புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் - சுப்ரீம் கோர்ட் Poll_c10ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் - சுப்ரீம் கோர்ட் Poll_m10ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் - சுப்ரீம் கோர்ட் Poll_c10 
30 Posts - 83%
heezulia
ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் - சுப்ரீம் கோர்ட் Poll_c10ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் - சுப்ரீம் கோர்ட் Poll_m10ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் - சுப்ரீம் கோர்ட் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் - சுப்ரீம் கோர்ட் Poll_c10ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் - சுப்ரீம் கோர்ட் Poll_m10ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் - சுப்ரீம் கோர்ட் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் - சுப்ரீம் கோர்ட் Poll_c10ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் - சுப்ரீம் கோர்ட் Poll_m10ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் - சுப்ரீம் கோர்ட் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் - சுப்ரீம் கோர்ட் Poll_c10ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் - சுப்ரீம் கோர்ட் Poll_m10ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் - சுப்ரீம் கோர்ட் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் - சுப்ரீம் கோர்ட்


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Dec 11, 2013 1:17 pm

புதுடில்லி: ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது இல்லை என கடந்த 2009ம் ஆண்டு, டில்லி ஐகோர்ட் தீர்ப்பளி்த்திருந்தது. இது கலாச்சாரத்திற்கு எதிரானது எனக்கூறி இந்த தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு மீதான விசாரணைக்கு பிறகு, இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அதில், டில்லி ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், இந்தியாவில் ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமானது தான் என தீர்ப்பளித்துள்ளது.

-- தினமலர்

ஆண், பெண் ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஓரினச் சேர்க்கை சரியே என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி தீர்ப்பளித்திருந்தது. வயது வந்தோர் மனம் ஒத்து சேர்ந்து கொண்டால் அது சட்ட விரோதமாகாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் எஸ்.ஜே. முகோபத்யாய ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது சிலர் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஆண்டு மார்ச் 27ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் சுமார் ஓராண்டு மற்றும் 9 மாதங்கள் கழித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் ஓரினச் சேர்க்கை சரியே என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377ன் படி இயற்கைக்கு புறம்பான உறவு சட்டவிரோதமானது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான சிங்வி இன்று ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-- ஒன் இந்தியா

இது குறித்த முந்தைய பதிவுகள் :

http://www.eegarai.net/t3687-topic

http://www.eegarai.net/t6890-topic

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 11, 2013 1:22 pm

இதுக்கெல்லாமா வழக்காடுவாங்க. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Dec 11, 2013 4:17 pm

புதுடெல்லி,

ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது. ஆயுள் தண்டனை வழங்க கூடிய வகையிலான குற்றம் தான் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது இல்லை என்று டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது. தீர்ப்பில், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-ன்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர், விருப்பத்துடன் தனிமையில் உறவு கொள்வது குற்றமாகாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஓரினச் சேர்க்கைக்கு எதிரான அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட், ஒரினச் சேர்க்கை குற்றம் என்றும் இந்த குற்றத்தில் ஈடுபடுவோர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க முடியும் என்று தீர்ப்பில் கூறியுள்ளது.

மேலும் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-ஐ நீக்குவது குறித்து மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை ஓரினச் சேர்க்கையாளர்கள் எதிர்த்துள்ளனர்.

வழக்கில் இதுவரை நடந்தவை:

2001: ஓரினச் சேர்க்கை சட்டப் பூர்வமானதாக அறிவிக்க வேண்டும் என்று ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக போராடும் 'நாஸ்' தன்னார்வ அமைப்பு டெல்லி ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தது.

செப்டம்பர் 2004: டெல்லி ஐகோர்ட் 'நாஸ்' தன்னார்வ அமைப்பின் பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து மனுவை சீராய்வு செய்யக் கோரப்படுகிறது.

நவம்பர் 3, 2004: மறு சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுகிறது.

டிசம்பர் 2004 : டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான 'நாஸ்' தன்னார்வ அமைப்பு சுப்ரீம் கோர்ட்டை அனுகுகிறது.

ஏப்ரல் 3, 2006: ஓரினச் சேர்க்கையாளார்களின் கோரிக்கை மனுவை ஏற்குமாறு டெல்லி ஐகோர்ட்டிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுகிறது.

அக்டோபர் 4: ஓரினச் சேர்க்கைக்கு எதிராக பாரதீய ஜனதா மூத்த தலைவர் சிங்கால் தொடர்ந்த மனுவை டெல்லி ஐகோர்ட் ஏற்கிறது.

செப்டம்பர் 18, 2008: ஓரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக்குவது குறித்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசு கூடுதல் அவகாசம் கேட்கிறது.

செப்டம்பர் 25: மத்திய அரசு தங்கள் அடிப்படை உரிமைகளை அத்துமீற முடியாது என ஓரினச் சேர்க்கை செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

செப்டம்பர் 26: இந்த பிரச்சனையில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகமும் இரு வேறு நிலைப்பாடுகளை தெரிவித்ததை அடுத்து டெல்லி ஐகோர்ட் மத்திய அரசிடம் விளக்கம் கேட்கிறது.

செப்டம்பர் 26: தனது கருத்தை தெரிவித்த மத்திய அரசு இதனை சட்டப்பூர்வ ஆக்குவதால் சமூக அந்தஸ்து குறையும் மேலும் ஓரினச் சேர்க்கை என்பது தவறான புத்தியின் பிரதிபலிப்பு என்று என்று கூறியது.

அக்.15, 2008: அரசின் மத ரீதியான வாதங்களை ஏற்க மறுக்கும் ஐகோர்ட் மருத்துவ ஆதாரங்களை முன்வைக்குமாறு கேட்கிறது.

ஜூலை 2, 2009: ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் விருப்பத்துடன் தனிமையில் உறவு கொள்வது குற்றமாகாது என ஐகோர்ட் தீர்ப்பளிக்கிறது.

ஜூலை 9, 2009: ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடுக்கிறார்.

மார்ச் 27, 2012: வழக்கு விசாரணை முடிந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்திவைக்கிறது.

டிசம்பர் 11, 2013: இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் ஓரினச் சேர்க்கை என்பது அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய குற்றம் என்று தீர்ப்பு அளிக்கிறது.

-- dina thanthi

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Dec 11, 2013 6:38 pm

நானும் ஐகோர்ட் தீர்ப்பை வரவேற்கிறேன்..

ஆணுக்கு துணையாக பெண்ணை கடவுள் படைத்தார் அதன் மூலம் மனிதனை உலகில் பெருக செய்து உலகையே ஆளும் திறமையை கொடுத்தார்

ஆனால் இப்போது அவன் மூளை முத்தி இப்படியெல்லாம் யோசிக்கிறான்

ஓரின சேர்க்கைக்கு கடுமையான தண்டனை வழங்கினால் கண்டிப்பாக பலர் அதை நிராகரித்து விடுவர் மேலும் நூறுகோடியில் ஒருவர் தான் அவ்வாறு இருப்பார்.

ஆனால் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது மனித குலத்திற்கே நாம் செய்யும் குற்றம் ..மேலும் பலர் வேகமாக அந்த மாய வலையில் விழுந்து விடுவர்






......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 11, 2013 6:57 pm

SajeevJino wrote:நானும் ஐகோர்ட் தீர்ப்பை வரவேற்கிறேன்..

ஆணுக்கு துணையாக பெண்ணை கடவுள் படைத்தார் அதன் மூலம் மனிதனை உலகில் பெருக செய்து உலகையே ஆளும் திறமையை கொடுத்தார்

ஆனால் இப்போது அவன் மூளை முத்தி இப்படியெல்லாம் யோசிக்கிறான்

ஓரின சேர்க்கைக்கு கடுமையான தண்டனை வழங்கினால் கண்டிப்பாக பலர் அதை நிராகரித்து விடுவர் மேலும் நூறுகோடியில் ஒருவர் தான் அவ்வாறு இருப்பார்.

ஆனால் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது மனித குலத்திற்கே நாம் செய்யும் குற்றம் ..மேலும் பலர் வேகமாக அந்த மாய வலையில் விழுந்து விடுவர்




ஆம், நம் நாட்டு கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கும் அருமையான தீர்ப்பு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 11, 2013 8:04 pm

ஓரினச் சேர்க்கை: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்

ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, சென்னை சேப்பாக்கத்தில் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-ஐ நீக்க கோரி, ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு, நாடு முழுவதும் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் சென்னை ரெயின்போ கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இன்று பிற்பகல் திடீரென ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். அதில், சுமார் 100 பேர் கலந்து கொண்டு இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-ஐ நீக்க கோரி பதாகைகள் ஏந்தி, கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து சென்னை ரெயின்போ கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறும்போது, "சுமார் 20 ஆண்டுகளாக நாங்கள் போராடிய பிறகு, டெல்லி உயர் நீதிமன்றம் மூலம் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த சந்தோஷம் கொஞ்சம் நாட்கள் கூட நீடிக்கவில்லை.

டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-ஐ நீக்குவது குறித்து மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது எங்களை பெரிதும் பாதிக்க வைத்துள்ளது. இதற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். தொடர்ந்து, போராட்டம் நடத்தவுள்ளோம்.

கலாச்சாரம் என்ற பெயரில் எங்களை ஓதுக்காமல், நாங்கள் மனிதர்கள் தான் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். எங்களையும் மற்றவர்களை போல், வாழ விடுங்கள். இந்த தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளோம். மேலும், டெல்லியில் நாடுமுழுவதும் உள்ள ஓர்பால் ஈர்ப்பு பிரிவினரை சேர்த்து ஆர்ப்பாட்டமும் நடத்தவுள்ளோம்" என்றனர் அவர்கள்.

முன்னதாக, கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-ன்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர், விருப்பத்துடன் தனிமையில் உறவு கொள்வது குற்றமாகாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கியது.

உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பில், ஓரினச் சேர்க்கை குற்றம் என்றும், இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-ஐ நீக்குவது குறித்து மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Dec 11, 2013 9:38 pm

கலாச்சாரம் என்ற பெயரில் எங்களை ஓதுக்காமல், நாங்கள் மனிதர்கள் தான் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்


மனிதர்கள் என்பவர்கள் நாங்கள்... நீங்கள் அல்ல



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Dec 12, 2013 10:13 am

நாட்டின் கலாச்சாரம் இதில் மட்டுமில்லை,, ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்வதிலும் தான் இருக்கிறது...ஆனால் இதை சட்டமாக இயற்ற முயற்சிக்கும் பொழுது சிறுபான்மை மதங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்....காரணம் பல தார திருமணத்தை அவர்கள் இன்றும் ஆதரிப்பது தான்...


ஒரு புறம் ஆண் பெண் திருமணம் செய்யாமல் வாழ்வது சரி என்றும், மறுபுறம் இது போன்ற வழக்குகளை மனயியல் மருத்துவர்கள் துணையோடு அணுகாமல் சட்டம் வெறும் ஓட்டு வங்கிகளை குறிவைத்து பெரும்பான்மையினரை திருப்தி படத் தான் செயல் படுகிறது, கலாச்சாரம், நாகரீகம் எல்லாம் வெறும் மாயையான வார்த்தைகள்....




சதாசிவம்
ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் - சுப்ரீம் கோர்ட் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 12, 2013 10:20 am

பல நாடுகளில் சட்ட ரீதியாக
ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயம்...
-
உலகம் கிராமமாக மாறி விட்டதால்
நாமும் ஏற்க வேண்டிய ஒன்றே...!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 12, 2013 11:31 am

கலாச்சாரம் என்ற பெயரில் எங்களை ஓதுக்காமல், நாங்கள் மனிதர்கள் தான் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்

என்னது நீங்கல்லாம் மனிதர்களா ?!!!! , உங்களை விலங்குகள் என்று கூட சொல்ல முடியாது காரணம் அவையெல்லாம் கூட படைப்பின் நியதி படி தான் வாழ்கின்றன

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக