Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர்
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர்
மீன்கொத்திப்பறவை
தான் சாப்பிட்ட மீன்களின் முட்களைக்கொண்டே
கூடு கட்டிக்கொள்கிறது…
மனங்கொத்திப் பறவை நீயோ
முதலில் என் இதயத்தில் கூடுகட்டிக் குடியேறிவிட்டு
பிறகு என் இதயத்தை சாப்பிடுகிறாய்…..
ஒரு முறை எரிந்து சாம்பலான பொருளை
இன்னொருமுறை எரிக்கவே முடியாது
ஆனால் நீயோ என்னை
மறுபடி
மறுபடி
எரித்துக்கொண்டே இருக்கிறாய்….
தும்மல் வரும்போது நம் உடலில்
இதயம் உட்பட அனைத்தும்
ஒருநொடி நின்றுவிடும்
நீ வரும் போது
தும்மலே நின்றுவிடும்…
இந்தியாவில் ஆளுனர் ஆவதற்கு
35 வயதிற்கு மேல்
ஆகியிருக்க வேண்டும்
நீ மட்டும்
22 வயதிலேயே
என்னை ஆளுகிறாயே…..
Re: கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர்
“காலியம்” என்கின்ற உலோகம்
நம் உள்ளங்கைச் சூட்டிலேயே
உருகிவிடுகிறது
நான் உன் நிழலின் சூட்டிலேயே
உருகிவிடுகிறேன்….
ஒருகையால் ஓவியம் வரைந்துகொண்டே
இன்னொரு கையால் எழுதும் பழக்கம் உடையவர்
ஓவியர் லியானோ டாவின்ஸி
ஒரு கையால் எழுதிக்கொண்டே
இன்னொரு கையால்
கூந்தலையும் கோதி விட்டுக்கொள்ளும்
ஓவியம் நீ….
ஞானம் பெறுவதற்கு முன் புத்தர்
போதிமரத்தின் கீழ்
49 நாட்கள் அமர்ந்திருந்தார்
ஆனால்
உன் நிழலின் கீழ்
ஒரே ஒரு நொடி நின்று
காதலை ஞானமாப் பெற்றவன் நான்……
ஒரு வினாடியில்
முன்றில் ஒரு பங்கு நேரம் ஆகிறதாம்
நாம் ஒரு முறை கண் சிமிட்ட
அய்யய்யோ
ஒவ்வொரு முறை கண்சிமிட்டும்போதும்
அவ்வளவு நேரமா நான் உன்னைப்
பார்க்காமல் இருக்கின்றேன்…..
Re: கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர்
அஞ்சல் வழிக் கல்வியை
முதலில் தொடங்கியது
டெல்லி பல்கலைக் கழகம்
கொஞ்சல் வழிக் கல்வியைத்
தொடங்கியது நீ……
நமது உடலில்
ஒரு சதவீதம் தண்ணீர் குறைந்தாலும்
உடனே நம் நாக்கு வறண்டு போகும்
உன் மீதான காதலில்
அரை சதவீதம் குறைந்தாலும்
உடனே என் உயிர் வறண்டு போகும்…..
எந்தப்பொருளின் எடையும்
பூமியின் மையப் பகுதியில்
பூஜ்ஜியம் தான்
உன் அழகின் எல்லைப் பகுதிக்குள்
என் எடையும் பூஜ்ஜியம்தான்…..
குவாக் குவாக் என்கின்ற வாத்துச் சத்தம்
எதிலும் எதிரொலிப்பதில்லை
அப்படித்தான் உன் குரலும்
எதிலும் எதிரொலிக்காது
எந்த மலைதான் திருப்பி அனுப்பும் உன் குரலை…..
Re: கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர்
நிமிடத்திற்கு 72 முறை மட்டுமே
உனக்காக துடிக்கும் என் இதயம்
இனி வேண்டவே வேண்டாம்
நிமிடத்திற்கு 1000 முறை துடிக்கும்
சிட்டுக்குருவியின் இதயத்தை
உடனே என் இதயமாக்கிக் கொள்ள வேண்டும்…..
அன்னாசிப் பழம்
ஒரு பழமே இல்லை
பல பூக்கள் சேர்ந்த ஒரு பூச்செண்டு
நீ ஒரு பெண்ணே இல்லை
பல பழங்கள் சேர்ந்த ஒரு பழச்செண்டு….
சராசரியாக
ஒரு நிமிடத்தில் 38 புயல்கள்
தோன்றுகின்றன இந்தப் பூமியில்
இதில் எத்தனை புயல்கள்
நீ சிரிப்பதனால் தோன்றுகின்றதோ….
பகலைவிட இரவில்
மேகங்கள் மெதுவாக நகர்கின்றன
நீ தூங்கும் போது
பூமியே மெதுவாகச் சுற்றும் போது
மேகம் மட்டும் என்ன செய்யும்……
Re: கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர்
ஜெர்மனியர்கள் தங்கள் நாட்டை
தந்தையர் நாடு என்று அழைக்கிறார்கள்
நீ பிறந்த நம் நாட்டை
நான் தேவதை நாடு என்று அழைக்கவா…..
ஒரு யுகம் என்பது
43,20,000 ஆண்டுகள்
உன்னுடன் வாழும்
ஒரு தேவ கணத்துக்கு
இணையாகுமா அந்த ஒரு யுகம்….
நட்சத்திர மீனை எத்துனைத் துண்டுகளாக
வெட்டினாலும்
ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு நட்சத்திர மீனாக
வளர்ந்துவிடுகிறது
எனக்கும் அந்த அபூர்வ சக்தி இருந்தால்
என்னை நானே
துண்டுத் துண்டாக வெட்டி
பத்துப் பதினைந்து பேராக வளர்ந்து
தைரியமாய் உன்னைக் காதலிக்கலாம்
ஒருத்தனாக
உன்னை காதலிக்க
எனக்கு பயமாக இருக்கிறது……
இந்தியாவின் ரோஜா தலைநகரம்
பூனா
ரோஜாக்களின் தலைநகரம்
உன் கூந்தல்…..
Re: கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர்
தங்கத்தின் மதிப்பு லண்டனிலும்
வைரத்தின் மதிப்பு நெதர்லாந்திலும்
நிர்ணயிக்கப்படுவதாக
சொல்கிறார்கள்
உண்மையில் இரண்டின் மதிப்பும்
நிர்ணயிக்கப்படுவது
உன் கழுத்தில் தான்
பெண்களை விட ஆண்களுக்கு
இரு மடங்கு வியர்க்கிறது
ஆமாம் ஆமாம்
உன்னிடம் காதலைச் சொல்வதற்குள்
என்னைச்சுற்றி
ஒரு வியர்வை நதியே
ஓட ஆரம்பித்து விட்டதே……
மெக்சிக்கோ நாட்டில்
அலாமாஸ் நகர சிறைச்சாலையில்
கைதி தப்பித்து விட்டால்
அந்த கைதியின் தண்டனையை
சிறைக் காவலர் அனுபவிக்க வேண்டும்
நீ என் இதயத்திலிருந்து
தப்பித்துவிட்டால்
அதற்கான தண்டனையைச்
சாகும் வரை
நான் தான்
அனுபவிக்க வேண்டும்……..
Re: கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர்
மனிதனின் கண்ணுக்குப்
புலப்படாத
வெளிச்சத்தை
தேனீயால் பார்க்க முடியும்
ஒரே ஒரு நாள் என்னைத்
தேனீயாக மாற்றிவிடு
உன் அழகு வெளிச்சத்தைப்
பார்க்க வேண்டும் எனக்கு…….
மேகங்கள்
18 கிலோ மீட்டர் உயரம் வரைதான்
செல்லும்
அதற்கு மேல் சென்றால்
மேகங்களால் உன்னைப் பார்க்க முடியாதோ……
அந்தக்காலத்தில் தன் வீரர்களுக்கு
சம்பளத்தில் பாதியை
உப்பாகக் கொடுத்திருக்கிறது
ரோமாபுரி
நீ உன் காதலில் பாதியை எனக்கு
முத்தமாகக் கொடுத்துவிடு……
பயப்படாதே என்கிற சொல்
பைபிளில் 365 இடங்களில் வருகிறது
ஆனால் பைபிள் யாரையும் பயமுறுத்துவதில்லை
நீயோ எப்போதும் என்னை உன் அழகால்
பயமுறுத்திக்கொண்டே இருக்கிறாய்
ஆனால் உன் மேனியில் ஒரு இடத்தில் கூட
இறைவன் எழுதவே இல்லையே
“பயப்படாதே” என்று
Re: கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர்
மனித உடலில்
உதடுகள் மட்டும்
வியர்ப்பதில்லை
ஆனால் உன் உதடுகள்தான்
என்னை அதிகம்
வியர்க்க வைக்கின்றன……
நமது உடலில் உள்ள தசைகளில்
மிக வலிமையானது நாக்குத்தான்
என்ன புண்ணியம்
உன்னிடம் பேசும் போது
பயந்தாங்கொள்ளியாகி உளறிக் கொட்டுகிறதே….
இந்தியாவில் எரிமலையே
இல்லையாம்
நமது புவியியல் ஆராய்ச்சியாளர்கள்
கோபத்தில் உன்னைப்
பார்த்ததில்லை போல…..
Re: கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர்
ஓய்வாக இருக்கும்போது மனிதன்
நிமிடத்திற்குப்
பதினைந்து முறை சுவாசிக்கின்றான்
விளையாடும் போது
எண்பது முறை
அவன் சில நேரங்களில்
சுவாசிப்பதையே நிறுத்திக்கொள்வதும் உண்டு
அது எப்போது என்கிறாயா
உன்னைப் போன்ற பெண்ணைப்
பார்க்கும் போதுதான்……
கொடிகளைப் பற்றிப் படிப்பது
“வெக்ஸிலோலொஜி” என்கிறார்கள்
நானும் அதைப் படிக்கப்போகிறேன்
உன் இடை எந்தவகைக் கொடி
என்பதை தெரிந்துகொள்வதற்காக…..
உணவில் அதிகம் மீன் சேர்த்துக்கொண்டால்
அது நோய்களிலிருந்து
நம் இதயத்தைக் காக்குமாம்
நல்ல வேடிக்கை..
என் இதயத்தை அதிகம் தாக்குவதே
கண்கள் என்கிற பெயரில்
நீவைத்திருக்கும் மீன்கள் தானே…..
நன்றி கவிதை மன்னன் - தபு ஷங்கர்
Re: கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர்
அருமை மது
இந்தகவிதைகளின் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு கவியிலும் ஒரு பொது அறிவுச் செய்தி இருக்கும் .
நன்றி
இந்தகவிதைகளின் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு கவியிலும் ஒரு பொது அறிவுச் செய்தி இருக்கும் .
நன்றி
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கொஞ்சல் வழிக் கல்வி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» உன் பேச்சு கா...தல்! - தபு சங்கர்
» தேவதை _ தபு சங்கர்
» தபு சங்கர்
» காதல் ஆத்திசூடி: தபூ சங்கர்
» உன் பேச்சு கா...தல்! - தபு சங்கர்
» தேவதை _ தபு சங்கர்
» தபு சங்கர்
» காதல் ஆத்திசூடி: தபூ சங்கர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|