புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதிகட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார் Poll_c10இறுதிகட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார் Poll_m10இறுதிகட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார் Poll_c10 
30 Posts - 83%
heezulia
இறுதிகட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார் Poll_c10இறுதிகட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார் Poll_m10இறுதிகட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
இறுதிகட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார் Poll_c10இறுதிகட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார் Poll_m10இறுதிகட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இறுதிகட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார் Poll_c10இறுதிகட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார் Poll_m10இறுதிகட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இறுதிகட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார் Poll_c10இறுதிகட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார் Poll_m10இறுதிகட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதிகட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 2:05 am

காங்கிரஸ் கட்சியின் காலைச்சுற்றிய பாம்பாக ஈழத்தமிழர் விவகாரம் மாற ஆரம்பித்துவிட்டது. அதை அந்தக் கட்சியினரும் உணர ஆரம்பித்திருப்பதன் அடையாளம்தான் சென்னையில் ப.சிதம்பரத்தின் சிறப்புப் பேச்சு!

'இலங்கைத் தமிழர்கள் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலையும்’ என்ற தலைப்பில் சென்னையில் கடந்த வாரம் ஒரு மணி நேரம் முழங்கினார் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம். சென்னையில் தனியார் ஹோட்டலில் நடந்த இந்த விழாவுக்கு வழக்கம்போல ப.சிதம்பரம் கோஷ்டியைத் தவிர மற்றவர்கள் ஆப்சென்ட்.

சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருடன் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி மட்டுமே உட்கார வைக்கப்பட்டார். வரவேற்றுப் பேசிய அழகிரி, ''இறுதிக்கட்டப் போரின்போது, நடேசன் என்பவர் சொல்லி, குமரன் பத்மநாபன் மூலம் இந்தியாவுக்கு செய்தி அனுப்பினார்கள். போரை நிறுத்த கோரிக்கை வைத்தார்கள். இந்திய அரசு அதற்கான முயற்சி எடுத்தது. ஆனால், நெடுமாறனும் வைகோவும்தான் தடுத்துவிட்டார்கள். 'இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவில் ஆட்சியே மாறப்போகிறது. பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்துவிடும். தனி ஈழம் கிடைத்துவிடும்’ என்றார்கள். இதைப் பற்றியெல்லாம் நன்கு தெரிந்தவர் சிதம்பரம் மட்டும்தான்'' என்று கூறி சிதம்பரத்துக்கு வழிவிட்டார்.

''இந்திய-இலங்கை ஒப்பந்தம் மட்டும் நிறைவேறியிருந்தால், வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் தொடர்ந்து ஆட்சி செய்துகொண்டு இருந்திருப்பார்கள். கடந்த 15 ஆண்டு சோகங்கள் நடந்து இருக்காது. இறுதிக்கட்டப் போரை நிறுத்தப் பெரும்முயற்சி எடுத்தோம். அது வெற்றி பெறவில்லை.

போர் முடிந்த பிறகு என்ன நடக்கிறது, என்ன நடக்க வேண்டும் என்றுதான் பேச வந்துள்ளேன். இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது என்று காங்கிரஸ் மீது பழிச்சொல் வீசப்படுகிறது. அவர்களுக்கு என்னென்ன செய்து வருகிறோம் என்பதை காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல; தமிழக மக்களும் பொறுமையாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்'' என்ற பீடிகையுடன் சிதம்பரம் பேச ஆரம்பித்தார்.

''இலங்கைத் தமிழர்களுக்கு எப்படி அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத்தருவது என்பதுதான் முதல் பிரச்னை. இலங்கை இறையாண்மை பெற்ற ஒரு நாடு. அங்கு தங்களுக்குத் தலைவராக சரியான நபரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களா, இல்லையா என்பது அந்நாட்டு மக்களின் சொந்த விஷயம். அதில் நாம் தலையிட முடியாது. அத்தகைய நாட்டில், சிறுபான்மை மக்களுக்கு இறையாண்மை பெற்ற இன்னொரு நாட்டில் உரிமை பெற்றுத்தருவது என்பது எளிதானதல்ல. நம் நாட்டில் காஷ்மீரிகள், நாகா மக்கள்... தனி நாடு கேட்கிறார்கள். அதை நாம் சரி என்றா சொல்கிறோம்? ஈழத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் பெற்றுத்தரத்தான், இந்தியா-இலங்கை ஒப்பந்தம் மூலம்  இலங்கை அரசியல் சாசனத்தின் 13-வது அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதை நிறைவேற்றுவதாக ஜெயவர்த்தனே முதல் இப்போதைய ஜனாதிபதி ராஜபக்ஷே வரை ஒப்புக்கொண்டனர். நான் ராஜபக்ஷேவை ஒருமுறை சந்தித்தபோது அவர், '13-வது திருத்தம் என்ன... அதற்கு மேலே 13 ப்ளஸ் செய்து தருகிறேன்’ என்றார். ஆனால், இந்த வாக்குறுதிகளை எல்லாம் இலங்கை அரசு மீறியது. எனவே, முரட்டுத்தனமாக மோதாமல் ராஜதந்திரத்துடன் அணுகி 13-வது சட்டத் திருத்தத்தை காப்பாற்றுவோம் என்று ராஜீவ் காந்தி பெயரில் சூளுரைக்கிறேன்'' என்ற சிதம்பரம் இறுதிக்கட்டப் போர் பற்றிப் பேசினார்.

''இறுதிகட்டப் போரின்போது இலங்கையில் இனப்படுகொலை நடந்ததை நான் மறுக்கவில்லை. 2009-ம் ஆண்டு நம்முடைய முயற்சிக்கு உளப்பூர்வமாக அவர்கள் செவிசாய்க்கவில்லை. அப்படி நடந்திருந்தால் பிரபாகரன் உயிரோடு இருந்திருக்கக் கூடும். இறுதிக்கட்ட போரில் நடந்த இனப்படுகொலை பற்றி விரிவான, உண்மையான விசாரணை நடத்த வேண்டும். அது உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். இனப்படுகொலை செய்தவர்களை அடையாளம் காட்டப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதுபற்றியெல்லாம் நம்முடைய குரல் தொடர்ந்து ஒலிப்பதால்தான், இப்போது உலக நாடுகள் பேசுகின்றன. கனடாவும் பிரிட்டனும் எப்படியும் பேசலாம். அவர்கள் இலங்கைக்கு அண்டை நாடு அல்ல. அப்படி நாம் முற்றிலுமாக புறக்கணிக்க முடியுமா? ஒட்டுமொத்தமாக துண்டித்துவிட்டால் இலங்கையில் வாழும் தமிழர்களுக்குத் தொடர்ந்து எப்படி உதவுவது? துரும்புகூட செல்லாவிட்டால், நாளைக்கு இந்திய பிரதிநிதிகள் இலங்கைக்கு வர விசா கிடையாது என்று ராஜபக்ஷே கூறுவார். நாம் என்ன செய்ய முடியும்?'' என்று கருணாநிதிக்கு மறைமுகமாக பதில் அளித்த சிதம்பரம்,

''உள்ளூர் அரசியல் போன்றதுதான் உலக அரசியலும். அதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல இந்தியாவும் அரசியல் ராஜதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது. யாழ்பாணத்துக்கு வாருங்கள் என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பு அப்படியே இருக்கிறது. இலங்கைத் தமிழர்களை ஒருபோதும் இந்தியா கைவிடாது. அவர்களுக்கு அரசியல் அதிகாரம் பெற்றுத்தரும் வரை ஓயமாட்டோம்'' என்று முடித்தார்.

தமிழகத்தின் மற்ற ஊர்களிலும் இதே மாதிரி சிதம்பரத்தைப் பேச வைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது!
ஜூனியர் விகடன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 3:17 am

இறுதிகட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார் 1471263_187102681481956_1319555752_n

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 06, 2013 3:21 am

ராஜ தந்திரத்துடன் செயல்பட்டு
வருகிறாராம்...!!
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 3:25 am

ayyasamy ram wrote:ராஜ தந்திரத்துடன் செயல்பட்டு
வருகிறாராம்...!!
இவரது இந்த ராஜதந்திரம் இவரது சொந்த தொகுதியில் கூட இவர் வெற்றிபெற உதவாது! கடந்த தேர்தலிலும் இவர் தோல்வியடைந்து மீண்டும் பெரும் பணம் கொடுத்து மறு வாக்கு எண்ணிக்கை என்று நாடகமாடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Dec 06, 2013 10:37 am

ஒரு பக்கம் இலங்கையை நட்பு நாடு நட்பு நாடு என்று கூறிக்கொண்டு இன்னொரு பக்கம் இப்படி முதலைக் கண்ணீர் வடிக்கும் இதுபோன்ற கேடுகெட்டவர்களை முற்றிலும் புறக்கணிக்கவேண்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக