ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புல் தின்ற மண் குதிரை!

2 posters

Go down

புல் தின்ற மண் குதிரை! Empty புல் தின்ற மண் குதிரை!

Post by சிவா Fri Dec 06, 2013 3:03 am

காவல் தெய்வமான அய்யனாரை குலதெய்வமாகவும் இஷ்டதெய்வமாகவும் வழிபடுவோர் தமிழ்நாட்டில் அனேகம்.

பொதுவாக ஊரை விட்டு தள்ளி வெட்ட வெளியிலோ வயல் வெளியிலோ நீர் நிலைக்கு அருகிலோ அவருக்கு ஆலயம் அமைந்திருக்கும்

அப்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் கடையநல்லூருக்கு அருகில் தென் பொதிகை மலையடிவாரத்தில் ஆற்றோரம் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்தது தான் பெரியசாமி அய்யனார் ஆலயம். சுமார் 1150 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னனால் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அய்யனாரே இங்கு பிரபலம் என்றாலும் ஆதியில் இங்கு அருள்பாலித்தவர் அரனாரே.

அரன் ஆலயத்தில் அய்யனாருக்கு புகழ் ஓங்கியதற்கு காரணம் அகத்தியர். அதை அறிய பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.

சிவ-பார்வதி திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்து விடுவதும் உடனே பூமியை சமப்படுத்த நாட்டின் தென் பகுதியை அகத்தியரை சிவபெருமான் அனுப்பி வைத்ததும் நீ அழைக்கும்போதெல்லாம் உனக்கு தரிசனம் தருவேன் என்று சிவபெருமான் அகத்தியருக்கு வாக்கு அளித்ததும் புராண வரலாறு.

ஈசனின் உத்தரவுப்படி இப்பகுதிக்கு வந்த அகத்தியர், பல இடங்களுக்கு சென்று சிவ பூஜை செய்து வரும் வழியில் இத்தலத்திற்கு வந்து கருஞ்சிவலிங்கமே என்று இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவனாரை அழைக்கிறார். அப்போது அங்கிருந்த முனிவர் ஒருவர் அகத்தியரின் அழைப்பை சிவன் காதில் விழாத படி செய்து விடுகிறார்.

மீண்டும், மீண்டும், அழைத்தும் சிவன் தன்னை கண்டு கொள்ளவில்லையே என்ற கோபத்தில் அகத்தியர், பிற்காலத்தில் அய்யனார் இங்கு வருவார். பெரியசாமி அய்யனார் என்றே அவர் அழைக்கப்படுவார். அப்போது அவர் பெயர் ஓங்கும்.. உன் பெயர் மங்கும் என்று கூறிச்சென்று விடுகிறார்.

சித்தர் வாக்கு சிவ வாக்காயிற்றே. அது சிவன் குறித்தே இருந்தாலும் கூறியவர் அகத்திய சித்தர் என்பதால் அப்படியே பலித்து விடுகிறது. சில வருடங்களுக்கு பிறகு கோயிலில் இருந்த கருஞ்சிவலிங்கம் அருகே பூரணை, புஷ்கலை சமேதராக அய்யனாரும், அவர்களுக்கு கீழே பீடம் வடிவில் ராஜராஜேஸ்வரியும் அருள்பாலிக்க துவங்க பெரியசாமி அய்யனார் ஆலயம் என்று அவர் பெயரிலேயே கோயில் பிரபலமாகியது. அன்றிலிருந்து இவர்கள் அனைவரும் ஒன்றாகவே கருவறையில் தரிசனம் தருகிறார்கள். கோயிலுக்கு முன்புறம் கரும்பா நதி ஓடுகிறது. வற்றறாத ஜீவநதியான இதில் சிவ, அகத்திய, பிருகு, சசிமகேந்திர, சுவாமிகள், பத்து தீர்த்தங்கள் அடங்கியள்ளதாக நம்பப்படுகிறது.

கரும்பாநதியில் நீராடி இத்தல தெய்வங்களை தரிசிப்போருக்கு கசந்த வாழ்வு கற்கண்டாய் இனிக்கும் என்றும் நோய் நொடிகள் அகலும் எனவும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். அந்த நதியின் கரையிலிருந்து பதினெட்டு படிகள் ஏறிச்சென்று கோயிலுக்குள் செல்லலாம். படி அருகில் ஆறடி கருப்பசாமி சன்னதி, சபரிமலையில் இருப்பது போன்றே இவர் சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது. இவரது உத்தரவு பெற்று அனுக்ஞை விநாயகரின் ஆசி பெற்று மணிமண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறை தெய்வங்களை தரிசிக்கலாம்.

பல சமூகத்து மக்களின் குலதெய்வங்கள் இங்கு இருப்பதால் சுற்றுவட்டார கிராமத்து மக்கள் இத்தெய்வங்களுக்கு குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அய்யனாரின் படையை சேர்ந்த ஏராளமான குதிரை, யானை, சுதை உருவங்களை வாகன மண்டபத்தில் காணலாம். அங்கு நந்தி உருவங்களும் உள்ளன. தாங்கள் வளர்க்கும் பசுக்கள் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழவும், அதிக பாலைத் தரவும் பக்தர்கள் வேண்டுதல் செய்து இந்த நந்தி உருவங்களை வைத்திருக்கிறார்களாம்.

கருவறைக்கு பின்புறம் தல விருட்சம் வில்வம் உள்ளது. ஆலயத்திற்கு வெளியே வடக்கு நோக்கி அய்யனாரின் வாகனமான பிரமாண்டமான இரண்டு குதிரை உருவங்கள் காட்சி தருகின்றன. ஆண் குதிரையில் அய்யனாரும் பெண் குதிரையில் பூரணை புஷ்கலையும் அமர்ந்திருக்கிறார்கள்.

ஆங்கிலேயர் காலத்தில் இங்கு வந்த வெள்ளைக்காரர் ஒருவர் இந்த குதிரையை பார்த்து இது புல் திண்ணுமா? என்று கிண்டலாக பூசாரியிடம் கேட்டாராம்.

உடனே அவரும் பதிலுக்கு புல்லும் தின்னும், சாணமும் போடும் என்று கிண்டலடிக்க கோபம் கொண்ட வெள்ளைக்காரர் அதைபுல் தின்னச் சொல்லுங்கள்... பார்ப்போம் என்று கூறி அருகில் வளர்ந்திருந்த புல்லை பறித்து அதன் முன்னால் போட்டாராம்.

அப்போது தான் அந்த ஆச்சரியம் நடந்தது. கதையாலான அந்த குதிரை அங்கிருந்த புல்லை தின்றதோடு சாணமும் போட பயபக்தியோடு அய்யனாரையும் குதிரைரையும் வணங்கிவிட்டு சென்றாராம் ஆங்கிலேயர்.

அதே போல் இன்னொரு சம்பவம் ஒருநாள் கோயிலில் பூஜைகள் முடிந்து நடை அடைக்கும் போது நன்கு இருட்டிவிட்டதாம்.

அய்யனாரிடம், நீ தான் வீடு வரை என் துணைக்கு வர வேண்டும் என்று பூசாரி வேண்ட, அப்போது தெய்வவாக்காக கவலைப்படதே நான் உனக்கு பாதுகாப்பு அளிக்கிறேன் என்று அசரீரி ஒலித்ததாம்.

பயத்துடன் வேகவேகமாக நடக்க ஆரம்பித்தாராம் பூசாரி. வீட்டிற்கு செல்லும் வரை அவர் பின்னால் துணைக்கு அய்யனார் வந்ததை நிரூபிப்பது போல், குதிரையின் கனைப்பு ஒலி கேட்டுக்கொண்டே வந்ததாம்.
 அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவம் இது.

ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் நாளன்றும், கடைசி வெள்ளிக்கிழமைகளிலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாசிவராத்திரி, பங்குனிஉத்திரம், சித்திரை வருடப்பிறப்பு என்று விசேஷ தினங்களிலும் இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

எங்கே இருக்கு: திருநெல்வேலி மாவட்டம், தென்காசி தாலுகா, கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி என்ற ஊரிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில், தென்பொதிகை மலையடிவாரத்தில் பெரிசாமி அய்யனார் கோயில் உள்ளது. கடையநல்லூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 13 கி.மீ. சொக்கம்பட்டி வரை பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து ஆட்டோ, கார் மூலம் ஆலயத்தை அடையலாம்.

தரிசன நேரம்: வனப்பகுதியில் அமைந்த கோயில் என்பதால் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

-மு.வெங்கடேசன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புல் தின்ற மண் குதிரை! Empty Re: புல் தின்ற மண் குதிரை!

Post by ayyasamy ram Fri Dec 06, 2013 3:32 am

புல் தின்ற மண் குதிரை! 3838410834 
-
தெய்வம் உள்ளது. எங்கும் எல்லாமுமாய் உள்ளது.
தெய்வங்களை வழிபடுதல், உணர்தல், பூஜித்தல்
என்பது அவரவர் அனுபவமாகும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum