Latest topics
» நாவல்கள் வேண்டும்by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு
+4
Muthumohamed
Aathira
யினியவன்
சிவா
8 posters
Page 1 of 1
காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு
பாராளுமன்றத்துக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
தி.மு.க. பொதுக்குழு
இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரையும், பின்னர் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரையும் கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியதும் துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
கருத்து கேட்பு
பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க இந்த பொதுக்குழு கூடி உள்ளது. தி.மு.க. பொதுக்குழுவில் என்ன முடிவு செய்யப்படுகிறது என்பதை இந்த நாடே எதிர்பார்க்கிறது. கட்சியில் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் அதற்கு முன்பாக பொதுக்குழுவில் கருத்து கேட்பது வழக்கம். உங்கள் கருத்தை அறிய இக்கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பொதுக்குழுவில் பேசிய பெரும்பாலானவர்கள், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறினார்கள்.
தனித் தீர்மானம்
பின்னர் பொதுக்குழுவின் இறுதியில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தனித்தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தோழமை கட்சிகளுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்திடவும், தொகுதி பங்கீடு பற்றி கலந்து பேசிடவும், கூட்டணிக்கான பேச்சுவார்த்தை குழு ஒன்றை தி.மு.க. சார்பில் அமைத்து அறிவித்திடவும், கூட்டணியை உருவாக்கிடவும் தலைவர் கருணாநிதிக்கும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் இப்பொதுக்குழு முழு அதிகாரம் வழங்குகிறது.இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.
கருணாநிதி பேச்சு
நிறைவாக தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–காலையில் இருந்தே உங்களுடைய கருத்துகளை கேட்டு வருகிறேன். கருத்துகளை கேட்டு முடிவு செய்யும் இயக்கம் நமது இயக்கம். சமீபகாலமாக பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்து நரேந்திர மோடி குறித்து பேசுகிறீர்கள். ஆனால் எனக்கோ, பேராசிரியருக்கோ, ஸ்டாலினுக்கோ அந்த சலனம் ஏற்படவில்லை.பாரதீய ஜனதா நம்முடன் கூட்டணி வைக்காத கட்சி இல்லை. பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோர் கண்ணியமான தலைவர்கள். இவர்கள் இருவரும் எந்த கோரிக்கை வைத்தாலும் நிறைவேற்றி கொடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களை மதிப்புமிக்க தலைவர்களாகவே கருதுகிறோம். ஆனால் அப்போது இருந்த பாரதீய ஜனதா வேறு. இப்போதுள்ள பாரதீய ஜனதா வேறு.கூட்டணி குறித்து பேசும்போது அந்த கட்சியின் தலைமை யார்? என்பதை பார்க்க வேண்டும். அதிலிருந்து வித்தியாசங்களை உணர முடியும். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியே இல்லை என்று சொல்லவில்லை. குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு கூட்டணி குறித்து முடிவு செய்யும்.
காங்கிரசுடன் கூட்டணி கிடையாது
நம்முடன் இருந்து துரோகம் செய்த காங்கிரசுடன் இனி கூட்டணி கிடையாது. காங்கிரசுடன் கூட்டணி வைத்து விடுவோம் என்று நீங்கள் ஒரு போதும் எண்ண வேண்டாம். ஊழல் குற்றச்சாட்டில் கனிமொழிக்கு களங்கம் விளைவித்தும், ஆ.ராசா மீது பழி சுமத்தியும், தயாளு அம்மாளுக்கு துயரத்தை ஏற்படுத்தியதோடு கட்சிக்கும் களங்கம் விளைவித்தவர்கள், இவர்களை பலிகடாவாக ஆக்கிவிட்டு தப்பி விட்டார்கள். இந்த வழக்கு இன்னும் நடக்கிறது. சி.பி.ஐ. யாருடைய நிர்வாகத்தில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். பூஜ்ஜியங்களை போட்டு ஊழல் குற்றச்சாட்டில் தி.மு.க.வை சிக்க வைத்து விட்டார்கள். கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் சிறைக்கு போனார்கள்.நீங்கள் (தொண்டர்கள்) இருக்கும் போது நான் ஏன் பயப்பட வேண்டும். தனித்து நின்று தேர்தலை சந்திக்கும் தைரியம் நமக்கு உண்டு. கழகம் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடைசி வரை ஒற்றுமையாக இருந்து கட்சியின் வெற்றிக்கு உழைக்க வேண்டும்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.
வலியுறுத்தல்
முன்னதாக நேற்று பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சிலர், பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகள் இடம் பெறாத ஒரு அணியை அமைத்து மக்கள் மன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர்.தென்சென்னை மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் பேசுகையில்; ‘‘வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எக்காரணத்தை கொண்டும் நாம் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கக்கூடாது. அதற்காக பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் தப்பில்லை. அதே நேரத்தில் பாரதீய ஜனதா மந்திரிசபையில் நாம் இடம் பெறக்கூடாது. மந்திரிசபையில் இடம் பெற்றால் மட்டும் நமக்கு என்ன நன்மை விளைந்து விட போகிறது. வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம்’’ என்றார்.
தி.மு.க. வாக்கு வங்கி
மேலும் சிலர், ‘‘பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்தாலும், சேராவிட்டாலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி நமக்கு வேண்டாம். அ.தி.மு.க.வை விட நமக்கு வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது. ஏற்காடு இடைத்தேர்தலில் நம்முடைய கட்சி கணிசமான வாக்குகளை பெற்றுள்ளதே இதற்கு சாட்சி. ஆகவே ஒரு புது அணியை நாம் அமைக்க வேண்டும், தேவைப்பட்டால் தனித்து கூட நாம் களம் காணலாம்’’ என்றனர்.பெரும்பாலானோர் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெறலாம் என்று கருத்து தெரிவித்தனர். வாஜ்பாய் அரசில் இடம் பெற்று இருந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டி பேசினர். இன்னும் சிலர் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை கொண்டு வரலாம் என்று தெரிவித்தனர். கடந்த காலங்களில் நாம் அமைந்த அணி தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடியிருக்கிறது. பிரதமரை தீர்மானிக்கும் இடத்தில் (கருணாநிதி) நீங்கள் இருந்து இருக்கிறீர்கள். ஆகவே அதனை கருத்தில் கொண்டு நம் கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டும் வலியுறுத்தினர்.
இரங்கல்
பொதுக்குழு கூட்டத்தில், மறைந்த தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஏற்காடு இடைத்தேர்தலின் போது மரணமடைந்த மாணவர் அணி துணை அமைப்பாளர் ராஜமுருகன், பேராசிரியர் அன்பழகனின் துணைவியார் சாந்தகுமாரி, வீரபாண்டி ஆறுமுகம், முன்னாள் எம்.பி. செ.குப்புசாமி, சமயநல்லூர் செல்வராஜ் உள்பட மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இரங்கல் தீர்மானம் வாசித்து முடித்ததும் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, எஸ்.பி.சற்குணபாண்டியன், தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் கவிஞர் கனிமொழி, ஜெகத்ரட்சகன், தயாநிதிமாறன், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, மகளிர் அணி புரவலர் இந்திரகுமாரி, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், குஷ்பு, கவிஞர் காசிமுத்து மாணிக்கம் மற்றும் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 2,026 பேர் பங்கேற்றனர்.
தினத்தந்தி
தி.மு.க. பொதுக்குழு
இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரையும், பின்னர் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரையும் கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியதும் துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
கருத்து கேட்பு
பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க இந்த பொதுக்குழு கூடி உள்ளது. தி.மு.க. பொதுக்குழுவில் என்ன முடிவு செய்யப்படுகிறது என்பதை இந்த நாடே எதிர்பார்க்கிறது. கட்சியில் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் அதற்கு முன்பாக பொதுக்குழுவில் கருத்து கேட்பது வழக்கம். உங்கள் கருத்தை அறிய இக்கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பொதுக்குழுவில் பேசிய பெரும்பாலானவர்கள், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறினார்கள்.
தனித் தீர்மானம்
பின்னர் பொதுக்குழுவின் இறுதியில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தனித்தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தோழமை கட்சிகளுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்திடவும், தொகுதி பங்கீடு பற்றி கலந்து பேசிடவும், கூட்டணிக்கான பேச்சுவார்த்தை குழு ஒன்றை தி.மு.க. சார்பில் அமைத்து அறிவித்திடவும், கூட்டணியை உருவாக்கிடவும் தலைவர் கருணாநிதிக்கும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் இப்பொதுக்குழு முழு அதிகாரம் வழங்குகிறது.இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.
கருணாநிதி பேச்சு
நிறைவாக தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–காலையில் இருந்தே உங்களுடைய கருத்துகளை கேட்டு வருகிறேன். கருத்துகளை கேட்டு முடிவு செய்யும் இயக்கம் நமது இயக்கம். சமீபகாலமாக பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்து நரேந்திர மோடி குறித்து பேசுகிறீர்கள். ஆனால் எனக்கோ, பேராசிரியருக்கோ, ஸ்டாலினுக்கோ அந்த சலனம் ஏற்படவில்லை.பாரதீய ஜனதா நம்முடன் கூட்டணி வைக்காத கட்சி இல்லை. பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோர் கண்ணியமான தலைவர்கள். இவர்கள் இருவரும் எந்த கோரிக்கை வைத்தாலும் நிறைவேற்றி கொடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களை மதிப்புமிக்க தலைவர்களாகவே கருதுகிறோம். ஆனால் அப்போது இருந்த பாரதீய ஜனதா வேறு. இப்போதுள்ள பாரதீய ஜனதா வேறு.கூட்டணி குறித்து பேசும்போது அந்த கட்சியின் தலைமை யார்? என்பதை பார்க்க வேண்டும். அதிலிருந்து வித்தியாசங்களை உணர முடியும். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியே இல்லை என்று சொல்லவில்லை. குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு கூட்டணி குறித்து முடிவு செய்யும்.
காங்கிரசுடன் கூட்டணி கிடையாது
நம்முடன் இருந்து துரோகம் செய்த காங்கிரசுடன் இனி கூட்டணி கிடையாது. காங்கிரசுடன் கூட்டணி வைத்து விடுவோம் என்று நீங்கள் ஒரு போதும் எண்ண வேண்டாம். ஊழல் குற்றச்சாட்டில் கனிமொழிக்கு களங்கம் விளைவித்தும், ஆ.ராசா மீது பழி சுமத்தியும், தயாளு அம்மாளுக்கு துயரத்தை ஏற்படுத்தியதோடு கட்சிக்கும் களங்கம் விளைவித்தவர்கள், இவர்களை பலிகடாவாக ஆக்கிவிட்டு தப்பி விட்டார்கள். இந்த வழக்கு இன்னும் நடக்கிறது. சி.பி.ஐ. யாருடைய நிர்வாகத்தில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். பூஜ்ஜியங்களை போட்டு ஊழல் குற்றச்சாட்டில் தி.மு.க.வை சிக்க வைத்து விட்டார்கள். கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் சிறைக்கு போனார்கள்.நீங்கள் (தொண்டர்கள்) இருக்கும் போது நான் ஏன் பயப்பட வேண்டும். தனித்து நின்று தேர்தலை சந்திக்கும் தைரியம் நமக்கு உண்டு. கழகம் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடைசி வரை ஒற்றுமையாக இருந்து கட்சியின் வெற்றிக்கு உழைக்க வேண்டும்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.
வலியுறுத்தல்
முன்னதாக நேற்று பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சிலர், பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகள் இடம் பெறாத ஒரு அணியை அமைத்து மக்கள் மன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர்.தென்சென்னை மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் பேசுகையில்; ‘‘வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எக்காரணத்தை கொண்டும் நாம் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கக்கூடாது. அதற்காக பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் தப்பில்லை. அதே நேரத்தில் பாரதீய ஜனதா மந்திரிசபையில் நாம் இடம் பெறக்கூடாது. மந்திரிசபையில் இடம் பெற்றால் மட்டும் நமக்கு என்ன நன்மை விளைந்து விட போகிறது. வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம்’’ என்றார்.
தி.மு.க. வாக்கு வங்கி
மேலும் சிலர், ‘‘பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்தாலும், சேராவிட்டாலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி நமக்கு வேண்டாம். அ.தி.மு.க.வை விட நமக்கு வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது. ஏற்காடு இடைத்தேர்தலில் நம்முடைய கட்சி கணிசமான வாக்குகளை பெற்றுள்ளதே இதற்கு சாட்சி. ஆகவே ஒரு புது அணியை நாம் அமைக்க வேண்டும், தேவைப்பட்டால் தனித்து கூட நாம் களம் காணலாம்’’ என்றனர்.பெரும்பாலானோர் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெறலாம் என்று கருத்து தெரிவித்தனர். வாஜ்பாய் அரசில் இடம் பெற்று இருந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டி பேசினர். இன்னும் சிலர் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை கொண்டு வரலாம் என்று தெரிவித்தனர். கடந்த காலங்களில் நாம் அமைந்த அணி தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடியிருக்கிறது. பிரதமரை தீர்மானிக்கும் இடத்தில் (கருணாநிதி) நீங்கள் இருந்து இருக்கிறீர்கள். ஆகவே அதனை கருத்தில் கொண்டு நம் கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டும் வலியுறுத்தினர்.
இரங்கல்
பொதுக்குழு கூட்டத்தில், மறைந்த தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஏற்காடு இடைத்தேர்தலின் போது மரணமடைந்த மாணவர் அணி துணை அமைப்பாளர் ராஜமுருகன், பேராசிரியர் அன்பழகனின் துணைவியார் சாந்தகுமாரி, வீரபாண்டி ஆறுமுகம், முன்னாள் எம்.பி. செ.குப்புசாமி, சமயநல்லூர் செல்வராஜ் உள்பட மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இரங்கல் தீர்மானம் வாசித்து முடித்ததும் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, எஸ்.பி.சற்குணபாண்டியன், தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் கவிஞர் கனிமொழி, ஜெகத்ரட்சகன், தயாநிதிமாறன், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, மகளிர் அணி புரவலர் இந்திரகுமாரி, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், குஷ்பு, கவிஞர் காசிமுத்து மாணிக்கம் மற்றும் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 2,026 பேர் பங்கேற்றனர்.
தினத்தந்தி
Re: காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு
வாக்கு வங்கி அப்படியே இருக்கோ இல்லையோ
உங்கள் வங்கி கணக்கில் சொத்திருக்கு தலைவா
உங்கள் வங்கி கணக்கில் சொத்திருக்கு தலைவா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு
//பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோர் கண்ணியமான தலைவர்கள். இவர்கள் இருவரும் எந்த கோரிக்கை வைத்தாலும் நிறைவேற்றி கொடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களை மதிப்புமிக்க தலைவர்களாகவே கருதுகிறோம். ஆனால் அப்போது இருந்த பாரதீய ஜனதா வேறு. இப்போதுள்ள பாரதீய ஜனதா வேறு.கூட்டணி குறித்து பேசும்போது அந்த கட்சியின் தலைமை யார்? என்பதை பார்க்க வேண்டும். அதிலிருந்து வித்தியாசங்களை உணர முடியும். //
தலைவா கொள்கை கிடக்குது கொள்கை. அதைத் தூக்கிப் போடுங்க. இப்ப இவங்க பக்கம்தான் வெளிச்சம் தெரியுது.
தலைவா கொள்கை கிடக்குது கொள்கை. அதைத் தூக்கிப் போடுங்க. இப்ப இவங்க பக்கம்தான் வெளிச்சம் தெரியுது.
Re: காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு
தலைவா கொள்கை கிடக்குது கொள்கை. அதைத் தூக்கிப் போடுங்க. இப்ப இவங்க பக்கம்தான் வெளிச்சம் தெரியுது.
இது தான் உண்மை நடக்கவும் போகிறது
இது தான் உண்மை நடக்கவும் போகிறது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு
கனி கொடுக்கும் மரம் எதுவோ அதுவே உயர்ந்தது .
திட்டிய பேச்சு எல்லாம் மறந்து போச்சே.
மரத்துப்போன சுயநலம்.
ரமணியன்
திட்டிய பேச்சு எல்லாம் மறந்து போச்சே.
மரத்துப்போன சுயநலம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு
இதுவும் ஒரு பேச்சா, போங்கடா நீங்களும் உங்க அரசியலும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு
4 மாநில தேர்தல் முடிவு வந்தாலும் வந்தது ..... இந்தியா முழுவதும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்ப பித்து பிடித்து அலையுரானுங்க .....
Re: காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு
" பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோர் கண்ணியமான தலைவர்கள். இவர்கள் இருவரும் எந்த கோரிக்கை வைத்தாலும் நிறைவேற்றி கொடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களை மதிப்புமிக்க தலைவர்களாகவே கருதுகிறோம். ஆனால் அப்போது இருந்த பாரதீய ஜனதா வேறு. இப்போதுள்ள பாரதீய ஜனதா வேறு.கூட்டணி குறித்து பேசும்போது அந்த கட்சியின் தலைமை யார்?"-------கருணாநிதி
கருணாநிதியின் இந்த கூற்றை ஒத்துக்கொள்ளமுடியாது .BJP ஆட்சியில் பங்கேற்று முரசொலி மாறன் மருத்துவ செலவை முழுதும் அனுபவித்துவிட்டு ,தேர்தல் வருவதற்கு 4 மாதங்களுக்கு முன்னால் கழன்றுகொண்டு ஓடிவந்த மறத்தமிழன் இவர். ச்சே இவன் எல்லாம் ஒரு மனிஷன் இவனுக்கு ஒரு கட்சி. கூஜாக்கள்.
ரமணியன்
கருணாநிதியின் இந்த கூற்றை ஒத்துக்கொள்ளமுடியாது .BJP ஆட்சியில் பங்கேற்று முரசொலி மாறன் மருத்துவ செலவை முழுதும் அனுபவித்துவிட்டு ,தேர்தல் வருவதற்கு 4 மாதங்களுக்கு முன்னால் கழன்றுகொண்டு ஓடிவந்த மறத்தமிழன் இவர். ச்சே இவன் எல்லாம் ஒரு மனிஷன் இவனுக்கு ஒரு கட்சி. கூஜாக்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு
நீங்க கூட்டணி சேர்ந்தா மட்டும், ஜெயிச்சுற போகுதா காங்கிரஸ். முதலில் திராவிட கட்சிகளை தமிழகத்திலிருந்து அகற்ற வேண்டும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» மக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி; காங்கிரஸ் அணியுடன் கூட்டணி இல்லை: ஆம் ஆத்மி அறிவிப்பு
» உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி!-சிரஞ்சீவி
» மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி
» ஜல்லிக்கட்டு அனுமதிக்கு கண்டனம்: உச்ச நீதிமன்றத்துக்கு செல்வோம் ‘பீட்டா’ திட்டவட்ட அறிவிப்பு
» பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி
» உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி!-சிரஞ்சீவி
» மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி
» ஜல்லிக்கட்டு அனுமதிக்கு கண்டனம்: உச்ச நீதிமன்றத்துக்கு செல்வோம் ‘பீட்டா’ திட்டவட்ட அறிவிப்பு
» பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|