புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபூர்வ கானங்கள் - Page 6 I_vote_lcapஅபூர்வ கானங்கள் - Page 6 I_voting_barஅபூர்வ கானங்கள் - Page 6 I_vote_rcap 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
அபூர்வ கானங்கள் - Page 6 I_vote_lcapஅபூர்வ கானங்கள் - Page 6 I_voting_barஅபூர்வ கானங்கள் - Page 6 I_vote_rcap 
2 Posts - 18%
heezulia
அபூர்வ கானங்கள் - Page 6 I_vote_lcapஅபூர்வ கானங்கள் - Page 6 I_voting_barஅபூர்வ கானங்கள் - Page 6 I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அபூர்வ கானங்கள்


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon Dec 02, 2013 9:12 pm

First topic message reminder :

பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம்.

இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் பின்னாலும் அவரவர் தங்களுக்கு உள்ள மலரும் நினைவுகளை அசை போட இது பெரிதும் உதவும். புதிய தலைமுறையினருக்கு, அன்றைய கால கட்டத்தில் திரைப்படப் பாடல்கள் மக்களிடம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை எடுத்துச் சொல்லும் களமாகவும் இருக்கும்.

அதிலும் குறிப்பாக அதிகம் அறியப் படாத அபூர்வமான பாடல்களை இங்கே நாம் வெளிக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தொடக்கமாக என்னுடைய தேர்வுஅலைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னென்ன பூவென்ன கண்ணே என்கின்ற பாடல்.

விஷ்ணுவர்த்தன் முதன் முதலில் தமிழில் நடித்த படம். சந்திரகலா கதாநாயகி. ஒரு விலைமகளிர் விடுதியைப் பற்றிய கதை. அனைத்துப் பாடல்களும் கதையை ஒட்டியே அமைக்கப் பட்டிருக்கும். இந்தப் பாடல் மிக அருமையானதாகும். அடிக்கடி நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்




vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Wed Jan 22, 2014 10:56 am

'என்ன முதலாளி சௌக்கியமா'? என்ற வித்தியாசமான கம்யூனிஸ கொள்கைகளை விளக்கும் திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. பாலா அவர்கள் ஜெமினி கணேசனுக்காகப் பாடும் 'அன்பைக் குறிப்பது அனா... ஆசையின் விளக்கம் ஆவன்னா... என்ற இந்தப் பாடல் இனிமையிலும் இனிமை. பாலாவின் குழையும் குரலில் காதலியிடம் நாசூக்காக தன் காதலை சிலேட்டில் அ முதல் ஃ வரை ஒவ்வொரு எழுத்தாக எழுதி ஒவ்வொரு எழுத்துக்கும் காதலை மையமாக வைத்து வார்த்தைகளை தெரிவிக்கும் போது நம் மனம் கொள்ளை கொண்டு போகும். பள்ளிக் குழந்தைகளை வைத்து அவர்களுடன் ஜெமினி ஆடியபடி கே.ஆர்.விஜாவிடம் காதலை உணர்த்துவது அற்புதம். அது போல் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற கணிதக் குறியீடுகளை எழுதி வாழ்க்கையோடு அவைகளை ஒப்பிட்டு பாடுவது இன்னும் சிறப்பு. கே.ஆர் விஜயாவின் அலட்டாத முக பாவங்கள் அற்புதம். எம்.எஸ்.வி அவர்களின் அற்புத இசையில் அமைந்த இப்பாடல் காலத்தால் அழிக்க முடியாத பாடலாகும்,.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 22, 2014 11:02 am

அருமை...
-
தொடருங்கள்...

subasu
subasu
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Postsubasu Wed Jan 22, 2014 5:45 pm

மகிழ்ச்சி அபூர்வ கானங்கள் - Page 6 3838410834 மகிழ்ச்சி 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 23, 2014 1:13 pm

நல்ல பதிவு..
-
ரஸித்தேன்..நன்றி

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Jan 25, 2014 9:54 pm

'அவள்' படத்தில் சங்கர் கணேஷ் இசையமைப்பில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 'கீதா......ஒரு நாள் பழகும் உறவல்ல'... என்ற பாடல். பாலாவும், சுசீலாவும் இணைந்து பாடியுள்ள பாடல். இரட்டையர்கள் இசையில் பின்னி எடுத்திருப்பார்கள். பேஸ் கிடார் அருமையாகக் கையாளப் பட்டிருக்கும் பாடல் இது.

உனக்காகப் பிறந்தேனே...
உயிரோடு கலந்தனே வா...

என்ற சுசீலா பாடும் சரண வரிகளின் முடிவில் பேஸ் கிடார் மிகப் பொருத்தமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கும். சசிகுமார், 'வெண்ணிற ஆடை' நிர்மலா இப்பாடலுக்கு நடித்திருப்பார்கள். Fast beat வகைப் பாடல் என்று சொல்வார்களே! அத்தகைய பாடல் இது. எஸ்.பி.பி அவர்களின் இளமையான குரல் இன்னும் துள்ளும் இளமையாக இப்பாடலில் கொடி கட்டிப் பறக்கும். வண்ணப் படம் வேறு. ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கிய படம். கதை அமைப்பிற்காகவும், காட்சிகளின் அமைப்பிற்காகவும் 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்ற A சர்டிபிகேட் பெற்ற படம். 'தோரஹா' என்ற புகழ் பெற்ற ஹிந்திப் படத்தின் தழுவல் இது. இந்தியில் சத்ருகன் சின்ஹா, 'இதயக்கனி' புகழ் ராதா சலூஜா நடித்த படம். 'அவள்' படத்தின் மூலம் வில்லன் நடிகர் ஸ்ரீகாந்த் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டார். இந்தப் படத்திலிருந்து இறுதி வரைக்கும் பல படங்களில் கற்பழிப்புக் காட்சிகளுக்கென்றே முத்திரை குத்தப்பட்ட நடிகர் ஆனார் அவர். படமும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. 'வெண்ணிற ஆடை' நிர்மலா அதுவரை இல்லாத அளவிற்கு பிகினி உடையிலும், கற்பழிப்புக் காட்சிகளிலும் நடித்திருந்தார். இப்போது 'கீதா... ஒருநாள்' பாடலைப் பார்ப்போம்.



சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Jan 26, 2014 3:20 pm

தேவகோட்டையில் என் ஒன்றுவிட்ட அக்காவின் கணவர்  இருந்தார்..இப்போது இல்லை. அவர் என்னவேலையெல்லாம் செய்தார் என்றெல்லாம் தெரியாது...அவருக்கு ஐந்து குழந்தைகள்..அத்தனையும் பெண்..

என் சின்ன வயதில் மதுரை ஒருதரம் வந்திருந்த போது நைட் ஷோ போலாம் வா என்று கூட்டிக் கொண்டு போனார்..கருப்பு வெள்ளைப்படம்..

ஹோவென்று ரயில் ஓட டைட்டிலுடன் பாடல்..பயணம்..பயணம்..
அப்போது கேட்டு மனதில் பச்சக் என்று பதிந்த வரிகள்..

புகை வண்டி ஓட்டிட ஒருவன் அதுசெல்லும் வழிசொல்ல ஒருவன்
அந்த இருவரை நம்பிய மனிதன்..
அவர்களை நடத்துபவன் தான் இறைவன்
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ...(அஃப்கோர்ஸ் இறைவன் தான்)(எம்.எஸ்.வி யின் கணீர்க் குரல்..)

நிற்க.. எழுதப் போவது இந்தப் பாட்டு அல்ல..இடம் பெற்ற இன்னொரு பாட்டு..அதைப் பற்றிச் சொல்லும் முன்:

பயணம் படத்தின் கதை கொஞ்சம் புகையாகத் தான் நினைவில். ரயிலில் செல்லும் பயணிகள் சிலரின் வாழ்க்கை அனுபவங்கள்..செந்தாமரை, விஜயகுமார், ஜெயச்சித்ரா போன்றோர் மட்டும் நினைவில்..கொஞ்சம் ஓ.க்கேயாகத் தான் இருக்கும்..

ரயில், பயணிகளின் கதை என மாறி மாறி ப் பயணிக்கும் திரைக்கதையில் இடைவேளைக்கு அப்புறம் திடீரென ஜெயச்சித்ராவும் விஜயகுமாரும் (படத்தில் ராணுவ வீரன் என்று சொல்வார்கள்) டூயட் பாடுவார்கள்..அன்யூஸ்வலாக நல்ல மெலடி..
வரிகளும் பிற்காலத்தில் கேட்ட போது கொஞ்சம் கவர்ந்தது..

ஒரு ஆண் பெண் காதல் வசப்படுவதற்குக் காரணம் - காரணமே இல்லை என்று சொல்ல முடியாது. இருவருக்குள்ளும் ஒரு common இண்ட்ரெஸ்ட் இருந்திருக்கும் அல்லது காமன் இண்ட்ரெஸ்ட் உருவாகியிருக்கும்...என நினைக்கிறேன் (கண்ணா..நல்லா சிலேடை சொல்ற போ..)

அதை அழகாகப் பாடல் வரியில் பிடித்திருப்பார் கவிஞர் (கண்ணதாசன் என நினைக்கிறேன்..ஐயம் நாட் ஷ்யூர்)

படக்கென்று ஆரம்பித்து அழகாக முடிந்து இன்னும் நீண்டிருக்கலாமோ எனத் தோன்ற வைக்கும்பாடல்..(எவ்வளவு தமிழ்)

இரண்டு வரிகள் ஆண் இரண்டு வரிகள் பெண் என மாறி மாறி வரும் டூயட்..ஜேசுதாஸ் வாணிஜெயராம்..கலக்கியிருப்பார்கள்..

**
ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்
அதுதான் காதல் பண்பாடு....

ஆனபின்னாலே இருபக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு....

தேவாமிர்தம் தேனிதழ்கள்
தேவர்கள் இல்லை நான் வந்தேன்

மார்பின் அகலம் குன்றங்கள்
மலர்கள் இல்லை நான் வந்தேன்

மஞ்சள் ரோஜா தென்றல் பட்டு
அஞ்சக் கண்டேன் நான் வந்தேன்

மாலைகள் ஏந்து மங்களச் சாந்து
மார்பினில் நீந்து என்னைத் தந்தேன்..

நாடக மேடை திரை இல்லை
நாயகி வந்தாள் கவிபாடி

நாயகியுடனே துணை இல்லை
நாயகன் வந்தான் துணை தேடி

மின்னல் ரோஜா பொன்னில் ஊற்றி
கையில் வந்தது உறவாடி

கண்ணன் ராதா ராமன் சீதா
வந்தார் இங்கே நம்மைத் தேடி

ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்
அதுதான் காதல் பண்பாடு....

ஆனபின்னாலே இருபக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு....

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 26, 2014 4:33 pm

-
ஆரம்பக் காலம்...

பாடலை யூ ட்யூபில் கேட்டு மகிழலாம்.
-


vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Mon Jan 27, 2014 10:27 am

1970-இல் வெளிவந்த 'ஏன்'? படத்தில் எனக்கு பிடித்த மிக அபூர்வமான பாடல். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இளைய குரல், தங்கக் குரல், குழைந்து குழைந்து குதூகலமூட்டும் இனிய குரலில் ஒலிக்கும் 'இறைவன் என்றொரு கவிஞன்' என்ற அருமையான பாடல். டி.ஆர். பாப்பாவின் இசை அமைப்பில் காலமெல்லாம் நம் நெஞ்சை வருடும் பாடல். ரவிச்சந்திரன், லஷ்மி ஆகியோர் நடித்த இப்படம் பெரிய ஹிட்டடிகாமல் போனாலும் அற்புதமான பாடல்களால் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெறுகிறது. பல பேர் இப்பாடலை கேட்டு மறந்திருக்கலாம். அல்லது பாடலை நினைவில் நிறுத்தி படம் என்னவென்று தெரியாமல் குழம்பலாம். இப்போது குழப்பம் நீங்கி விடும். பாடலைக் கேட்டவுடன். மனதில் உள்ள குழப்பமும் நீங்கி விடும். அவ்வளவு அருமையான வரிகள். கவிஞன் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தத்ததை கற்பிக்கும் பாடல். இறைவன் முதல் மனிதன் வரை அற்புதமாக எடுத்துக் காட்டுகளுடன் அருமையான தத்துவங்களை அழகுற சொல்லியிருக்கிறார் இப்பாடலில் கவிஞர். வரிகளை கவனியுங்கள்.

கண்களில் தொடங்கி
கண்களில் முடித்தான்

பெண்ணிடம் பிறந்ததை
பெண்ணிடம் கொடுத்தான்

மண்ணிலே நடந்ததை
மண்ணுக்கே அளித்தான்

வானத்தில் இருந்தே
கவிதையை முடித்தான்

அடடா! வார்த்தை விளையாட்டுகள் விளையாடும் காலத்தை வென்ற கவிஞனே! என்னே உன் சிறப்பு.

பாடலை ஒவ்வொரு வரியாக அனுபவித்து பாருங்கள்.

புரியும். மனம் தெளியும்.



veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Fri Feb 07, 2014 11:57 am

வாசு சார்
ஏன்... ஏன்...
இப்படி எங்களை வாட்டுவது ஏன்...
இந்த மாதிரி அபூர்வ பாடல்களைத் தேடித் தந்து
எங்களை உற்சாகமூட்டுவது ஏன்..

எல்லாம் நம் மக்கள் மீது தாங்கள் கொண்ட அன்பே தான் காரணம்...

என்று நான் சொல்ல மாட்டேன்

ஏன்...

காரணம், அது நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமோ...

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Fri Feb 07, 2014 11:59 am

நடிகர் திலகத்தின் துணை திரைப்படத்துடன் வெளியான திரைப்படம் கண்ணோடு கண். இளைய திலகம் பிரபுவின் ஆரம்ப காலப் படம். இப்படத்தில் இடம் பெற்ற எனைத் தேடும் மேகம் அந்தக் காலத்தில் எஸ்.பி.பாலா வின் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றது. இன்றும் தான்.

பாடலுக்கும் காணொளிக்கும் தொடர்பில்லை



Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக