ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

+25
கிருஷ்ணா
அனுராகவன்
பாலாஜி
myimamdeen
SenthilMookan
காயத்ரி வைத்தியநாதன்
illayatamil
செம்மொழியான் பாண்டியன்
மதுமிதா
jenisiva
உதயசுதா
KINGUMAR
பூர்ணகுரு
T.N.Balasubramanian
sankarraja
பார்த்திபன்
சிவா
ஹர்ஷித்
krishnaamma
விஸ்வாஜீ
ராஜா
ayyasamy ram
ஜாஹீதாபானு
N.S.Mani
M.M.SENTHIL
29 posters

Page 4 of 28 Previous  1, 2, 3, 4, 5 ... 16 ... 28  Next

Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 4 Empty என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 4 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Tue Dec 03, 2013 10:58 pm

அதன் பின் என்னை
கணிப்பொறி படிக்கச் சொல்லி
அழுதார்கள் என் பாட்டி,
சென்றேன் அனைத்து கோபத்தையும்
மூட்டை கட்டி மூலையில்
வைத்து விட்டு சென்றேன்
ஆறு மாதம் படிப்பு காலம்!
கணிப்பொறியுடன் சேர்த்து
தமிழும், ஆங்கிலமும்
தட்டச்சும் பயின்றேன்
இரண்டிலும் முதல் நிலை!!

இந்த ஒரு வருடத்தில்
என் வழக்கும் முடிவுக்கு வந்தது,
சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில்
பழகுனர் பயிற்சிக்கு தேர்வானேன்,
மன நிம்மதி இல்லாதிருந்த எனக்கு
ஒரு வருடம் மோகனூரில்
தனியாக தங்கிட இறைவன் கொடுத்த
அருமையான இடைவெளி !!
ஞாயிறன்று மட்டும் வீட்டிற்கு வருவேன்
மற்றபடி பக்கத்து ஊர்
நண்பர்களும் அதே ஆலையில்
பயிற்சிக்கு வந்ததால்
அங்கே தனி அறையில்
அவர்களுடனே தங்கினேன்!
இந்த பிரிவு என்னை
ஏனோ தெரியவில்லை – அதிகம்
பாதிக்கவில்லை!
வேலை நேரம் போக
மாலை நேரத்தில்
பார்ட் டைம் பார்த்தேன்
நல்ல வருமானம்,
நன்றாக குடிக்க ஆரம்பித்தேன்!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 4 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Tue Dec 03, 2013 11:30 pm

நான் தங்கியிருந்த அறைக்கும்
பேருந்து நிலையத்துக்கும்
பத்து நிமிட நடை பயணம்
அவ்வாறு போகையில்
சிகரெட் வாங்க ஒரு கடையில்
தினமும் நிற்பேன் – அங்கே
என் வாழ்வில் என்னுடன்
வாடா? போடா? என்று
சொல்லும் அளவில் ஒருத்தியை
தோழியாக்கி கொண்டேன்,
ஆம் இறைவன் என்னிடம்
விளையாண்ட முதல்
கண்ணா மூச்சி விளையாட்டு,
ரெகிதா பேகம் என்ற அவளும்
அதே கடையில் காய்கறி வாங்குவாள்
நான் கடைக்கு போகும் அதே நேரத்தில்,
தினமும் பார்த்து நட்பாய் சிரித்தோம்
சிரிப்பு பேச்சாக மாறியது!
ஒரு நாள் - ஞாயிரன்று விடுமுறையில்
துணி அதிகம் துவைக்க வேண்டும்
நான் ஊருக்கு போகவில்லை,
அனைத்து வேலையும் முடித்து
நன்றாக குடித்து விட்டு
என் அறைக்கு வருகிறேன்
அங்கே அவளும் அவளது அம்மாவும்
எனக்காய் காத்திருக்க – நான்
உடல் முழுதும் வேர்த்துப் போனேன்!
நல்லவன் என்று நினைத்தவள்
இப்போது என்னை பார்த்த பார்வை
ஒரு புழுவை பார்ப்பது போல!
அம்மா சாரி என்றேன் – வாழ்வில்
என் அன்னையையும், பாட்டியையும்
மட்டுமே அம்மா என்று அழைத்தவன்
இப்போது என் தோழியின் அம்மாவை
முதன் முதலாய் வேறொரு பெண்ணை
அம்மா என்று அழைக்கிறேன்!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 4 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by சிவா Wed Dec 04, 2013 12:43 am

மிகவும் அழகாகத் தொகுத்து வருகிறீர்கள் செந்தில்! தொடருங்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 4 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Wed Dec 04, 2013 7:07 pm

அன்று முதல் நான் குடியையையும்
புகைப்பதையும் விட்டு விட்டேன்
அவர்கள் வீட்டில் நானும் ஒரு
அங்கத்தினன் ஆனேன்!
பிரியாணி என்றால் முதலில் எனக்கு
பின்புதான் அவர்கள் வீட்டினருக்கு
அந்தளவு செல்வாக்கு பெற்றேன்!!
இடையில் என் அன்னைக்கு
அடிக்கடி உடல் நலக் குறைவு,
தங்கையின் நிலை கண்டு
வருந்தினார் என் அம்மா,
தறி பட்டறை சரியாக ஓடாத
காரணம் காட்டி என் அப்பாவும்
லாரிக்கு போய் விட்டார்!
அம்மாவை சமாதானம் செய்தேன்
ஓரிரு வருடங்கள் போகட்டும்
தங்கைக்கு மறுமணம் செய்யலாம்
என்று சொல்லி வைத்தேன் !
விவாகரத்து கிடைத்தது
என் தங்கை விடுதலை பெற்றால்
தான் விரும்பாது நடந்த
அந்த கல்யாண பந்தத்தில் இருந்து!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 4 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Wed Dec 04, 2013 7:09 pm

இன்னும் இரண்டு மாதங்களே
மோகனூரில் இருக்க முடியும்
பயிற்சி காலம் வெகு வேகமாய்
முடியப்போவது போல
எனக்கு தோன்றியது!
நான் இயந்திர பணியாள் என்ற போதும்
கணிபொறி இயக்க ஆள் தேவை என்பதால்
நான் ஒர்க் ஷாப் போனதில்லை
அலுவலக வேலை மட்டுமே!
என் திறமையை சரியாக
பயன்படுத்தினேன்,
அனைவரிடமும் நற்பெயர்!
பழகுனர் பயிற்சி (Apprentice) முடிந்தாலும்
தின கூலி (Casual labour) அடிப்படையில்
எனக்கு வேலை தர
உயர் அலுவலர் சம்மதித்தார் !!

நன்றாக சம்பாதித்தேன்
தோழியின் புண்ணியத்தால்
குடியும், புகையும் பகைவனாக
சம்பாதிக்கும் காசெல்லாம்
என் அன்னையின் மருத்துவ செலவும்
என் பாட்டிக்கு கை செலவுமாக
கொடுத்து வந்தேன் !
அன்னையும், பாட்டியும்
தனித்தனியே வசித்து வந்தாலும்
நான் பாட்டியுடனே இருந்தேன்!
அம்மாவை பார்க்க போவதெல்லாம்
உறவினர் வீட்டிற்கு போவது போலத்தான்
என் சின்னஞ்சிறு வயது முதல்!!

தங்கையின் நிலை கண்டு
வருந்திய என் தாய்
மிகவும் சோர்ந்தாள்,
மன சோர்வில் ரத்த கொதிப்பும்
சர்க்கரையும் இலவசமாய் வந்தது
என் அம்மாவிற்கு!
வாழ்க்கையில் பிறந்தது முதல்
சந்தோஷ காற்றை சுவாசிக்காத ஜீவன்
என் தாய்!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 4 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Wed Dec 04, 2013 7:10 pm

சிவா wrote:மிகவும் அழகாகத் தொகுத்து வருகிறீர்கள் செந்தில்! தொடருங்கள்!

நன்றி அண்ணா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 4 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Thu Dec 05, 2013 3:20 pm

இதோ இனிதே முடிந்தது
என் பழகுனர் பயிற்சி
ஆகஸ்ட் 20, 2003-ல்
வெளியில் வருகிறேன்
சேர்ந்து வாழ்ந்த என்
நண்பர்களுடன் சேர்ந்து
மைசூர் சுற்று பயணம் ரயிலில்!!
செப்டெம்பர் 1, 2003-ல்
தினக்கூலி வேலைக்கு
அனுமதி கடிதம் கையோடு
கொடுத்து விட்டார்கள்!
இனி ஒரு கவலையும் இல்லை
என்று நான் மைசூரை சுற்றிவிட்டு
ஆகஸ்ட் 24, 2003 இரவு வீடு
வந்து சேர்கிறேன்!
அடுத்த நாள் என் வாழ்வை
இப்படி புரட்டி போடும்
என்று நான் நினைக்கவில்லை!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 4 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஜாஹீதாபானு Thu Dec 05, 2013 5:06 pm

அருமை அருமை தொடருங்கள்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 4 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by பார்த்திபன் Thu Dec 05, 2013 5:11 pm

உணர்ச்சிவசப்படாமல் உங்களது கதையைப் படிக்க முடியவில்லை. தொடருங்கள்...வாசிக்கக் காத்திருக்கிறோம்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 4 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Thu Dec 05, 2013 8:16 pm

பார்த்திபன் wrote:உணர்ச்சிவசப்படாமல் உங்களது கதையைப் படிக்க முடியவில்லை. தொடருங்கள்...வாசிக்கக் காத்திருக்கிறோம்.
உணர்ச்சி மயமானதே என் நிஜமும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 4 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 28 Previous  1, 2, 3, 4, 5 ... 16 ... 28  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum