ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் செய்ய, குழந்தை பெற வலிப்பு நோய் ஒரு தடையல்ல!

3 posters

Go down

திருமணம் செய்ய, குழந்தை பெற வலிப்பு நோய் ஒரு தடையல்ல! Empty திருமணம் செய்ய, குழந்தை பெற வலிப்பு நோய் ஒரு தடையல்ல!

Post by சிவா Fri Dec 06, 2013 3:05 am

வலிப்பு நோய்க்கு மாந்திரீகமோ, காத்து கருப்போ காரணம் அல்ல; சர்க்கரை நோய்; ரத்த அழுத்தம் போன்று, அதுவும் ஒரு நோய் தான். வலிப்பு நோய் வந்தால், குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது என்பதெல்லாம் முட்டாள்தனம்.

1. வலிப்பு நோய் என்றால் என்ன?

வலிப்பு நோயை, காக்காய் வலிப்பு என்று, மக்கள் அழைக்கின்றனர். இது, மூளை சம்பந்தப்பட்ட நோய். மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும், மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்து பாகங்களும் ஒரு முகமாக, ஒரே நேரத்தில் இயக்கப்படுவதால், வலிப்பு வருகிறது.

2. இதற்கான அறிகுறிகள் என்ன?

நினைவிழந்து கை, கால், முகம் வெட்டி இழுத்தல், திடீரென சுய உணர்வின்றி கவனம் இழத்தல், நினைவிழந்து நின்ற இடத்திலேயே விழுதல், சிறிது நேரத்திற்கு மாறுபட்ட வினோத நடத்தைகள் செய்தல், சில நிமிடங்கள் கண் இமைக்காமல் விழித்தல், வாய் மெல்லுதல், உமிழ்நீர் துப்புதல், கைகளை பிசைதல் போன்ற, அறிகுறிகள் வரலாம்.

3. வலிப்பு நோய்க்கான காரணங்கள்?

மூளையில் அடிபடுதல், மூளைக் காய்ச்சல், மூளையில் கட்டி, நாடா புழுக்களால் ஏற்படும் கட்டிகள், காசநோய் கட்டி, கேன்சர் கட்டி, மூளைக்கு ரத்தம் குறைவாக செல்லுதல், சத்து மாற்றங்கள் (சர்க்கரை, உப்பு, அமிலங்கள்) மற்றும் பிரசவத்தின் போது குழந்தைக்கு ஏற்படும் சுவாச அடைப்பு போன்றவை, இதற்கு காரணம். எவ்வித காரணம் இல்லாமலும், வலிப்பு நோய் வரலாம்.

4. இதற்கான சிகிச்சை முறைகள் என்ன?

பெரும்பாலான வலிப்பு வகைகளை குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியும். இதற்கான மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கின்றன. டாக்டரின் பரிந்துரைப்படி, தேவைப்படும் வரை, மாத்திரைகளை தேவையான அளவிற்கு தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

5. சிகிச்சைக்கான காலம் ஏதும் உண்டா?

பாதிப்பின் தன்மையைப் பொறுத்து மூன்று, ஐந்து ஆண்டுகள் வரை மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். சிலருக்கு நீண்ட காலம் தேவைப்படலாம். மாத்திரைகளை விட்டு விட்டு சாப்பிடுவதால் வலிப்பை கட்டுப்படுத்த முடியாது; அது தொடர் வலிப்பாகவும் மாறிவிடும்.

6. வலிப்பு நோய் உள்ள பெண்களுக்கு அறிவுரை...

திருமணம் செய்யவோ, குழந்தை பெறுவதற்கோ வலிப்பு நோய் ஒரு தடையல்ல. பிரசவ காலங்களில், டாக்டரின் ஆலோசனைப்படி தகுந்த சில வலிப்பு மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். டாக்டர்களின் ஆலோசனையின்றி, எந்த மருந்துகளையும் உட்கொள்ளக் கூடாது. வலிப்பு நோய் உள்ளோர், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டக் கூடாது என்பது முட்டாள்தனம்.

7. வலிப்பு வரும்போது என்ன செய்ய வேண்டும்?

பதட்டப்படாமல் நோயாளியை அமைதியாக கையாள வேண்டும். நோயாளியை ஒரு பக்கமாக, படுக்க வையுங்கள். இதனால் வாயில் அதிகமாக தோன்றும் உமிழ்நீர், நுரை போன்றவை வெளியேறுவது, சுலபமாகும். இதனால், சுவாசத்திற்கு எந்த பாதிப்பும் வராது. நோயாளியின் அருகில் உள்ள பொருட்களை, அகற்ற வேண்டும். இது, நோயாளி அப்பொருட்களின் மேல் முட்டி அடிபடுவதைத் தவிர்க்கும். சிறு தலையணை, துணி மடிப்புகளை, தலைக்கடியில் வைக்கவும். அடிபட்டிருந்தாலோ, வலிப்பு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீட்டித்தாலோ, நிற்காமல் திரும்பத் திரும்ப வந்தாலோ, ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.

8. என்னவெல்லாம் செய்யக் கூடாது?

நோயாளியைச் சுற்றி கூட்டமாக நிற்கக் கூடாது; காற்றோட்டமான சூழல் மிக அவசியம். வாயில், பற்களுக்கிடையில் எப்பொருளையும் வைக்கக்கூடாது. கையில் சாவி, கூரான பொருட்கள் தருவதைத் தவிர்க்க வேண்டும். முழு சுய நினைவு வரும் வரை, குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக்கூடாது.

9. வலிப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

தினமும், ஏழு மணிநேரம் முதல் எட்டு மணி நேரம், நன்றாக தூங்க வேண்டும். அதிக உணர்ச்சி வசப்படக் கூடாது. தொடர்ச்சியாக, அருகில் அமர்ந்து, 'டிவி' பார்க்கக் கூடாது. வேளை தவறாமல் உணவு சாப்பிட வேண்டும். பசியோடு இருப்பது கூடாது. புகைத்தல், மது அருந்தக் கூடாது.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களைப் போல, வலிப்பும் ஒரு நோய் தான். இது மாந்திரீகத்தாலோ, காத்து கருப்பாலோ வருவதல்ல. மூளை நரம்புகளின் மாறுபட்ட இயக்கத்தால் வருவது. இதற்கு மருத்துவ சிகிச்சை உண்டு. நோயாளிகள் சீராக மருந்து சாப்பிட்டு, தக்க வாழ்க்கை முறையைக் கடைபிடித்து வலிப்பு வராமல் தடுத்து அச்சமின்றி வாழலாம்.

டாக்டர் கே.பானு,
மூளை நரம்பியல் துறை பேராசிரியர்,
சென்னை மருத்துவக்கல்லூரி,
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமணம் செய்ய, குழந்தை பெற வலிப்பு நோய் ஒரு தடையல்ல! Empty Re: திருமணம் செய்ய, குழந்தை பெற வலிப்பு நோய் ஒரு தடையல்ல!

Post by ayyasamy ram Fri Dec 06, 2013 3:19 am

திருமணம் செய்ய, குழந்தை பெற வலிப்பு நோய் ஒரு தடையல்ல! 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருமணம் செய்ய, குழந்தை பெற வலிப்பு நோய் ஒரு தடையல்ல! Empty Re: திருமணம் செய்ய, குழந்தை பெற வலிப்பு நோய் ஒரு தடையல்ல!

Post by ஜாஹீதாபானு Fri Dec 06, 2013 12:08 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

திருமணம் செய்ய, குழந்தை பெற வலிப்பு நோய் ஒரு தடையல்ல! Empty Re: திருமணம் செய்ய, குழந்தை பெற வலிப்பு நோய் ஒரு தடையல்ல!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum