ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Empty ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...

Post by ayyasamy ram Wed Dec 04, 2013 8:37 am

இராமாயணம் படித்தால் சகல நலன்களும் வந்து
சேரும் என்ற நம்பிக்கை நம்நாட்டில் உண்டு.
-
ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  JwvNBpqRkKq7olyhl56Q+sri-rama
---

மணமாகாத கன்னியர் சுந்தரகாண்டத்தைப்
பாராயணம் செய்தால் உடனே மணமாகும் என்பர்.

வேறு சில பரிகாரங்களுக்கும் சுந்தர காண்டத்தைப்
படிக்கச் சொல்வதுண்டு. இராமாயணத்தைப்
பாராயணம் செய்து தசமி அன்று பட்டாபிஷேகத்தைப்
படித்து முடிப்பது ஒரு வகை.

ஸ்ரீராமர் பிறந்த இந்த நவமியிலிருந்து பத்து
தினங்களுக்குப் பாராயணம் செய்து
பட்டாபிஷேகத்தைப் படித்து முடிப்போரும் உண்டு
.

இராமனின் கதையைக் கேட்டாலும் படித்தாலும்
புண்ணியம் சேரும் என்பது ஆன்றோர் கருத்து.


Last edited by ayyasamy ram on Wed Dec 04, 2013 8:46 am; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Empty Re: ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...

Post by ayyasamy ram Wed Dec 04, 2013 8:41 am

அஷ்டமி, நவமி திதிகள் என்றால் எந்தக்
கார்யத்திலும் இறங்காமல் வெறுமனே
அமர்ந்திருக்கும் மக்களைப் பார்க்கும்போது
எனக்கு இந்த விஷயம்தான் தோன்றும்.

இந்தத் திதிகளை மக்கள் ஒதுக்கவே, அவை
இறைவனிடம் சென்று, "மக்கள் எங்களை
ஒதுக்குகின்றனரே'' என்று வருந்தினவாம்.
அதற்கு இறைவன் "உங்களுக்கு ஏற்றம்
தருகிறேன். மக்கள் உங்கள் இருவரையும்
கொண்டாடச் செய்கிறேன்'' என்று
வாக்களித்தாராம்.

பகவான் உறுதியளித்தபடி, நவமி திதியில்
ராமனாகவும், அஷ்டமி திதியில்
கிருஷ்ணனாகவும் அவதரித்து, மக்கள்
அவ்விரு திதிகளையும் கொண்டாடச் செய்தாராம்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Empty Re: ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...

Post by ராஜா Wed Dec 04, 2013 10:58 am

தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி அய்யாசாமி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Empty Re: ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...

Post by soplangi Wed Dec 04, 2013 11:20 am

தமிழில் முழு ராமாயணத்தையும் விளக்கும் ஒரு அற்புதமான பாடல்

1963 ஆம் ஆண்டு வெளிவந்த ‘லவகுசா’ திரைப்படத்தில் முழு ராமாயணத்தையும் விளக்கும் வகையில் இராம புத்திரர்களான லவ குசர்கள் பாடிய பாடல். கவிஞர் மருதகாசி இயற்றி பி.சுசீலா அவர்களும் பி.லீலா அவர்களும் பாடியிருக்கும் இந்த அற்புத பாடலை படியுங்கள். கேளுங்கள்.

பாடலை கேட்கும்போதே உடல் சிலிர்த்து காதலாகி கண்ணீர் கசிந்தோடும் என்பது உறுதி. ஊனையும் உருக்கும் ஒரு உன்னத பாடல்.

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லாத காவியமாகும்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை
கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்
கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வன்

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே
காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே

வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்
ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தைதனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வன் வீரத்தைக் கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகர தோரணத்தால் அலங்கரித்தாரே
மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்கண்டுகள்
வாழவும் மன்னனிடம் வரமது கேட்டாள்

அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூர்ச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தையுனை வனம் போகச் சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார் என்றாள்
சஞ்சலமில்லாமல் அஞ்சலவண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்
விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான்

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு
இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே

கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
இதயங்கள் போவதென்று தடுத்தனர் சென்றே

ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே
அண்ணலும் கானகத்தை நாடிச் சென்றானே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை
மானபங்கம் செய்து விரட்டி விட்டான்
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்
ராமன் தேடிச் சென்றான்

வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்
அன்னையை அசோகவனத்தில் கண்டான்

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்
ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து அண்ணல் வானர சேனையுடன் சென்றான்
வானர சேனையுடன் சென்றான்
விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்

கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்
அரசுரிமை கொண்டான்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
சீதாபதிம் ரகுகுலான்மயரக்ஷமீயம்
ஆஜானுபாகும் அரவிந்த தளாய தாட்ச்ம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி


-- நன்றி திரு. சுந்தர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Empty Re: ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...

Post by soplangi Wed Dec 04, 2013 11:33 am

எளிய வடிவில் ராமாயணம்…

ராமாயணக் கதை முழுதும் ‘’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைக் குமுதம் பக்தி ஸ்பெஷலுக்காகத் தொகுத்தவர் பெயர் : ஜானகி

அனந்தனே அசுரர்களை அழித்து,
அன்பர்களுக்கு அருள அயோத்தி
அரசனாக அவதரித்தான்!

அப்போது அரிக்கு அரணாக அரசனின்
அம்சமாக அனுமனும் அவதரித்ததாக
அறிகிறோம். அன்று அஞ்சனை அவனிக்கு
அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் ?
அவனே அறிவழகன், அன்பழகன், அன்பர்களை
அரவணைத்து அருளும் அருட்செல்வன்!

அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில்
அரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும்
அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை
அடைந்தான்!

அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய
அனந்த ராமனுக்கே! அப்படியிருக்க அந்தோ!
அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும்
அடங்காமல் அநியாயமாக அவனை ஆரண்யத்துக்கு
அனுப்பினாள்!

அங்கேயும் அபாயம், அரக்கர்களின் அரசன்,
அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை
அபகரித்தான்.
அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு,
அட்டூழியங்களுக்கு,
அளவேயில்லை. அயோத்தி அண்ணல், அன்னை
அங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும்
அளவில்லை.

அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியை
அடிபணிந்து, அவனையே அடைக்கலமாக
அடைந்தனர்.
அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை
அரசனாக அரியணையில் அமர்த்தினர்.

அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும்
அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர். அலசினர்.
அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து
அளந்து அக்கரையை அடைந்தான்.

அசோகமரத்தின் அடியில், அரக்கிகள் அயர்ந்திருக்க
அன்னையை அடி பணிந்து அண்ணலின்
அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம்
அளித்தான்.

அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள்
அனேகமாக அணைந்தன. அன்னையின்
அன்பையும்
அருளாசியையும் அக்கணமே அடைந்தான்
அனுமன்.

அடுத்து, அரக்கர்களை அலறடித்து, அவர்களின்
அரண்களை, அகந்தைகளை அடியோடு
அக்கினியால்
அழித்த அனுமனின் அட்டகாசம், அசாத்தியமான
அதிசாகசம்!

அனந்தராமன் அலைகடலின் அதிபதியை
அடக்கி, அதிசயமான அணையை
அமைத்து, அக்கரையை அடைந்தான்.

அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின்
அஸ்திரத்தால் அழித்தான்.

அக்கினியில் அயராமல் அர்ப்பணித்த அன்னை
அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.

அன்னையுடன் அயோத்தியை அடைந்து
அரியணையில் அமர்ந்து அருளினான்.

அண்ணல், அனந்தராமனின் அவதார
அருங்கதை அகரத்திலேயே அடுக்கடுக்காக
அமைந்ததும் அனுமனின் அருளாலே!


–நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Empty Re: ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...

Post by soplangi Wed Dec 04, 2013 11:37 am

ஸ்ரீராம நாம மஹிமை

“ராம” நாமம் ஒருமருந்து

"ராம” நாமம் அரு மருந்து

ஒரே ஒரு மருந்து ஒரு மருந்து

உலகத்தை உய்விக்க வந்த மருந்து

ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

“சொல்லின் செல்வன்” ஆஞ்சநேயன் தின்னும் மருந்து
சொல்லச் சொல்ல தித்திக்கும் அந்த மருந்து
அஞ்சனா பாக்கியம் என்னும் மருந்து
ஆர்வத்துடன் அசை போட்டு தின்னும் மருந்து
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

“தாரக” மந்த்ரம் அந்த மருந்து
தாபம் மூன்றும் போக்கடிக்கும் அந்த மருந்து
தின்னத் தின்னத் திகட்டாது அந்த மருந்து
தேவர்களுக்கும் கிட்டாது அந்த மருந்து
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

ஜானகிக்கு ஜீவன் தந்தது அந்த மருந்து
ஜாதி மத பேதமின்றி சொல்லும் மருந்து
மாருதிக்கு பெருமை தந்தது அந்த மருந்து
மாதேவன் பாராட்டிப் பேசும் மருந்து
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

மங்காத செல்வம் தரும் அந்த மருந்து
மாயப் பிறப்பறுக்கும் அந்த மருந்து
பாமரர்க்கும் பண்டிதர்க்கும் ஒரே மருந்து
பாரபட்சமின்றி பலன் தரும் அந்த மருந்து
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

துறவிகளும் யோகிகளும் தின்னும் மருந்து
துளசிதாசன் தேடித் தேடிக் கண்ட மருந்து
ஐந்தும் எட்டும் கூட்டிச் சேர்த்தது அந்த மருந்து
ஐந்து வித பாவங்களை போக்கும் அந்த மருந்து
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

வைதேஹிக்கு வாழ்வளித்தது அந்த மருந்து
வையகத்தை வாழவைக்க வந்த மருந்து
இல்லறத்தில் வாழ்வு தரும் அந்த மருந்து
இறுதியிலே வீடு தரும் அந்த மருந்து
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

பலவித நன்மைகளைத் தந்த மருந்து
பக்தர்களை பாடி ஆட வைத்த மருந்து
பலவித பயங்களைப் போக்கும் மருந்து
கேட்கக் கேட்கத் தெவிட்டாத “ராம” நாம மருந்து
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Empty Re: ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...

Post by soplangi Wed Dec 04, 2013 11:56 am

ஒரே பக்கத்தில் ராமாயணம்

தனியறத்தின் தாயான தசரத மாமன்னன், கொள்வாரும் கொடுப்பாரும் கள்வரும் காவலரும் அற்ற சமுதாய சமத்துவம் மிகு ந்த அயோத்தி நாட்டை ஆண்டு வந்தான். மன்னனது புத்திர சோகத்தைத் தீர்க்க ராம, இலக்குமண, பரத, சத்ருகனன் என் னும் அருந்தவப் புதல்வர்கள் அவதரித்தனர். நால்வரில் கரிய செம்மலான சுந்தரராமன் க்ஷத்திரிய கலைகளை நன்கு கற்ற, அரசனுக்குப் பிரியமான தசரத ராமனாகத் திகழ்ந்தான். விசுவாமித்ரருடன் கானகம் சென்று, தாடகை, சுபாகு ஆகிய அரக்கர்களைக் கொன்று, மாரீசனைக் கடலில் தள்ளி யாகத்தைக் காத்து, கோதண்ட ராமனாகக் காட்சி அளித்தான்.

மிதிலை செல்லும் வழியில் அகலிகையைத் தன் கால் வண்ணத்தால் பெண்ணாக்கி, பாபவிமோசன ராமனாக விளங்கினான். ஜனகனின் ராஜ மண்டபத்தில் சிவதனுசை ஒடித்து சீதையைக் கைப்பிடித்து ஜானகி ராமனாகத் தோன்றினான். அயோத்தி வ ரும் வழியில் பரசுராமனின் விஷ்ணு தனுசையும், அவன் கர்வத்தையும் ஒருங்கே வளைத்த ராஜா ராமனாக நின்றான்.

உள்ள நிறைவில் கள்ளம் புகுந்த கைகேயியின் விருப்பப்படி, ஓட்டையும் பொன்னையும் ஒக்கநோக்கும் அன்றலர்ந்த தாமலை மலர் போன்ற முகத்தை உடைய பரந்தாமன், தந்தை சொல் காக்கக் கானகம் ஏகி, குகனின் உதவியால் கங்கை இரு கரைகளை அவனது அன்பெனும் நாவாயால் கடந்து, சித்ரகூடத்தில் முனிவர்களுக்கு அபயம் அளித்து சபரியின் கனி உண்டு அவளுக்கு முக்திக்கனி அளித்து ஆனந்த ராமனாகக் காட்சி அளித்தான்.

பஞ்சவடியில் ராமபிரான் மீது மையல்கொண்ட சூர்ப்பணகையை இளவல் மூக்கறுத்து அவமதித்தபிறகு, ராமன் கரனின் சிரம் சாய்த்த அற்புத ராமனாகக் கோலம் பூண்டான். அண்ணல் பொன்மான் பின் சென்ற சமயம் ராவணன் சீதையைத் தூக்கிச் சென்ற பிறகு, ஜடாயுவிற்கு வீடுபேற்றைத் தந்து, சுக்ரீவனின் நட்பைப் பூண்டு, வாலியை வதம் செய்து சுக்ரீவனுக்குப் பட்டம் கட்டிய தூய நேய ராமனாகத் திகழ்ந்தான். ஐயனின் தூதனாக அனுமான் கடலைத் தாண்டி அன்னையைக் கண்டு, அண் ணலின் கணையாழியைக் கொடுத்து, அவளது சூடாமணியைப் பெற்று வந்ததும் ராமன் மன்மதரூபனாகக் காட்சி அளித்தான்.

கடலைத் தாண்ட முயற்சிக்கையில் கடல் அரசன் உதவ மறுக்க, ஐயன் வெகுண்டு பாணம் எடுத்து ஊழிக்கால உருத்திர சிவராமனாகத் தோன்றினான். இலங்காபுரியை அடைந்து விபீடணின் சரணாகதியை ஏற்றுக்கொண்டு, ராவணனுடன் போர் செய்து, அவனது கை சளைக்கையில் ‘இன்று போய் நாளைவா’என்று மொழிந்த பகைவனுக்கருளும் உத்தம ராமனாக நின்றான்.

ராவணனைக் கொன்று மீட்ட சீதையின் கற்பைக் கனலில் புடம் போட்டுப் பார்த்த சீதா ராமனாக, மனித ராமனாகத் தோன்றினான்.

நந்திக் கிராமம் வந்து, பரம பக்தனாக பரதனைக் காத்த பக்தி நேயனாகக் காட்சி அளித்தான். அயோத்தி மாநகரை அடைந்து, அன்னைமார் புடைசூழ, தேவி அருகிருக்க,ராஜ்ய பட்டாபிஷேகம் செய்துகொண்ட பட்டாபிராமனாக விளங்கிய ஐயன் பல தத்துவங்களைத் தன் வாழ்க்கையின் மூலம் விளக்கி நம் அனைவரது உள்ளங்களிலும் என்றும் முடிவில்லாத நிலைபெற்ற அனந்த ராமன் ஆவான்..

திருமதி எ ன். லலிதா
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Empty Re: ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...

Post by soplangi Wed Dec 04, 2013 12:00 pm

ஒரே சுலோகத்தில் அமைந்த இராமாயணம்

தெள ராம தபோவனாதி கமனம் ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ ஸம்பாஷனம்
வாலி நிக்ரஹனம் சமுத்ர தரணம் லங்காபுரி தஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹரணம் ஏததி ராமாயணம்


ஆதெள ராம தபோவனாதி கமனம் - இராமன் தபோவனங்களுக்குச் செல்வதும்

ஹத்வா ம்ருகம் காஞ்சனம் - பொன்மானைக் கொல்வதும்

வைதேஹி ஹரணம் - சீதை கடத்தப்படுவதும்

ஜடாயு மரணம் - ஜடாயு காலமாவதும்

சுக்ரீவ ஸம்பாஷனம் - சுக்ரீவனுடன் நட்பு கொண்டு ஆலோசிப்பதும்

வாலி நிக்ரஹனம் - வாலியைக் கொல்வதும்

சமுத்ர தரணம் - கடலைக் கடப்பதும்

லங்காபுரி தஹனம் - இலங்கையை எரிப்பதும்

பஸ்சாத் - பின்னர்

ராவண கும்பகர்ண ஹரணம் - இராவண கும்பகருணர்களை அழிப்பதும்

ஏததி ராமாயணம் - இவையே இராமாயணம்!
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Empty Re: ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...

Post by ayyasamy ram Wed Dec 04, 2013 2:33 pm

ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  1571444738 
-
ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  UeS5jEOJRsCxCRW8g9We+sri-rama
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Empty Re: ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...

Post by pkselva Mon Dec 09, 2013 8:25 am

அருமையான தொகுப்பு.

நன்றி நண்பர்களே!
pkselva
pkselva
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Back to top Go down

ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Empty Re: ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum