ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரைக்கால் அம்மையார் !!

Go down

காரைக்கால் அம்மையார் !! Empty காரைக்கால் அம்மையார் !!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Dec 15, 2013 12:58 am

மனித பிறவியை பக்தித்தொண்டால் கடந்தவர்கள் தமிழக மரபில் அதிகம் ! அத்த்கையவர்களுள் பெண்ணாகப்பிறந்தும் உய்வடைந்த ஆத்மா - புனிதவதியார் !

பெண்ணாகப்பிறந்தவர்கள் துறவற வாழ்வு மேற்கொள்வது அவ்வளவு எளிதானதன்று !

பக்தி பெறுகும் போது யாத்திரை அல்லது சேத்திராடனம் என்பது அவசியமான ஒன்றாகப்போய் விடுகிறது

ஆழ்வார்கள் அல்லது நாயன்மார்கள் தம் உள்ளம் முழுதும் நிரம்பி வழியும் தங்கள் அய்யனை ஏன் ஊர் ஊராகத்தேடி அலையவேண்டும் ! ஒவ்வோரிடமும் சென்று அவர்கள் மங்களாசாசனம் அல்லது பதிகம் ஏன் பாடவேண்டும் !

இந்த சரீரம் இருக்கும் காலம் வரை அது ஒரு கடமையாக - செயல்பாடாக அவசியப்பட்டு விடுகிறது

அதில் அவர்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி என்பதோடு - சாதாரன பொதுமக்கள் பலர் உய்வடைய அவர்கள் யாத்திரை அந்தப்பகுதியில் ஒரு அருள் தெளிப்பு - விதை தூவல் என்பதாகவும் இறைவனாலும் பயன்படுத்தப்படுகிறது

உலகமும் உலக வாழ்வும் அதை அழகாக்கிக்காண்பிக்கும் அசுர ஆவிகளும் பூமியில் விதவிதமான மாயைகளை அள்ளித்தெளித்து மனித ஆத்மாக்கள் இறைவனை தேடுவதிலிருந்து வேறு வழியில் மனிதர்களை திருப்பிவிட்டுக்கொண்டிருக்கும் போது பரலோக ராஜ்ஜியத்தின் - இறைபேரரசின் விழுது இத்தகையவர்களின் மூலமாகாத்தான் பூமியில் தெளிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்

ஆதி தமிழரின் இறையியலாக இருந்து இந்தியா முழுதும் பரவிய இந்து தர்மத்தில் புரட்டாசி ; கார்த்திகை ; மார்கழி மாதங்களை ஆன்மீக வாழ்வுக்கானவையாக இறைதேடலாக யாத்திரைக்குரியதாக ஆக்கி வைத்திருக்கிறது

இந்த யாத்திரையை ஆண்கள் எளிதாக மேற்கொள்ளும்போது துறவற வாழ்வுக்கு அனுமதி கணவனிடமிருந்து கிடைக்கப்பெற்றவுடன் புனிதவதியார் என்ற வணிகர் குல மெல்லியளார் விரும்பி மேற்கொண்ட உருவம் `` பேயுருவம் `` ஆகும் !

அது நினைத்த உடன் நினைத்த இடம் செல்லுவதற்கும் பற்று பாசம் பந்தம் பாதுகாப்பு அனைத்தையும் துறந்து கவலை அற்று இறைவனே பற்றுக்கோடு என்னும் மன நிலைக்கு வந்த காரைக்கால் அம்மையாருக்கு அழகிய பெண் வடிவம் ஒரு பெரும் சுமையல்லவா ?


இறைவனை வேண்டிப் பேய் வடிவத்தைப் பெற்ற புனிதவதியார் “காரைக்கால் பேய்” என்றும் `` செடிதலைக் காரைக்காற் பேய்’ என்றும் கனல்வாய் எயிற்றுக் (எயிறு-பல்) காரைக்காற்பேய் என்றும் தம்மைத் தாமே கூறி மகிழ்ந்து கொள்கிறார்.

அவரின் சுருக்கமான வரலாறு :

புனிதவதியார் காரைக்காலில் பெருவணிகன் தனதத்தனின் குலக் கொழுந்தாய்ப் பிறக்கிறார். செல்வச் செழிப்போடு வளர்கின்றார். அவரைப் பரமதத்தனுக்குச் சீரோடும் சிறப்போடும் மணம் செய்து கொடுத்த தனதத்தன் தம் மகளைப் பிரிய மனமின்றிப் பெருஞ்செல்வம் தந்து மணமக்களைக் காரைக்காலிலேயே தங்க வைக்கின்றார்.

இருவரும் இனிய இல்லறம் நடத்திவந்த வேளையில் பரமதத்தனைக் காண வந்த வணிகன் ஒருவன் இரு மாங்கனிகளைத் தருகிறான். அதனை இல்லத்திற்கு அனுப்பி வைக்கிறான் பரமதத்தன்.! சிவனடியார் ஒருவர் அரும்பசியுடன் வர, உணவு சமைக்கப்பட்டு காய் சமைக்கப் படாத நிலையில் அந்த மாங்கனிகளில் ஒன்றை இலையில் இட்டுச் சிவனடியாரின் பசியை ஆற்றுவிக்கிறார் புனிதவதியார்.

நண்பகலில் உணவு உண்ண வந்த பரமதத்தனுக்கு மற்றொரு மாங்கனியைப் பரிமாறுகிறார். அது சுவையாக இருந்தமையால், தாம் அனுப்பியவற்றில் மீதமிருக்கும் மற்றொன்றையும் வைக்கும்படி கேட்கிறான் பரமதத்தன். செய்வதறியாது புனிதவதியார் இறைவனை வேண்ட, இறையருளால் ஒரு கனி கிடைக்கிறது. அதனைப் பரமதத்தனுக்குப் பரிமாறுகிறார்.

முன்னர் அந்த மாங்கனியைப் பரிமாறியது சிவனடியாருக்குத்தான். அப்படியிருக்க இதற்குப் புனிதவதியார் அஞ்ச வேண்டிய காரணம் இல்லை !அடியாருக்கு உணவு படைப்பது அஞ்ச வேண்டிய செயலாக ஒருபோதும் இருக்க முடியாது. ஒரு வேளை, தான் இல்லத்தில் இல்லாத போது ஒரு ஆடவர் இல்லத்திற்கு வருவதை விரும்பாதவனா பரமதத்தன் என்னும் வினா எழுவதைத் தடுக்க முடியவில்லை.

இறையருளால் பெற்ற கனியின் சுவை முன்னதன் சுவையைக் காட்டிலும் மதுரமாக இருக்கவே “இஃது ஏது” என்று வினவுகிறான் பரமதத்தன். புனிதவதியார் உண்மையைச் சொல்கிறார். அப்படியென்றால் “மற்றொரு கனியைப் பெற்றுக் காட்டு” என்கிறான் பரமதத்தன். இறையருளால் மற்றொன்றும் பெற்றுக் காட்டுகிறார் புனிதவதியார். அச்சம் கொண்ட பரமதத்தன் இவள் மானிடப் பிறவி அல்லள்; தெய்வப் பிறவி என்று அவரை விட்டுப் பிரிந்து விடுகிறான்.

புனிதவதியாரைப் பிரிவதற்காக வங்கப் பயணம் மேற்கொண்ட பரமதத்தன் மிகுதியாகப் பொருள் ஈட்டித் திரும்புகிறான். மதுரையில் ஒரு வணிகர் குலப் பெண்ணை மறுமணம் புரிந்து வாழ்கிறான்.

புனிதவதியாரின் பெற்றோர்க்கு இச்செய்தி தெரிய வருகிறது. அவர்கள் சுற்றம் சூழ அவனிடம் புனிதவதியாரை அழைத்து செல்கின்றனர். அவனோ,

“மானுடம் இவர்தாம் அல்லர் நற்பொருள்

தெய்வமாதல் நானறிந்து அகன்றேன்”


என்று கூறிப் புனிதவதியாரின் பாதத்தை வணங்குகிறான். அத்துடன் நின்றானா? வந்தவன் எப்படி வருகிறான்? மறுமணம் புரிந்து கொண்டு தன் மனையாளுடனும் மகளுடனும் வந்து “இவள் என் மகள். உங்கள் பெயரைச் சூட்டியுள்ளேன். நாங்கள் வாழ அருள்வீராக” என்று பாதத்தில் விழுந்து பணிகிறான்.

அத்துடன்

`பொற்பதம் பணிந்தேன் நீரும்

போற்றுதல் செய்ம்மின்”

என்று உற்றார் உறவினரையும் புனிதவதியாரை வணங்குமாறு கூறுகிறான்.

அப்போது புனிதவதியார் பேயுருவை வழங்கும்படி இரைவனை வேண்ட அவ்வாறே பேயுரு பெற்று காரைக்கால் அம்மையாராக மாறுகிறார் ! ஊர் ஊராக பல தலங்கள் சென்று பல பதிகங்கள் பாடி இறுதியில் முக்தியும் பெறுகிறார் !

இந்தப்பேயுருவை அவர் பெற்றது கணவன் மேலுள்ள வெறுப்பாலா ?

மேலோட்டமாக பார்த்தால் அப்படித்தான் தோன்றும் ! ஆனால் ஆன்மவியலாக அதை நோக்கினால் அது அவராகவே விரும்பி ஏற்றுக்கொண்டது என்பது விளங்கும் !

இறை அனுபவம் என்பது ஒரு பிறவியில் முதிர்வதல்ல படிப்படியே அநுபூதி அடைவது ! சிவனடியார்க்கு ஒரு மாங்கனியை படைத்துவிட்டேன் என்று சொல்ல அவரால் முடியாததல்ல அதுவும் மாமனார் வீட்டு மருமகனுக்கு பயப்பட வேண்டிய அவசியம் என்ன ?

ஒரு மாம்பழத்தை வரவழைப்பது என்பது ஒரு சித்து அல்லது வரம் அதை ஏற்கனவே ஆன்மிக வாழ்வில் இறை அனுபூதியால் கிடைக்கப்பெற்று பயிற்சியும் செய்து பார்த்திருந்தாலும் பெண் என்ற இல்லற சிறையில் இருப்பவரால் வெளிக்காட்டமுடியாமலிருந்திருக்கும் ! சொந்தக்கணவனாலும் அதை உணராமல் சாதாரன ஒரு பெண்ணாகவே நடத்தப்பட்டிருப்பார்

மனைவி என்பவள் கணவனின் அனுமதியில்லாமல் துறவறம் மேற்கொள்ள கட்டுப்பாடு இருப்பதால் அவனிடமிருந்து விடுபடுவத்ற்கான செய்தியாக அதை பயன்படுத்தினார்கள் ! அத்ற்கு முன்பும் சில சிறு சிறு விசயங்கள் நடந்திருக்கும் அதை பரமதத்தனால் சரிவர புரிந்துகொள்ள முடியாமல் இருந்தாலும் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்திருப்பார் அதனால்தான் மாம்பலம் வரவழைப்பதை கண்கூடாக கண்டதும் அவர் அம்மையாரை விட்டு பிரிந்து சென்று வேறு வாழ்வும் தேடிக்கொண்டார் ! புனிதவதியாரும் வலிய விடுதலை கேட்பதற்கு பதிலாக இச்செய்திகளின் மூலமாக அதை உருவாக்கிகொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்

அவ்வறு கணவனாலேயே தெய்வப்பெண் என சுட்டப்பட்டு பாதம் பணியப்பட்ட பிறகு அவர் ஏன் உள்ளம் வெதும்புவார் ?

ஆனால் பேயுருவம் கெட்டது வெறுப்பினாளல்ல ! அதும் ஒரு மனப்பக்குவமே !

கணவன் பொருளீட்ட வங்கம் சென்றபிறகு பக்தியில் அதிக ஈடுபாடு காட்டியிருப்பார்கள் ஆனால் உடலில் பெண்ணுருவில் இருப்பதால் மனம் எவ்வளவு பக்குவப்பட்டிருந்தாலும் செல்லுமிடங்களில் பக்குவமில்லாத ஆண்களால் பல இடரல்கள் வருவதை உணர்ந்திருப்பார் சொந்த ஊரிலேயே நினைத்த இடத்திற்கு செல்லமுடியாதது பெண்ணுருவால் என்பதால் பல ஊர்களுக்கு நினைத்த நேரத்தில் செல்ல ஆண்களால் இடஞ்சல் ஏற்படாத பேயுரு வேண்டும் என்று பல நாட்களாக உணர்ந்திருப்பார் !

கணவன் விடுதலை கொடுத்தவுடன் தனது ஆன்மீகப்பயணத்திற்கு உதவியாக அவ்வுருவை ஏற்றுக்கொண்டார் !

உலகியல் பார்வை வேறு ஆன்மீக பார்வை வேறு !

உலகியலுக்கு பெண்ணிய போராளியாக தெரிந்தாலும் ஆன்மீக முதிர்ச்சியினால் மனம் நோகாமல் விரும்பியே அவ்வுருவை எற்றுக்கொண்டார் என்பதுவே உண்மை



ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum