Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்சன் மண்டேலா காலமானார்
+2
amirmaran
டார்வின்
6 posters
Page 1 of 1
நெல்சன் மண்டேலா காலமானார்
![நெல்சன் மண்டேலா காலமானார் QL6ZyPGpT5CeAFsXZSnb+131204172433_nelson_mandela__512x288_afp](https://www.filepicker.io/api/file/QL6ZyPGpT5CeAFsXZSnb+131204172433_nelson_mandela__512x288_afp.jpg)
மண்டேலா அமைதியாக இறந்தார் என்று தற்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா கூறியிருக்கிறார்.
மண்டேலா ஜோஹனஸ்பெர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் இறந்தார்.
அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் அவர் இறக்கும் தருவாயில் இருந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவரது மகள் மகஸிவே மண்டேலா, நெல்சன் மண்டேலா அவரது மரணப்படுக்கையில் மிகவும் தைரியமான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார்.
மண்டேலா மருத்துவமனையில் இருந்து செப்டம்பர் மாதம் வீடு திரும்பியதிலிருந்து ,அவரது இல்லத்திலேயே மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார்.
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: நெல்சன் மண்டேலா காலமானார்
மண்டேலா இறுதிச் சடங்குகள்- 10 நாட்களாகலாம்
தென்னாப்ரிக்காவிலும்,உலகெங்கும் பல கோடிக்கணக்கானோர், நெல்சன் மண்டேலாவின் மறைவு செய்தி கேட்டு, துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
ஜோஹனிஸ்பர்கில் அவரது இல்லத்துக்கு வெளியே ஏராளமான மக்கள் மெழுகுவர்த்திகளையும், மலர்களையும் வைத்துப் பிரார்த்தனைகளை இரவு முழுவதும் நடத்தினர்.
அவரது வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் வேறு பலர், நிறவெறிக்கெதிரான போராட்டத்திலிருந்து பாடல்களைப் பாடி, நடனமாடினர். சிலர் தங்கள் சிறு குழந்தைகளுடன் வந்திருந்ததைக் காண முடிந்தது.
தென்னாப்ரிக்காவில் எல்லாக் கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கின்றன.
இறுதிச் சடங்குகள் இன்னும் 10 நாட்களில்
நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்குகள் இன்னும் சுமார் 10 நாட்களில் நடந்து முடியும் வரை கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருக்கும்.
துக்க அனுஷ்டிப்புக் காலம் தென்னாப்ரிக்காவில் துவங்கிய நிலையில், தென்னாப்ரிக்காவின் அனைத்துப் பொது, அரசு கட்டிடங்கள் மற்றும் உலகெங்கும் உள்ள தென்னாப்ரிக்கத் தூதரகங்கள் அனைத்திலும், அஞ்சலிக் குறிப்புகளை மக்களும் பிரமுகர்களும் எழுத உதவும் வகையில், அஞ்சலிப் புத்தகங்கள் வைக்கப்படுகின்றன.
ஜோஹனஸ்பர்கின் புறநகர்ப்பகுதியில் உள்ள எப்.என்.பி அரங்கத்தில், தேசிய துக்கப் பிரார்த்தனை நிகழ்வு ஒன்று நடத்தப்படவிருக்கிறது.
அதன் பின்னர், பிரிட்டோரியாவில் மூன்று நாட்கள் நெல்சன் மண்டேலாவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.
நெல்சன் மண்டேலாவின் உடல் கிழக்கு கேப் பகுதியில் அவர் வளர்ந்த குனு கிராமத்தில் அரச மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படும்.
bbc tamil
தென்னாப்ரிக்காவிலும்,உலகெங்கும் பல கோடிக்கணக்கானோர், நெல்சன் மண்டேலாவின் மறைவு செய்தி கேட்டு, துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
ஜோஹனிஸ்பர்கில் அவரது இல்லத்துக்கு வெளியே ஏராளமான மக்கள் மெழுகுவர்த்திகளையும், மலர்களையும் வைத்துப் பிரார்த்தனைகளை இரவு முழுவதும் நடத்தினர்.
அவரது வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் வேறு பலர், நிறவெறிக்கெதிரான போராட்டத்திலிருந்து பாடல்களைப் பாடி, நடனமாடினர். சிலர் தங்கள் சிறு குழந்தைகளுடன் வந்திருந்ததைக் காண முடிந்தது.
தென்னாப்ரிக்காவில் எல்லாக் கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கின்றன.
இறுதிச் சடங்குகள் இன்னும் 10 நாட்களில்
நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்குகள் இன்னும் சுமார் 10 நாட்களில் நடந்து முடியும் வரை கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருக்கும்.
துக்க அனுஷ்டிப்புக் காலம் தென்னாப்ரிக்காவில் துவங்கிய நிலையில், தென்னாப்ரிக்காவின் அனைத்துப் பொது, அரசு கட்டிடங்கள் மற்றும் உலகெங்கும் உள்ள தென்னாப்ரிக்கத் தூதரகங்கள் அனைத்திலும், அஞ்சலிக் குறிப்புகளை மக்களும் பிரமுகர்களும் எழுத உதவும் வகையில், அஞ்சலிப் புத்தகங்கள் வைக்கப்படுகின்றன.
ஜோஹனஸ்பர்கின் புறநகர்ப்பகுதியில் உள்ள எப்.என்.பி அரங்கத்தில், தேசிய துக்கப் பிரார்த்தனை நிகழ்வு ஒன்று நடத்தப்படவிருக்கிறது.
அதன் பின்னர், பிரிட்டோரியாவில் மூன்று நாட்கள் நெல்சன் மண்டேலாவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.
நெல்சன் மண்டேலாவின் உடல் கிழக்கு கேப் பகுதியில் அவர் வளர்ந்த குனு கிராமத்தில் அரச மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படும்.
bbc tamil
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: நெல்சன் மண்டேலா காலமானார்
![நெல்சன் மண்டேலா காலமானார் OTbtDLRQfGtAhD6gHhX4+121210111454_mandela-1](https://www.filepicker.io/api/file/OTbtDLRQfGtAhD6gHhX4+121210111454_mandela-1.jpg)
![நெல்சன் மண்டேலா காலமானார் PS8SIPPLQoSXUQ2K72b1+121210111456_mandela-2](https://www.filepicker.io/api/file/pS8SIPPLQoSXUQ2K72b1+121210111456_mandela-2.jpg)
கிழக்கு கேப் பிரதேசத்தில் ஒரு பழங்குடியினத் தலைவரின் குடும்பத்தில் பிறந்த நெல்சன் மண்டேலா, வீட்டை விட்டு ஜோஹனெஸ்பர்க் நகருக்கு ஓடி, அங்கு வழக்கறிஞராகி, நிறவெறிக்கொள்கைக்கு எதிராக ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் நடத்தி வந்த போராட்டத்தில் சேர்ந்தார்.
![நெல்சன் மண்டேலா காலமானார் Y9xbzAUvQrGaAcQXuAh8+121210111458_mandela-3](https://www.filepicker.io/api/file/y9xbzAUvQrGaAcQXuAh8+121210111458_mandela-3.jpg)
இளம்பருவத்தில், நெல்சன் மண்டேலாவுக்கு குத்துச் சண்டையில் ஆர்வமிருந்தது. " குத்துச்சண்டை ஒரு சமத்துவமான விளையாட்டு. குத்துசண்டை நடக்கும் மேடையில், மனிதர்களின் தரம், வயது, நிறம் மற்றும் அவர்களின் பணம் இவைகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை", என்று அவர் தனது சுய சரிதையான " சுதந்திரத்தை நோக்கிய நீண்ட நடைபயணம்" ( லாங் வாக் டு ப்ரீடம்) என்ற புத்தகத்தில் எழுதினார்.
![நெல்சன் மண்டேலா காலமானார் YBaindQRKq6HBHXO8cXf+121210111503_mandela-5](https://www.filepicker.io/api/file/YBaindQRKq6HBHXO8cXf+121210111503_mandela-5.jpg)
1956ல், அவர் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் ஈடுபட்டதால், தேசத்துரோகக் குற்றச்சாட்டை சுமத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது, அவர் , வின்னி மடிக்கிஸெலா என்ற சமூக சேவகியை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு இரண்டாண்டுகளுக்குப் பின்னர், அவர் தனது முதல் மனைவி, ஈவ்லின் மேஸை விவாகரத்து செய்தார்.
வின்னியும் அவரும் 1958ல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவரும் மாறி மாறி சிறைவாசத்தில் இருந்ததால் அவர்களால் நிம்மதியான குடும்ப வாழ்க்கையை பெரிதாக அனுபவிக்க முடியவில்லை.
![நெல்சன் மண்டேலா காலமானார் ZbipeQtSTmkmzK9BZmMa+121210111507_mandela-6](https://www.filepicker.io/api/file/ZbipeQtSTmkmzK9BZmMa+121210111507_mandela-6.jpg)
இரண்டாவது தேசத்துரோக விசாரணைக்குப் பின்னர், நெல்சன் மண்டேலா நாசவேலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் 1964ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
1990ல் , சுமார் இருபது ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர், ஒரு வழியாக , நெல்சன் மண்டேலா விடுதலையானார்.
விடுதலை ஆன பிறகு, மண்டேலா பல நாடுகளுக்குச் சென்று, உலகத் தலைவர்கள் பலரை சந்தித்தார். நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடவும் தயாரானார்.
![நெல்சன் மண்டேலா காலமானார் XclgREC4RUSmUrQXwIJQ+121210111607_mandela-11](https://www.filepicker.io/api/file/XclgREC4RUSmUrQXwIJQ+121210111607_mandela-11.jpg)
தென் ஆப்ரிக்கர்கள் அனைவருக்கும் , ஒரு நபர் ஒரு வாக்கு என்ற கொள்கையின் அடிப்படையில் , நாட்டில் தேர்தல்களை நடத்துவது என்று, தென் ஆப்ரிக்க அதிபர் எப்.டபுள்யூ, டி க்ளார்க் உடன்படுவதற்கு முன்னர், கடுமையான பேச்சுவார்த்தைகள் நடந்தன. டி க்ளார்க்குக்கும், மண்டேலாவுக்கும் , அவர்கள் நிறவெறிக்கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆற்றிய பங்குக்காக, 1993ல் நோபல் அமைதிப்பரிசு வழங்கப்பட்டது.
![நெல்சன் மண்டேலா காலமானார் EcVach8tSjmpGDm8NK4j+121210111609_mandela-12](https://www.filepicker.io/api/file/EcVach8tSjmpGDm8NK4j+121210111609_mandela-12.jpg)
தென் ஆப்ரிக்காவின் முதல் ஜனநாயக பூர்வமான தேர்தல்கள் 1994 ஏப்ரல் 27ல் நடந்தன. கறுப்பின தென் ஆப்ரிக்கர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய நீண்ட வரிசைகளில் நின்றார்கள். ஏ.என்.சி கட்சி பெரும் வெற்றி பெற்றது. நெல்சன் மண்டேலா நாட்டின் முதல் கறுப்பின அதிபரானார்.
மண்டேலா ஒரே ஒரு முறைதான் பதவி வகித்தார். 1999ல் அவர் தானாக முன்வந்து பதவியிலிருந்து விலகிய வெகு சில ஆப்ரிக்கத் தலைவர்களில் ஒருவரானார் அவர். தென் ஆப்ரிக்காவின் அடுத்த அதிபர் மற்றும் ஏ.என்.சி கட்சியின் தலைவர் என்ற இரு பதவிகளுக்கும் மண்டேலாவுக்கு அடுத்தபடியாக பதவிக்கு வந்தார் தாபோ இம்பெக்கி
உலகின் மிகவும் விரும்பப்பட்ட தலைவராக மட்டுமல்லாமல், அவர் ஒரு நாகரீக உடைகள் அணிவதிலும் நாட்டமுடையவராக அறியப்பட்டார். அவர் அணிந்து கொண்ட பளிச்சென்று தெரியும் நிறத்திலான சட்டைகள் பிரசித்தம். இந்தப் படத்தில் பிரசித்தி பெற்ற நாகரீக உடுப்புகளை உருவாக்கும் டிசைனர் , பியர் கார்டினுடன் மதிய உணவருந்திய பின்னர், தான் போட்டிருந்த சட்டையைக் காட்டி " இது எப்படி இருக்கு? " என்ற பாணியில் பத்திரிகையாளர்களைப் பார்த்துக் கேட்கிறார் மண்டேலா !
1999ல் அதிபர் பதவியிலிருந்து இறங்கிய பின்னர், தென் ஆப்ரிக்காவின் மிகப் பிரபல்யமான தூதரானார் நெல்சன் மண்டேலா. எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய்க்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 2010ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டியை தென் ஆப்ரிக்கா நடத்தும் உரிமையையையும் அவர் பெற்றுத்தந்தார்.
2012ல் நெல்சன் மண்டேலா தனது 94வது பிறந்த நாளைக்கொண்டாடினார். 2009ல்தான், ஐ.நா மன்றம், அவரது பிறந்த நாளை நெல்சன் மண்டேலா சர்வதேச தினமாக அறிவித்தது. ஒவ்வொரு ஜூலை 18ம் தேதியும், உலக மக்கள் அனைவரும், மண்டேலா அரசியல் வாழ்க்கையில் கழித்த 67 ஆண்டுகளைக் குறிக்கும் வண்ணம், 67 நிமிடங்கள் சமூக சேவைக்காக ஒதுக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
2013 ஏப்ரலில் குளிர்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த மண்டேலா மிகவும் பலவீனமாகவும், குழப்பமுற்ற நிலையிலும் காணப்பட்டதை இந்த வீடியோ காட்சி காட்டியது, சர்ச்சையை தூண்டியது. அவர் மீண்டும் ஜூன் மாதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
bbc tamil
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Re: நெல்சன் மண்டேலா காலமானார்
எனது கணிப்பில் இன்றைய உலகில் அதிக செல்வாக்கு மிக்க ஒருவர் இவர் தான்
அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவன் அருள் புரிவானாக
அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவன் அருள் புரிவானாக
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நெல்சன் மண்டேலா காலமானார் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நெல்சன் மண்டேலா காலமானார் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நெல்சன் மண்டேலா காலமானார் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![நெல்சன் மண்டேலா காலமானார் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நெல்சன் மண்டேலா காலமானார் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நெல்சன் மண்டேலா காலமானார் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நெல்சன் மண்டேலா காலமானார் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![நெல்சன் மண்டேலா காலமானார் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நெல்சன் மண்டேலா காலமானார் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![நெல்சன் மண்டேலா காலமானார் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நெல்சன் மண்டேலா காலமானார் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![நெல்சன் மண்டேலா காலமானார் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நெல்சன் மண்டேலா காலமானார்
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் மண்டேலா மறைவுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி இரு சபைகளும் ஒத்திவைப்பு
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும், நிறவெறிக்கு எதிராக போராடியவருமான நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று ஒத்திவைக்கப்பட்டன.
உறுப்பினர்கள் இரங்கல்
தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும், இனவெறியை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தியவருமான நெல்சன் மண்டேலா (வயது 95), நுரையீரல் தொற்று பிரச்சினையால் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.
மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நேற்று பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. காலையில் பாராளுமன்றம் கூடியதும் சபாநாயகர் மீராகுமார், இந்த துயரச்செய்தியை சபையில் அறிவித்தார்.
பின்னர் உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், உயிரிழந்த தலைவருக்கு இரங்கல் தெரிவித்து பேசினர்.
சோனியா பேச்சு
சோனியா காந்தி தனது உரையில், மண்டேலா, வாழ்நாள் முழுவதும் தென்ஆப்பிரிக்காவின் அதிபராகவே இருக்க வேண்டும் என்று அங்குள்ள மக்கள் விரும்பிய போதும், தானாகவே அரசியலை விட்டு விலகிய அவரது தியாகத்தை நினைவு கூர்ந்தார். மேலும் மண்டேலாவின் தைரியம் மற்றும் சகிப்புத்தன்மையை பாராட்டிய சோனியா, அவரை ‘தென்ஆப்பிரிக்காவின் மகாத்மா காந்தி’ என்று புகழ்ந்தார்.
பின்னர் உறுப்பினர்களின் இரங்கல் உரைகளை தொடர்ந்து, சபையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார்.
மவுன அஞ்சலி
இதைப்போல மேல்–சபையிலும் மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவைத்தலைவர் ஹமீது அன்சாரி தனது இரங்கல் உரையில், ‘சமகாலத்தில் மிக உயர்ந்த குணநலன்களை கொண்டு வாழ்ந்த உன்னத மனிதர், மண்டேலா’ என கூறினார். மேலும், பாராளுமன்றத்தில் கடந்த 1995–ம் ஆண்டு நெல்சன் மண்டேலா உரையாற்றியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவையை ஒத்திவைப்பதாக ஹமீது அன்சாரி அறிவித்தார்.
பிரணாப் முகர்ஜி இரங்கல்
நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங், நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘சிறந்த அரசியல் மேதையான மண்டேலா, ஒரு உலக தலைவர் என்றும், இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன்’ என்றும் கூறியுள்ளார். மேலும் ‘இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையிலான நெருங்கிய உறவுக்கு, அவர் ஆற்றிய பணிகள் எப்போதும் நினைவுகூரத்தக்கது’ என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங்
பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘மனிதரிடையே உயர்ந்த மனிதனாக வாழ்ந்த மண்டேலா இறந்துவிட்டார். அவரது இறப்பு தென்ஆப்பிரிக்காவைப்போல இந்தியாவுக்கும் பேரிழப்பு. அவர் ஒரு உண்மையான காந்தியவாதி. அவரது வாழ்வும், சேவையும் வருகிற தலைமுறைகளுக்கு உந்துதலையும், உற்சாகத்தையும் கொடுக்கும்’ என்று கூறியுள்ளார்.
இதைப்போல, ‘வாழ்நாள் முழுவதும் அநீதி மற்றும் இனவெறிக்கு எதிராக போராடியவர், மண்டேலா’ என பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கும், ‘ஒப்பற்ற சமாதான தூதுவரை உலகம் இழந்துவிட்டது’ என்று நரேந்திர மோடியும் தங்கள் இரங்கல் செய்தியில் கூறியுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும், நிறவெறிக்கு எதிராக போராடியவருமான நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று ஒத்திவைக்கப்பட்டன.
உறுப்பினர்கள் இரங்கல்
தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும், இனவெறியை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தியவருமான நெல்சன் மண்டேலா (வயது 95), நுரையீரல் தொற்று பிரச்சினையால் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.
மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நேற்று பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. காலையில் பாராளுமன்றம் கூடியதும் சபாநாயகர் மீராகுமார், இந்த துயரச்செய்தியை சபையில் அறிவித்தார்.
பின்னர் உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், உயிரிழந்த தலைவருக்கு இரங்கல் தெரிவித்து பேசினர்.
சோனியா பேச்சு
சோனியா காந்தி தனது உரையில், மண்டேலா, வாழ்நாள் முழுவதும் தென்ஆப்பிரிக்காவின் அதிபராகவே இருக்க வேண்டும் என்று அங்குள்ள மக்கள் விரும்பிய போதும், தானாகவே அரசியலை விட்டு விலகிய அவரது தியாகத்தை நினைவு கூர்ந்தார். மேலும் மண்டேலாவின் தைரியம் மற்றும் சகிப்புத்தன்மையை பாராட்டிய சோனியா, அவரை ‘தென்ஆப்பிரிக்காவின் மகாத்மா காந்தி’ என்று புகழ்ந்தார்.
பின்னர் உறுப்பினர்களின் இரங்கல் உரைகளை தொடர்ந்து, சபையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார்.
மவுன அஞ்சலி
இதைப்போல மேல்–சபையிலும் மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவைத்தலைவர் ஹமீது அன்சாரி தனது இரங்கல் உரையில், ‘சமகாலத்தில் மிக உயர்ந்த குணநலன்களை கொண்டு வாழ்ந்த உன்னத மனிதர், மண்டேலா’ என கூறினார். மேலும், பாராளுமன்றத்தில் கடந்த 1995–ம் ஆண்டு நெல்சன் மண்டேலா உரையாற்றியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவையை ஒத்திவைப்பதாக ஹமீது அன்சாரி அறிவித்தார்.
பிரணாப் முகர்ஜி இரங்கல்
நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங், நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘சிறந்த அரசியல் மேதையான மண்டேலா, ஒரு உலக தலைவர் என்றும், இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன்’ என்றும் கூறியுள்ளார். மேலும் ‘இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையிலான நெருங்கிய உறவுக்கு, அவர் ஆற்றிய பணிகள் எப்போதும் நினைவுகூரத்தக்கது’ என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங்
பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘மனிதரிடையே உயர்ந்த மனிதனாக வாழ்ந்த மண்டேலா இறந்துவிட்டார். அவரது இறப்பு தென்ஆப்பிரிக்காவைப்போல இந்தியாவுக்கும் பேரிழப்பு. அவர் ஒரு உண்மையான காந்தியவாதி. அவரது வாழ்வும், சேவையும் வருகிற தலைமுறைகளுக்கு உந்துதலையும், உற்சாகத்தையும் கொடுக்கும்’ என்று கூறியுள்ளார்.
இதைப்போல, ‘வாழ்நாள் முழுவதும் அநீதி மற்றும் இனவெறிக்கு எதிராக போராடியவர், மண்டேலா’ என பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கும், ‘ஒப்பற்ற சமாதான தூதுவரை உலகம் இழந்துவிட்டது’ என்று நரேந்திர மோடியும் தங்கள் இரங்கல் செய்தியில் கூறியுள்ளனர்.
Re: நெல்சன் மண்டேலா காலமானார்
எனது ஆழ்ந்த இரங்கல்கள் , சிறந்த மகனை இந்த பூமி தாய் இழந்துவிட்டாள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்
Re: நெல்சன் மண்டேலா காலமானார்
சரித்திரம் படைத்த நாயகனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நெல்சன் மண்டேலா காலமானார்
மேற்கோள் செய்த பதிவு: 1036584amirmaran wrote:எப்பொழுது இறந்தார்
மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற அதிர்ச்சியில் இவரும் இறந்துவிட்டார் என்று பிபிசி செய்தியில் கூறினார்கள்!
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார்
» நெல்சன் மண்டேலா
» நெல்சன் மண்டேலா - வரலாற்றுநாயகர்!
» நெல்சன் மண்டேலா உடல்நிலை : குடும்பத்தினர் தகவல்
» நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதி
» நெல்சன் மண்டேலா
» நெல்சன் மண்டேலா - வரலாற்றுநாயகர்!
» நெல்சன் மண்டேலா உடல்நிலை : குடும்பத்தினர் தகவல்
» நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|