புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_c10கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_m10கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_c10கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_m10கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_c10கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_m10கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_c10கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_m10கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_c10கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_m10கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_c10கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_m10கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_c10கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_m10கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_c10கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_m10கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 16, 2013 4:51 pm

கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! MXsdjERuR8mX7hzU93lC+p16

மாணவர்களும் ஆசிரியர்களும் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம் என களம் இறங்க... மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கதிகலங்கியது. ஒரு வாரத்துக்கும் மேல் தொடர்ந்து போராட் டம் நடைபெற... 11-ம் தேதி காலை அனைவரும் கைது செய்யப்பட்டு, அன்றைய தினம் இரவு விடுதலை செய்யப்பட்டனர். மாணவர்களும் பேராசிரியர்களும் எதிர்த்துப் போராடும் கல்யாணி மதிவாணன், முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனின் மருமகள்!

பல்கலைக்கழக வளாகம் கலவரக் களமாக மாறியதன் பின்னணி என்ன? ''மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிருஷ்ணசாமி, ஆசிரியர் அல்லாத பணிக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். பேரா சிரியர் ரவிக்குமாரையும் அலுவலக ஊழியர் பார்த்தசாரதியையும் சஸ்பெண்ட் செய்துவிட்டனர். ஆய்வு மாணவர்களான அருண்குமார், பாண்டியராஜன், ஈஸ்வரி ஆகிய மூவரையும் டிஸ்மிஸ் செய்துவிட்டனர். இதற்கெல்லாம் காரணமான பல்கலைக்கழகத் துணைவேந்தரின் அராஜகப் போக்கைக் கண்டித்துதான் இந்தப் போராட்டம்'' என்றனர்.

டிஸ்மிஸ் செய்யப்பட்ட மாணவர் அருணி டம் பேசினோம். ''எங்கள் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை கடந்த எட்டு மாதங்களாக வழங்கப்படவில்லை. பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டணம் உட்பட இதரக் கட்டணங்களையும் உயர்த்தி விட்டனர். இதுகுறித்து மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், துணைவேந்தர் கண்டு கொள்ளவில்லை.

அக்டோபர் 23-ம் தேதி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரோசய்யா கலந்துகொண்டார். அவருடன் பல்கலைக்கழக மானியக்குழுவைச் சேர்ந்த தேவராஜனும் வந்திருந்தார். தேவராஜனிடம் கோரிக்கை வைப்பதற்காக அவரிடம் நாங்கள் நேரம் கேட்டோம். அவரும் மதிய உணவு இடைவேளையில் விருந்தினர் மாளிகையில் சந்திப்பதாக வாக்கு கொடுத்தார். இதனை எங்கள் துணைவேந்தரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால், கவர்னர் ரோசய்யாவை மாணவர்கள் முற்றுகையிடப் போவதாக வதந்தியைக் கிளப்பி, அதிகாரிகளை மாணவர்கள் சந்திக்கவிடாமல் தடுத்துவிட்டார். அடுத்து, யாரெல்லாம் தேவராஜனை சந்திக்கும் விஷயத்தில் இறங்கினார்களோ... அந்த மாணவர்களைத் தனித் தனியே அழைத்து 'நான் ரௌடிக்கு ரௌடி. அரசியல் பின்புலம், பண பின்புலம், அதிகார பின்புலம் எல்லாமே இருக்கு. என்கிட்ட, ஒரு பைசாவுக்குக்கூட உதவாத உங்களால என்ன பண்ண முடியும்?’ என மிரட்டினார். இதனால் கடுப்பான மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அந்தப் போராட்டத்துக்கு சப்போர்ட் செய்ததற்காக பல்கலைக்கழக ஊழியர்களையும் மாணவர்களையும் டிரான்ஸ்ஃபர், சஸ்பெண்ட், டிஸ்மிஸ் என்று பழிவாங்குகிறார். அதனால்தான் மீண்டும் மாணவர்களும், பேராசிரியர்களும் போராட்டத்தில் குதித்தோம்'' என்றார்.

மாணவி ஈஸ்வரி, ''என்னை ஊனமுற்றவள் என்றுகூட பார்க்காமல் நள்ளிரவு நேரத்தில் விடுதியில் இருந்து வெளியேற்றிவிட்டனர். கேட்டதற்கு, துணைவேந்தரைப் போய் பார்க்கச் சொன்னார் வார்டன். அவரைப் பார்க்கச் சென்றபோது, 'நான் தொடர்ந்து கவனிச்சுக்கிட்டு வர்றேன்... நீ எனக்கு வணக்கம் வைக்கறதே இல்ல. உன்னை இங்கே வர வைக்கணும்னுதான் ஹாஸ்டல்ல இருந்து வெளியே அனுப்பினேன் நீ எப்படி பி.ஹெச்டி முடிக்கிறேன்னு பார்ப்போம்’ என்று கேவலமாகத் திட்டி அனுப்பினார்'' என்றார் கண்ணீரோடு.

'மூட்டா’ என்ற பேராசிரியர்கள் கூட்டமைப்பு பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஊழல்கள் பற்றிய வெள்ளை அறிக்கையை கொடுத்தனர். அவர்களிடம் பேசினோம். ''பல்கலைக்கழக மானியக்குழு வரையறுத்துள்ள அடிப்படை தகுதிகள்கூட துணைவேந்தருக்கு இல்லை. இங்கு துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த 140 நபர்களில் குறைந்தபட்ச தகுதிகொண்டவர் அவர் மட்டும்தான். அதனால் அப்போதே, அவரது நியமனம் செல்லாது என்று வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. பல்கலைக்கழக மானியத் தொகைகளில் முறைகேடான கணக்குகள் காட்டப்பட்டுள்ளது. புதிய பணி பொறுப்புகளை உருவாக்கி, தனக்கு வேண்டிய ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் சேர்த்துள்ளார். அவர்கள் மூலமே பல்வேறு விஷயங்களிலும் ஊழல் செய்கிறார். இந்த முறைகேடுகளை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் 'அரசியல், அதிகாரம் எல்லாமே எங்களிடம் இருக்கிறது. முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று அடாவடியாகப் பேசுகிறார். ஒரு கல்வியாளர் பேசும் பேச்சா இது?'' என்று கொதித்தனர்.

துணைவேந்தர் கல்யாணியிடம் பேசினோம். ''போராட்டம் செய்கிறவர்கள் எல்லாம் எங்கள் மாணவர்களே இல்லை. வெளியில் இருந்து வந்தவர்கள். உதவித்தொகை என்பது யு.ஜி.சி. கொடுத்தால்தான். நான் வைத்துக் கொண்டா கொடுக்கவில்லை? டிஸ்மிஸ் செய்யப்பட்ட மாணவர்கள் பக்கம் தப்பு இருக்கிறது. அந்த ஈஸ்வரி எந்தப் போராட்டம் என்றாலும் முன்னால் வந்து நிற்கிறார். அப் போது எல்லாம் எங்கே போனது ஊனம்? அதுமட்டும் அல்லாமல், அவர் ஹாஸ்டலில் தங்கவே இல்லை'' என்றார்.

''நீங்கள் அரசியல் பின்புலத்தில் பதவிக்கு வந்தவர் என்ற விமர்சனம் இருக்கிறதே?'' என்ற கேள்விக்கு, ''ஆமாம். நான் நாவலர் நெடுஞ்செழியனின் மருமகள்தான். இல்லை என்று சொல்லவில்லை. நாலு பேர் நாலுவிதமா பேசத்தான் செய்வார்கள். அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் வந்த பிறகு யுனிவர்சிட்டி எப்படி இருக்கிறது என்று மட்டும் பாருங்கள்'' என்றார்.

விவகாரம் இப்போதைக்கு ஓயாது என்றுதான் தோன்றுகிறது!

விகடன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 16, 2013 5:52 pm

கல்யாணி மோர் பத்தி சொல்றீங்கன்னு நெனச்சேன் பாஸ் புன்னகை




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Dec 16, 2013 6:22 pm

தப்பு இருக்கா இல்லையான்னு தெரியல. இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் போராட்டம்னு காலேஜ் பசங்க ஆரம்பிச்சுட்டாங்க. அநியாயம் 



கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Aகலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Aகலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Tகலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Hகலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Iகலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Rகலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Aகலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! Empty
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Tue Dec 17, 2013 8:51 am

Aathira wrote:தப்பு இருக்கா இல்லையான்னு தெரியல. இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் போராட்டம்னு காலேஜ் பசங்க ஆரம்பிச்சுட்டாங்க. அநியாயம் 

அன்பிற்குரிய ஆதிரை ,
நான் ஒன்று சொல்லட்டுமா...
இன்று உள்ள கல்லூரி ஆசிரியர்களில் நூற்றுக்கு எண்பது ( 80 % ) பேர் அதற்கு சற்றும் தகுதியில்லாதவர்களே...
தங்கள் துறை சார்ந்த விஷயங்களில்கூட புதியன ஏதென எதுவும் அறியார் ...பரிதாபம்....

நம் தமிழ் நாட்டின் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராயிருந்து பின்னர் நடுவண் அரசில்  கல்வி ஆலோசகராக இருந்த ஒருவர் சொல்லி பத்திரிகைகளிலும் வந்ததிது :

" ... 80 % of the present vice chancellors of Indian Universities have criminal background...."

போதுமா...!!

மாணவர்களை மட்டும் குறை சொல்லி என்ன பயன்...??!!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Dec 17, 2013 2:21 pm

Aathira wrote:தப்பு இருக்கா இல்லையான்னு தெரியல. இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் போராட்டம்னு காலேஜ் பசங்க ஆரம்பிச்சுட்டாங்க. அநியாயம் 
மேற்கோள் செய்த பதிவு: 1038927

தகுந்த காரணங்களின்றி முன்னெடுக்கப்படும் மாணவர் போராட்டங்கள் முளையிலேயே கிள்ளி  எரியப்பட
வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் நியாயமான காரணங்களுக்காகவும், அடிப்படை உரிமைகளுக்காகவும் மாணவர்கள் போராடுவதில் தவறேதும்  இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் அடிப்படையாகக்
கிடைக்கவேண்டிய சில அம்சங்கள் இங்கு போராடினால்தானே கிடைக்கின்றன?

தமிழக அளவிலும் தேசிய அளவிலும் இதுவரை முன்னெடுக்கப்பட்ட பெரிய அளவிலான போராட்டங்கள் அனைத்தும் மாணவர்கள் பங்கேற்ற பின்புதான் அவற்றின் முழு வீரியத்தைத் தொட்டன என்பது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. அது இந்திய விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் சரி, இந்தி எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும் சரி, அல்லது இலங்கையின் இன அழிப்பிற்கெதிரான போராட்டமாக இருந்தாலும் சரி.

தவிர கல்வியோடு வாழ்வையும் சேர்த்துக் கற்கும் மாணவர்களிடையே 'போராட்டமின்றி வாழ்க்கை இல்லை' என்கிற நிதர்சனத்தை இத்தகைய போராட்டங்கள் தோற்றுவிக்குமேயானால் வருங்கால சமுதாயம் வார்ப்பிரும்பைப் போல வலிமையானதாக உருவாகும் என்று ஓரளவிற்கு நம்பலாம்தானே?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக