ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவகோட்டை நகராட்சியில் தொடரும் "ஈகோ' முதல்வர் ஜெ., முற்றுப்புள்ளி வைப்பாரா

2 posters

Go down

 தேவகோட்டை நகராட்சியில் தொடரும் "ஈகோ' முதல்வர் ஜெ., முற்றுப்புள்ளி வைப்பாரா Empty தேவகோட்டை நகராட்சியில் தொடரும் "ஈகோ' முதல்வர் ஜெ., முற்றுப்புள்ளி வைப்பாரா

Post by சிவா Fri Dec 06, 2013 3:14 am

 தேவகோட்டை நகராட்சியில் தொடரும் "ஈகோ' முதல்வர் ஜெ., முற்றுப்புள்ளி வைப்பாரா 1466163_611774755535302_1421959425_n

தேவகோட்டை நகராட்சியில், அதிகாரிகள், ஊழியர்கள், தலைவரிடையே ஏற்பட்டுள்ள, "ஈகோ' பிரச்னையால்,மக்கள் பணிகளில்,தொய்வு ஏற்பட்டுள்ளது.தேவகோட்டை நகராட்சி தலைவராக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சுமித்ரா,துணை தலைவராக சுந்தரலிங்கம் உள்ளனர்.இவர் வசம் உள்ள அ.தி.மு.க., கவுன்சிலர்கள்,தங்கள் வார்டில், எந்த பணியும் நடக்கவில்லை,என தொடர்ந்து குறை கூறி வருகின்றனர்.ஆனால், கவுன்சிலர்கள், பிரச்னை குறித்து என்னை வந்து சந்திப்பதில்லை. துணைத்தலைவர் மூலமே, கோரிக்கை வருகிறது,என்ற குற்றச்சாட்டை சுமித்ரா முன் வைக்கிறார்.

சுமித்ராவின் கணவர் ரவிக்குமார், நகராட்சி உள் விவகாரங்களில் தலையிடுவதோடு, அதிகாரி, அலுவலர்களை மிரட்டுகிறார், என்ற அடிப்படையில், நகராட்சி அதிகாரிகள், உள்ளிருப்பு போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக, உள்ளாட்சிதுறை அமைச்சர் வரை, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தரப்பில், புகார் தெரிவிக்கப்பட்டு ராஜினாமா வரை சென்றுள்ளனர். டெண்டர் விட்டு,வேலை செய்ய உத்தரவு வழங்கப்பட்டும்,ரூ.20 லட்சம் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. ரூ.30 லட்சத்தில், 25 பணிகள் டெண்டர் விட வேண்டிய நிலையில் கிடப்பில் உள்ளது. உண்மையில் நடந்தது, என்ன? இவர்களின் பிரச்னையால் பாதிக்கப்பட்டது யார்? மக்களின் நிலை? குறித்து,அலசல் இதோ.

எந்த பணியும் உருப்படி இல்லை

எஸ்.பி., பாலகிருஷ்ணன் சிதம்பரநாதபுரம், தேவகோட்டை:

 நகராட்சி கமிஷனரும், தலைவரும் ஒற்றுமையாகத்தான் இருந்தனர். என்ன காரணத்தாலோ, இருவருக்கும் இடையே பிரச்னை நிலவி வருகிறது. பஸ் ஸ்டாண்ட் விஸ்தீரணம் செய்தும்,இங்குள்ள கடைகள், பயன்பாட்டுக்கு வரவில்லை. தேவகோட்டையில் எந்த ரோடும் உருப்படியாக போடவில்லை. சரஸ்வதி வாசகசாலை ரோடு, நகராட்சி நிர்வாக குளறுபடி காரணமாக,ஓராண்டு கழித்தே போடப்பட்டது. வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி இல்லை. ராம்நகரில், பூங்கா அமைத்ததோடு சரி. அதன்பிறகு பராமரிப்பு இல்லை. நகராட்சியின் நிர்வாக கோளாறால், மழை வந்தால், ரோடுகளில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடும். மாவட்ட நிர்வாகம்,தேவகோட்டை நகராட்சியை சீரமைத்து,மக்கள் பணி செய்யும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சி கெடுகிறது

பாலமுருகன், கவுன்சிலர், தி.மு.க.,:

கமிஷனர், தலைவரிடையே "ஈகோ' பிரச்னை உள்ளது. இவர்கள் நகராட்சியை கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். நகரமைப்பு ஆய்வாளர், கமிஷனர் சொல்வதை கேட்டு வேலை செய்கிறார். இதனால்,தலைவருக்கு பிடிக்கவில்லை, என தெரிகிறது. பிறப்பு இறப்பு சான்றிதழ் பெற முடியாமல்,மக்கள் பரிதவிக்கும் நிலை உள்ளது. நகராட்சிக்கு வருவாய் வரக்கூடிய பாதி ஏலங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பொது நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் பணிகள் செயல்படுத்தப்படுவதில்லை. தலைவர், துணை தலைவர், கமிஷனர் "ஈகோ' பிரச்னை முடிவுக்கு வந்து, மக்களின் அன்றாட பணிகள் பாதிப்பு இல்லாமல் நடக்க வேண்டும், என்பதே எங்கள் அனைவரின் விருப்பம்.

மக்களுக்காக போராடுவதில்லை


சுந்தரலிங்கம், துணை தலைவர்:

அப்பாயின்மெண்ட் கமிட்டியில், தலைமை சொன்னவரை நிறுத்தாமல், தலைவருக்கு, வேண்டிய சுயேச்சை கவுன்சிலரை நிறுத்தினார். இதை எதிர்த்து, நாங்கள் ஓட்டு போட்டு அவரை ஜெயிக்க வைத்தோம். அன்றிலிருந்து பிரச்னை ஆரம்பமானது. எதிராக வாக்களித்த, அ.தி.மு.க., கவுன்சிலர்கள்,14 பேரின் வார்டுக்கும் வேலை ஒதுக்குவதில்லை.

தி.மு.க., சுயேச்சை கவுன்சிலர்களின் வார்டுக்கு பணிகள் ஒதுக்கப்படுகிறது. தலைவரின் கணவர் ரவிக்குமார்,மாமனார் காட்டு ராஜாவின் தலையீடு அதிகரித்தது. வார்டு வேலை குறித்து, தலைவரிடம் முறையிட்டால், அவர் கணவரிடம் போய் கேட்க சொல்வார். கமிஷனருக்கும், தலைவருக்கும் உள்ள கருத்து வேறுபாட்டால், கமிஷனருக்கு எதிராக தினம் ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மக்கள் பிரச்னைக்காக அவர்கள் போராடுவதில்லை. வேலைகள் ஒதுக்கப்பட்டு,பிளக்ஸ் போர்டு அளவில் மட்டுமே உள்ளது. டெண்டர் விட்டு பணிகள் நடக்கவில்லை. நகராட்சி ஒழுங்காக செயல்படவில்லை எனில், அது தலைவரையே சாரும். கூட்டம் நடக்கும்போது, வேலை குறித்து நாங்கள் கோரிக்கை வைத்தால், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறி, எழுந்து சென்று விடுகிறார். நிறைவேறாத தீர்மானங்களை நிறைவேற்றியதாக கூறுகின்றனர். தி.மு.க.,வுக்கு ஆதரவான நிலையிலேயே செயல்படுகிறார். இதன் காரணமாக, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 14 பேரும், ராஜினாமா செய்வதாக, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம். வெளிநபர்களின், தலையீட்டால், நகராட்சியின், ஒட்டு மொத்த அலுவலக ஊழியர்களும், விடுப்பில் செல்லும் நிலையில், உள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தேவகோட்டை நகராட்சியில் தொடரும் "ஈகோ' முதல்வர் ஜெ., முற்றுப்புள்ளி வைப்பாரா Empty Re: தேவகோட்டை நகராட்சியில் தொடரும் "ஈகோ' முதல்வர் ஜெ., முற்றுப்புள்ளி வைப்பாரா

Post by சிவா Fri Dec 06, 2013 3:15 am


பாதுகாப்பிற்காக வரும் கணவர்


சுமித்ரா,நகராட்சி தலைவர்:துணைத்தலைவர் அ.தி.மு.க,வின்,14 கவுன்சிலர்களை கையில் வைத்து கொண்டு மிரட்டுகிறார். நகரமைப்பு ஆய்வாளர் முருகானந்தம், அப்ரூவல் இல்லாத மனைப்பகுதிகளுக்கு அப்ரூவல் கொடுக்கிறார். கமிஷனரிடம், இது குறித்து ஆதாரபூர்வமாக புகார் அளித்தும் நடவடிக்கை, எடுக்க மறுக்கிறார். பணிகள் குறித்த பைலை, நான் பார்க்க அனுமதிப்பது இல்லை. அவரது அறைக்கு சென்று, தனியாக பைலை பார்க்கும் படி கூறுகிறார்.

கமிஷனர், ஊழியர்களை எந்த வேலையும் செய்ய விடுவதில்லை. 27 வார்டும் எனக்கு பொதுவானது தான். எந்த பாரபட்சமுமின்றி வேலைகள் ஒதுக்கி வருகிறேன். குப்பை எடுக்க, டெண்டர் விட, அனுமதி அளிக்கப்பட்டும், டெண்டர் விடாமல், ஏற்கனவே பார்த்தவர்களுக்கு, கமிஷனர் தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறார். துணைத்தலைவரிடம் இருக்கும் 14 கவுன்சிலர்கள், இதுவரை மக்கள் பிரச்னைக்காக, என்னை வந்து சந்தித்தது கூட கிடையாது.

துணைத்தலைவரிடம், குறைகளை கூறி, அவர் வந்து கொடுக்கிறார்.வேலை வைத்தால், அதற்காக கமிஷனர் டெண்டர் விடுவதில்லை. என்னுடைய பாதுகாப்பிற்காகத்தான் என் கணவர் என்னுடன் வருகிறார். அது என்னுடைய உரிமை. ஏலம் விட்டு மரத்தை வெட்ட வேண்டும். ஆனால், எந்தவித அனுமதியின்றி மரம் வெட்டப்பட்டுள்ளது.அதற்கு காரணமான அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

தொடர்ந்து நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு, கமிஷனர் துணையாக இருக்கிறார். அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தால், பொதுமக்கள், குழந்தைகள் தவிக்கும் நிலை உள்ளது. கமிஷனர் அவருக்கு, ஒத்து போகாத அலுவலர்கள், சம்பளத்தை நிறுத்தி வைக்கிறார். "மெமோ' கொடுக்கிறார்.தேவகோட்டை மக்களுக்கு விடிவு ஏற்பட வேண்டும்.

கமிஷனரும், நகராட்சி தலைவரும் சேர்ந்து செயல்பட்டால் தான், மக்கள் பிரச்னை சரி செய்ய முடியும். கமிஷனர் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார். துணை தலைவருக்கு தனி அறை ஒதுக்கியுள்ளார்,என்றார்.

மேலதிகாரிக்கு தான் பதில் சரவணன், கமிஷனர்: நான் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க கூடாது. என்னுடைய மேலதிகாரிக்குத்தான் பதில் சொல்ல வேண்டும். எங்கள் தரப்பில் எந்த தவறும் கிடையாது. சட்ட ரீதியான முறையில், நானும், அலுவலர்களும், செயல்பட்டு வருகிறோம். இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம், தலைவரின் கணவர் ரவிக்குமார் தலையீடு தான். வெளிநபர்கள் மூலம், அலுவலர்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனர். விதிகளுக்குட்பட்டு எங்கள் பணிகளை செய்து வருகிறோம்.

நகராட்சி பக்கமே வரவில்லை

ரவிக்குமார்,நகராட்சி தலைவரின் கணவர்: நான் நகராட்சிக்கு வந்தே இரண்டு மாதம் ஆகிவிட்டது. குற்றம் சொல்ல காரணமின்றி, இதை கூறுகின்றனர். நகராட்சி பணிகள், அப்ரூவல் குறித்து,தகவல் அறியும் உரிமை சட்டத்தில், கேள்வி கேட்டால், கோரிக்கையாக உள்ளது. தகவல் இல்லை என்ற பதில் தான் வருகிறது. அரசு அனுமதியின்றி கட்டடங்கள் கட்ட கூடாது, என கமிஷனரே போர்டு வைத்துவிட்டு அனுமதி கொடுக்கிறார்.கரைவேட்டி கட்டியவர்கள், பெண் தலைவர் என்று கூட பார்க்காமல், மது அருந்தி வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர், என்றார்.

மொத்தத்தில், தலைவர், துணை தலைவர், கமிஷனர், கவுன்சிலர், அலுவலர்கள் என்ற கூட்டு அமைப்பில், ஒவ்வொருவரும், ஒருவரை ஒருவர் குறை கூறும் நிலை தான் தேவகோட்டை நகராட்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால்,கடந்த இரண்டு ஆண்டுகளாக, நகராட்சிக்கு வருவாய் வரும் வகையில், புதிய திட்டங்கள் வரவில்லை. ஏற்கனவே வருகின்ற வருவாயும், பல்வேறு காரணங்களால் தடைபட்டு நிற்கிறது.

40 ஆண்டுக்கு முன்பு, தி.மு.க., நகராட்சியாக இருந்தபோது மாநில அளவில் ஆளுங்கட்சியாக தி.மு.க.,இருந்தது. அப்போது, குடிநீர், மருத்துவமனை, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தேவகோட்டை நகராட்சிக்கு கொண்டு வரப்பட்டது.அதன் பிறகு, ஆளுங்கட்சி, நகராட்சி ஒரே கட்சியாக இருந்ததில்லை. தற்போது தான், நகராட்சி தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்தவரான சுமித்ரா உள்ளார். மாநில அளவில் அ.தி.மு.க., ஆட்சி உள்ளது. பல்வேறு நலத்திட்டங்கள் நகராட்சிக்கு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது,பொது நிதியின் கீழ் மேற்கொள்ளும் பணிகளே சரிவர நடப்பதில்லை. இதனால், மேலிடத்திலிருந்து பணிகளை பெற்று வரமுடியாத நிலை உள்ளது.

இதன் பாதிப்பு  பொதுமக்களையே சேருகிறது. எனவே, ஒற்றுமையாக செயல்பட்டு, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முன் வர வேண்டும். போன காலம் திரும்பி வராது, என்பதை மக்கள் பிரதிநிதிகள் உணர வேண்டும். தேவகோட்டை மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? அல்லது கானல் நீராகுமா? முதல்வர் ஜெ., பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தேவகோட்டை நகராட்சியில் தொடரும் "ஈகோ' முதல்வர் ஜெ., முற்றுப்புள்ளி வைப்பாரா Empty Re: தேவகோட்டை நகராட்சியில் தொடரும் "ஈகோ' முதல்வர் ஜெ., முற்றுப்புள்ளி வைப்பாரா

Post by ayyasamy ram Fri Dec 06, 2013 3:25 am

பொதுவாக பெண்கள் நிர்வாகத்தில்
அவர்களது கணவர் தலையிடுவது
என்பது பரவலாக நடந்து வரும் ஒன்றுதான்...
-
பிரச்னை பெரிதாகும் முன் உரிய நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84084
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தேவகோட்டை நகராட்சியில் தொடரும் "ஈகோ' முதல்வர் ஜெ., முற்றுப்புள்ளி வைப்பாரா Empty Re: தேவகோட்டை நகராட்சியில் தொடரும் "ஈகோ' முதல்வர் ஜெ., முற்றுப்புள்ளி வைப்பாரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயிலுக்குப் போய் 'ரிட்டர்ன்' ஆன ஒரு முதல்வர், கண்ணீர் மல்க இன்னொரு முதல்வர்.. வைகோ விளாசல்!
» இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு
» கருணாநிதி,ஜெயலலிதாவை ஒழிக்க வைகோ முதல்வர் முதல்வர் ஆக்குவோம் – தமிழருவி மணியன்
» முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வருகிறார் முதல்வர் பன்னீர்செல்வம்!
» ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum