புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_c10சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_m10சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_c10சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_m10சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_c10சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_m10சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_c10சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_m10சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_c10சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_m10சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_c10சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_m10சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_c10சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_m10சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_c10சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_m10சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_c10சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_m10சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_c10சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_m10சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 2:55 am

First topic message reminder :

சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? - Page 2 FGR1sEYURWCknFXZNmg8+E_1385215193 

சிலநாட்களுக்கு முன்னால் டென்னிஸ் ஹட்ஸன் எழுதிய 'கடவுளின் உடல்' என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். காஞ்சிபுரத்தில் பரமேச்வர விஷ்ணுக் கிருஹம் என்று அழைக்கப்படும் வைகுந்தப் பெருமாள்கோயிலைப் பற்றிய புத்தகம் அது. கோயிலில் இருக்கும் சிற்பங்களில் முக்கியமான ஒன்று நந்திவர்ம பல்லவனின் மேற்பார்வையில் இருவர் (ஒருவர் தலைகீழாகக் கழுவேற்றப்படுகிறார்) கழுவேற்றப்படுவதைக் காட்டுகிறது. கழுவேற்றத்தைப் பற்றிய முதல் தமிழ்ப்படைப்பு இதுவாகத்தான் இருக்கும். இந்தச் சிற்பத்தின் புகைப்படத்தைப் பார்த்ததும் எனக்கு மிகவும் பேசப்படும் மற்றொரு கழுவேற்றத்தைப் பற்றிய நினைவு வந்தது.

எட்டாயிரம் சமணர்கள் மதுரையில் கழுவேற்றப்பட்டார்கள் என்ற செய்தி தமிழில் திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது. வாயில் நுரைததும்ப, இந்து மதத்தின் சாவுமணி எங்களால்தான் அடிக்கப்பட வேண்டும் என்ற வேகத்தோடு எழுதுபவர்களிலிருந்து தமிழின் முக்கியமான படைப்பாளிகள் வரை இந்த சம்பவத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று:

ரத்தம் தோய்ந்த தீவிரவாதத்தின் வரலாறு பூமியின் இரண்டு பெரிய மதங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது, அதாவது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே மதத்தின் பெயரால் மாற்று மதத்தவர் கூண்டோடு அழிக்கப்பட்டனர். அந்த மதத்தின் அடையாளங்கள், குறிப்புகள், கலாச்சாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது! அந்த மதத் தீவிரவாதத்தின் தலைவன் கூன்பாண்டியன் என்ற இந்து, கழுவிலேற்றி கொல்லப்பட்ட 800 மாற்று மதத்தவர்கள் சமணர்கள்.

மிகுந்தகோபத்தோடு எழுதியிருக்க வேண்டும். இரண்டு வாக்கியங்களில் மூன்று தவறுகள். சம்பவம் நடந்ததாகக் கூறப்படுவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அல்ல. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னால். சமணத்தின் அடையாளங்கள், குறிப்புகள், கலாச்சாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன என்று கூறுவது முற்றிலும் தவறு. கீழ்க்கணக்கு நூல்களில் பல சமணர்களால் இயற்றப்பட்டவை. சிலப்பதிகாரத்தை எழுதியவரும் சமணர்தான் என்று படித்த ஞாபகம். நன்னூல் என்று ஓர் இலக்கணப் புத்தகம் இருக்கிறது என்று நினைக்கிறேன். திருத்தக்கத் தேவர் 'இந்து' அல்ல. மூன்றாவது தவறு கொல்லப்பட்டவர்கள் 800 என்று குறிப்பிட்டது. தட்டச்சு செய்த போது நேர்ந்த தவறாக இருக்கலாம்.

தமிழின் மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான பூமணி தனது 'அஞ்ஞாடி' நாவலில் 'கழுவேற்ற'த்திற்கு ஒரு அத்தியாயத்தை ஒதுக்கியிருக்கிறார்.

வரலாற்று நிகழ்வுகள் என்று கூறப்படுபவை பற்றி தமிழில் எழுதுபவர்களில், மிகச் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு வரலாற்றுக் கட்டுரைகளுக்கும் துண்டுப் பிரசுரங்களுக்கும் இடையே பல வித்தியாசங்கள் இருக்கின்றன என்பது தெரியாது. தங்களுக்குச் சாதகமாகத் தகவல்கள் கிடைத்தால் அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்ற முன்முடிபோடுதான் அவர்கள் அவற்றை அணுகுகிறார்கள்.

சமணர்கள் கழுவேற்றத்தைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?
தென்னிந்திய வரலாற்றின் புகழ்பெற்ற ஆசிரியரான நீலகண்டசாஸ்திரி சொல்கிறார்:
இது ஒரு கசப்பான பழங்கதை; இதை வரலாறென்று எடுத்துக் கொள்ளமுடியாது.
சாஸ்திரி பார்ப்பனர், பழைமைவாதி என்று ஒதுக்கிவிடலாம். ஹிந்துமதத்தைப் பற்றி பல புத்தகங்களை எழுதிய (ஹிந்துத்துவ வாதிகளுக்குப் பிடிக்காத) வெண்டிடோனிகர் சொல்கிறார்:
இந்தச் சம்பவம் நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. இடதுசாரி வரலாற்றாசிரியராக அறியப்படும் ரோமிலா தபார் கூறுகிறார்:
இது நடந்திருக்கக் கூடிய கதையாகத் தோன்றவில்லை
சமணமதத்தைப் பல வருடங்களாக ஆராய்ந்து கொண்டிருக்கும் வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?
பால்டுண்டாஸ் எழுதிய 'ஜைனர்கள்' என்ற புத்தகம் உலகப்புகழ் பெற்றது. இவர் கூறுவது இது:
இந்தச் சம்பவத்தைப் பற்றி ஒருகுறிப்பு கூட ஜைன இலக்கியங்களிலோ அல்லது கல்வெட்டுகளிலோ இல்லை.

இவரைத் தவிர இந்தக் காலகட்டத்தைப் பற்றி ஆராய்ந்து புத்தகங்கள் எழுதியவர்கள் கார்ட், இந்திரா பீட்டர்சன், லெஸ்லி ஓர், ரிச்சர்ட் டேவிஸ் போன்றவர்கள். இவர்களில் யாரும் இந்தச் சம்பவத்திற்கு வரலாற்று ஆதாரம் இருக்கிறது என்று கூறவில்லை.

இந்தக் கதை எங்கிருந்து பிறந்தது?


pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Postpkselva Sat Dec 28, 2013 8:50 am

அருமையான பதிவு.

நம் வரலற்று ஆசிரியர்கள் கூட இது பற்றி எழுதவில்லை.

நன்றி


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 28, 2013 9:51 am

பி.ஏ.கிருஷ்ணன் , சிவா ஆகியோர்க்கு நன்றி ! நல்ல ஆய்வு ! சமணர்கள் பற்றிய ஆய்வுகள், இவ்வாறு, நடுநிலையோடு வரவேண்டும் ! ஆய்வில் சொந்த மதத்தைக் கலக்கக் கூடாது ! சமணர்கள்தம் தமிழ்த் தொண்டை யாராலும் மறுக்கமுடியாது ! கட்டுரையில் குறிபிடப்பட்ட Colin Mackenzie என்ற ஸ்காட்லாந்து நாட்டவர் தொகுத்த ஆவணங்கள் பலவற்றை நான் பதிப்பித்துள்ளேன் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sat Dec 28, 2013 12:26 pm

திரு.சிவா ,
ஒரு வாதத்திகுரிய கட்டுரையை பெரு முயற்சியுடன் தயாரித்து பதிப்பித்து இருக்கிறீர்கள்...பாராட்டுகள் !
பொதுவாக நான் ஒன்று கூறுகிறேன்...பொறுப்புடனும் , பொறுமையுடனும் சிந்திக்க வேண்டுகிறேன் ...
அனைவரையும் ...
மதங்களின் சிறப்பை பற்றியும் அதை உண்டாக்கியவர்கள் சொன்ன உயர்ந்த கருத்துகளைப் பற்றியும்
தத்துவங்கள் பற்றியும் எவ்வளவோ சொல்லப்பட்டு விட்டது...
ஆனால் , நடை முறையில் முனைப்பாய் நடந்தது / நடப்பது என்னவென்று கண்டால் மதத்தின் பெயரால் - எந்த மதமும் விதி விலக்கல்ல - கொடூரம் மட்டுமே ....
அயர்லாந்தில் ஒரு இளம் இந்திய பல் மருத்துவர் , மருத்துவ மனையிலேயே அநேகமாக கொலை செய்யப்பட்டார்
என்றே சொல்லலாம் ; அவர்கள் உரிய சிகிச்சியை அளிக்காததற்கு சொன்ன காரணம் ' This is a Christian nation '!
எப்படி...
உலகின் முதல் பெண் கணித மேதை எனச் சொல்லப்படும் எகிப்தின் ஹைபாசியா மிகக் கோடூரமாகக் கொலை
செய்யப்ட்டாள்...
Peter the Reader, shamefully stripped her naked, and there, close to the alter and the cross, scraped her quivering flesh from her bones with oystershells. The marble floor of the church was sprinkled with her warm blood. The alter, the cross, too, were bespattered, owing to the violence with which her limbs were torn, while the hands of the monks presented a sight too revolting to describe. The mutilated body, upon which the murderers feasted their fanatic hate, was then flung into the flames.

Oh! is there a blacker deed in human annals? When has another man or woman been so inhumanly murdered?...

இதுவும் அவளது மதம் பற்றிய மாற்றுக் கருத்துக்காகவே...
இன்னொன்று ....

புவியைக் கோள் என்று சொன்னதற்கு...ஒரு தண்டனை நிறைவேற்றம் ....

பெயர் : ஜியார்டனோ ப்ரூனோ
நாள் : 16 , பிப்ரவரி , 1600
நடந்தது : உயிருடன் எரித்து கொல்லப்பட்டார்
இடம் : ரோம்
செய்த குற்றம் : " புவிதான் ஞாயிற்றைச் சுற்றுகிறது "

இந்த தண்டனை எப்படி நிறைவேற்றப்படவேண்டும் தெரியுமா ....

"to be handed over to the secular arm to be dealt with mercifully as possible without the shedding of blood. "

இந்த ' secular ' என்ற வார்த்தையின் பொருள் அன்றைக்கே திரிக்கப்பட்டிருக்கிறது ... அடுத்து ' without the shedding of blood.'
என்ன பித்தலாட்டம் ...!!??

அலெக்சாண்டிராவின் நூலகம் எரிக்கப்பட்டது மதத்தின் பெயரால் ..., யாழ்ப்பாண நூலகம் கொளுத்தப்பட்டதற்கும்
அதுவே முதற் காரணம் ....
மனிதனுக்கு கடவுள் தேவைப்படலாம் ...நிச்சயமாய் மதம் அல்ல ...
மதத்தின் பெயரால் கிடைக்கும் நன்மைகளை விட அடைந்த தீங்குகளே மிக அதிகம்...
சுந்தரம்


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக