ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

+25
கிருஷ்ணா
அனுராகவன்
பாலாஜி
myimamdeen
SenthilMookan
காயத்ரி வைத்தியநாதன்
illayatamil
செம்மொழியான் பாண்டியன்
மதுமிதா
jenisiva
உதயசுதா
KINGUMAR
பூர்ணகுரு
T.N.Balasubramanian
sankarraja
பார்த்திபன்
சிவா
ஹர்ஷித்
krishnaamma
விஸ்வாஜீ
ராஜா
ayyasamy ram
ஜாஹீதாபானு
N.S.Mani
M.M.SENTHIL
29 posters

Page 17 of 28 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 22 ... 28  Next

Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 17 Empty என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 17 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Tue Feb 04, 2014 10:08 pm

பவானியில்
பவிஷ் பார்க்கில்,
ஊரே வியக்கும் வண்ணம்
பயங்கரமாய் இருந்தது
வரவேற்பும் விருந்தும்!!
செந்திலா நீ?
இப்பத்தாண்டா பாக்க
நீ பையன் மாதிரி இருக்க,
முறுக்கி விட்ட மீசையும்
தெனாவட்டு பார்வையும்
இப்ப எங்க தம்பி போச்சு,
ஒழுங்கா பொழச்சுக்கோடா
இனியாவது திருந்தி
நல்ல பையனா
குடும்பத்த கொண்டா!!
சொந்தங்களும்
பந்தங்களும்
மாறி, மாறி அறிவுரை சொன்னார்கள்!!
அறிவுரை – இது மட்டும்தான்
ஒவ்வொரு மனிதனையும்
அறிவாளியாய் காட்டுகிறது!!
ஆம், தவறு செய்தவனிடத்தில்
நம்மவர்கள் செய்யும் அறிவுரை
நானெல்லாம்? அப்பவே அப்புடி
என்கிற ரீதியில் இருக்கும்!!
யார் பேச்சையும் நான்
பொருட்படுத்தவில்லை,
பின்னே?
போட்டோவுக்கு போஸ்
கொடுக்க வேணாமா?
நம்ம மூஞ்செல்லாம்
எதோ போட்டோக்காரன்
கொஞ்சம் கிராபிக்ஸ்
பண்ணாத்தான் உண்டு!!
கல்யாணமும் முடிந்தது
வரவேற்பும் முடிந்தது,
சொந்தங்கள் புறப்பட்டன
அவரவர் வீட்டிற்கு!!
ஆனால் என் தங்கை
என்னிடம் சொல்லாமலே
கிளம்பியிருந்தால்!!
அவள் இன்றுவரை
புரியாத புதிராகவே
இருக்கிறாள்!!
தேவையில்லாத இடத்தில்
தேவையில்லாமல் பேசுவது,
எதற்கெடுத்தாலும்
முகத்தை உம்மென்று வைப்பது
இப்படி இன்னும் நிறைய!!
அவள் போகட்டும்
இப்போ நம்ம கதைக்கு
வருவோம்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 17 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஜாஹீதாபானு Thu Feb 06, 2014 3:47 pm

ம்ம்ம் கதைக்கு வாங்க......


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 17 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Fri Feb 07, 2014 1:35 pm

மணம் முடிந்து
இருபது நாட்கள்
நான் குடிகாரன்
என்ற அடையாளமே
இல்லாமல் இருந்தேன்,
அப்படியே இருந்திருக்கலாம்!!
விதி விட்டால்தானே
வந்தான் ஒரு நண்பன்
கொஞ்சம் தானே,
கொஞ்சம் தானே
என்று என் எல்லையை
அதிகம் மீறி விட்டேன்,
இரவு வீட்டுக்கு
வரும்போது – என்
மனைவி பார்த்த பார்வை,
நீயும் இப்படித்தானா?
என்பது போல் இருந்தது!
அதன்பின் இதுவே
வாடிக்கை ஆனது,
என் மனைவி அழாத
நாள் மிகவும் குறைவே!
நன்றாக குடித்தவிட்டு
சோறே இல்லாமல் கிடப்பேன்!!
தவறென்று தெரிந்தும்
மாற்றிக்கொள்ள மனமில்லை!!
அடிமை நான் மதுவுக்கு!!
அவள் கர்ப்பம் தரித்த பின்
மருத்துவமனை போவேன்
செக்கப் பண்ண – அப்போது
மட்டுமே நான் நல்லவன்,
மற்றபடி???
இப்படியே போனது
ஏழு மாதங்கள்,
எட்டாம் மாத ஆரம்பம்
தலை தீபாவளி
முடிந்த பின்
மனைவிக்கு பிரஷர்
அதிகமானது!
நான்கு நாட்கள்
மருத்துவமனையில்
சேர்த்திருந்தேன் – அப்போது
துணைக்கு வந்தனர்
சில சொந்தங்கள்,
மருத்துவமனையில்
தங்கி அவளை பார்த்தனர்!!
டாக்டர் சொல்லிவிட்டார்
விரைவில் ஆபரேஷன்
செய்தாக வேண்டுமென்று,
கேரளா கிளம்பினேன்
என் மனைவியை
அழைத்துக் கொண்டு!!
அப்போது தான் சிந்திதேன்
நாம்தான் காரணமோ
அவளின் இரத்தம்
கொதித்ததற்கு!!
ச்சே.. நாமெல்லாம்
மனிதனே கிடையாது,
நம்மை நம்பி வந்தவளை
கொஞ்சம் சிரமப் படுத்தி விட்டோமா??


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 17 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Fri Feb 07, 2014 1:45 pm

தமிழ்நாட்டில் உண்டு
மருத்துவமனை நிறைய,
ஆனாலும் ஏன்
கேரளா போனேன்??
என் மனைவிக்கு
துணையாய் வந்த
சொந்தங்கள்
அவன் எப்படியோ போகட்டும்
நாம் கூட இருக்கவில்லை எனில்
என்ன சொல்லுவார்கள்
மற்ற சொந்தங்கள்
என்று பேசியதை கேட்டேன்,
மற்றவர்கள் சொல்லுக்கு அஞ்சி
என் மனைவிக்கு பாதுகாப்பு,
அது கடமைக்கு என்று
தெரிந்த பின் – எப்படி
மனம் ஒப்பும்!!
கீதாவின் பெற்றோரை
அண்ணன், தம்பியை
அவள் பார்க்கும்போது
கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம்
என்று நான் நினைத்தே அங்கு போனேன்!!
ஆனாலும் இறைவன்
எனக்கு அங்கே
மாபெரும் அதிர்ச்சியை வைத்தான்!!
ஆம்,
உன் மனைவி இப்போது
சிக்கலான நிலையில் உள்ளாள்,
வேகமாக செல்லுங்கள்
பிறிதொரு மருத்துவமனைக்கு
என்று அந்த டாக்டர்
சொன்னபோது – மனதில்
குற்ற உணர்வு மேலோங்கியது!!
மலப்புரத்தில் உள்ள
ஒரு மருத்துவமனை அது
வேக, வேகமாய் சென்றோம்,
ஓடும் காரின் வேகத்தைவிட
என் மனம் வேகமாய் ஓடியது!!
இதோ,
அட்மிட் பண்ணியாச்சு,
எப்போ வேண்டுமானாலும்
வலிப்பு வரலாம்
என்ற நிலை!
உனக்கு என்னம்மா பிரச்சினை
மருத்துவர் கேட்கிறார்,
என் மனைவி சொல்கிறாள்
எனக்கு ஒரு பிரசினையும்
இல்லை,
பிறகேன் பிரஷர்
இத்தனை எறிக்கெடக்கு
சொல்லு உனக்கும்
உன் கணவனுக்கும் ஏதாவது???
அப்படி ஒன்றும் இல்லை என்றால்!!
என்னால் அங்கே நிற்கவே
முடியவில்லை – என் மனைவி
இன்று வரை நான் குடித்ததை
அவள் வீட்டில் யாரிடமும்
சொல்லியது இல்லை,
பெண் பார்க்க சென்றபோது
இருந்த மரியாதை
இன்றுவரை கொஞ்சமும் குறையாமல்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 17 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Fri Feb 07, 2014 1:59 pm

மருத்துவமனையில்
இரண்டு நாட்கள்
நல்ல கவனிப்பு,
பிரஷர் குறைந்தது!
நான் துணிகளை
எடுத்து வர என் மாமியார்
வீட்டுக்கு வந்தேன்
என் மனைவியின் அக்கா பையனுடன்!!
குளித்து, துணிமாற்றி
கிளம்ப தயாரானேன்
மைத்துனன் அழைத்தான்
அலைபேசியில்,
சீக்கிரம் வாங்க
ஆபரேஷன் பண்ணனுமாம்
நிறைய கையெழுத்து போடணும்!!
இதயம் ஒரு நிமிடம் நின்று
மீண்டும் துடித்ததை
நான் நன்றாக உணர்ந்தேன்!!
பைக்கில் வேகமாய் போனோம்
கையெழுத்து வாங்கினார்கள்
பத்து நிமிடம் அந்த இடம்
மிகுந்த பரபரப்பு,
சிறிது நேரத்தில்
கையில் வெள்ளை துணி சுற்றி
மருத்துவ பெண்மணி
வேகமாக ஓடினாள்,
அவள் பின் வந்த பெண்மணி
பெண் குட்டி பிறந்திருக்கு
என்று சொல்லி வேகமாய்
அவளை பின் தொடர்ந்தாள்!!
இறைவா, என்ன கொடுமை இது
என் குழந்தையை கண்ணில் கூட
காட்ட வில்லையே!!
எங்கு கொண்டு போகிறார்கள்
எதற்கு கொண்டு போகிறார்கள்
ஒன்றும் புரியாமல்
விக்கித்து நின்றேன்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 17 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Fri Feb 07, 2014 2:16 pm

எந்த கோவிலுக்கு போனாலும்
எனக்கு முதல் குழந்தை
பெண்ணாக இருக்கட்டும்
என்பதுதான் என் முதல்
வேண்டுதல் – இப்போது
அந்த பெண் குழந்தையை
கண்ணில் கூட காட்டவில்லை,
இங்குபேட்டரில்
வைத்துவிட்டார்கள்,
ஆம்.,
எட்டாம் மாதத்தில் பிறந்தாள்
எடையும் ஒன்னே கால் கிலோ!!
மனைவிக்கும் மயக்கம் தெளியல
மகளையும் கண்ணில் காட்டல
என்னடா இறைவா சோதனை இது!!
நான்கு மணி நேரம் கழித்து
மனைவி என்னை
அழைப்பதாய் சொன்னார்கள்,
உள்ளே போனேன் – ஒரு
குற்றவாளி போல,
மாமா, என்ன குழந்தை
நமக்கு என்றால்
பெண் குழந்தை என்றேன்
எங்கே காணல என்றாள்,
எனக்கு பதில் சொல்ல
வாய் வரும் முன் – என்
கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது!!
மாமா பாப்பா எங்கே
என்ன ஆனது – பதறினாள்,
ஒரு தாய்மைக்கே
உண்டான வலி அது,
என்ன ஆயிற்றோ, ஏது ஆயிற்றோ
என்ற பதட்டம் அவளுக்குள்!!
ஒன்னுமில்லடா பாப்பா
கொஞ்சம் வெயிட் கம்மி
அதனால இங்கு பேட்டர்ல
வச்சிருக்காங்க என்றேன்!!
நான் பாக்கணும் என்றாள்,
இப்போது முடியாது
குழந்தை பாலுக்கு
அழும்போது காணலாம் என்றனர்!!
நம் குழந்தை எப்போ அழும்
என்று எதிர்பார்த்திருந்தோம்,
என் மகள் கொஞ்சம்
கல் நெஞ்சக்காரி போல
இரவு பதினோரு மணிக்கு மேல்
முதன் முதலாய் அழுதாள்!!
இரண்டு பணிப்பெண்கள்
கைகளில் ஏந்தி
கொண்டு வந்தனர்,
ஆவலுடன் முகம் காண சென்றேன்,
கடவுளே........
உனக்கு ஈவு இரக்கமே இல்லையா
நீ வெறும் கல்லுதானா??
என்றெல்லாம் கதறினேன்
ஆம்...
என் அன்பு மகளின்
இரண்டு கைகளிலும்
ஊசியை குத்தி இருந்தனர்,
மருந்து உட்செலுத்த!!
நீங்கெல்லாம் உங்க
மொத குழந்தய
முதன் முதலா பாத்தா
என்ன செய்விங்க,
அள்ளி அணைத்து
கொஞ்சி குழாவி
முத்தம் கொடுப்பீங்க!!
நான்
அங்கிருந்த குளியறையில்
என் வாழ்வில் அப்படி
அழுததே இல்லை என்றபடி
அழுது கொண்டிருந்தேன்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 17 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Fri Feb 07, 2014 2:37 pm

என் பாட்டியே
எனக்கு மகளாய்
பிறந்திட வேண்டும் – என
ஆசை வாழ்வை வாழ்ந்தேன்,
இறைவன் கொஞ்சம்
என்னை சோதித்து விட்டான்!!
இருபத்து மூன்று நாட்கள்
என் குழந்தை கொஞ்சம்
உடல்நிலை தேறி வர!
செலவோ ஐந்து லகரத்திற்கு
மேலே ஆனது!!
பணம் போனால் போகட்டும்
என் மகளும், மனைவியும்
இதோ என் முன்னே நலமாய்,
இது போதும் இறைவா!!
இந்த இறைவன்
சில நேரம் கல்லாகிறான்
சில நேரம் கை தொழ வைக்கிறான்,
விந்தையே, அவன் செயல்!!
நான் கேரளா போன சூழல்
என் அப்பனுக்கும், தங்கைக்கும்
நன்றாகவே அறிந்திருந்தும்
ஒரு போன் கூட செய்யவில்லை,
பாவம் – அவர்களிடத்தில்
ஒரு ரூபாய் கூட இல்லை போலும்!!
பாப்பா பிறந்த அன்று
நண்பர்கள் இருவருக்கும்,
எனக்கு மணவாழ்வு அமைத்த
என் பெரியம்மாவுக்கும்
அலைபேசியில் அழைத்து
சேதி சொன்னேன்!!
இந்த இருபத்து மூன்று
நாளில் நான்கைந்து முறை
தமிழ்நாடு வந்தேன்,
பணம் கொண்டு போக,
வரும்போதெல்லாம்
நண்பர்களுக்கு பார்ட்டி,
நானும் நல்லா குடித்தேன்!!
ஒருநாள்,
வட்டமலை முருகன் கோவில்
போய்விட்டு வரலாம் என
அங்கு சென்று வீடு திரும்பினேன்,
வழியில்
ஒரு ஆக்சிடெண்ட்!!
வயதான ஒருவர்
நல்ல போதையில்
ஆட்டோவில் இடித்து
கீழே விழுந்தார்,
அவரை தூக்கி எடுத்த
ஒரு நண்பர் – தமிழில்
உள்ள அனைத்து
கெட்ட வார்த்தைகளையும்
சொல்லி திட்டினார்,
நான் கோபமானேன்
அவரிடம் சென்று
நீயும் ஒரு மனிதனா?
அடிபட்ட ஆளை
இப்படி பேசுகிறாயே
என்று சட்டையை பிடித்தேன்,
என் கையை தட்டிவிட்டு
அவன் சொன்ன வார்த்தை
இனிமேல் நாம்
குடிக்க கூடாது
என்ற எண்ணம் வர காரணமானது!!
அப்படி என்ன சொன்னான் அவன்??


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 17 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஜாஹீதாபானு Fri Feb 07, 2014 2:46 pm

பொண்டாட்டி பிள்ளை நினைப்பிருந்தா இவன் குடிப்பானா? இவன் செத்து தொலைஞ்ச்சா இவன் குடும்பத்தை யார் கவனிப்பா என்று திட்டி இருப்பான்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 17 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Fri Feb 07, 2014 2:47 pm

ஜாஹீதாபானு wrote:பொண்டாட்டி பிள்ளை நினைப்பிருந்தா இவன் குடிப்பானா? இவன் செத்து தொலைஞ்ச்சா இவன் குடும்பத்தை யார் கவனிப்பா என்று திட்டி இருப்பான்

இந்த யூகம், என்னை திட்டுவது போலவே இருக்கிறது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 17 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஜாஹீதாபானு Fri Feb 07, 2014 2:52 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:பொண்டாட்டி பிள்ளை நினைப்பிருந்தா இவன் குடிப்பானா? இவன் செத்து தொலைஞ்ச்சா இவன் குடும்பத்தை யார் கவனிப்பா என்று திட்டி இருப்பான்

இந்த யூகம், என்னை திட்டுவது போலவே இருக்கிறது.

உங்களுக்கு மட்டுமல்ல இது எல்லா குடிமகனுக்கும் பொருந்தும்புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 17 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 28 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 22 ... 28  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum