புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_m10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10 
25 Posts - 38%
heezulia
'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_m10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_m10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_m10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_m10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10 
4 Posts - 6%
Raji@123
'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_m10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10 
2 Posts - 3%
prajai
'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_m10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10 
2 Posts - 3%
M. Priya
'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_m10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_m10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_m10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_m10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_m10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_m10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_m10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_m10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10 
8 Posts - 2%
prajai
'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_m10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_m10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_m10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_m10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_m10'பராசக்தி' தொடருகிறாள்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பராசக்தி' தொடருகிறாள்...


   
   

Page 1 of 2 1, 2  Next

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Nov 15, 2013 10:18 pm

''பராசக்தி' தொடருகிறாள்...

தொடர் 1

பாகம் 2

பராசக்தியைப் பற்றி சில தகவல்கள்.

1. பராசக்தி படத்தில்தான் முதன் முதலாக டைட்டிலின் போது பின்னால் பாடல் ஒலிக்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது.

2. சிவாஜி ஒல்லியாக இருந்ததினால் நேஷனல் பிக்சர்ஸ் கம்பெனி மேக்கப் மேனிடம் நிர்வாகத்தால் பணம் வழங்கப்பட்டு சிவாஜிக்கு 'தயார்த் தீனி' அளிக்கப்பட்டது. அதாவது இறைச்சி வகைகள், முட்டை, மீன் இதர மாமிச வகைகள் சிவாஜிக்கு ஒரு கிராமத்தில் இரண்டுமாத காலம் கொடுக்கப்பட்டு அவருடைய உடம்பு கதாநாயகனுக்குத் தக்கபடி ஓரளவிற்கு உருமாற்றப்பட்டது.

3. 1951-இல் 'பராசக்தி' ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னால் சிவாஜியை வைத்து ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஆக்டிங் டெஸ்ட் எடுக்கப்பட்டது. சிவாஜி நடித்த 'என் தங்கை' என்ற நாடகத்தில் அவர் குடிகாரனாக அதகளம் செய்வாராம். அந்த குடிகாரன் பாத்திரத்தையே சோதனை நடிப்பாக சினிமா காமெரா முன்னால் சிவாஜியை செய்ய வைத்தார்களாம். சிவாஜி பிரமாதமாக நடித்துக் காட்ட அனைவருக்கும் பரம திருப்தி ஏற்பட்டதாம்.

4. பின் பராசக்தி ஷூட்டிங்கின் முதல் நாளில் கையில் இரண்டு சிகரெட்டுகளைப் பிடித்தபடி சிவாஜி பேசி நடித்த முதல் வசனம் என்ன தெரியுமா. 'சக்சஸ்' அந்தக் காட்சியின் புகைப்படத்தைத்தான் கீழே பார்க்கிறீர்கள்.

'பராசக்தி' தொடருகிறாள்... 5bf634e6-c91a-49c8-b610-640653ff2d90_zpseef0fbab

5. அந்தக் காலத்தில் ஒரே படத்தில் ஒரு நடிகரே வெவ்வேறு இரண்டு அல்லது மூன்று வேடங்கள் போடுவதுண்டு. 'அய்யா தெரியாதய்யா'
புகழ் ராமாராவ் பராசக்தியில் கல்யாணியின் பக்கத்து வீட்டுக் காரராகவும், கல்யாணிக்கு கடன் கொடுத்து அதை வசூல் செய்யும் சேட்டாகவும் இரண்டு வேடங்கள் செய்திருப்பார். அந்தக் காலங்களில் கம்பெனி ஒப்பந்தங்களின்படி ஒருவரே நாடகத்திலும் சரி, திரைப்படங்களிலும் சரி இரண்டு மூன்று வேடங்கள் போடுவதுண்டு. ஆனால் எளிதில் கண்டு பிடிக்க இயலாது. மேக்கப்பும், நடிப்பும் அவ்வளவு தத்ருபமாக இருக்கும்.

6. படம் இரண்டாயிரம் அடி எடுக்கப்பட்டு சிவாஜி பராசக்தியின் கதாநாயகனா இல்லையா என்ற இழுநிலை நீடித்தபோது சிவாஜி அவர்களின் மனநிலைமையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தான் பராசக்தியின் கதாநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுவோமா இல்லையா என்று அந்த மனிதர் எப்படியெல்லாம் துடித்திருப்பார். இதோ அவர் சொல்வதைக் கேளுங்கள்.

"பராசக்தியில் என்னை கதாநாயகனாக ஆக்குவார்களா இல்லையா என்று நான் துடித்துப் போனேன். அழுது அழுது என் கண்ணீர் வற்றியது. இன்று ஏவி
எம் ஸ்டுடியோவில் வானுயர வளர்ந்த வேப்ப மரங்கள் அனைத்தும் அன்று என் கண்ணீரால் வளர்ந்தவை"

அதே ஏவி எம் ஸ்டுடியோவில் தற்சமயம் உலகப்பெரு நடிகர் சிவாஜி கணேசனுக்காக வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் புகைப்படத்தைத்தான் கீழே பார்க்கிறீர்கள்.('பராசக்தி' பட வடிவில்)

'பராசக்தி' தொடருகிறாள்... 8506726940_16dca13cee_z

7. முதன் முதல் ஒரு திரைப்படத்தின் வசனங்கள் இசைத்தட்டாக வெளிவந்து தமிழ்நாடு முழுதும் எதிரொலித்ததே அவ்வளவு ஏன்? இன்றளவும் கூட மார்கழி மாத அதிகாலைகளில் கோவில்களில் குணசேகரன் கல்யாணித் தங்கைக்காக நீதிமன்றத்தில் கோர்ட்டாருடன் வாதிடுவது நமது ஆழ்ந்த உறக்கத்தையும் மீறி நம் காதுகளுக்குக் கேட்டு நம்மில் உணர்ச்சிப் பிரவாகத்தை உண்டு பண்ணுகிறதே!

8. முதன்முதலில் வெளிநாட்டில் வெள்ளிவிழா கொண்டாடிய முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் பராசக்திக்கு உண்டு.

9. அதுவரை தமிழில் கதாநாயகர்களாகக் கோலோச்சிய நடிகர்கள் தியாகராஜா பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், கே.ஆர்.ராமசாமி, எம்.கே.ராதா, ரஞ்சன், இன்னும் நிறைய பேர் பராசக்தி சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். தெலுங்கு நடிகர்கள் நாகேஸ்வரராவ், என்.டி ஆர் கூட தமிழில் நிறைய நடித்துக் கொண்டிருந்த நேரம்.அவர்களும் நடிகர் திலகம் என்ற நடிப்புப் புயலில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆந்திராவில் சென்று கரையேறினர்.

10. அதுவரை திரைப்பட விநியோகஸ்தராக இருந்த பி.ஏ.பெருமாள் முதலியார் அவர்கள் தயாரித்த முதல் படம் 'பராசக்தி'.

11. இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அறிமுகமும் பராசக்தியில்தான் என்று நினைக்கிறேன்.

12. .கலைஞரும், சிவாஜியும் இணைந்த முதல் படம் என்பதை பட்டி தொட்டியும் அறியும்.

13. கவிஞர் கண்ணதாசன் நீதிபதியாக பராசக்தியில் சில காட்சிகள் விருப்பத்துடன் ஏற்று நடித்தாராம். இறுதிவரை நடிகர் திலகத்துக்கு உறுதுணையாய் இருந்த சிவாஜி நாடக மன்ற இயக்குனர் எஸ். ஏ. கண்ணன் இறுதி நீதிமன்றக் காட்சிகளில் வக்கீலாக நடித்திருப்பார்.

14. 'பராசக்தி'யில் சிவாஜி நடிப்பதைப் பார்க்க அப்போதே பெரிய நடிக நடிகைகள் மற்றும் இதர கலைத்துறையினர் ஏ.வி.எம்.ஸ்டுடியோ வளாகத்திற்கு வந்து விடுவார்களாம். 'யார் இந்தப் புதுப் பையன்? போடு போடு என்று போடுகிறானே!' என்று சத்தமில்லாமல் தங்களுக்குள் பேசிக் கொள்வார்களாம்.

15. தனக்கு வாழ்வளித்த பெருமாள் முதலியார் அவர்களை தன் வாழ்நாள் முழுதும் நன்றி மறக்காமல் ஒவ்வொரு பொங்கலன்றும் முதலியாரின் சொந்த ஊரான வேலூருக்கு குடும்பத்துடன் சென்று, அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, அவருக்கு மரியாதைகள் செய்து விட்டு வருவது நடிகர் திலகத்தின் வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்தது. இப்போதும் அவர் பிள்ளைகள் மூலம் தொடர்கிறது.

'பேசும்படம்' சினிமா இதழ் 'இம்மாத நட்சத்திரம்' என்ற தலைப்பில் 1952 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிவாஜி அவர்களைப் பற்றி வெளியிட்ட பெருமைமிகு கட்டுரை. இக்கட்டுரை ஆவணத்தை நமக்குத் தந்த திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி!

'பராசக்தி' தொடருகிறாள்... 01_zps79b71244

அன்புடன்

சிவாஜி வாசுதேவன்


N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Sat Nov 16, 2013 6:46 am

இனிய காலை வணக்கங்கள்.

பராசக்தியை தொடர்ந்தும் மகா நடிகர் சிவாஜியின் சாதனை விளக்கங்களை தொடருங்கள்.

நன்றி.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Nov 16, 2013 8:44 am

நன்றி மணி அவர்களே! நிச்சயமாக தொடரலாம். நடிகர் திலகத்தின் படங்களை வரிசயாக என்னால் இயன்ற அளவுக்கு இங்கு தொடராகத் தர இருக்கிறேன். அடுத்து நடிகப் பேரரசரின் இரண்டாவது படம் 'பணம்' பற்றிய பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்காக.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 16, 2013 11:59 am

இதுவரை அறியாத தகவல்களை தாங்கி வரும் தங்களின் பதிவு என் விருப்பப் பதிவாகிவிட்டது!

பாராட்டுக்கள்! தொடருங்கள்!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 16, 2013 4:31 pm

மிக மிக அருமை. சிவாஜி அவர்களை பற்றிய பல தெரியாத தகவல்கள் உள்ளது. தொடருங்கள். தட்டிக்கொடுக்க நாங்கள் இருக்கிறோம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
தமிழ்செல்விஞானப்பிரகசம்
தமிழ்செல்விஞானப்பிரகசம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 29/07/2013

Postதமிழ்செல்விஞானப்பிரகசம் Sat Nov 16, 2013 6:40 pm

நடிகர் திலகத்திற்குப் பெருமை சேர்க்கும் தங்களின் முயற்சிக்கு எனது நன்றிகள்.

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Nov 28, 2013 7:02 pm

டியர் வாசு சார் - உங்கள் "பராசக்தி தொடருகிறாள் " பதிவு மிகவும் அருமை என்பது , சர்க்கரை இனிக்கும் என்று சொல்வதுபோல - NT யை பற்றி இன்னும் பலர் அறியாத மாதிரி நடிக்கிறார்களே அவர்கள் நடிப்பு NT யை விட அருமையாகவே இருக்கின்றது . தமிழகம் சிலையை அகற்ற முடிவெடுத்து ஒரு தீராத பழிக்கு தன்னை ஆளாக்கி கொண்டுள்ளது ---
மகிழ்ச்சி 
Ravi

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Thu Nov 28, 2013 8:22 pm

வருக அன்பு நண்பர் ரவி சார்.

நாம் ஏற்கனவே அறிமுகமானவர்களாக இருந்தாலும் ஈகரையில் உங்களை மன மகிழ்ச்சியுடன் உளமார வரவேற்கிறேன். நடிகர் திலகத்தின் நல்ல ரசிகராகிய தாங்களும் இங்கே பங்களித்து நடிகர் திலகத்தின் இமயப் புகழை மென்மேலும் உயர்த்துவீர்கள் என்று திடமாக நம்புகிறேன். ஈகரையில் உள்ள அனைத்து இதயங்களும் நடிகர் திலகத்தை நிஜமாக நேசித்து ரசிப்பவர்கள்தாம். நம் அனைவர் சார்பாக அவர்கள் யாவருக்கும் நம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வோம். நம் வீயார் அவர்களும், எம்ஜியார் புகழ் பாடும் வினோத் அவர்களும் ஈகரையில் இணைந்துள்ளார்கள்.

நிற்க தங்களின் இனிய வாழ்த்துதல்களுக்கும், பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Thu Nov 28, 2013 9:21 pm

நன்று. தொடரட்டும் சிவாஜியின் சாதனைகள்.

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Fri Nov 29, 2013 7:18 am

ரவி சார்
தங்களுடைய வருகை மிக்க மகிழ்வூட்டுகிறது. ஏற்கெனவே அறிமுகமாகியிருந்தாலும், இங்கே தொடர்வதில் இரட்டிப்பு சந்தோஷம். தொடருங்கள். தங்கள் பதிவுகளை இங்கே அளியுங்கள். நண்பர் வினோத் அவர்களும் இங்கே நம்முடன் இணைந்துள்ளார்கள். வாசு சாருடைய மாநடிகர் தொடர் இங்கு நல்ல வரவேற்பைப் பெரும் என்று நான் திடமாக நம்புகிறேன்.
அன்புடன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக