Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கள் சிவாஜி
+16
balakarthik
myimamdeen
அன்பு தளபதி
M.M.SENTHIL
SENTHIL_BLORE
சிவா
ayyasamy ram
jayaravi
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
பாலாஜி
vasudevan31355
ராஜா
S.VINOD
veeyaar
20 posters
Page 12 of 20
Page 12 of 20 • 1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 20
எங்கள் சிவாஜி
First topic message reminder :
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
'ஞான ஒளி',திரைப்பட க(வி)தை
நடிகர் திலகத்தின் 'ஞான ஒளி', திரைப்படத்தின் பாதி திரைக்கதையை சற்றே புதுக் கவிதை வடிவில் வடித்துள்ளேன். இதோ உங்கள் பார்வைக்கு.
ஆண்டனி...
முரடன் ஆனால் முத்தானவன்
பாதிரியார் மேல் பக்தி உள்ளவன்...
மாதா கோவில் மணியடித்து
சனம் இறந்தால் சவப்பெட்டி செய்பவன்
கண்டதே காட்சி
கொண்டதே கோலமென
பாதிரியே தெய்வமென
பாங்காய் பணி செய்து வந்தான்
காதலித்தான் ஒரு பெண்ணை
கல்யாணமும் செய்தான் பாதிரி உதவியினால்
சொல்லொணா அன்புகொண்டு கணவன் மனைவி சொர்க்கத்தில் மிதந்தனர்
அன்பின் அடையாளமாக கர்ப்பம் தரித்தாள் மனைவி
பெண் குழந்தையை ஈன்று கணவன் முகம் பாராமல்
விண்ணுலகம் சென்று விட்டாள்.
துடித்தான் துவண்டான் ஆண்டனி
துன்பம் குறைத்தார் பாதிரி.
மகளை வளர்த்து மனக்கவலை சற்று மறந்தான்
பெண்ணைப் படிக்க வைக்க பெருமுயற்சி எடுத்தான்
பால்ய வயது நண்பன் லாரன்ஸ் வந்தான்
காவல்துறை அதிகாரியாய்.
கண்டுகொண்டான் சிறுவயது நண்பனை
களிப்புடன் நட்பைத் தொடர்ந்தான்
பாதிரிக்கு ஒரு லட்சியம்
பூண்டி மாதாவுக்கு ஒரு கோவில்,
மழலையர் கல்வி பயில ஒரு பள்ளி
பிணி தீர்க்க ஒரு மருத்துவமனை
பாதிரியின் மூன்று கனவுகள்
கனவுகளை நனவாக்க முடிவெடுத்தான்
தன் பெண் மூலம் நிறைவேற்ற உறுதியளித்தான்.
ஆனால்...
மகளோ மதிகெட்டாள் மானமிழந்தாள்
மாசு பட்டாள் காதலன் என்ற கயவனுடன்.
கண்டுவிட்டான் மகளை கயவனோடு படுக்கையில்.
கொலை வெறி கொண்டான்
கொடுவாள் எடுத்து கொன்று விடத் துணிந்தான்
தடுத்தான் லாரன்ஸ்
மூன்று உயிர்களையும் காத்தான் தோழன்
அதிகாரியாய் ஆண்டனி முன்னிலையில்
இருவருக்கும் தன் மோதிரத்தால் திருமணம் செய்து வைத்தான்.
கனவு சிதைந்ததே என்று கலங்கினான் ஆண்டனி
கனவை விட மகளின் கற்பு கவலையை அதிகமாக்கியது
கலங்கிய மனத்துடன் அவள் காதலன் வீடு சென்றான்
கண்மணிக்கு வாழ்வுப் பிச்சை கேட்டான்.
கெஞ்சினான் கால் பிடித்தான் கதறினான்
காதலனோ காமுகன் காலால் எட்டி உதைத்தான்
கண்டபடி பேசினான் உன் மகளுக்கு நான் மட்டுமா
என்று ஏளனம் செய்தான் எள்ளி நகையாடினான்.
பொறுத்துப் பார்த்த சிறுத்தை பொங்கி எழுந்தது
நரசிம்மம் ஆனது இழிசொல் தாங்காது இடியென தாக்கியது
ஒரே அடி மருமான் மாண்டான். அறியான் ஆண்டனி
தூக்கினான் உடலை கொண்டு வந்தான் பாதிரியிடம்
மகளும் உடன் இருந்தாள் மருமகன் பிணமாய்க் கிடந்தான்
உண்மை தெரிந்தது
விபரீதக் கோபத்தால் விதவை ஆக்கி விட்டான் தன் செல்வத்தை
எல்லாம் முடிந்தது
கையில் விலங்கு கண்ணெதிரில் லாரன்ஸ்
சிறைத்தண்டனையில் சிதில் சிதிலாய் போனது வாழ்க்கை
அடிபட்ட இடத்திலே மேலும் ஒரு கொடுவாள் வெட்டு
ஆம் மகள் மாண்டாள் என்ற செய்தி
ஒரே உறவும் பறி போனது இப்போது தெய்வம் மட்டுமே பாதிரி வடிவில்
பாதிரிக்கு முடியாத முதுமை தன்
பாலகனைப் பார்க்க ஆசை
வேண்டுகோள் விடுத்தார் லாரன்ஸிடம்
குரு கேட்டதால் தட்சணையைக் கொண்டுவந்தான்
தன் மனத்தை சிறை கொண்டவன்
சிறைக் கைதியாய் எதிரே
பாசமகனைப் பார்த்த மகிழ்ச்சி
பாழ்பட்டுப் போனதில் நெகிழ்ச்சி
சாகும் தருவாயிலும் தன் கனவை எண்ணி
ஆண்டனியின் கை பிடித்தபடி
ஆண்டவனை அடைந்தார்.
கடவுளுக்கு கல்லறை வெட்ட அனுமதி கேட்டான்
மறுத்தான் இன்ஸ்பெக்டர் நண்பன்.
கோபமுறுக்கால் அவனைத் தாக்கி
தப்பி ஓட்டமெடுத்தான் தந்தையின்
தங்கக் கனவை நிறைவேற்ற...
(இடைவேளை)
ஆண்டனி...
முரடன் ஆனால் முத்தானவன்
பாதிரியார் மேல் பக்தி உள்ளவன்...
மாதா கோவில் மணியடித்து
சனம் இறந்தால் சவப்பெட்டி செய்பவன்
கண்டதே காட்சி
கொண்டதே கோலமென
பாதிரியே தெய்வமென
பாங்காய் பணி செய்து வந்தான்
காதலித்தான் ஒரு பெண்ணை
கல்யாணமும் செய்தான் பாதிரி உதவியினால்
சொல்லொணா அன்புகொண்டு கணவன் மனைவி சொர்க்கத்தில் மிதந்தனர்
அன்பின் அடையாளமாக கர்ப்பம் தரித்தாள் மனைவி
பெண் குழந்தையை ஈன்று கணவன் முகம் பாராமல்
விண்ணுலகம் சென்று விட்டாள்.
துடித்தான் துவண்டான் ஆண்டனி
துன்பம் குறைத்தார் பாதிரி.
மகளை வளர்த்து மனக்கவலை சற்று மறந்தான்
பெண்ணைப் படிக்க வைக்க பெருமுயற்சி எடுத்தான்
பால்ய வயது நண்பன் லாரன்ஸ் வந்தான்
காவல்துறை அதிகாரியாய்.
கண்டுகொண்டான் சிறுவயது நண்பனை
களிப்புடன் நட்பைத் தொடர்ந்தான்
பாதிரிக்கு ஒரு லட்சியம்
பூண்டி மாதாவுக்கு ஒரு கோவில்,
மழலையர் கல்வி பயில ஒரு பள்ளி
பிணி தீர்க்க ஒரு மருத்துவமனை
பாதிரியின் மூன்று கனவுகள்
கனவுகளை நனவாக்க முடிவெடுத்தான்
தன் பெண் மூலம் நிறைவேற்ற உறுதியளித்தான்.
ஆனால்...
மகளோ மதிகெட்டாள் மானமிழந்தாள்
மாசு பட்டாள் காதலன் என்ற கயவனுடன்.
கண்டுவிட்டான் மகளை கயவனோடு படுக்கையில்.
கொலை வெறி கொண்டான்
கொடுவாள் எடுத்து கொன்று விடத் துணிந்தான்
தடுத்தான் லாரன்ஸ்
மூன்று உயிர்களையும் காத்தான் தோழன்
அதிகாரியாய் ஆண்டனி முன்னிலையில்
இருவருக்கும் தன் மோதிரத்தால் திருமணம் செய்து வைத்தான்.
கனவு சிதைந்ததே என்று கலங்கினான் ஆண்டனி
கனவை விட மகளின் கற்பு கவலையை அதிகமாக்கியது
கலங்கிய மனத்துடன் அவள் காதலன் வீடு சென்றான்
கண்மணிக்கு வாழ்வுப் பிச்சை கேட்டான்.
கெஞ்சினான் கால் பிடித்தான் கதறினான்
காதலனோ காமுகன் காலால் எட்டி உதைத்தான்
கண்டபடி பேசினான் உன் மகளுக்கு நான் மட்டுமா
என்று ஏளனம் செய்தான் எள்ளி நகையாடினான்.
பொறுத்துப் பார்த்த சிறுத்தை பொங்கி எழுந்தது
நரசிம்மம் ஆனது இழிசொல் தாங்காது இடியென தாக்கியது
ஒரே அடி மருமான் மாண்டான். அறியான் ஆண்டனி
தூக்கினான் உடலை கொண்டு வந்தான் பாதிரியிடம்
மகளும் உடன் இருந்தாள் மருமகன் பிணமாய்க் கிடந்தான்
உண்மை தெரிந்தது
விபரீதக் கோபத்தால் விதவை ஆக்கி விட்டான் தன் செல்வத்தை
எல்லாம் முடிந்தது
கையில் விலங்கு கண்ணெதிரில் லாரன்ஸ்
சிறைத்தண்டனையில் சிதில் சிதிலாய் போனது வாழ்க்கை
அடிபட்ட இடத்திலே மேலும் ஒரு கொடுவாள் வெட்டு
ஆம் மகள் மாண்டாள் என்ற செய்தி
ஒரே உறவும் பறி போனது இப்போது தெய்வம் மட்டுமே பாதிரி வடிவில்
பாதிரிக்கு முடியாத முதுமை தன்
பாலகனைப் பார்க்க ஆசை
வேண்டுகோள் விடுத்தார் லாரன்ஸிடம்
குரு கேட்டதால் தட்சணையைக் கொண்டுவந்தான்
தன் மனத்தை சிறை கொண்டவன்
சிறைக் கைதியாய் எதிரே
பாசமகனைப் பார்த்த மகிழ்ச்சி
பாழ்பட்டுப் போனதில் நெகிழ்ச்சி
சாகும் தருவாயிலும் தன் கனவை எண்ணி
ஆண்டனியின் கை பிடித்தபடி
ஆண்டவனை அடைந்தார்.
கடவுளுக்கு கல்லறை வெட்ட அனுமதி கேட்டான்
மறுத்தான் இன்ஸ்பெக்டர் நண்பன்.
கோபமுறுக்கால் அவனைத் தாக்கி
தப்பி ஓட்டமெடுத்தான் தந்தையின்
தங்கக் கனவை நிறைவேற்ற...
(இடைவேளை)
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: எங்கள் சிவாஜி
தேவைதானா ? இது கொடுமை சார் --- என் பதில் கவிதை - தரம் குறைந்திருந்தால் மன்னிக்கவும்
வாசுவே எங்களை பாருங்கள் - எங்கள் பாசத்தை சற்றே
ஏற்றுகொள்ளுங்கள் - ஆயிரம் தீமைகள் சிவாஜி என்ற பெயரில்
நாங்கள் செய்கின்றோம் - நீங்கள் அறிவீர்
மன்னித்து அருள்வீர்
Oh Vasu - ப்ளீஸ் write more on NT
மையம் திரியில் இருந்து , இரண்டு வெள்ளை உள்ளங்கள் ஈகை கரைக்கு போய்விட்டன
மீண்டும் சந்திக்கும் போது பேச்சே வரவில்லையே-----
அன்புடன் ரவி
வாசுவே எங்களை பாருங்கள் - எங்கள் பாசத்தை சற்றே
ஏற்றுகொள்ளுங்கள் - ஆயிரம் தீமைகள் சிவாஜி என்ற பெயரில்
நாங்கள் செய்கின்றோம் - நீங்கள் அறிவீர்
மன்னித்து அருள்வீர்
Oh Vasu - ப்ளீஸ் write more on NT
மையம் திரியில் இருந்து , இரண்டு வெள்ளை உள்ளங்கள் ஈகை கரைக்கு போய்விட்டன
மீண்டும் சந்திக்கும் போது பேச்சே வரவில்லையே-----
அன்புடன் ரவி
jayaravi- இளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
Re: எங்கள் சிவாஜி
சில வாக்கியங்கள் சரியாக வரவில்லை - விட்டுப்போன வரிகள்
இந்த இடைவெளி தேவைதானா? --------
இந்த இடைவெளி தேவைதானா? --------
jayaravi- இளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
Re: எங்கள் சிவாஜி
வாசு சார்
கவிதையிலேயே ஞான ஒளியைத் தந்து நடிகர் திலகம் என்னும் சிகரம் நோக்கி பயணிக்கும் எங்களுக்கு வழி காட்டுகிறீர்கள்.
பாராட்டுக்கள்
கவிதையிலேயே ஞான ஒளியைத் தந்து நடிகர் திலகம் என்னும் சிகரம் நோக்கி பயணிக்கும் எங்களுக்கு வழி காட்டுகிறீர்கள்.
பாராட்டுக்கள்
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
ரவி சார்,இதுதான் என் கருத்தும்
jayaravi wrote:அன்புள்ள வாசு - உங்கள் முயற்சி பெரும் வெற்றி காண அந்த இறைவனை மனமார வேண்டுகிறேன் . என்ன முயற்சி!!! - யாருக்கு இப்படி வரும்!! - பலனை எதுவுமே எதிர்பார்க்காமல்------ உள்ளத்தில் நல்ல உள்ளம் - சற்றே உறங்க முயற்சி செய்யுங்கள் -இடை விடாத உழைப்பு உடல் நலத்தை பாதிக்க கூடாது - உங்களை நம்பி உங்கள் குடும்பம் ஒன்று இருப்பது போல் ,உங்களை நம்பி உங்கள் ரசிகர்கள் நாங்களும் இருக்கிறோம் ---
அன்புடன்
ரவி
ரவி சார்,இதுதான் என் கருத்தும்
SENTHIL_BLORE- புதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 12/12/2013
Re: எங்கள் சிவாஜி
அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Re: எங்கள் சிவாஜி
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் - நாளை பகல் 8 மணி அளவில் நடிகர் திரு சிவகுமார் அவர்களின் " சினிமாவில் தமிழ்" என்ற தலைப்பில் Vijay TV யில் பேசவிருக்கிறார் - தமிழ் வேறு NT வேறு இல்லையே !! அதனால் தலைவரை பற்றி அவர் அதிகமாக பேசுவர் என்று நம்பலாம் - அவர் NT யின் ஒரு தீவிர ரசிகர் என்பது எல்லோரும் அறிந்ததே !
அன்புடன் ரவி
அன்புடன் ரவி
jayaravi- இளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
Re: எங்கள் சிவாஜி
உங்களுக்கும் எங்களின் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகள் சார்veeyaar wrote:அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Re: எங்கள் சிவாஜி
மிக்க நன்றி ரவி அவர்களே , எங்களால் நேரடி ஒளிபரப்பு பார்க்க முடியாது இணையத்தில் யாராவது பதிவிடுவார்கள் கண்டிப்பாக பார்க்கிறோம்jayaravi wrote:அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் - நாளை பகல் 8 மணி அளவில் நடிகர் திரு சிவகுமார் அவர்களின் " சினிமாவில் தமிழ்" என்ற தலைப்பில் Vijay TV யில் பேசவிருக்கிறார் - தமிழ் வேறு NT வேறு இல்லையே !! அதனால் தலைவரை பற்றி அவர் அதிகமாக பேசுவர் என்று நம்பலாம் - அவர் NT யின் ஒரு தீவிர ரசிகர் என்பது எல்லோரும் அறிந்ததே !
அன்புடன் ரவி
Page 12 of 20 • 1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 20
Similar topics
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்
» சிவாஜி ராவ் டு சிவாஜி --மின்னூல்
» சிறப்பு பதிவாளர் மோகன்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» சிவாஜி படமெடுக்கிறார்
» "எங்கள் கனவு! எங்கள் பள்ளி!!"
» சிவாஜி ராவ் டு சிவாஜி --மின்னூல்
» சிறப்பு பதிவாளர் மோகன்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» சிவாஜி படமெடுக்கிறார்
» "எங்கள் கனவு! எங்கள் பள்ளி!!"
Page 12 of 20
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|