ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரக்குதிரை!

2 posters

Go down

மரக்குதிரை! Empty மரக்குதிரை!

Post by krishnaamma Mon Dec 09, 2013 6:50 pm

முன்னொரு காலத்தில், தச்சுவேலை செய்பவனும், இரும்பு வேலை செய்பவனும் நண்பர்களாக இருந்தனர்.
ஒருநாள்- அவர்கள் இருவருக்கிடையில் ஒரு போட்டி ஏற்பட்டது. அவர்கள் தங்களில் யார் பெரியவர் என்று தீர்மானிக்க விரும்பினர். தமக்குத் தீர்ப்பு சொல்லுமாறு அரசனிடம் சென்றனர். அவர்கள் சொன்னதைக் கேட்ட அரசன், ""நீங்கள் இருவரும் உங்களது திறமைகளை நிரூபித்துக் காட்டலாம். அதன் பின்னர் நான் தீர்ப்புக் கூறுகிறேன்,'' என்றான்.

பத்து நாட்களில் தமது திறமைகளை நிரூபிப்பதாக உறுதி அளித்து விட்டு, அரசனிடம் இருந்து இருவரும் விடை பெற்றனர்.
சில நாட்களுக்கு பின்னர் இரும்பு வேலை செய்பவன் அரசனிடம் வந்தான். பெரிய தொரு மீனை அவன் எடுத்து வந்தான். இரும்பினால் செய்யப் பட்ட அந்த மீனை அரசன் பார்த்தான்.

இரும்பு வேலை செய்பவன், ""அரசே! இந்த இரும்பு மீன், கப்பல் போல நீரில் ஓடக் கூடியது. அத்துடன் ஆயிரம் மூட்டை அரிசியையும் இதில் ஏற்றலாம்,'' என்றான்.அதைக்கேட்ட அரசன் வியப்புற்றான். அந்த இரும்பு மீனை எடுத்து பரிசோதிக்கு மாறு காவலர்களுக்கு உத்தரவிட்டான்.எல்லாரும் கடற் கரைச் சென்றனர். மீன் கடலில் இறக்கப்பட்டது. என்ன அதிசயம்! இரும்பினால் செய்யப்பட்ட அந்த பிரமாண்டமான இரும்பு மீன் கப்பலைப் போல, நீரைக்கிழித்து வேகமாகக் கடலில் ஓடியது. ஆயிரம் மூட்டை நெல்லையும் ஏற்றி ஓடியது. அதைக் கண்டு அரசன் மிகவும் மகிழ்ந்தான். பல பரிசுகளை இரும்பு வேலை செய்பவனுக்கு அளித்து பெருமைப் படுத்தினான்.

மறுநாள், மர வேலை செய்பவன் அரசனிடம் வந்தான். அவனது தோளில், மரத்தால் செய்யப்பட்ட ஒரு அழகிய சிறிய மரக்குதிரை இருந்தது. அரசனைப் பணிவுடன் வணங்கிவிட்டு, குதிரையை இறக்கி அரசன் முன்னால் வைத்தான்.""இதுதான் உனது திறமையா? பொம்மைக் குதிரை போலிருக்கிறதே?'' என்று ஏளனமாகச் சிரித்தான். "பரிசு இரும்பு வேலை செய்பவனுக்கே' என்று சபையில் உள்ளோர் தமக்குள் பேசினர்.""அவசரப்படாதீர்கள்! இதோ, எனது குதிரையைப் பாருங்கள்,'' என்று சபையோரைப் பார்த்து கூறினான்
.
பின்னர் அந்த மரக் குதிரையி லிருந்த மூன்று விசைகளைக் காட்டினான். முதலாவது விசையை அழுத்தினால், நிலத்திலேயே வேகமாக ஓடும் எனவும், இரண்டாவது விசையை அழுத்தினால் வானில் பறக்கும் எனவும், மூன்றாவது விசையை அழுத்தி விரும்பிய இடத்தில் இறங்கலாம் எனவும் விவரித் தான். அதைக் கேட்டு, எல்லாரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.சபையிலிருந்த இளவரசன் வர்மன் குதிரையை இயக்க விரும்பினான். தந்தையிடம் அனுமதி கேட்டான்.

அரசனும் சம்மதித்தான். வர்மன், விரைவாக ஓடிச் சென்று குதிரைமேல் ஏறி அமர்ந்தான். ஆவலுடன் மரக்குதிரையின் இரண்டாவது விசையை அழுத்தினான். குதிரை விர்ரென்று வானில் எழுந்து பறந்தது. வானில் நீண்ட நேரம் பறக்க விரும்பி இரண்டாவது விசையைப் பலமாக அழுத்தினான். வாயு வேகத்தில் விண்ணில் குதிரை பாய்ந்து ஓடியது.

வெகு நேரமாக பறந்ததால், களைப்புற்ற இளவரசன் மீண்டும் தரையிறங்க விரும் பினான். மூன்றாவது விசையை அழுத்தினான். குதிரை வேகமாக தரை இறங்கியது. ஆனால், அழுத்துமுன் இறங்கும் இடம் பற்றித் தீர்மானிக் காததால், வேறு ஒருநாட்டில் இறங்கிவிட்டான்.களைத்திருந்த இளவரசன் சுற்றும்,முற்றும் பார்த்தான். தூரத்தில் ஒரு மலையடிவாரத்தில், மாளிகை ஒன்று தெரிந்தது. குதிரையைத் தூக்கித் தோளில் வைத்தவாறு வேகமாக மாளிகையை நோக்கி நடந்தான்.

சத்தமிடாமல் உள்ளே நுழைந்த வர்மனின் கண்களில் அழகிய பெண் ஒருத்தி தென் பட்டாள். தங்க நிறக் கூந்தலையுடைய அவள் அந்த நாட்டின் இளவரசி.""யார் நீ?'' என்று கடுமையான குரலில் கேட்டாள்.தன்னைப் பற்றி விவரம் முழுவதையும் சொன்னான் இளவரசன்.இளவரசி தனது கதையைக் கூறினாள்.""இங்கிருந்து ஏழு கடல்களுக்கு அப்பால் உள்ள நாட்டின் இளவரசி நான். என்னை ஒரு பயங்கரமான சூனியக் கிழவி தூக்கி வந்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறாள்,'' என்று பரிதாபமாகச் சொன்னாள்.
""இளவரசி கவலைப்படாதே! கொடியவளான சூனியக் கிழவியைக் கொன்று உன்னை விடுப்பேன்,'' என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான் இளவரசன். சிறிது நேரம் சென்றது.

சூனியக்காரக்கிழவி, வேகமாக மாளிகைக்குத் திரும்பினாள். சுற்றும், முற்றும் பார்த்தாள்.""யாரோ ஒரு அந்நியன் எனது வீட்டினுள் புகுந்துவிட்டான். அவன் யார்?'' என்று கோபத்துடன் கேட்டாள்.இளவரசியையும், அடித்துத் துன்புறுத்தினாள்.அதே நேரம், மரக்குதிரையில் அமர்ந்திருந்த இளவரசன், வேக மாக அதை இயக்கி, பொல்லாத வளான சூனியக்காரியின் தலை மேல் மோதினான். சூனியக்காரி, நிலைதடுமாறிக் கீழே விழுந்தாள். வர்மன் அவளைத் தன் வாளால் வெட்டிக் கொன்றான்.

இளவரசியை விடுவித்துக் கொண்டு, அவளது நாட்டுக்குச் சென்றான். தன் மகள் மீண்டும் தமக்குக் கிடைத்ததால், அந்த நாட்டு அரசனும், அரசியும் மிகவும் சந்தோஷப் பட்டனர். இளவரசனுக்கே தனது மகளை மண முடித்து, நாட்டின் பாதியையும் கொடுத்தான் மன்னன். சில நாட்களில் இளவரசியையும் அழைத்துக்கொண்டு, தனது நாட்டுக்குத் திரும்பினான் இளவரசன்.
வெகு நாட்களாக இளவரசன் திரும்பாத தால், நாடே சோகத்தில் மூழ்கியிருந்தது. இளவரசன் காணாமல் போனதற்கு மரக்குதிரை தான்காரணம் என்று சொல்லி, மரவேலை செய்பவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.

திடீரென்று இளவரசன் நாடு திரும்பியதால், எல்லாரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இளவரசன் நடந்ததை எல்லாம் சொன்னான்.
சிறையில் வாடிய மரவேலை செய்பவன் விடுவிக்கப்பட்டான். அவனுக்கு பெரும் பொருள் பரிசளிக்கப்பட்டது. இரும்பு மீனை விட, அவனது மரக்குதிரை சிறந்தது என மன்னன் தீர்ப்பளித்தான். மரவேலை செய்பவனை தனது அரண்மனையிலேயே வேலைக்கு அமர்த்தினான். அதன் பின்னர் எல்லாரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.

siruvarmalar


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மரக்குதிரை! Empty Re: மரக்குதிரை!

Post by M.M.SENTHIL Mon Dec 09, 2013 7:23 pm

மரக்குதிரை சொல்லும் செய்தி என்னவெனில், யார் நம்மையும், நம் படைப்பையும் பார்த்து எள்ளி நகைத்தாலும் மனம் தளராது இருந்தால், இமயம் வரை புகழ் பெறலாம்.
சரிதானே, அம்மா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum