகப் பழி உணர்வைக் காட்டக்கூடாது. இவ்வாறு செய்வதால் பகைவர்களும் நண்பர்களாவர். கருணை பொங்கும் இறையருளும் நமக்கு கிட்டும்.

அனைத்து நாட்டவராலும் பேதமின்றிக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துமஸ் பண்டிகையை நாமும் கொண்டாடி அன்பினையும், மகிழ்வையும் பரிமாறி கர்த்தரின் அருள் பெருவோமாக!

கலைமகள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum