புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_m10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_m10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_m10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_m10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_m10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10 
21 Posts - 4%
prajai
கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_m10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_m10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_m10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_m10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_m10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_m10கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர்


   
   

Page 1 of 2 1, 2  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 16 Dec 2013 - 22:14

கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Images?q=tbn:ANd9GcSZo9xMw-OL_TYuuPfvac3jWnenGvA5QLXg-Mt9i2pHfe1y6xzl

மீன்கொத்திப்பறவை
தான் சாப்பிட்ட மீன்களின் முட்களைக்கொண்டே
கூடு கட்டிக்கொள்கிறது…
மனங்கொத்திப் பறவை நீயோ
முதலில் என் இதயத்தில் கூடுகட்டிக் குடியேறிவிட்டு
பிறகு என் இதயத்தை சாப்பிடுகிறாய்…..

ஒரு முறை எரிந்து சாம்பலான பொருளை
இன்னொருமுறை எரிக்கவே முடியாது
ஆனால் நீயோ என்னை
மறுபடி
மறுபடி
எரித்துக்கொண்டே இருக்கிறாய்….

தும்மல் வரும்போது நம் உடலில்
இதயம் உட்பட அனைத்தும்
ஒருநொடி நின்றுவிடும்
நீ வரும் போது
தும்மலே நின்றுவிடும்…

இந்தியாவில் ஆளுனர் ஆவதற்கு
35 வயதிற்கு மேல்
ஆகியிருக்க வேண்டும்
நீ மட்டும்
22 வயதிலேயே
என்னை ஆளுகிறாயே…..




கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Mகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Aகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Dகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Hகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் U



கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 16 Dec 2013 - 22:15

கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Images?q=tbn:ANd9GcSlRvmOq5i5j5st6Y4Eiuk3vriGaB_O2jT4g41nCilZMA54owPF

“காலியம்” என்கின்ற உலோகம்
நம் உள்ளங்கைச் சூட்டிலேயே
உருகிவிடுகிறது
நான் உன் நிழலின் சூட்டிலேயே
உருகிவிடுகிறேன்….

ஒருகையால் ஓவியம் வரைந்துகொண்டே
இன்னொரு கையால் எழுதும் பழக்கம் உடையவர்
ஓவியர் லியானோ டாவின்ஸி
ஒரு கையால் எழுதிக்கொண்டே
இன்னொரு கையால்
கூந்தலையும் கோதி விட்டுக்கொள்ளும்
ஓவியம் நீ….

ஞானம் பெறுவதற்கு முன் புத்தர்
போதிமரத்தின் கீழ்
49 நாட்கள் அமர்ந்திருந்தார்
ஆனால்
உன் நிழலின் கீழ்
ஒரே ஒரு நொடி நின்று
காதலை ஞானமாப் பெற்றவன் நான்……

ஒரு வினாடியில்
முன்றில் ஒரு பங்கு நேரம் ஆகிறதாம்
நாம் ஒரு முறை கண் சிமிட்ட
அய்யய்யோ
ஒவ்வொரு முறை கண்சிமிட்டும்போதும்
அவ்வளவு நேரமா நான் உன்னைப்
பார்க்காமல் இருக்கின்றேன்…..




கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Mகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Aகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Dகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Hகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் U



கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 16 Dec 2013 - 22:17

கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Images?q=tbn:ANd9GcQd5nVcC1xVB-2_O4bxTdywju9Ztkx0228QmyXfuC1N4ZPYCfSnuQ

அஞ்சல் வழிக் கல்வியை
முதலில் தொடங்கியது
டெல்லி பல்கலைக் கழகம்
கொஞ்சல் வழிக் கல்வியைத்
தொடங்கியது நீ……

நமது உடலில்
ஒரு சதவீதம் தண்ணீர் குறைந்தாலும்
உடனே நம் நாக்கு வறண்டு போகும்
உன் மீதான காதலில்
அரை சதவீதம் குறைந்தாலும்
உடனே என் உயிர் வறண்டு போகும்…..

எந்தப்பொருளின் எடையும்
பூமியின் மையப் பகுதியில்
பூஜ்ஜியம் தான்
உன் அழகின் எல்லைப் பகுதிக்குள்
என் எடையும் பூஜ்ஜியம்தான்…..

குவாக் குவாக் என்கின்ற வாத்துச் சத்தம்
எதிலும் எதிரொலிப்பதில்லை
அப்படித்தான் உன் குரலும்
எதிலும் எதிரொலிக்காது
எந்த மலைதான் திருப்பி அனுப்பும் உன் குரலை…..





கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Mகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Aகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Dகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Hகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் U



கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 16 Dec 2013 - 22:19

கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Images?q=tbn:ANd9GcRHaIvGOsmiYzNbeMXDqp3hziGFqhxYydzwFtjbRQQI81Apwjk-

நிமிடத்திற்கு 72 முறை மட்டுமே
உனக்காக துடிக்கும் என் இதயம்
இனி வேண்டவே வேண்டாம்
நிமிடத்திற்கு 1000 முறை துடிக்கும்
சிட்டுக்குருவியின் இதயத்தை
உடனே என் இதயமாக்கிக் கொள்ள வேண்டும்…..

அன்னாசிப் பழம்
ஒரு பழமே இல்லை
பல பூக்கள் சேர்ந்த ஒரு பூச்செண்டு
நீ ஒரு பெண்ணே இல்லை
பல பழங்கள் சேர்ந்த ஒரு பழச்செண்டு….

சராசரியாக
ஒரு நிமிடத்தில் 38 புயல்கள்
தோன்றுகின்றன இந்தப் பூமியில்
இதில் எத்தனை புயல்கள்
நீ சிரிப்பதனால் தோன்றுகின்றதோ….

பகலைவிட இரவில்
மேகங்கள் மெதுவாக நகர்கின்றன
நீ தூங்கும் போது
பூமியே மெதுவாகச் சுற்றும் போது
மேகம் மட்டும் என்ன செய்யும்……





கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Mகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Aகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Dகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Hகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் U



கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 16 Dec 2013 - 22:20

கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Images?q=tbn:ANd9GcQ2EB0gCw5HjaznXTQZo2eU_I5JaptBXIA8yHstmDnuqNPpzT-UVA

ஜெர்மனியர்கள் தங்கள் நாட்டை
தந்தையர் நாடு என்று அழைக்கிறார்கள்
நீ பிறந்த நம் நாட்டை
நான் தேவதை நாடு என்று அழைக்கவா…..

ஒரு யுகம் என்பது
43,20,000 ஆண்டுகள்
உன்னுடன் வாழும்
ஒரு தேவ கணத்துக்கு
இணையாகுமா அந்த ஒரு யுகம்….

நட்சத்திர மீனை எத்துனைத் துண்டுகளாக
வெட்டினாலும்
ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு நட்சத்திர மீனாக
வளர்ந்துவிடுகிறது
எனக்கும் அந்த அபூர்வ சக்தி இருந்தால்
என்னை நானே
துண்டுத் துண்டாக வெட்டி
பத்துப் பதினைந்து பேராக வளர்ந்து
தைரியமாய் உன்னைக் காதலிக்கலாம்
ஒருத்தனாக
உன்னை காதலிக்க
எனக்கு பயமாக இருக்கிறது……

இந்தியாவின் ரோஜா தலைநகரம்
பூனா
ரோஜாக்களின் தலைநகரம்
உன் கூந்தல்…..




கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Mகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Aகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Dகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Hகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் U



கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 16 Dec 2013 - 22:22

கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Images?q=tbn:ANd9GcTB4v0aX_ihmRLBoy9wzc77H11rg4-wliZlPXYGuCzCGQE6ErqD

தங்கத்தின் மதிப்பு லண்டனிலும்
வைரத்தின் மதிப்பு நெதர்லாந்திலும்
நிர்ணயிக்கப்படுவதாக
சொல்கிறார்கள்
உண்மையில் இரண்டின் மதிப்பும்
நிர்ணயிக்கப்படுவது
உன் கழுத்தில் தான்


பெண்களை விட ஆண்களுக்கு
இரு மடங்கு வியர்க்கிறது
ஆமாம் ஆமாம்
உன்னிடம் காதலைச் சொல்வதற்குள்
என்னைச்சுற்றி
ஒரு வியர்வை நதியே
ஓட ஆரம்பித்து விட்டதே……

மெக்சிக்கோ நாட்டில்
அலாமாஸ் நகர சிறைச்சாலையில்
கைதி தப்பித்து விட்டால்
அந்த கைதியின் தண்டனையை
சிறைக் காவலர் அனுபவிக்க வேண்டும்
நீ என் இதயத்திலிருந்து
தப்பித்துவிட்டால்
அதற்கான தண்டனையைச்
சாகும் வரை
நான் தான்
அனுபவிக்க வேண்டும்……..




கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Mகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Aகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Dகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Hகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் U



கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 16 Dec 2013 - 22:23

கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Images?q=tbn:ANd9GcTGz4RcxaNmGLXxT3bJwgD6TWFBUIRfaoLN4VK6dmAW-pQYiCHz

மனிதனின் கண்ணுக்குப்
புலப்படாத
வெளிச்சத்தை
தேனீயால் பார்க்க முடியும்
ஒரே ஒரு நாள் என்னைத்
தேனீயாக மாற்றிவிடு
உன் அழகு வெளிச்சத்தைப்
பார்க்க வேண்டும் எனக்கு…….

மேகங்கள்
18 கிலோ மீட்டர் உயரம் வரைதான்
செல்லும்
அதற்கு மேல் சென்றால்
மேகங்களால் உன்னைப் பார்க்க முடியாதோ……

அந்தக்காலத்தில் தன் வீரர்களுக்கு
சம்பளத்தில் பாதியை
உப்பாகக் கொடுத்திருக்கிறது
ரோமாபுரி
நீ உன் காதலில் பாதியை எனக்கு
முத்தமாகக் கொடுத்துவிடு……

பயப்படாதே என்கிற சொல்
பைபிளில் 365 இடங்களில் வருகிறது
ஆனால் பைபிள் யாரையும் பயமுறுத்துவதில்லை
நீயோ எப்போதும் என்னை உன் அழகால்
பயமுறுத்திக்கொண்டே இருக்கிறாய்
ஆனால் உன் மேனியில் ஒரு இடத்தில் கூட
இறைவன் எழுதவே இல்லையே
“பயப்படாதே” என்று




கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Mகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Aகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Dகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Hகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் U



கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 16 Dec 2013 - 22:25

கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Images?q=tbn:ANd9GcT9lW16cJil5aNXxVjQaRyK1FTQD0d84xPzjdqy5DZchY5F45-WPw

மனித உடலில்
உதடுகள் மட்டும்
வியர்ப்பதில்லை
ஆனால் உன் உதடுகள்தான்
என்னை அதிகம்
வியர்க்க வைக்கின்றன……

நமது உடலில் உள்ள தசைகளில்
மிக வலிமையானது நாக்குத்தான்
என்ன புண்ணியம்
உன்னிடம் பேசும் போது
பயந்தாங்கொள்ளியாகி உளறிக் கொட்டுகிறதே….

இந்தியாவில் எரிமலையே
இல்லையாம்
நமது புவியியல் ஆராய்ச்சியாளர்கள்
கோபத்தில் உன்னைப்
பார்த்ததில்லை போல…..




கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Mகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Aகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Dகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Hகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் U



கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 16 Dec 2013 - 22:26

கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Images?q=tbn:ANd9GcS5VgW-XRRheFaKF_9IDmFSKw6N0L6FsZpEWlA9cD7Rzj1s2Gsb

ஓய்வாக இருக்கும்போது மனிதன்
நிமிடத்திற்குப்
பதினைந்து முறை சுவாசிக்கின்றான்
விளையாடும் போது
எண்பது முறை
அவன் சில நேரங்களில்
சுவாசிப்பதையே நிறுத்திக்கொள்வதும் உண்டு
அது எப்போது என்கிறாயா
உன்னைப் போன்ற பெண்ணைப்
பார்க்கும் போதுதான்……

கொடிகளைப் பற்றிப் படிப்பது
“வெக்ஸிலோலொஜி” என்கிறார்கள்
நானும் அதைப் படிக்கப்போகிறேன்
உன் இடை எந்தவகைக் கொடி
என்பதை தெரிந்துகொள்வதற்காக…..


உணவில் அதிகம் மீன் சேர்த்துக்கொண்டால்
அது நோய்களிலிருந்து
நம் இதயத்தைக் காக்குமாம்
நல்ல வேடிக்கை..
என் இதயத்தை அதிகம் தாக்குவதே
கண்கள் என்கிற பெயரில்
நீவைத்திருக்கும் மீன்கள் தானே…..

நன்றி கவிதை மன்னன் - தபு ஷங்கர்



கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Mகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Aகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Dகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் Hகொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் U



கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue 17 Dec 2013 - 10:16

அருமை மது
இந்தகவிதைகளின் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு கவியிலும் ஒரு பொது அறிவுச் செய்தி இருக்கும் .
நன்றி



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக