ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கைதியின் கடைசிக் கவிதை!

2 posters

Go down

ஒரு கைதியின் கடைசிக் கவிதை! Empty ஒரு கைதியின் கடைசிக் கவிதை!

Post by பார்த்திபன் Mon Dec 09, 2013 11:52 am

ஒரு கைதியின் கடைசிக் கவிதை!
ஒரு கைதியின் கடைசிக் கவிதை! WgEoCsS3yBGNz9iJOeTA+132300

தொட்டில் கயிற்றில்
தொடங்கிய வாழ்வு - நாளை
தூக்குக் கயிற்றில்
முடியக் காத்திருக்கிறது!

அன்னையின் வயிற்றில்
அரும்பிய இவ்வுயிர் - நாளை
அரசாங்கக் கயிற்றில்
அடங்கப் போகிறது!

வாஞ்சையோடு தொடங்கிய
வாழ்க்கைப் பயணத்தை
சுருக்குக் கயிறொன்று சுருக்கமாக
முடித்து வைக்கப் போகிறது!

முடிச்சிட்ட கயிறொன்று
என் மூச்சை நிறுத்தக்
காத்திருக்கிறது!

பாவிகள் என்போல் பலரை
அந்தப் பாசக் கயிறு
பார்த்திருக்கிறது!

தாங்கள் கலங்கப்பட்டதாகக்
கவலைப்பட்டுக்கொண்டன காகிதங்கள்
என் கருணை மனுக்களைச்
சுமந்த தருணங்களில்!

தாங்கள் சபிக்கப்பட்டதாகச்
சங்கடப்பட்டுக்கொண்டன மரங்கள்!
என் சவப்பெட்டிக்காக வெட்டப்பட்டபோது!

மனசாட்சி எனைப் பாதி கொன்றது!
மரணபயம் வந்து மீதி கொன்றது!
ஆக, மரக்கட்டையொன்றுக்கு
நாளை மரணதண்டனை!

ஒருவன் எப்படி வாழக்கூடாது
என்பதை சிறைச்சாலை
எனக்கு உணர்த்தியது!

ஒருவன் எப்படி சாகக்கூடாது
என்பதை என் மரணம்
மற்றவர்க்கு உணர்த்தும்!

காக்கிச்சட்டை ஒன்று வந்து
என் கடைசி ஆசையைக் கேட்டது!

சற்று நேரம் மௌனித்துப்
பின் சலனமின்றி மொழிந்தேன்

இனிமேலாவது உங்களது
தண்டனைகளின் நோக்கம்
குற்றங்களை மட்டும்
ஒழிப்பதாக இருக்கட்டும்!
குற்றவாளிகளை அல்ல!

ஏனெனில் இங்கு
திருந்தி வாழத்
திட்டமிடும் பலர்க்கும்
சவக்குழியில் மட்டுமே
சந்தர்பம் தரப்படுகிறது!

அலட்சியமாய்ப் பார்த்தது
அந்த ஆறடிக் காக்கிச் சட்டை!

என் கருணை மனுவிற்கு
நேர்ந்த கதிதான்
என் கடைசி ஆசைக்கும்
என்று சொல்லாமல் சொல்லியது
அந்தப் பார்வை!


        - நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஒரு கைதியின் கடைசிக் கவிதை! Empty Re: ஒரு கைதியின் கடைசிக் கவிதை!

Post by ஜாஹீதாபானு Mon Dec 09, 2013 12:52 pm

ரொம்ப அருமையான வரிகள். ஒவ்வொரு வரியும் கைதியின் மனநிலையை பிரதிபலிக்கிறது.ஒரு கைதியின் கடைசிக் கவிதை! 3838410834 ஒரு கைதியின் கடைசிக் கவிதை! 3838410834 ஒரு கைதியின் கடைசிக் கவிதை! 3838410834 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு கைதியின் கடைசிக் கவிதை! Empty Re: ஒரு கைதியின் கடைசிக் கவிதை!

Post by பார்த்திபன் Tue Dec 10, 2013 12:09 pm

மிக்க நன்றி ஜாஹீதாபானு. ஒரு கைதியின் கடைசிக் கவிதை! 1571444738  நன்றி  உங்களைப் போல ஓரிருவர் தரும் ஊக்கத்தினால்தான் அவ்வப்போது ஈகரையில் கவிதைகள் பதிவிடத் தோன்றுகிறது.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஒரு கைதியின் கடைசிக் கவிதை! Empty Re: ஒரு கைதியின் கடைசிக் கவிதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum