ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குபேரனுக்கு ஒரு கோயில்!

+2
உமா
krishnaamma
6 posters

Go down

குபேரனுக்கு ஒரு கோயில்! Empty குபேரனுக்கு ஒரு கோயில்!

Post by krishnaamma Thu Nov 28, 2013 8:39 pm

குபேரனுக்கு ஒரு கோயில்! OcI0T7THqXvNZhQHwQCz+E_1384947597(1)

செல்வத்திற்கு அதிபதி குபேரன் என்று சொல்வார்கள். அதுசரி, யார் இந்த குபேரன்? அவனுடைய கதை என்ன? என்பது பலருக்குத் தெரியாது.

குஜராத் மாநிலத்தில் கர்நாளி என்ற கிராமத்தில் இருக்கிறது புராண காலத்துக் குபேரன் கோயில். இதை திரேதாயுகத்துக் கோயிலென்றும், பாரதநாட்டின் பழமையான ஒரே குபேரன் கோயில் என்றும் கூறுகிறார்கள்.

இந்த குபேரன், யக்ஷர்களின் அரசன். இவனை "குபேர பண்டாரி' (பொக்கிஷக்காரன்), சிவமித்திரன் மற்றும் வடதிசை ரட்சகன் என்றும் அழைப்பதுண்டு. இவன் இலங்கேஸ்வரனான ராவணனின் மாற்றாந்தாய் மகன். அதாவது அண்ணன் முறை ஆக வேண்டும்!
புராணக்கதையின்படி, பிரஜாபிதா பிரம்மாவின் பேரனான விஸ்வரா என்பவனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இத்விதா என்பவள் பரத்வாஜ முனிவரின் புதல்வி. இவள் வயிற்றில் பிறந்தவன்தான் குபேரன். ஒரே பிள்ளை. இரண்டாவது மனைவி கைகசி. இவளுக்கு மூன்று புதல்வர்களும் ஒரு புதல்வியும் பிறந்தார்கள். புதல்வர்களின் பெயர் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், கும்பாஷினி. கும்பாஷினி லட்சுமணனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகை.

பௌலஸ்யர், தன் பேரன் குபேரனுக்கு இலங்காதிபதியாக மகுடம் சூட்டி சிம்மாசனத்தில் உட்கார வைத்தது, ராவணனுக்கு பிடிக்கவில்லை. தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதி, அவன் தவம் செய்யலானான். பரமசிவனை மகிழ்வித்து, அவர் கொடுத்த வரத்தின் சக்தியால், குபேரனைத் தோற்கடித்து, பொன்நகரமான இலங்கையையும், குபேரனுக்கு இந்திரன் கொடுத்திருந்த புஷ்பக விமானத்தையும் கைப்பற்றினான்.

மறுபுறம் நாரதரின் ஆலோசனைப்படி குபேரனும் காட்டுக்குச் சென்று, கடுந்தவம் செய்து, கங்காதரனை மகிழ்வித்து, பல வரங்கள் பெற்றான். சிவபெருமான், அவனை தேவர்களின் செல்வத்தை பொறுப்புடன் கவனிக்கும் பொக்கிஷதாரனாக்கினார். மீண்டும் வதம் செய்து, சிவபெருமான் பிரசன்னமாகும்போது, அவரை தன்னுடனேயே வந்து இருக்கும்படி வரம் கேட்டான்.

சிவனும் அவன் வேண்டுகோளுக்கு இணங்கி, அவனை வழிபடுபவர்களுக்கு சந்தான பாக்யமும், தனபாக்யமும் கொடுக்கும் சக்தியுள்ள விசேஷ வரத்தை அளித்தார். அதற்குப் பிறகான காலகட்டத்தில், குபேரன் மறுபடியும் அம்பாளை நோக்கித் தவம் செய்து, ராவணனிடமிருந்து பாதுகாப்பைப் பெற்றான். அந்த இடம்தான் கர்நாளி என்ற குபேரன் கோயிலிருக்கும் தலம்.
இந்தக் கோயிலின் விசேஷம், இங்கு குபேரனுடைய விக்ரகமோ, படமோ கிடையாது. வெறும் சிவலிங்கம் மட்டுமே இருக்கிறது. கர்ப்பக் கிரகத்தின் சுவரில் பார்வதியின் விக்ரகம் இருக்கிறது. பிராகாரத்தில் ஆஞ்சநேயர், பஹுச்சார் அம்மன் மற்றும் விநாயகர் சன்னதிகளும் உள்ளன.

குஜராத் செழிப்பாக இருப்பதற்கு இந்த குபேரன் கோயிலும் காரணம் என்று பக்தர்கள் நம்புகின்றனர். அவரை வழிபடுவதற்கு அமாவாசை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகிறார்களாம்.
சுமார் மூவாயிரம் மக்களே வசிக்கும் இந்தக் கிராமத்தில் காயத்ரி, கீதா, சோமநாதர் தெய்வங்களின் கோயில்களும் இருக்கின்றன். எனினும் குபேரன் கோயில் மகிமையே தனி!

எங்கே இருக்கு: குஜராத் மாநிலத்தில், வடோதராவிலிருந்து (பரோடா) சுமார் 60 கி.மீ. தொலைவில் கர்நாளி கிராமத்தில் குபேரன் கோயில் உள்ளது.

- விஜு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குபேரனுக்கு ஒரு கோயில்! Empty Re: குபேரனுக்கு ஒரு கோயில்!

Post by உமா Thu Nov 28, 2013 9:09 pm

குபேரனுக்கு ஒரு கோயில்! 103459460 குபேரனுக்கு ஒரு கோயில்! 103459460 பகிர்வுக்கு நன்றி....மிகவும் பழமையான இந்த கோவிலின் புகை படம் அருமை.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குபேரனுக்கு ஒரு கோயில்! Empty Re: குபேரனுக்கு ஒரு கோயில்!

Post by T.N.Balasubramanian Thu Nov 28, 2013 9:37 pm

சென்னை ,வண்டலூர் அருகே ரத்தினமங்கலம் என்ற ஊரில் ஒரு லக்ஷ்மி குபேரர் கோயில் இருக்கிறது. நல்ல முறையில் பராமரித்து வருகிறார்கள். ஒரு முறை போய் பாருங்களேன்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குபேரனுக்கு ஒரு கோயில்! Empty Re: குபேரனுக்கு ஒரு கோயில்!

Post by பார்த்திபன் Fri Nov 29, 2013 11:20 am

குஷ்புவுக்கும் சோனியா காந்திக்குமே ஆலயம் எழுப்பும்போது குபேரனுக்கு இல்லாமல் இருக்குமா? நாரதருக்கு ஆலயம் இருக்கிறதா என்று தெரியவில்லை. வாஸ்து பகவானுக்கு கீழ்ப்புதுப்பேட்டை மற்றும் உத்தமபாளையத்தில் உள்ள ஆலயங்களில் தனி சந்நிதிகள் இருக்கின்றன. ஆனால் தனி ஆலயம் கிடையாது. கூடிய சீக்கிரம் அவருக்கும் கோயில்கள் எழுப்பப்படலாம்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

குபேரனுக்கு ஒரு கோயில்! Empty Re: குபேரனுக்கு ஒரு கோயில்!

Post by ayyasamy ram Fri Nov 29, 2013 11:35 am

ராதாமங்கலத்தில் குபேரன் (ரூபாய் நோட்டுகளால்
அலங்கரிக்கப்பட்டு)
-
குபேரனுக்கு ஒரு கோயில்! FPDKfqtbRMaNXq1CcVcT+scan0002
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குபேரனுக்கு ஒரு கோயில்! Empty Re: குபேரனுக்கு ஒரு கோயில்!

Post by ayyasamy ram Fri Nov 29, 2013 11:40 am

குபேரனுக்கு ஒரு கோயில்! Z5AxGAOsTvWSUiXQ01fS+kuber1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குபேரனுக்கு ஒரு கோயில்! Empty Re: குபேரனுக்கு ஒரு கோயில்!

Post by ayyasamy ram Fri Nov 29, 2013 11:43 am

ரத்தினமங்கலம் லக்ஷ்மி குபேரர் கோயிலில்
அருள் புரியும் கண்திருஷ்டிப் பிள்ளையார்
-
குபேரனுக்கு ஒரு கோயில்! GfxlOVuxQGKS02LL4Zkf+kuber2
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குபேரனுக்கு ஒரு கோயில்! Empty Re: குபேரனுக்கு ஒரு கோயில்!

Post by raghuramanp Fri Nov 29, 2013 12:47 pm

நானும் ரத்தினமங்கலம் குபேரர் கோயிலுக்கு சென்று வந்திருகின்றேன் இங்கே விபூதி , குங்கும அர்ச்சனையெல்லாம் கிடையாது அதற்க்கு பதில் சிலரை காசுகளால்தான் அர்ச்சனை நடக்கும் , இக்கோயிலின் சுவர்களில் கண்ணாடி லைனிங் செய்திருப்பார்கள் உட்புறம் ருபாய் நோட்டுகளால் சுவர் தெரியாதவண்ணம் சுவர் முழுவதும் ருபாய் நோட்டுகள் இருக்கும் பார்க்க வித்தியாசமாகவும் மகிழிசியாகவும் இருக்கும்.
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

குபேரனுக்கு ஒரு கோயில்! Empty Re: குபேரனுக்கு ஒரு கோயில்!

Post by krishnaamma Fri Nov 29, 2013 8:58 pm

விவரங்களுக்கு நன்றி ரமணியன் ஐயா, ராம் அண்ணா மற்றும் ரகு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குபேரனுக்கு ஒரு கோயில்! Empty Re: குபேரனுக்கு ஒரு கோயில்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில் - இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» இந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???
»  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum